<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Fisherman &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sri-lanka-fisherman/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 01 Jul 2025 18:02:20 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sri Lanka Fisherman &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் விளக்கமறியலில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/indian-fishermen-remanded-for-illeagal-fishing/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 18:02:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[crime]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[Rameswaram]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=201097</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (01.07.2025) மாலை உத்தரவிட்டுள்ளார். இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) கடற்றொழில் ஈடுபட சென்ற ஏழு கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து படகு ஒன்றில் கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (01.07.2025) மாலை உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று (30) கடற்றொழில் ஈடுபட சென்ற ஏழு கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கள் இரவு எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.</p>
<p>தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை இன்று (1) மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.</p>
<p>கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் இன்று (01.07.2025) மாலை குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியுள்ளனர்.</p>
<p>இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 07 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்.கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கடற்றொழிலாளர் உயிரிழப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/fisherman-dies-in-boat-accident-at-sea-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 16:29:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[fish]]></category>
		<category><![CDATA[fishing]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200969</guid>

					<description><![CDATA[யாழ்.வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(29) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடற்றொழிலாளர் இன்று அதிகாலை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு அவர் மேல் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. இந்ததநிலையில், பலத்த காயமடைந்த கடற்றொழிலாளர் பருத்தித்துறை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்.வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p>
<p>குறித்த சம்பவமானது இன்றையதினம்(29) இடம்பெற்றுள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடற்றொழிலாளர் இன்று அதிகாலை நாகர்கோவில் கடற் பகுதியில் படகுகளை கழுவிக் கொண்டிருந்த வேளை அலையின் சீற்றத்தில் சிக்குண்ட படகு அவர் மேல் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது.</p>
<p>இந்ததநிலையில், பலத்த காயமடைந்த கடற்றொழிலாளர் பருத்தித்துறை வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.</p>
<p>சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக் கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கை! எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/8-indian-fishermen-held-in-mannar-sri-lanka-arrest/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Jun 2025 15:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200932</guid>

					<description><![CDATA[இலங்கைக் கடற்படையினர், இன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் கைது செய்துள்ளனர். நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, இன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைக் கடற்படையினர், இன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் கைது செய்துள்ளனர்.</p>
<p>நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.</p>
<p>அதன்படி, இன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கையில் இருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.இலங்கை உணவகம்</p>
<p>அங்கு இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் முறையாகச் சோதனை செய்யப்பட்டதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை அந்த மீன்பிடி படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.</p>
<p>இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த 8 இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீரற்ற காலநிலை! அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/next-24-hours-red-alert-update/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Jun 2025 16:31:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Climate Change]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200048</guid>

					<description><![CDATA[புத்தளம்(Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தளம்(Puttalam) முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>நாளை (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கி.மீ வேகத்தில் வீசும் எனவும், கடற்பரப்புகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனால் மறு அறிவித்தல் வரை கடல்சார் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் இந்த பகுதிகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு அமைய கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மண்டைதீவு கடலில் உயிரிழந்த 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%af%81-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 17:48:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Douglas Devananda]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199686</guid>

					<description><![CDATA[1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி செலுத்தியுள்ளார். 1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர். இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>1986 ஆம் ஆண்டு மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) அஞ்சலி செலுத்தியுள்ளார்.</p>
<p>1986 ஆம் ஆண்டு ஜீன் 10 ஆம் திகதி மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>இந்தநிலையில் குறித்த நினைவிடத்திற்கு சென்ற ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை: அமைச்சர் சந்திரசேகர் ஆதங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/minister-warns-against-deceptive-loyalties/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Feb 2025 06:30:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Minister Warns Against Deceptive Loyalties Indian fishermen]]></category>
		<category><![CDATA[Ramalingam Chandrasekar]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192125</guid>

