<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>srikantha &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/srikantha/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 21 May 2022 17:08:25 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>srikantha &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அரசியல் சாசன சீர்திருத்தம்! &#8211; தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் ஸ்ரீகாந்தா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/constitutional-reform-srikanta-says-tamil-national-political-parties-should-unite/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/constitutional-reform-srikanta-says-tamil-national-political-parties-should-unite/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 21 May 2022 17:08:25 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=51030</guid>

					<description><![CDATA[அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்ற நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், முன்னெப்பொழுதும் இருந்திராத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும், பிரதான சிங்கள அரசியல் அணிகளுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள் தொடர்ந்து நீடித்துக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்ற நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p>அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அந்த அறிக்கையில்,</p>
<p>முன்னெப்பொழுதும் இருந்திராத மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளும், பிரதான சிங்கள அரசியல் அணிகளுக்கு இடையில் அதிகாரப் போட்டிகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கின்றன.</p>
<p>அத்துடன் உட்கட்சிப் பூசல்களும் மேலெழுந்து நிற்கின்றன. ஆயினும், 20வது அரசியல் சாசன திருத்தத்தின் ஊடாக இல்லாது ஒழிக்கப்பட்ட 19வது திருத்தத்திற்கு மீண்டும் உயிர் கொடுப்பதற்காக, 21வது திருத்தம் என்பது, பரந்துபட்ட அரசியற் கருத்தொற்றுமையுடன் முன்மொழியப்பட்டுள்ளது.</p>
<p>ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி முழுமையான பாராளுமன்ற ஆட்சி முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதிலும் கருத்தொற்றுமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தின் முன் உள்ள நிலையில், அதன் தலைவிதி எப்படி அமையும் என்று திட்டவட்டமான எதிர்வு எதனையும் இப்போது கூற முடியாது. என்றாலும், ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கான பாராளுமன்ற அங்கீகாரம் சமீப எதிர்காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியும்.</p>
<p>அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றான ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றிலும் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பதால், இந்த அரசியல் சாசன சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் பாரிய அரசியல் முக்கியத்துத்தைப் பெறுகின்றன.</p>
<p>இந்த சூழ்நிலையில், நாட்டின் தொடர் பிரச்சினையான இனநெருக்கடி விவகாரத்தில், சமஷ்டி என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையை அரசியற் தீர்வாக முன்வைத்து வந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று, இந்த அரசியற் சீர்திருத்த நடவடிக்கைகளை கையாள வேண்டிய பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளன.</p>
<p>ஜனாதிபதி ஆட்சிமுறை அகற்றப்படும் அதே நேரத்தில், இந்த நாட்டில் இனரீதியான மோதல்களுக்கும் தொடர் அழிவுகளுக்கும் பொருளாதார பின்னடைவுகளுக்கும் அடிப்படையாக அமைந்த ஒற்றையாட்சி முறையும் நீக்கப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த முன்வர வேண்டும்.</p>
<p>ஒற்றையாட்சி மீதான சிங்கள மக்களின் உளவியல் ரீதியான பிடிவாதப் பற்று என்பது, அரசியல் தீர்வு விவகாரத்தில் ஓர் மாபெரும் தடையாக இருந்து வந்துள்ளது என்ற போதிலும், இன்றைய சூழ்நிலையில் தமிழர் தரப்பு தனது நியாயமான கோரிக்கையை முன் வைக்கத் தவறினால் அல்லது தயங்கினால், அது ஓர் வரலாற்றுத் தவறாகி விடும் என்பதை நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.</p>
<p>எனவேதான், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் அனைத்தும் இவ் விடயம் தொடர்பில் விரைவில் கலந்துரையாட முன்வர வேண்டும் என எமது கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது &#8211; என்றுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/constitutional-reform-srikanta-says-tamil-national-political-parties-should-unite/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் தலைமைகள் கூட்டாக இயங்கும் நிலை விரைவில் வரும்! &#8211; ஸ்ரீகாந்தா தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tamil-leaders-will-soon-be-working-together-srikantha-statement/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/tamil-leaders-will-soon-be-working-together-srikantha-statement/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sun, 24 Apr 2022 16:24:16 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=47465</guid>

