<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Standing Orders Amendment &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/standing-orders-amendment/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 08 Feb 2026 16:39:19 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Standing Orders Amendment &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெண் எம்பிக்களை அவமதித்தால் நடவடிக்கை: நிலையியற் கட்டளைகளைத் திருத்த சபாநாயகரிடம் கோரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Feb 2026 16:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Saroja Savithri Paulraj]]></category>
		<category><![CDATA[Sri Lanka Women MPs Caucus 2026]]></category>
		<category><![CDATA[Standing Orders Amendment]]></category>
		<category><![CDATA[Verbal Abuse in Parliament]]></category>
		<category><![CDATA[Women in Politics Sri Lanka.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=212251</guid>

					<description><![CDATA[பாராளுமன்ற சபையில் பெண் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த வியாழக்கிழமை (05) சபாநாயகரைச் சந்தித்து விசேட மனு ஒன்றைச் சமர்ப்பித்தது. இலங்கையின் 10-வது பாராளுமன்றமானது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட சபையாகத் திகழ்கிறது. செம்மஞ்சள் தினம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், சபைக்குள் பெண் உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக உள்ளதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாராளுமன்ற சபையில் பெண் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த வியாழக்கிழமை (05) சபாநாயகரைச் சந்தித்து விசேட மனு ஒன்றைச் சமர்ப்பித்தது.</p>
<p>இலங்கையின் 10-வது பாராளுமன்றமானது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளைக் கொண்ட சபையாகத் திகழ்கிறது.</p>
<p>செம்மஞ்சள் தினம் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டாலும், சபைக்குள் பெண் உறுப்பினர்களைக் குறிவைத்து நடத்தப்படும் வாய்மொழித் துஷ்பிரயோகங்கள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக உள்ளதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>இவ்வாறான அவமதிப்புகள் தனிநபர்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்தப் பெண்களின் அரசியல் பங்கேற்பையும், அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தக் கடிதத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:</p>
<p>பாராளுமன்றத்தில் ஒழுக்கம் (Order in the House) எனும் பிரிவின் கீழ், பெண் உறுப்பினர்களை வாய்மொழியாகத் துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்தப் புதிய கட்டளைகளைச் சேர்த்தல்.</p>
<p>ஆண் உறுப்பினர்கள் மட்டுமன்றி, பெண் உறுப்பினர்களும் மற்றுமொரு பெண் உறுப்பினரை அவமதிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிகள் அமைய வேண்டும்.</p>
<p>அரசியல் களத்தில் பெண்களுக்கு இது ஒரு பாதகமான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் கடுமையான சட்ட ஒழுங்குகள் அவசியம்.</p>
<p>மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபையில், பெண் உறுப்பினர்கள் அச்சமின்றித் தங்களது கடமைகளை ஆற்றுவதை உறுதிப்படுத்தச் சபாநாயகர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தாம் எதிர்பார்ப்பதாகப் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
