<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>sritharan mp &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sritharan-mp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 22 Jan 2024 10:25:20 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>sritharan mp &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sritharan-itak-president/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sritharan-itak-president/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Jan 2024 07:58:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[arv loshan]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jayanthi sritharan]]></category>
		<category><![CDATA[lankasri]]></category>
		<category><![CDATA[lankasri news]]></category>
		<category><![CDATA[rev sritharan]]></category>
		<category><![CDATA[sivagnanam sritharan mp]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[sri lanka parliament]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<category><![CDATA[Sri Lankan]]></category>
		<category><![CDATA[Sritharan]]></category>
		<category><![CDATA[sritharan interview]]></category>
		<category><![CDATA[sritharan mp]]></category>
		<category><![CDATA[sritharan mp conversation regarding npc]]></category>
		<category><![CDATA[sritharan mp parliament speech]]></category>
		<category><![CDATA[sritharan mp parliament speech april 7]]></category>
		<category><![CDATA[sritharan mp speech]]></category>
		<category><![CDATA[sritharan mp speech today]]></category>
		<category><![CDATA[sritharan mp tna]]></category>
		<category><![CDATA[sritharan speech regarding tna]]></category>
		<category><![CDATA[whats new sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=114841</guid>

					<description><![CDATA[பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!!! இன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார். இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார் &#160; &#160;]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சிறீதரன் எம்.பி.!!!</h4>
<p>இன்று <a href="https://tamilnaadi.com/news/local/2023/11/27/maaveerar-naal-2/">திருகோணமலையில்</a> நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 184<br />
வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.</p>
<p>இத்தெரிவுத் தேர்தலின் மற்றைய வேட்பாளரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஆ சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sritharan-itak-president/feed/</wfw:commentRss>
			<slash:comments>4</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இயக்கச்சி வட்டார மக்களுடன் சிறீரன் சந்திப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/siriran-meeting-with-local-people-of-dinakchi/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/siriran-meeting-with-local-people-of-dinakchi/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jun 2023 15:30:20 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[Sivagnanam Sritharan]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[Sritharan]]></category>
		<category><![CDATA[sritharan mp]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=77570</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி &#8211; இயக்கச்சி வட்டார மக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரன் நேற்று(26) இருவேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி வட்டாரத்திலுள்ள கோயில் வயல், சங்கத்தார் வயல், YMCA விநாயகபுரம், கொற்றாண்டார்குளம், இயக்கச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், சிறீரனுக்கும் இடையிலான இருவேறு சந்திப்புகள் நேற்றைய தினம் இயக்கச்சியில் நடைபெற்றுள்ளன. இருவேறு சந்திப்பு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், இயக்கச்சி வட்டார வேட்பாளருமாகிய தவராசா ரமேஸ் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிளிநொச்சி &#8211; இயக்கச்சி வட்டார மக்களுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீரன் நேற்று(26) இருவேறு சந்திப்புகளை நடத்தியுள்ளார்.</p>
<p>பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி வட்டாரத்திலுள்ள கோயில் வயல், சங்கத்தார் வயல், YMCA விநாயகபுரம், கொற்றாண்டார்குளம், இயக்கச்சி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும், சிறீரனுக்கும் இடையிலான இருவேறு சந்திப்புகள் நேற்றைய தினம் இயக்கச்சியில் நடைபெற்றுள்ளன.</p>
<h2>இருவேறு சந்திப்பு</h2>
<p>பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், இயக்கச்சி வட்டார வேட்பாளருமாகிய தவராசா ரமேஸ் தலைமையில் இச்சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>இதன்போது, சமுர்த்திக் கொடுப்பனவு, அரச நலத் திட்டக் கொடுப்பனவு என்பவற்றில் நிலவும் குறைபாடுகள், தொடர்ச்சியாக தாம் எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடி நிலைமை, வீட்டுத்திட்டத் தேவைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்பிரதேச மக்கள், நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர்.</p>