					<description><![CDATA[தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் தமக்கான அரசியல் தலைமை இல்லை என்ற உணர்வு இருந்துகொண்டு உள்ளது. என்றாலும் சுயமாக சிந்தித்து, கூட்டாக இயங்கும் நிலைமை ஒன்று உருவாகும், அது விரைவில் வெளிப்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது. இதில் ஆரோக்கியமான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் தமக்கான அரசியல் தலைமை இல்லை என்ற உணர்வு இருந்துகொண்டு உள்ளது. என்றாலும் சுயமாக சிந்தித்து, கூட்டாக இயங்கும் நிலைமை ஒன்று உருவாகும், அது விரைவில் வெளிப்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழில் இன்று இடம்பெற்ற தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடல் அமைந்திருந்தது. இதில் ஆரோக்கியமான பதில் சிலவற்றுக்கு தீர்மானங்கள் கிடைத்துள்ளன. சில விடயங்களில் ஒற்றுமையான தீர்மானங்கள் கிடைக்கவில்லை.</p>
<p>தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் விடயங்களில் ஒற்றுமையான பதில்கள் கிடைத்துள்ளன. இன்னமும் இரண்டொரு தினங்களில் இன்றைய கூட்டத்தின் தீர்மான அறிக்கை வெளியிடப்படும். அதன் பொறுப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் பல விடயங்களில் ஒற்றுமையான தீர்மானங்கள் எட்டப்படவில்லை என்ற கசப்பு இருந்தாலும், இப்படி கட்சிகள் சந்தித்து பேசுவது ஆரோக்கியமானது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.</p>
<p>ஆகவே அந்த அளவுக்கு இயன்றதை நாம் செய்வோம். தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் தமக்கான அரசியல் தலைமை இல்லை என்ற உணர்வு இருந்துகொண்டு உள்ளது. என்றாலும் சுயமாக சிந்தித்து, கூட்டாக இயங்கும் நிலைமை ஒன்று உருவாகும், அது விரைவில் வெளிப்படுத்தப்படும் என நம்புகின்றோம்.- என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/tamil-leaders-will-soon-be-working-together-srikantha-statement/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததை சம்பந்தன் மறந்துவிட முடியாது! &#8211; ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sampanthan-cannot-forget-that-the-promises-of-the-government-flew-in-the-air/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sampanthan-cannot-forget-that-the-promises-of-the-government-flew-in-the-air/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Mar 2022 16:24:25 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Promises]]></category>
		<category><![CDATA[Sampanthan]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=43288</guid>

					<description><![CDATA[&#8220;பௌத்த &#8211; சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது. சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.&#8221; &#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;பௌத்த &#8211; சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது. சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.&#8221;</p>
<p>&#8211; இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந. ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.</p>
<p>அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-</p>
<p>&#8220;தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று நிகழ்ந்த உயர்மட்ட பேச்சுகளில், அரச தரப்பால் மேலோட்டமான முறையில் வாக்குறுதிகள் தாராளமாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசின் சார்பில் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் சகல அத்துமீறல்களும் அடாவடி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படாத வரையில், இந்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் அர்த்தம் அற்றுப் போய்விடும்.</p>
<p>அத்துடன், அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதிலும், நீண்ட பல வருடங்களாகச் சிறைக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, காலதாமதம் செய்யாமல் விரைவாக விடுவிப்பதிலும் அரசுக்கு எந்தத் தடையும் இருக்க முடியாது.</p>
<p>இந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அரசிடம் எதிர்பார்க்கப்படுகின்றன.</p>
<p>அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் தனது வாக்குறுதிகளின் விடயத்தில் அரசு தன்னைத்தானே நிரூபித்தாக வேண்டும்.</p>
<p>காலத்துக்குக் காலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமது உடனடி அரசியல்.தேவைகளுக்காக வழங்கிச் சென்ற வாக்குறுதிகள் எல்லாம் தமிழர் மனங்களில் இப்பொழுதும் பசுமையாகவே உள்ளன.</p>
<p>1977இல், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் இருந்து 40 வருடங்கள் கழித்து சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் வரையில், தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளுக்கு சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதைக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட உரிமை கோரும் தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.</p>
