<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thaiyiddy Vihara Dispute &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/thaiyiddy-vihara-dispute/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 01 Jan 2026 12:55:00 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Thaiyiddy Vihara Dispute &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தையிட்டி விகாரையைச் சூழவுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க இணக்கம்: காணி உரிமையாளர்கள் தகவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/landowners-agree-to-phased-release-of-lands-surrounding-thaiyiddy-vihara-following-meeting-with-jaffna-ga/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jan 2026 12:55:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[GA Pradeepan]]></category>
		<category><![CDATA[Jaffna Land Release]]></category>
		<category><![CDATA[Landowner Protest Jaffna]]></category>
		<category><![CDATA[Phase-wise Land Return.]]></category>
		<category><![CDATA[Thaiyiddy Vihara Dispute]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208565</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்குக் காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். தையிட்டி விகாரை விவகாரம் குறித்துத் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம், யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே நேற்று (31) நடைபெற்றது. அக்காணிகளின் உரிமம் மக்களுக்கே உரியது என்பது சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை முதற்கட்டமாக விரைவாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்திருக்கும் நிலப்பரப்பு தவிர்ந்த, அதனைச் சூழவுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளைக் கட்டம் கட்டமாக விடுவிக்கும் யோசனைக்குக் காணி உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தையிட்டி விகாரை விவகாரம் குறித்துத் தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கான ஆலோசனைக் கூட்டம், யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு இடையே நேற்று (31) நடைபெற்றது.</p>
<p>அக்காணிகளின் உரிமம் மக்களுக்கே உரியது என்பது சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. விகாரைக்கு மேற்குப் புறமுள்ள காணிகளை முதற்கட்டமாக விரைவாக விடுவிக்கவும், ஏனைய காணிகளை 4 கட்டங்களாக விடுவிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>விகாராதிபதி வாழிடம் உள்ளிட்ட ஏனைய தற்காலிகக் கட்டடங்களை அகற்றி வேறிடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அவகாசம் கருதியே இந்த 4 கட்ட விடுவிப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.</p>
<p>விகாரை நேரடியாக அமைந்துள்ள நிலப்பரப்பு மூன்று தரப்பினருக்குச் சொந்தமானது. எனினும், அதற்கான மாற்றுக்காணி அல்லது நஷ்டஈடு குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.</p>
<p>இது குறித்து யாழ். ஊடக அமையத்தில் விளக்கமளித்த காணி உரிமையாளர்கள், &#8220;இது ஒரு யோசனையாகவே முன்வைக்கப்பட்டுள்ளது, இறுதி முடிவல்ல. எனவே, ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் 3 ஆம் திகதி தையிட்டிப் போராட்டத்தை முன்னெடுப்போம்&#8221; எனத் தெரிவித்தனர்.</p>
<p>மூன்று வருடங்களாகத் தொடரும் தையிட்டி காணி விவகாரத்தில், மாவட்டச் செயலரின் இந்த முயற்சி ஒரு சாதகமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனியார் காணிகள் விடுவிக்கப்படும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் &#8211; அமைச்சர் சுனில் செனவி!</title>
		<link>https://tamilnaadi.com/news/private-lands-in-thaiyiddy-will-be-returned-to-owners-minister-sunil-senevi-clarifies-viharadhipathis-certificate-ceremony/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Dec 2025 16:30:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Buddha Sasana Minister]]></category>
		<category><![CDATA[Private Land Release Jaffna]]></category>
		<category><![CDATA[Sunil Senevi]]></category>
		<category><![CDATA[Thaiyiddy Vihara Dispute]]></category>
		<category><![CDATA[Tissa Vihara Controversy.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207852</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று தையிட்டியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் கைது சம்பவங்களைத் தொடர்ந்து, எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தையிட்டி விஹாரை அமைந்துள்ள பகுதிகளில் அமைச்சின் அதிகாரிகள் தற்போது நில அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். விஹாரைக்கு அவசியமான காணிகளைத் தவிர்ந்த, எஞ்சிய தனியார் காணிகளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று தையிட்டியில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் கைது சம்பவங்களைத் தொடர்ந்து, எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>தையிட்டி விஹாரை அமைந்துள்ள பகுதிகளில் அமைச்சின் அதிகாரிகள் தற்போது நில அளவீடுகளை முன்னெடுத்து வருகின்றனர். விஹாரைக்கு அவசியமான காணிகளைத் தவிர்ந்த, எஞ்சிய தனியார் காணிகளை அதன் உரிய உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.</p>
<p>விஹாராதிபதிக்கு வழங்கப்படுவது பௌத்த கலாசார ரீதியிலான ஒரு சான்றிதழ் மட்டுமே. இது பாடசாலைகளில் வழங்கப்படும் பதவி உயர்வு போன்றதல்ல. எனவே, இந்தச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வையும், காணிப் பிரச்சினையையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.</p>
<p>தையிட்டி பகுதியில் நீண்டகாலமாக நிலவும் இந்தப் பிரச்சினைக்குத் தர்க்கரீதியான மற்றும் நியாயமான தீர்வினை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தையிட்டியில் தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, வேலன் சுவாமிகள் மற்றும் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
