<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Politician &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sri-lanka-politician/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 04 Nov 2025 05:44:35 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sri Lanka Politician &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்கு உயிர் அச்சுறுத்தல்: கனடா நபர் மீது புகார் – யூடியூபர் மீதும் மன்னார் நகரபிதா முறைப்பாடு!</title>
		<link>https://tamilnaadi.com/news/mp-selvam-reports-death-threat-to-police/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 05:44:35 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Selvam Adaikalanathan]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203978</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அத்துடன், அவரை அவதூறு செய்யும் யூடியூபர் ஒருவர் மீதும் மன்னார் நகர சபைத் தவிசாளர் ஊடாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் தனது முறைப்பாட்டையளித்துள்ளார். கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாகத் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தவறான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அத்துடன், அவரை அவதூறு செய்யும் யூடியூபர் ஒருவர் மீதும் மன்னார் நகர சபைத் தவிசாளர் ஊடாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் தனது முறைப்பாட்டையளித்துள்ளார்.</p>
<p>கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாகத் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p>
<p>நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.</p>
<p>உயிரிழந்த நபருக்கும், ஒரு பெண்ணுக்கும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தனது யூடியூப் தளத்தில் கருத்துக்களைப் பதிவு செய்த யூடியூபர் ஒருவருக்கு எதிராகவும் காவல்துறை முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த முறைப்பாட்டை மன்னார் நகர சபை நகரபிதா, மன்னார் காவல் நிலையத்தில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெலிகம தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல்</title>
		<link>https://tamilnaadi.com/news/waligama-pradesa-sabha-chairman-shooting/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 11:10:58 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Matara]]></category>
		<category><![CDATA[shooting]]></category>
		<category><![CDATA[Sri Lanka Police Investigation]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203389</guid>

					<description><![CDATA[படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு அவரது உடல் வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மிதிகமவில் உள்ள குடும்ப மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். கடந்த புதன்கிழமை அவர் தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசாரணை வெற்றிகரமாக நடப்பதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற உள்ளன.</p>
<p>காலை 11 மணிக்கு அவரது உடல் வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் மிதிகமவில் உள்ள குடும்ப மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். கடந்த புதன்கிழமை அவர் தனது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றாலும், விசாரணை வெற்றிகரமாக நடப்பதாகவும், சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவருக்கு உதவிய நபர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.</p>
<p>தென் மாகாண பொறுப்புடைய மூத்த டி.ஐ.ஜி கித்சிறி ஜெயலத்தின் கீழ் உள்ள பொலிஸ் குழுக்கள், சிசிடிவி மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் தொடர்ந்து விசாரித்து வருகின்றன.</p>
<p>சிசிடிவி காட்சிகளில் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் தெளிவாகத் தெரியாததால் உரிமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தென் மாகாணத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக நேற்று தென் மாகாணம் முழுவதும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.</p>
<p>இறுதிச் சடங்கில் அரசியல்வாதிகள் உட்படப் பலர் அஞ்சலி செலுத்த வருகை தந்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறுகிறது!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Oct 2025 06:39:29 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Current Political Scenario]]></category>
		<category><![CDATA[Jagath Wickramaratne]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203192</guid>