<p>வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இந்தியாவின் உதவியும், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளின் ஆதரவும் அவசரமாகத் தேவைப்படும் இக்கட்டான இந்த நேரத்தில், தமிழர்களைத்தான் அனுசரித்துப் போவதான ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுவதற்கு அது முயற்சிக்கின்றது என்பது தெட்டத்தெளிவானது.</p>
<p>தமது பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்று எங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது.</p>
<p>காணமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் விவகாரத்தில், இந்த அரசு எதுவும் செய்யமாட்டாது. அப்படிச் செய்வதாக, இருந்தால் தமக்குத் தாமே படுகுழி தோண்டுவதாகவே அது இருக்கும் என்பதும் அரச தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் காசைத் தந்து, கண்ணீர் விடும் உறவுகளின் வாய்களை மூட வைக்கலாம் என்ற முட்டாள்த்தனமான சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.</p>
<p>இந்தநிலைமையில், தமக்குள் பரஸ்பர விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் தமிழர் தரப்பு தவிர்த்துக்கொண்டு, இன்றைய சூழ்நிலையை இனி எப்படி பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.</p>
<p>விசுவாசத்துடன் சொல்வதானால், அடுத்தகட்ட பேச்சு என்பது நடக்குமாக இருந்தால், எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தபோது உத்தியோகபூர்வமாக தனக்கு வழங்கப்பட்டு, இப்பொழுதும் அரசின் தயவில்தான் தொடர்ந்து வசித்து வரும் ஆடம்பர அரச மாளிகையை மீண்டும் அரசிடம் கையளித்து விட்டு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு தரப்பட வேண்டிய அரச குடியிருப்புத் தொகுதி வீடு ஒன்றிலிருந்து, அந்தப் பேச்சில் கலந்துகொள்ள சம்பந்தன் வர முடியுமாக இருந்தால், பேச்சு மேசையில் அவரின் ஆக்ரோசக் குரலுக்குப் பல மடங்கு பலம் சேரும்.</p>
<p>ஏற்கனவே, பேச்சில் கலந்துகொள்ள நிபந்தனை விதிக்கப்பட வேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாடு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும் அதன் ஏனைய இரண்டு கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ரெலோ ஒதுங்கி நின்றதன் மூலம், பேச்சு மேசையில் சம்பந்தனின் குரலுக்கு எதிர்மறையான முறையில் வலுச் சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்&#8221; &#8211; என்றுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sampanthan-cannot-forget-that-the-promises-of-the-government-flew-in-the-air/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>உள்ளதையாவது முதலில் அமுல்படுத்தவே கோருகிறோம்! &#8211; ஸ்ரீகாந்தா</title>
		<link>https://tamilnaadi.com/news/we-demand-that-you-implement-what-exists-first/</link>
					<comments>https://tamilnaadi.com/news/we-demand-that-you-implement-what-exists-first/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 12:09:21 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CV Vigneswaran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mavai senathiraja]]></category>
		<category><![CDATA[Siddarthan]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suresh K. Premachandran]]></category>
		<category><![CDATA[Tamil National People's Front (TNPF)]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37202</guid>

					<description><![CDATA[ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் இப்போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது. புதிய அரசியல் அமைப்பு வருமா வராதா என்று உறுதியாகக் கூற முடியாது. அப்படி வந்தாலும் அதில் சிங்கள, பெளத்த மேலாதிக்கம் மட்டுமே இருக்கும். இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது.</p>
<p>எமது கடந்த கால அனுபவம் இது. இந்திய &#8211; இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.</p>
<p>அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஒரு நாளும் நாம் கூறவுமில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.</p>
<p>ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில், சட்ட ரீதியாக அமுல்படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.</p>
<p>ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.<br />
ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது. அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல்படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/we-demand-that-you-implement-what-exists-first/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>13ஆவது திருத்தம் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது! &#8211; உறுதியாக உள்ளோம் என்கிறார் மாவை</title>
		<link>https://tamilnaadi.com/news/13th-amendment-will-not-solve-the-ethnic-problem/</link>
					<comments>https://tamilnaadi.com/news/13th-amendment-will-not-solve-the-ethnic-problem/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 11:42:33 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CV Vigneswaran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[mavai senathiraja]]></category>
