<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thol. Thirumavalavan &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/thol-thirumavalavan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 29 Jan 2025 14:01:24 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Thol. Thirumavalavan &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/thirumavalavan-attack-ntk-leader-seeman/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 14:01:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Liberation Tigers of Tamil Eelam]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Thol. Thirumavalavan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189782</guid>

					<description><![CDATA[விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை(seeman) ஆதரிப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்(thirumavalavan) கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில்(chennai) இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள். பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது. பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள். பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது. நாம் தமிழர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் வரிந்துகட்டி சீமானை(seeman) ஆதரிப்பது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்(thirumavalavan) கேள்வியெழுப்பியுள்ளார்.</p>
<p>சென்னையில்(chennai) இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,</p>
<p>கோழை தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தத் துணிந்துள்ளார்கள். பெரியாரைக் கொச்சைப்படுத்திப் பேசுவதை தேர்தல் அரசியல் என கடந்துவிட முடியாது.</p>
<p>பெரியாரைக் கொச்சைப்படுத்தி பேசுவோர் பாஜகவின் கொள்கைப் பரப்பு அணி போல் செயல்படுகிறார்கள். பெரியாரைப் பேசும் ஒவ்வொன்றும் அம்பேத்கர் மார்க்சியத்துக்கு எதிரானது.</p>
<p>நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் ஆதரிக்கின்றனர். அண்ணாமலை, எச்.ராஜா, குருமூர்த்தி போன்றோர் என்றாவது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்ததுண்டா?</p>
<p>பா.ஜ.கவின் கொள்கை பரப்பு அணி போல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்படுகிறார். இது வெறும் திராவிட எதிர்ப்பு அரசியல் அல்ல, நமது கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/cinema/actor-vijay-going-to-atten-a-event/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Nov 2024 16:38:04 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Political Development]]></category>
		<category><![CDATA[tamil actors]]></category>
		<category><![CDATA[Thol. Thirumavalavan]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=174286</guid>

					<description><![CDATA[மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல் தமிழக அரசியல் களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார். முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு மாநாட்டையும் நடத்தி முடித்தார். தற்போது வரை அவரது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா.. வெளியான அதிரடி தகவல்</h4>
<p>தமிழக <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/01/easter-sunday-attack-report-crisis/">அரசியல்</a> களத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த களமிறங்கி இருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். அரசியலில் என்ட்ரி கொடுக்கப்போகிறேன் என்று கூறியதில் இருந்து ஒவ்வொரு விஷயமாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்.</p>
<p>முதலில் கட்சி பெயர், அடுத்து கொடி, கடைசியாக தனது கொள்கைகளை கூறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 27ம் தேதி அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு மாநாட்டையும் நடத்தி முடித்தார்.</p>
<p>தற்போது வரை அவரது கட்சி சார்பில் நடந்த முதல் மாநாடு பற்றிய பேச்சு தான் இப்போது தமிழகத்தில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் 6 &#8211; ஆம் தேதி தனியார் வார இதழ் புத்தக வெளியீட்டு விழா நடக்க உள்ளது.</p>
<p>இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இருவரும் ஒன்றாக பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>அம்பேத்கர் நினைவு நாள் அன்று நடைபெறும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட விஜய் புத்தகத்தை பெற்றுக் கொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநாட்டுக்கு பின் விஜய் பங்குபெறும் முதல் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை- தொல். திருமாவளவன்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-intention-in-vijay-speech-says-thirumavalavan/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Jun 2024 16:34:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Thamizhaga Vetri Kazhagam]]></category>
		<category><![CDATA[Thol. Thirumavalavan]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=148817</guid>

					<description><![CDATA[நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை- தொல். திருமாவளவன் தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் நடைபெற்றது. இவ்விழாவில், தவெக தலைவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை- தொல். திருமாவளவன்</h4>
<p>தவெக தலைவர் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/06/28/actor-vijay-clarify-rumor/">விஜய்</a> மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.</p>
<p>தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் நடைபெற்றது.</p>
<p>இவ்விழாவில், தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் போதைப்பொருளை பயன்படுத்தக்கூடாது போன்ற பல அறிவுரைகளை தெரிவித்தார்.</p>
<p>இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஊக்கத்தொகைகளை அக்கட்சியின் தலைவர் விஜய் வழங்கினார்.</p>
<p>இந்நிலையில், நடிகர் விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.</p>
<p>அவர் கூறியதாவது..,<br />
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியுள்ளார்.</p>
<p>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பேசிய அவர், &#8220;டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.</p>
<p>கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்தை நேரில் சென்றபோது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான்.</p>
<p>முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்ககளிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.</p>
<p>பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது என்று கூறினார்.</p>
<p>மேலும் விஜய் குறித்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் &#8221; என்று கூறினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? திருமாவளவன் சொன்னது என்ன?</title>
		<link>https://tamilnaadi.com/news/is-the-woman-who-spoke-as-dwarka-the-leaders-daughter-what-did-thirumavalavan-say/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 11:50:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[Thol. Thirumavalavan]]></category>
		<category><![CDATA[Velupillai Prabhakaran]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=106897</guid>

					<description><![CDATA[துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? திருமாவளவன் சொன்னது என்ன? ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் மூலமாக பெண்ணொருவர் பேசிய வீடியோ ஒளிபரப்பானது. அதில் தன்னை துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? திருமாவளவன் சொன்னது என்ன?</h4>
<p>ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் <a href="https://tamilnaadi.com/news/local/2023/11/27/maaveerar-thinam-2023-nallur/">மாவீரர் நாள்</a> கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>நேற்றைய தினம் மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.</p>
<p>அதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் மூலமாக பெண்ணொருவர் பேசிய வீடியோ ஒளிபரப்பானது.</p>
<p>அதில் தன்னை துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என சில விடயங்களை பேசினார்.</p>
<p>அதன் பின்னர் வீடியோவில் பேசிய பெண் தலைவரின் மகள் அல்ல என்று பலர் கூறிவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் குறித்த பெண் மீது தலைவரின் மகள் இல்லை என்பதை பூடகமாக தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து மேடைப்பேச்சு ஒன்றில் அவர் கூறும்போது, &#8216;தலைவரின் மகள் துவாரகா இன்று இணைய ஊடகத்தில் தோற்றமளித்தார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதை தமிழ்நாட்டில் இருந்து சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யாரும் சொல்லவில்லை.</p>
<p>புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகள் அதை சொல்லவில்லை. இயக்கத்தைச் சார்ந்த முன்னணி தளபதிகள் யாரும் அதை சொல்லவில்லை. இப்படி ஒரு நிலை இன்றைக்கு ஈழத்தமிழ் சொந்தங்கள் இடையே இருப்பது என்பது தான் வேதனைக்குரியது&#8217; என என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
