<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>The government &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/the-government/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 17 Dec 2021 16:42:48 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>The government &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/the-government-should-ensure-the-safety-of-tamil-journalists/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-government-should-ensure-the-safety-of-tamil-journalists/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Dec 2021 04:20:22 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ensure]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[of Tamil journalists]]></category>
		<category><![CDATA[should]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[The government]]></category>
		<category><![CDATA[the safety]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27444</guid>

					<description><![CDATA[தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்மென புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்.ரவிக்குமார் கேட்டுள்ளார். இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை ஒருசில நீதிமன்றம் தடைவிதித்திருந்தபோதும் ஒருசில நீதிமன்றங்கள் அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்தன. எது எவ்வாறாக இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்புகளை புறக்கணித்து மாவீரர் தினம் அனுஷ்டித்திருந்தமையை காணமுடிந்தது. இதேநேரம் முள்ளிவாய்க்கால் மாவீரர் நிகழ்வுக்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்மென புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் என்.ரவிக்குமார் கேட்டுள்ளார்.</p>
<p>இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:</p>
<p>மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை ஒருசில நீதிமன்றம் தடைவிதித்திருந்தபோதும் ஒருசில நீதிமன்றங்கள் அனுஷ்டிப்பதற்கு அனுமதியளித்தன. எது எவ்வாறாக இருந்தாலும் நீதிமன்றம் தீர்ப்புகளை புறக்கணித்து மாவீரர் தினம் அனுஷ்டித்திருந்தமையை காணமுடிந்தது.</p>
<p>இதேநேரம் முள்ளிவாய்க்கால் மாவீரர் நிகழ்வுக்கான செய்திகளை சேகரிக்கச் சென்ற தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் அங்கிருந்த இராணுவ முகாமில் கடமை புரிந்த இராணுவ வீரரால் தாக்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.</p>
<p>இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. வல்வட்டித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சுலக்சன் என்பவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு செய்தி சேகரிக்க சென்றபோது அங்கு கடமைபுரியும் பொலிஸார் ஒருவரினால்<br />
துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.</p>
<p>இவ்வாறான செயற்பாடுகளை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. ஊடக சுதந்திரம் முழுமையாக பின்பற்றப்படும் இந்நாட்டில் முள்ளிவாய்க்காலில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.</p>
<p>இதன் பின்னணியில் தமிழ் அரசியல் கட்சிகளோ அல்லது எதிர்க் கட்சியோ இருக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுக்கும் செயற்பாடாகும்.</p>
<p>எது எவ்வாறாக இருந்தாலும் அரசாங்கம் ஊடகவியலாளர்களை தாக்குபவர்களை காப்பாற்ற ஒருபோதும் முன்வரக்கூடாது.<br />
இந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ வீரர் விடயத்தில் அரசாங்கம் 24 மணி நேரத்திற்குள் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தியுள்ளது.</p>
<p>இதனை அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற முறையில் வரவேற் கின்றோம். இதற்காக அரசாங்கத்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-government-should-ensure-the-safety-of-tamil-journalists/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