<p>மேற்படி சந்திப்புகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா, இயக்கச்சியில் இயங்கும் பல்வேறு சமூகமட்ட அமைப்புகளினதும் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/siriran-meeting-with-local-people-of-dinakchi/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் இளைஞர்களிடம் சிறிதரன் பகிரங்க கோரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sritharan-mp-news/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sritharan-mp-news/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sat, 16 Apr 2022 19:29:42 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[sritharan mp]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=46191</guid>

					<description><![CDATA[தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;4 இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது 70 ஆயிரம் மக்கள்தான் இருப்பதாகக் கூறி உணவு அனுப்பி உணவில்லாமலே சாகடிக்கப்பட்ட மக்கள் காயங்களுக்கு மருந்துகள் இல்லாமல் கொல்லப்பட்டபோது பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அதற்குள் அனைவரையும் செல்லுமாறு கூறி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் இளைஞர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பகிரங்கமாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>&#8220;4 இலட்சம் மக்கள் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது 70 ஆயிரம் மக்கள்தான் இருப்பதாகக் கூறி உணவு அனுப்பி உணவில்லாமலே சாகடிக்கப்பட்ட மக்கள் காயங்களுக்கு மருந்துகள் இல்லாமல் கொல்லப்பட்டபோது பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அதற்குள் அனைவரையும் செல்லுமாறு கூறி விட்டு அந்த இடத்துக்குள் கொத்துக்குண்டுகளையும் பறாஜ் குண்டுகளையும் வீசி எமது மக்களை இந்த அரசு கொன்றபோது இந்தச் சிங்கள மாணவர்கள், சிங்கள சகோதரர்கள் எல்லோரும் அவற்றை வெறித்தனமாகப் பார்த்தார்கள் பயங்கரவாதமாகப் பார்த்தார்கள்.</p>
<p>தமிழர்களை அழிப்பதை ஏற்றுக்கொண்டார்கள். சிங்கள இளைஞர்களும், யுவதிகளும் பாற்சோறு கொடுத்துக் கொண்டாடினார்கள். எல்லோரின் வீடுகளிலும் சிங்கக் கொடிகள் பறக்க விடப்பட்டன. சிங்கள மக்கள் எல்லோரும் அவற்றை மகிழ்ச்சியோடு பார்த்தார்கள். 69 இலட்ச சிங்கள மக்கள் வாக்களித்து கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதி ஆக்கினார்கள். இவை எல்லாம் நடந்தவை,</p>
<p>இப்போது நாங்கள் போய் அவர்களோடு சேர்ந்துதான் எங்களுடைய இளைஞர்களும் சேர்ந்துதான் போராட வேண்டும் என்றால் போகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாகக் கேட்கிறேன் இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் தெருக்களில் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு நாள் ஆயிரம் இளைஞர்கள் கிளிநொச்சியில் திரளுங்கள். அதற்கு எங்கள் இளைஞர்கள் தயாரில்லை.</p>
<p>கைகளால் ஒப்படைக்கப்பட்ட கணவன்மார் கைகளால் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள், கைகளால் ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் யாருமே இல்லை. எங்கு என்றும் தெரியாது. இவர்களைத் தேடியவாறு இருக்கும் தாய்மார்களுடன் ஆயிரம் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து போராடுங்கள் என உங்களைப் பகிரங்கமாகக் கேட்கின்றேன்.</p>
<p>சிங்கள இளைஞர்களின் போராட்டத்துக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் இளைஞர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் பற்றி பேசினால் அந்த இளைஞர்களின் பாதங்களுக்கு பூப்போட்டு வணங்கவும் தயாராக இருக்கின்றோம்.</p>
<p>நாங்கள் போராடியது எங்களுடைய உரிமைகளுக்காக. இழந்துபோன இறைமைகளை மீட்டெடுப்பதற்காக. எங்களுடைய மண்ணில் சுயாட்சி முறையிலான உரிமையை வென்றெடுக்க நாங்கள் போராடுகின்றோம். இது முற்றுமுழுதான உரிமைக்கான போராட்டம். உயிர் வாழ்தலுக்கான போராட்டம். அடுத்த பரம்பரைக்கான நிம்மதிக்கான போராட்டத்தைத்தான் நாம் இந்த மண்ணில் நடத்துகின்றோம்.</p>
<p>நாங்கள் எரிபொருளுக்காகப் போராடவில்லை; எரிவாயுவுக்காகப் போராடவில்லை. நாங்கள் மின்சாரத்துக்காகப் போராடவில்லை. உணவுக்காக நாங்கள் போராடவில்லை. இவை இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். நாங்கள் யாருடைய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தவில்லை.</p>
<p>நீங்கள் போராடுவது ஒரு கொடுங்கோலனுக்கு எதிராக. இனப்படுகொலையாளிக்கு எதிராக. மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச என்கின்ற இருவரும் இந்த மண்ணில் தமிழ்த் தேசிய இனத்தைப் படுகொலை செய்தவர்கள். நாம் உங்களுக்கு முதலே &#8211; 2019 ஆம் ஆண்டிலேயே இவர்களுக்கு எதிராகப் போராடியிருக்கின்றோம்.</p>
<p>கடந்த காலங்களில் சிங்கள மக்கள் போராடியபோது தமிழர்கள் ஆதரவு நல்கியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் பிரச்சினை தீர்ந்ததும் தமிழர்களுக்கு எதிராக மாறியிருக்கின்ற பல சம்பவங்கள் வரலாறுகளில் நடைபெற்றிருக்கின்றன&#8221; &#8211; என்றார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sritharan-mp-news/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கேள்விக்குட்படுத்தப்படும் தமிழினத்தின் இருப்பு! &#8211; சிறிதரன் எம்.பி. ஆதங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/the-existence-of-tamil-race-in-question/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-existence-of-tamil-race-in-question/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Mar 2022 07:13:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[feathred]]></category>
		<category><![CDATA[question]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[sritharan mp]]></category>