		<category><![CDATA[Siddarthan]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suresh K. Premachandran]]></category>
		<category><![CDATA[Tamil National People's Front (TNPF)]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37199</guid>

					<description><![CDATA[13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.</p>
<p>13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள், இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும் அவர் தெரிவிக்கையில்,</p>
<p>சமஸ்டி கட்டமைப்பில், சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது. அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.</p>
<p>இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது. நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை &#8211; இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.</p>
<p>வடக்கு &#8211; கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்துவிட்டோம். அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம். தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/13th-amendment-will-not-solve-the-ethnic-problem/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும்! &#8211; த.தே.ம.முன்னணிக்கு சித்தார்த்தன் பதிலடி</title>
		<link>https://tamilnaadi.com/news/must-be-qualified-to-lie-siddharthan-retaliates-against-the-tna/</link>
					<comments>https://tamilnaadi.com/news/must-be-qualified-to-lie-siddharthan-retaliates-against-the-tna/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 09:48:55 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CV Vigneswaran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mavai senathiraja]]></category>
		<category><![CDATA[Siddarthan]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suresh K. Premachandran]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37169</guid>

					<description><![CDATA[முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் போட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முதலமைச்சர் வேட்பாளர் யார் எனும் போட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே த.சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள்.</p>
<p>அவ்வாறு பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள்  என தெரியவில்லை.</p>
<p>அத்தோடு கஜேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள்  யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என்பது தொடர்பில் கட்சிக்குள் போட்டி நிலை காணப்படுகின்றது.</p>
<p>அவ்வாறான நிலையில் ஏன் இவ்வாறு மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன். அவர்களது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அதாவது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர்கள் என்ன தீர்வினை முன் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியுமா?</p>
<p>அவர்களுடைய தீர்வு ஒற்றையாட்சிக்குள் அமைகின்றது எனவே மக்களை இனியும் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது மக்களுக்கு நன்கு விளங்கும் இவர்கள் பொய்யுரைக்கின்றார்கள் &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/must-be-qualified-to-lie-siddharthan-retaliates-against-the-tna/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அரசின் முகவர்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்! &#8211; குற்றம் சுமத்துகிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்</title>
		<link>https://tamilnaadi.com/news/tamil-national-peoples-front-as-agents-of-the-government-suresh-premachandran-accuses/</link>
					<comments>https://tamilnaadi.com/news/tamil-national-peoples-front-as-agents-of-the-government-suresh-premachandran-accuses/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 09:29:27 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[CV Vigneswaran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[mavai senathiraja]]></category>
		<category><![CDATA[Siddarthan]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Suresh K. Premachandran]]></category>
		<category><![CDATA[Tamil National People's Front (TNPF)]]></category>
		<category><![CDATA[tamil parties]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37167</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்கவில்லை. அதனை ஏற்க போவதும் இல்லை. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<div dir="auto">
<p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்கவில்லை. அதனை ஏற்க போவதும் இல்லை.</p>
<p>ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை  பாதுகாக்க, அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு  கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.</p>