					<description><![CDATA[சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது. இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்நேரம்விடயம் காலை 09.30 &#8211; 10.00நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 10.00 &#8211; 11.00வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காலை 11.00 &#8211; 11.30நாடாளுமன்ற நிலையியற் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய (அக்டோபர் 24, 2025) நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன. காலை 09.30க்கு ஆரம்பமான அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.</p>
<p>இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல்நேரம்விடயம்<br />
காலை 09.30 &#8211; 10.00நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையிலான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலை 10.00 &#8211; 11.00வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலை 11.00 &#8211; 11.30நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலை 11.30 &#8211; மாலை 05.00மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் இடம்பெறவுள்ளது.</p>
<p>மாலை 05.00 &#8211; 05.30ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, ஹீன்மஹத்மயா லியனகே, டிக்ஸன் ஜே. பெரேரா, மேர்வின் டீ. த சில்வா, வை.ஜீ. பத்மசிரி, ஆர்.எம்.ஆர் சூல பண்டார, மற்றும் மாணிக்கவாசகர் கனகசபாபதி ஈழவேந்தன் ஆகியோருக்கான அனுதாபப் பிரேரணைகள் இன்று இடம்பெறவுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சந்திரிக்கா குமாரதுங்க காலமானதாகப் பரவும் செய்தி &#8211; பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/chandrika-kumaratunga-death-news-fake-fact-check/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Oct 2025 05:08:58 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chandrika Kumaratunga]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202649</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், குறித்த செய்திகள் உத்தியோகபூர்வமற்றவை மற்றும் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் அற்ற நிலையில் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாகத் தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில், இவ்வாறான போலியான செய்திகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலமானதாகச் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் பரவி வருகின்றன.</p>
<p>இந்த நிலையில், குறித்த செய்திகள் உத்தியோகபூர்வமற்றவை மற்றும் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் முகநூல் (Facebook) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்தவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் அற்ற நிலையில் இந்தத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.</p>
<p>இது தொடர்பாகத் தென்னிலங்கையில் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரிடம் வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.</p>
<p>இதனடிப்படையில், இவ்வாறான போலியான செய்திகள் மற்றும் வதந்திகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ் மக்கள் பேரவை &#8211; ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் &#8216;கொள்கைக் கூட்டு&#8217; முடிவுக்கு வருகிறது!</title>
		<link>https://tamilnaadi.com/news/provincial-council-elections-in-srilanka-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 15:38:37 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202618</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில் போட்டியிட்டது), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காகத் தமக்கிடையே அமைத்துக் கொண்ட &#8216;கொள்கைக் கூட்டு&#8217;ச் செயற்பாடு தற்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உட்பட சில உதிரித் தரப்புகளைச் சேர்த்துக்கொண்டு &#8216;தமிழ் மக்கள் பேரவை&#8217; என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில் போட்டியிட்டது), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்காகத் தமக்கிடையே அமைத்துக் கொண்ட &#8216;கொள்கைக் கூட்டு&#8217;ச் செயற்பாடு தற்போது முடிவுக்கு வருவதாகத் தெரிகின்றது.</p>
<p>அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி உட்பட சில உதிரித் தரப்புகளைச் சேர்த்துக்கொண்டு &#8216;தமிழ் மக்கள் பேரவை&#8217; என்ற பெயரில் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்தித்த அணிக்கும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையேதான் தேர்தலுக்குப் பின்னர் இந்த &#8216;கொள்கைக் கூட்டு&#8217; அறிவிக்கப்பட்டது.</p>
<p>இந்தக் கூட்டு முடிவுக்கு வர முக்கிய காரணமாக, மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தும் விடயங்களைக் கையாள்வது தொடர்பில் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிகின்றது.</p>
<p>இது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி-யும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் செயலாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்-உம் தெரிவித்த கருத்துக்கள், இந்த &#8216;கொள்கைக் கூட்டு&#8217; பெரும்பாலும் முடிவுக்கு வருவதை உறுதிப்படுத்துகின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி</title>
		<link>https://tamilnaadi.com/news/vasudeva-death-rumor-news/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Oct 2025 05:09:07 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<category><![CDATA[Vasudeva Nanayakkara]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202378</guid>

					<description><![CDATA[தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து பலர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். &#8220;அவர்கள் எனது பிறப்பு ஆண்டு மற்றும் தற்போதைய ஆண்டையும் கூட அதில் சேர்த்திருந்தனர். முதலில் நான் சிரித்தேன்,&#8221; நான் அதை ஆராய்ந்தபோது, அந்தப் பதிவுக்கு மேலே &#8216;தேசிய மக்கள் சக்தி&#8217; என்ற பெயரைக் கண்டேன். இது மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியையோ எதிர்ப்பவர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து பலர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;அவர்கள் எனது பிறப்பு ஆண்டு மற்றும் தற்போதைய ஆண்டையும் கூட அதில் சேர்த்திருந்தனர்.<br />
முதலில் நான் சிரித்தேன்,&#8221; நான் அதை ஆராய்ந்தபோது, அந்தப் பதிவுக்கு மேலே &#8216;தேசிய மக்கள் சக்தி&#8217; என்ற பெயரைக் கண்டேன்.</p>
<p>இது மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியையோ எதிர்ப்பவர்கள் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பும்படி உள்ளதென அவர் விளக்கினார்.</p>
<p>தேர்தலில் போட்டியிடும் திறன் தனக்கு இப்போது இல்லை என்றாலும், அரசியலில் இருந்து விலகும் நோக்கம் இல்லை என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மரணம் வரை ஓய்வு பெறுவதில்லை.</p>
<p>வலதுசாரி குழுக்களின் தாக்குதல்களை முறியடித்து, இடதுசாரி அரசியல் இலட்சியங்களை முன்னேற்றி, எனது கட்சியை பலப்படுத்தி, இந்த நாட்டில் ஒரு ஐக்கியப்பட்ட இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுவதே எனது இலக்கு,&#8221; என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் &#8211; ஒன்றிணையும் பிரதான கட்சிகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-unp-alliance-ranil-making-trouble/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 09:42:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[Sjb Unp Alliance Ranil Making Trouble]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202219</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு நேற்று முடிவு செய்திருந்தது. நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர். எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தியின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு நேற்று முடிவு செய்திருந்தது.</p>
<p>நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர்.</p>
<p>எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.</p>
<p>எனினும், முன்னதாக இந்த கலந்துரையாடல்கள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.</p>
<p>அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு தனக்கு நெருக்கமான ஒருவருடன், இது தொடர்பில் உரையாடல் மேற்கொண்டுள்ளார்.</p>
<p>இதன்போது இரு கட்சிகளின் இரண்டு பொதுச் செயலாளர்களின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாதாம்.! பொன்சேகாவுக்கு மகிந்தவின் பேச்சாளர் பதிலடி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mahinda-rajapaksa-sarath-fonseka-fight/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 07:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa Sarath Fonseka Fight]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Final War]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202043</guid>