		<category><![CDATA[tamil race i]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=42085</guid>

					<description><![CDATA[&#8220;எமது தமிழினத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.&#8221; &#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் &#8211; கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு பூநகரியில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், &#8220;சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டிய அரச தரப்பினர், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்துள்ளனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;எமது தமிழினத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.&#8221;</p>
<p>&#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் &#8211; கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.</p>
<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு பூநகரியில் நேற்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>&#8220;சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டிய அரச தரப்பினர், இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்துள்ளனர்.</p>
<p>நாடெங்கும் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள். சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கிறார்கள்.</p>
<p>அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டும் என்கின்ற நிலை இப்போது உருவாகியிருக்கின்றது. நாடு பொருளாதார நிலையில் அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது.</p>
<p>இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றது. எங்களை நோக்கிப் புத்த கோயில்கள் வருகின்றன. எங்கள் இடங்களில் கொரோனாக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின்போது முளைத்த இராணுவச் சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.</p>
<p>வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களைப் பறித்து விவசாயம் செய்வதற்குத் தடையாக இருக்கின்றார்கள். முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களில்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது&#8221; &#8211; என்றார்.</p>
<p>பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பூநகரி பிரதேச சபையின் உப தவிசாளர் எமிலியாம்பிள்ளை, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளர் விஜயன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஜோன் தனராஜ், பிரதேச அமைப்பாளர் குபேந்திரன், பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-existence-of-tamil-race-in-question/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசின் சர்வாதிகாரத்தால் அதளபாதாளத்துக்குள் நாடு! &#8211; சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/the-country-is-in-the-abyss-by-the-dictatorship-of-the-state/</link>
					<comments>https://tamilnaadi.com/news/the-country-is-in-the-abyss-by-the-dictatorship-of-the-state/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 11:44:52 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Country within the abyss]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[sritharan mp]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=41684</guid>

					<description><![CDATA[&#8220;சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ அதிகாரிகளை நியமனம் செய்து தமது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவால் இந்த நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.&#8221; &#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ அதிகாரிகளை நியமனம் செய்து தமது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவால் இந்த நாடு அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.&#8221;</p>
<p>&#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டினார்.</p>
<p>பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்களின் கையெழுத்துப் பெறும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>&#8220;இன்று இலங்கை அரசு பல்வேறுபட்ட நெருக்கடிகளை நாட்டில் வாழ்கின்ற மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. மிக முக்கியமாக நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்துக்குள் விழுந்துள்ளது.</p>
<p>மக்கள் அன்றாட சீவியங்களை நடத்த முடியாதவர்களாக மாறியிருக்கின்றார்கள். எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது.</p>
<p>அன்றாட உணவுப்பொருட்கள் மக்களின் வாழ்வில் பெருத்த அடியை அடித்திருக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு வாழ முடியுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.</p>
<p>நாட்டின் பொருளாதாரத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்குச் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசி ஒரு நிலைப்பாட்டுக்கு வாருங்கள் எனக் கட்சித் தலைவர்கள், நிபுணர்கள் எனப் பலரும் கோரியிருந்தனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் வாசல்களைத் தொடமாட்டோம், அவர்களுடன் பேசமாட்டோம் என்று தெரிவித்த அரச தரப்பினர் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கதவுகளைத் தட்டுகின்றார்கள்&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/the-country-is-in-the-abyss-by-the-dictatorship-of-the-state/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