<p>அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில்  நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.</p>
<p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை.</p>
<p>தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு  வடக்கின் முகவர்களாக  செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.</p>
<p>குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய  போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார். அதனையே அந்த தேர்தலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.</p>
<p>அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள். தற்போது கோத்தபாய கூறுகின்றார். 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என. அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள்.</p>
<p>கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள்.</p>
<p>மக்களை ஏமாற்றி  கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள்  போலிப் பிரச்சாரங்களை நம்பக்கூடாது &#8211; என்றார்.</p>
</div>
<div dir="auto">#SriLankaNews</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/tamil-national-peoples-front-as-agents-of-the-government-suresh-premachandran-accuses/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமல் வெல்வதற்கு முன்வர வேண்டும் &#8211; வடக்கு ஆளுநரிடம் வேண்டுகோள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/must-come-forward-to-win-without-hurting-the-minds-of-the-people-of-the-north-appeal-to-the-governor-of-the-north/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/must-come-forward-to-win-without-hurting-the-minds-of-the-people-of-the-north-appeal-to-the-governor-of-the-north/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Dec 2021 16:03:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jeevan Thiyagaraja]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=25962</guid>

					<description><![CDATA[வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு முன்வர வேண்டும் &#8211; என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு முன்வர வேண்டும் &#8211; என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான  ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், </p>
<p>வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. </p>
<p>கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து எழுப்பியிருந்த எதிர்ப்புக் குரல்களின் ஓர் அங்கமாகவே மாதகலில் காட்டப்பட்ட எதிர்ப்பும் அமைந்துள்ளது. </p>
<p>யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது என்று இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக பிரகடனப்படுத்தி 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட பின்னரும், யுத்தம் நிகழ்ந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் படைத் தரப்பின் பிரசன்னம் என்பது யுத்த காலத்தைப் போலவே தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது. பல்வேறு படைத்தளங்களும் மேலும் விஸ்த்தரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன.</p>
<p>இந்தச் சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் உள்ள கடற்படை முகாம்களும் மேலும் விஸ்த்தரிக்கப்பட்டு வந்துள்ளன. </p>
<p>இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து இலங்கையில் கள்ளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதை தடுப்பது என்ற பெயரில் 1957ல் காரைநகரில் நிறுவப்பட்ட கடற்படைத்தளம் தொடர்ந்து விஸ்தரிக்கப்பட்டு ஓர் பாரிய தளமாக நிலைத்து நிற்கையிலும் கூட, இந்த விஸத்;தரிப்புக்கள் தொடர்கின்றன. </p>
<p>இன்னுமோர் பாரிய கடற்படைத் தளம் காங்கேசன்துறையிலும் இருக்கின்றது. ஆயினும், மாதகலில் உள்ள கடற்படை முகாமின் தேவைக்காக தனியார் காணி ஓன்றினை சுவீகரிக்கும் திட்டத்துடன் முன்னெடுக்கப்பட்ட அளவீட்டு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. </p>
<p>இப்போது வட மாகாண ஆளுநரால் விடுக்கப்பட்டிருக்கும் சட்ட நடவடிக்கை தொடர்பான எச்சரிக்கை, நீடித்துக் கொண்டிருக்கும் காணி அபகரிப்புப் பிரச்சினையை மேலும் சிக்கல் அடைய வைத்து பாரிய போராட்டங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய நிலைமையை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகின்றோம். </p>
<p>தம்மை பாதிக்கும் எந்தவொரு அரசாங்க நடவடிக்கைக்கும் எதிராக சமூகமட்டத்தில் எவரும் சட்டத்திற்கு அமைவாக எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அரசியல் சாசனத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை நீதிமன்றங்களினாலும் பாதுகாக்கப்படுகின்றது.</p>
<p>மாதகல் உட்பட வடக்கில் தொடரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த உரிமையின்<br />
அடிப்படையிலேயே எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. வடக்கை பொறுத்த மட்டில் இது ஒன்றும் புதிய விடயமல்ல, புதிய ஆளுநர் வடக்கிற்கு வருவதற்கு முன்பிருந்தே நிலை கொண்டு நீடித்து நிற்கும் விவகாரம். </p>