					<description><![CDATA[மகிந்த ராஜபக்சதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குக் கொண்டு சென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச. இப்படிபட்ட மகிந்தவையே பொன்சேகா இன்று கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இறுதிப்போரின்போது மகிந்த ராஜபக்சவால் போர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மகிந்த ராஜபக்சதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.</p>
<p>பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குக் கொண்டு சென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச.</p>
<p>இப்படிபட்ட மகிந்தவையே பொன்சேகா இன்று கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்துடன், இறுதிப்போரின்போது மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.</p>
<p>அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோநிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&#8220;வெள்ளைக்கொடி கதையைக் கூறி படையினரைக் காட்டிக் கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.&#8221; என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றும் அநுரவின் அரசாங்கம் &#8211; சஜித் அணி கடும் விசனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/anura-s-government-is-deceptive-sajith-s-team/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 15:00:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura S Government Is Deceptive Sajith S Team]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201853</guid>

					<description><![CDATA[நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது, இந்த அரசு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாகக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையே தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது, இந்த அரசு பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில், &#8220;முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கஜூ உண்பதற்காக கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளதாக இந்த அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதனை விட பாரிய ஒரு தொகையை செலவிட்டிருக்கின்றார்.</p>
<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆட்சியேறியவர்கள் இன்று, புதிய அரசமைப்பை உருவாக்குவதாக கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குப் பதிலாக அதனை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர்.</p>
<p>அன்று மக்களிடம் கூறிய அனைத்தையும் மறந்து நிறைவேற்று அதிகாரத்தை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு ஓரளவுக்கேனும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் இந்தச் சிறப்புரிமைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.</p>
<p>எனவே, இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் போது அவற்றை அரசியல் பழிவாங்கல்களுக்காக முன்னெடுக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்தப் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும்.</p>
<p>ஆனால், அரசு வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் மாத்திரமே அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அரசின் அனுமதியுடன் எவ்வித சோதனைகளும் இன்றி 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுக்கப்பட்டன. அவற்றில் இருந்த இரு கொள்கலன்களில் இருந்தே அண்மையில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.</p>
<p>இந்தக் கொள்கலன்களில் போதைப்பொருட்கள் இருப்பதாகச் சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்திருந்த நிலையிலும், அந்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தி இவற்றை எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.</p>
<p>எனவே, இந்த விடயத்தில் அரச தரப்பிலும் ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது மிகத் தெளிவாகின்றது. எனவே, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எந்த அரசியல்வாதிகளும் தப்பவே முடியாது..! அநுர தரப்பு சூளுரை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/involved-politician-under-world-gang-not-escape/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 06:27:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ananda Wijepala]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Involved Politician Under World Gang Not Escape]]></category>
		<category><![CDATA[Ministry Of Public Security]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201837</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், &#8220;பொலிஸார் தமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். எனவே, அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேக நபர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், எவ்வித பாகுபாடும் இன்றி அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், &#8220;பொலிஸார் தமக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.</p>
<p>எனவே, அரசியல் பழிவாங்கலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. நீண்டகாலமாக இழக்கப்பட்ட நீதி தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.</p>
<p>சிறை வாழ்க்கையில் இருந்து அவர்கள் தப்பவே முடியாது.</p>
<p>நாளாந்தம் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கும் போது, அவற்றுக்கு எதிர்க்கட்சியினர் பதிலளிக்க முற்படுகின்றனர்.</p>
<p>சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை அவர்கள் அரசியல் பழிவாங்கல் எனச் சித்தரிக்கின்றனர். அண்மையில் இந்தோனேஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு சந்தேகநபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>அதற்கமைய அவர்களிடமிருந்த 31 தொலைபேசிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான அறிக்கைகளும் கிடைத்த வண்ணமுள்ளன.</p>
<p>இவற்றுடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின்வாங்கப் போவதில்லை. இவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் அச்சமடையவோ &#8211; பதற்றமடையவோ தேவையில்லை.</p>
<p>மாறாக குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக எவ்வித பாகுபாடும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&#8221; என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
