<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tamils &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/tamils/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 25 Oct 2025 03:33:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>tamils &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/youth-arrested-with-heroin-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Oct 2025 03:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Drugs]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Law and Order]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203273</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல் போதை தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இதனடிப்படையில், யாழ்ப்பாண காவல் போதை தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விசாரணைகளையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தங்கி இருந்தமை தொடர்பு விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து வருகை தந்த குழுவினர் இன்று 24-10-2025) மாலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் இருந்து மேற்படி கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சான்று பொருட்களும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்&#8221; &#8211; சரத் வீரசேகர அச்சம்</title>
		<link>https://tamilnaadi.com/news/eerasekara-warns-government-not-fully-implement/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 15:51:17 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[sarath weerasekara]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202616</guid>

					<description><![CDATA[அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது: &#8220;ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், இலங்கை சமஷ்டி (Federal) ராஜ்ஜியமாகிவிடும். குறிப்பாக வடக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு சுயாதீன மாகாணமாக உதயமாகிவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:</p>
<p>&#8220;ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், இலங்கை சமஷ்டி (Federal) ராஜ்ஜியமாகிவிடும். குறிப்பாக வடக்கு மாகாண சபை சுயாதீன சபையாக மாறும்; அவர்களின் தேவைக்கேற்ப சட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.</p>
<p>இவ்வாறானதொரு நிலைமைக்கே தமிழீழ புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முயற்சித்தார். அதற்காக 30 வருடங்கள் போரிட்டார். போர் மூலம் அடைய முடியாமல் போனதை வேறு வழியில் அடைவதற்குரிய முயற்சியாகவே இது உள்ளது.</p>
<p>எனவே, 13-ஐ நடைமுறைப்படுத்தக் கோரும் யோசனை, சுயாதீன நாடான இலங்கையின் இறைமைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். வெளியகப் பொறிமுறையில் உள்ள அச்சுறுத்தலை நாம் உணர வேண்டும். அது எமது படையினருக்கு ஆபத்தாக அமையும்,&#8221; என்று அவர் குறிப்பிட்டார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sarath-fonseka-civil-war-sri-lankan-tamils/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 07:09:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka Civil War Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202314</guid>

					<description><![CDATA[போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;விடுதலைப்புலிகளின் தலைவர் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார். அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க்களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போரிட்டார். எனவே, இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>&#8220;விடுதலைப்புலிகளின் தலைவர் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார்.</p>
<p>அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க்களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போரிட்டார்.</p>
<p>எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் அவர் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது&#8221; என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜே.பி.விக்கு நீதி.. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அநீதி..! கேள்வி எழுப்பிய அர்ச்சுனா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/dr-ramanathan-archchuna-mp-civil-war-sl/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 11:57:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dr Ramanathan Archchuna Mp Civil War Sl]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Ramanathan Archchuna]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201720</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள். ஆனால் தடை நீக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பெரும்பான்மை என்பதால்தான் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது, 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு அனைவரும் வடக்குக்கு விரட்டப்படும் போது எங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் எடுத்தோம். ஆயுதம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்திற்கு எதிராக போரிட்ட இரண்டு குழுக்களில் ஒரு குழுவுக்கு மட்டும் ஏன் அநீதி இழைக்கப்பட்டது.ஜே.பி.வியை தடைசெய்தார்கள். ஆனால் தடை நீக்கப்பட்டது ஏனென்றால் அவர்கள் பெரும்பான்மை என்பதால்தான் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>அதில் அவர் தொடர்ந்து கூறியதாவது, 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்பட்டு அனைவரும் வடக்குக்கு விரட்டப்படும் போது எங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் எடுத்தோம்.</p>
<p>ஆயுதம் ஏந்தி போராடிய ஜே.வி.பி பயங்கரவாதிகள் அல்ல நாங்கள் மட்டும் பயங்கரவாதிகளா? ஒரே நாட்டில் ஏன் வேறுபாடுகள்?இங்கே தான் தமிழ் &#8211; சிங்கள பிரச்சினை தோன்றுகிறது. சம்பவங்களை நாம் பார்க்கும் நோக்கில் தான் பயங்கரவாத கோணங்கள் தோன்றுகிறது.</p>
<p>செம்மணி மனித புதைகுழியில் கைக்குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்படியானால் கைக்குழந்தைகள் ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தார்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லமாட்டேன்.</p>
<p>யுத்தம் நடைபெறும் போது இரு பக்கமும் தவறுகள் ஏற்படலாம். அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்தாலும், மக்களின் மனதில் இருப்பதை தடுக்க முடியாது.</p>
<p>நான் உண்மை உரைப்பதால் மக்கள் என்னை விரும்புகின்றனர்.எனக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசித் தலைவரை கடவுளாக வணங்கவும் முடியும் அதேபோல் மற்றையவரின் கடவுளை மதிக்கவும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் &#8211; ஜனாதிபதி அநுர அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/president-says-reduce-overstaffed-army-in-north/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 07:34:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[japan]]></category>
		<category><![CDATA[President Says Reduce Overstaffed Army In North]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201657</guid>