<p>இந்தப் பிரச்சினையில் அதிகார பூர்வமாக தலையிடுவதற்கு சட்டத்தின் கீழ் ஆளுநருக்கு இடமில்லை. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களோடு வட மாகாண சபை இயங்க முடியாமல் ஸ்தம்பிக்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் சகல அதிகாரங்களையும் கையாளும் ஆளுநருக்கு காணி மற்றும் பொலீஸ் துறை தொடர்பான எந்த அதிகாரமும் கிடையாது. </p>
<p>அரசியல் சாசனத்தின் 13ம் திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலீஸ் துறை சம்பந்தப்பட்ட அதிகாரங்கள் இன்னமும் பகிரப்பட்டிராத நிலையில், அந்த அதிகாரங்கள் எவையும் ஆளுநருக்கு கிடையாது. மாறாக, இந்த அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே உள்ளன. இதுதான் யதார்த்தம். </p>
<p>நிலைமை இப்படி இருக்கையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக ஆளுநர் எச்சரிப்பது சிறுபிள்ளைத்தனமானது. </p>
<p>பதவி ஏற்ற கையோடு வடக்கில் வாள் வெட்டுக் குழுக்களை அடக்கப் போவதாக ஆளுநர் அறிவித்தபோது, அது நல்ல நிலைப்பாடாக இருந்தாலும், அது தொடர்பில் அவருக்கு அதிகாரம் இல்லை என்பதை அப்போது நாம் சுட்டிக்காட்ட விரும்பியிருக்கவில்லை. </p>
<p>ஏனெனில் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் எதிர்மறையான கருத்தோடு அவரை வரவேற்பது அரசியல் நாகரீகம் அல்ல என்றே நாம் கருதினோம். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு இராஜ்ஜியத்தை ஆள்வது போன்ற கனவுகள் கலைவது பொதுவாக சகலருக்கும் நன்மையானது. </p>
<p>காணி அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சம்பந்தமாக சட்டம் பாய வேண்டுமானால் கொழும்பிலிருந்து தான் அது ஏவப்பட வேண்டும். நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் அரசாங்கம், எவர் தூண்டினாலும் இன்றைய சூழ்நிலையில் அதனை தவிர்க்கவே விரும்பும் என்பது எமது கணிப்பு. மாறாக சட்ட நடவடிக்கைகள் தொடுக்கப்படுமானால், சிறு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பதிலாக பாரிய போராட்டங்களுக்கே அவை அடி கோலும். </p>
<p>ஆளுநர் ஜீவன் தியாகராசா சட்டத்தின் ஆட்சி தொடர்பில் கரிசணை காட்டும் அதே வேளையில் பொது மக்களுக்கு எதிராக பொல்லுகளோடும் மிரட்டல்களோடும் அன்றைய தினம் மாதகலில் அரங்கேற்றப்பட்ட சட்ட விரோத சம்பவங்கள் பற்றியும் தமது கவனத்தை செலுத்த வேண்டும் என நாம் விரும்புகின்றோம். </p>
<p>ஆளுநர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். பிறப்பால் தமிழர். தகைமைகளின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர். உணர்வுபூர்வமான விவகாரங்களில் வடக்கு மக்களின் மனங்களை காயப்படுத்தாமலும் கோபப்படுத்தாமலும் வெல்வதற்கு அவர் முன்வர வேண்டும் என்பதே எமது ஒரே ஓரு வேண்டுகோள் &#8211; என்றுள்ளது.  </p>
<p>#SriLankaNews    </p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/must-come-forward-to-win-without-hurting-the-minds-of-the-people-of-the-north-appeal-to-the-governor-of-the-north/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைத் தமிழர்மீது கொண்டுள்ள பரிவுக்கு நன்றிகள் &#8211; தமிழக முதலமைச்சருக்கு  தமிழ்த் தேசியக் கட்சி கடிதம்</title>
		<link>https://tamilnaadi.com/news/thank-you-for-your-compassion-for-sri-lankan-tamils/</link>
					<comments>https://tamilnaadi.com/news/thank-you-for-your-compassion-for-sri-lankan-tamils/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Nov 2021 08:02:31 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[srikantha]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[stalin]]></category>
		<category><![CDATA[ta]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=19530</guid>

					<description><![CDATA[துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ஸ்ரீகாந்தாவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கைத் தீவில் வாழ முடியாமல் இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் உடன் பிறப்புக்களின் நல்வாழ்வுக்காய் தாங்கள் முன்னெடுத்திருக்கும் செயற்றிட்டங்களுக்கு எமது மக்களின் சார்பில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>துயரக்கடலில் தொடர்ந்து தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்மீது தாங்கள் கொண்டுள்ள பாசத் துடிப்புக்கும் பரிவுக்கும் எமது மனங்கனிந்த நன்றிகள் என தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.</p>
<p>நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ஸ்ரீகாந்தாவால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், இலங்கைத் தீவில் வாழ முடியாமல் இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழ் உடன் பிறப்புக்களின் நல்வாழ்வுக்காய் தாங்கள் முன்னெடுத்திருக்கும் செயற்றிட்டங்களுக்கு எமது மக்களின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.</p>
<p>தங்கள் நற்பணிகள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் நல்வாழ்த்துக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/thank-you-for-your-compassion-for-sri-lankan-tamils/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
