<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>TamiNadu &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/taminadu/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 11 Jul 2022 09:21:41 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>TamiNadu &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/6-people-from-vavunia-took-refuge-in-tamil-nadu/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/6-people-from-vavunia-took-refuge-in-tamil-nadu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 09:21:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TamiNadu]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=56232</guid>

					<description><![CDATA[இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர். படகொன்றில் இராமேஸ்வரம் சென்றடைந்த இவர்கள் படகுக்கு 4 லட்சம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.</p>
<p>இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.</p>
<p>படகொன்றில் இராமேஸ்வரம் சென்றடைந்த இவர்கள் படகுக்கு 4 லட்சம் ரூபா வழங்கியுள்ளனர்.</p>
<p>அந்த படகு தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு சென்றுள்ளது. நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை அந்த வழியாக சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் அவதானித்துள்ளனர்.</p>
<p>இது தொடர்பில் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.</p>
<p>விசாரணைக்கு பிறகு மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/6-people-from-vavunia-took-refuge-in-tamil-nadu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ். மீனவ சங்க பிரதிநிதிகள் &#8211; இந்திய துணைத் தூதுவர் சந்திப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-fishermens-association-representatives-indian-deputy-ambassador-meets/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/jaffna-fishermens-association-representatives-indian-deputy-ambassador-meets/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Mar 2022 11:53:49 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TamiNadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=42767</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையிலான மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.</p>
<p>யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தலைமையிலான மீனவ சங்க பிரதிநிதிகள் இன்று யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.</p>
<p>குறித்த கலந்துரையாடலின் போது ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக இலங்கை எல்லைக்குள் அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளின் வருகை கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய தீவு பகுதிகளில் இந்திய படகுகள் இலங்கை எல்லைக்குள் வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/jaffna-fishermens-association-representatives-indian-deputy-ambassador-meets/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை!</title>
		<link>https://tamilnaadi.com/news/indian-fishermen-released-on-bail/</link>
					<comments>https://tamilnaadi.com/news/indian-fishermen-released-on-bail/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jan 2022 18:32:38 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TamiNadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36758</guid>

					<description><![CDATA[அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.</p>
<p>கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-36759" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-300x139.jpg" alt="VideoCapture 20220125 084959 1" width="984" height="456" title="விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை! 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-300x139.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-1024x473.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-768x355.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-1536x710.jpg 1536w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/VideoCapture_20220125-084959-1-2048x947.jpg 2048w" sizes="(max-width: 984px) 100vw, 984px" /></p>
<p>இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்களும் பதிவுசெய்யப்பட்டன. அத்துடன் அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, கைதானவர்களில் ஒருவர் அவர்கள் வந்த படகொன்றின் உரிமையாளர் என்பதால் குறித்த நபரின் படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய 7 படகுகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/indian-fishermen-released-on-bail/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எடப்பாடியாரின் கார் மீது செருப்பு வீசியவருக்கு ஆப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/wedge-for-throwing-shoes-at-edappadiyars-car/</link>
					<comments>https://tamilnaadi.com/news/wedge-for-throwing-shoes-at-edappadiyars-car/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 03:34:24 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ADMK]]></category>
		<category><![CDATA[AIADMK]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[EdappadiPalanisamy]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TamiNadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27740</guid>

					<description><![CDATA[எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 05 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 05 ஆம் திகதிஅனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">எடப்பாடி பழனிசாமி கார் மீது காலணி வீசிய அமமுக நிர்வாகி மாரிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 05 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 05 ஆம் திகதிஅனுசரிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்படி பழனிசாமி மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.</p>
<p style="text-align: justify;">அப்போது, அமமுகவினரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது செருப்பு வீசியதாக அமமுகவினர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.</p>
<p style="text-align: justify;">மேலும் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பெயரில் அமமுகவினர் செருப்புகளை வீசியதாகவும். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக இரும்பு, தடி, கம்பு, கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p style="text-align: justify;">இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கார் மீது காலனி வீசிய, சென்னை திருவல்லிக்கேணி அமமுக நிர்வாகி மாரிமுத்துவை அண்ணா சதுக்கம் பொலிஸார் கைது செய்துள்ளனர்</p>
<p style="text-align: justify;">#IndiaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/wedge-for-throwing-shoes-at-edappadiyars-car/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