					<description><![CDATA[தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார். ஜப்பானில் (Jaffna) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தைக் குறைக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மற்றும் இலங்கையை ஒரு மதபேதமற்ற நாடாக மாற்றுவதுடன் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதே தனது பிரதான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.</p>
<p>ஜப்பானில் (Jaffna) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தைக் குறைக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>மற்றும் இலங்கையை ஒரு மதபேதமற்ற நாடாக மாற்றுவதுடன் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதே தனது பிரதான குறிக்கோள்.</p>
<p>எனினும், தென்னிலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகள் இன்னும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அதற்கு ஒருபோதும் தனது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது.</p>
<p>அதுமட்டுமின்றி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான விஜயத்தை மேற் கொண்டிருந்தார்.</p>
<p>ஜப்பான் சென்ற அவர் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை தொடர்பில் கோரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/chemmani-mass-graves-jaffna-5/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 15:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chemmani mass graves jaffna]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201310</guid>

					<description><![CDATA[செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை சர்வதேச விசாரணையாகி எம்மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், &#8220;யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. சித்துபாத்தி இந்து மயானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புகள், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணை சர்வதேச விசாரணையாகி எம்மண்ணில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டிற்கு உலகம் வரவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்தார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், &#8220;யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பாக தமிழ் சமூகம் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றது. சித்துபாத்தி இந்து மயானத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மனித எலும்புகள், எலும்புக்கூடுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.</p>
<p>எத்தனை பேரை இழந்து எத்தனை பேர் காணாமல் போன சூழலில் கவலையோடு இருக்கின்ற போது இந்த புதைகுழி அதிர்ச்சியையும் மிகுந்த துயரத்தையும் தந்திருக்கின்றது.</p>
<p>எனவே இந்த செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக நீதியான விசாரணை வேண்டும். சர்வதேச ரீதியாக விசாரணை இடம்பெற வேண்டும். ஒரு உண்மையான தீர்வு இந்த விடயத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட வேண்டும்.</p>
<p>இன்று இந்த முயற்சியில் ஈடுபடுகின்ற நீதித்துறை சார்ந்தவர்களை நாம் நன்றியோடு போற்றுகின்ற அதே வேளையில் இந்த விசாரணை தொடர வேண்டும். இந்த விசாரணை ஊடாக தமிழினத்திற்கு நடைபெற்ற கொடுமை ஒரு முடிவுக்கு வரவேண்டும்&#8221; என அவர் கோரியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/govt-support-to-chemmani-human-grave-investigation/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 09:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chemmani mass graves jaffna]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201205</guid>

					<description><![CDATA[செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், &#8221;செம்மணி – மனித புதைகுழி தொடர்பில் ஜூன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களும் வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.</p>
<p>அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், &#8221;செம்மணி – மனித புதைகுழி தொடர்பில் ஜூன் 29ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தொடர்பில் அரசாங்கத்தின் அறிக்கை குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>நீதி அமைச்சினால் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இது தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கப்படக் கூடிய சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம்.</p>
<p>தற்போது இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எம்மால் வேறு கருத்துக்கள் எதனையும் வெளியிட முடியாது. எனினும் இது குறித்த தகவல்கள் அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது&#8221; என தெரிவித்தார்.</p>
<p>இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது நேற்றுடன் (03) குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் என மொத்தமாக 38 என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>அத்துடன் புத்தகப்பை, பொம்மை, சப்பாத்து போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் குறித்த விடயம் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/injustice-done-to-the-sinhalese-veerasekhara-says/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 18:18:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[sarath weerasekara]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201119</guid>

					<description><![CDATA[இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,&#8221;இலங்கை என்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்த போதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது. வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.</p>
<p>ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,&#8221;இலங்கை என்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்த போதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.</p>
<p>வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன. இன்று ஒருவர்கூட இல்லை. மட்டக்களப்பிலும் சிங்களவர்கள் இல்லை.</p>
<p>கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழர்களே வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றனர். இதற்குச் சிங்களவர்கள் தடை ஏற்படுத்துவதில்லை.</p>
<p>நிலைமை இப்படி இருந்தும் சிங்களவர்களுக்கே இனவாத முத்திரைக் குத்தப்படுகின்றது. அதிகாரத்துக்காகத் தற்போதைய அரசு பெரும்பான்மை இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது.</p>
<p>ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இராணுவ அமைப்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்ப் பிரவினைவாதிகளை மட்டுமே சந்தித்தார்.</p>
<p>இரு தரப்புகள் இருப்பதை அரசு அவருக்குச் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.&#8221; என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணியில் இன்று கண்டெடுக்கப்பட்ட முக்கிய அடையாளம்! தோண்ட தோண்ட காத்திருக்கும் அதிர்ச்சி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/chemmani-mass-graves-sri-lanka-news-update-today/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 15:28:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chemmani mass graves jaffna]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200949</guid>

					<description><![CDATA[இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p>
<p>செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>மேலும், பல குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.</p>
<p>அதில், ஒரு சிறு குழந்தையின் எலும்புக்கூடு நீல நிற பை மற்றும் சில உடை துணிகள் உடன் கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கில் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படக்கூடாது! பொன்சேகா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/security-during-land-release-in-the-north-fonseka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jun 2025 12:38:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200843</guid>

					<description><![CDATA[வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவி்க்கையில் ,வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.</p>
<p>அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவி்க்கையில் ,வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர்.</p>
<p>ஒரு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம். அதேபோல் விடுதலைப்புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகளும் உள்ளனர். விடுதலைப்புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் டயஸ்போராக் குழுவும் உள்ளது.</p>
<p>இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும்.</p>
<p>அதற்காகப் போர்க் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பைப் பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குத்தான் சரி இல்லை. அங்கு ஆவா என்ற பாதாளக் குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித் தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக் குழுக்கள் வடக்குக்குச் சென்று ஒளியக்கூடும்.</p>
<p>எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம். சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