					<description><![CDATA[தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை: அமைச்சர் சந்திரசேகர் ஆதங்கம் இலங்கையின் கடல் வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் 12.02.2025 அன்று ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை: அமைச்சர் சந்திரசேகர் ஆதங்கம்</h4>
<p>இலங்கையின் <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/17/usa-discussed-with-anura-govt/">கடல்</a> வளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர், என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் 12.02.2025 அன்று ஊடகவியலாளர்களுக்கு விசேட கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் மூன்று நாட்கள் வந்தார்கள், தற்போது ஏழு நாட்களுக்கும் வருவதற்கு முற்படுகின்றார்கள். எமது நாட்டு மீன்களை பிடிப்பது மட்டுமல்ல கடல் வளத்தையே நாசம் செய்கின்றனர்.</p>
<p>இதனால் நாளைய தலைமுறையினருக்குரிய கடல் வளம் இல்லாமல் போகின்றது. எனவே, இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடிக்க வேண்டாம் என தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதற்கான உரிமை அவர்களுக்கு கிடையாது.</p>
<p>எமது நாட்டு கடல் எல்லைக்குள் வந்து மீன்களை பிடித்துக்கொண்டு செல்லும் வழியில் எங்களை தொப்புள்கொடி உறவுகள் எனக்கூறுவதில் பயன் இல்லை. தமிழக கடற்றொழிலாளர்கள் மீதோ, தமிழக தலைவர்கள் மீதோ எமக்கு எவ்வித கோபமும் இல்லை.</p>
<p>ஒரு சில கடற்றொழிலாளர்கள் தான் டொலர் படகுகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி எமது கடல் வளத்தை நாசமாக்குகின்றனர்.அதனையே நாம் எதிர்க்கின்றோம். எமது நாட்டு எல்லைக்குள் அத்துமீறாவிட்டால் எவரையும் கைது செய்யவேண்டியது தேவைப்பாடு எழாது.</p>
<p>எனவே, எங்களது கடல் எல்லைக்குள் புகுந்து, கடல் வளங்களை நாசமாக்க வேண்டாம் என போராடும் தமிழக கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் எல்லைத்தாண்டாவிட்டால் எவ்வித பிரச்சினையும் ஏழாது&#8221; என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு &#8211; இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 09:25:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Government of India]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189673</guid>

					<description><![CDATA[யாழ். (Jaffna) கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுடெல்லியில் (New Delhi) உள்ள பதில்  இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். (Jaffna) கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்த விடயம் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>புதுடெல்லியில் (New Delhi) உள்ள பதில்  இலங்கை உயர்ஸ்தானிகரை அழைத்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகமும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யாழ். கடற்பரப்பில் நடந்த துப்பாக்கிச் சூடு &#8211; இலங்கை அரசில் கடும் சீற்றத்தில் இந்தியா | Ministry Of External Affairs India Warns Sl Army</p>
<p>அத்துடன் வாழ்வாதாரக் கவலைகளைக் கருத்திற் கொண்டு கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான ரீதியாக கையாள வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாகவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயமல்ல எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையேயான புரிதல் கண்டிப்பான பின்பற்றப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார். அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>இதேவேளை இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது என கடற்படை விளக்கமளித்துள்ளது.</p>
<p>இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு கடற்றொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>தமது படகிற்குள் கடற்படையினர் ஏறுவதை தடுப்பதற்காக, அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டதோடு குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் மிகவும் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர்.</p>
<p>கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிடமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர்.</p>
<p>இதன்போது, அந்த துப்பாக்கி இயங்கியதாலேயே இரு கடற்றொழிலாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடர்ந்து கைதாகும் இந்திய மீனவர்கள் &#8211; இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?</title>
		<link>https://tamilnaadi.com/news/local/34-indian-fishermen-arrest-poaching-srilanka-water/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 10:54:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[34 Indian Fishermen Arrest Poaching Srilanka Water]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189485</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் ஜனவரி 25 ஆம் திகதி பிற்பகுதியிலும் நேற்று (26) அதிகாலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடற்படை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததற்காக 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் ஜனவரி 25 ஆம் திகதி பிற்பகுதியிலும் நேற்று (26) அதிகாலையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.</p>
<p>வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுக்க, உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடற்படை மற்றும் கடலோர காவல்படை இலங்கை கடல் பகுதியில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.</p>
<p>கடற்படையின் கூற்றுப்படி, வட மத்திய கடற்படை கட்டளை இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீன்பிடி படகுகள் குழுவைக் கண்டது.</p>
<p>இதற்கு பதிலளிக்கும் விதமாக, வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர காவல்படை தங்கள் விரைவுத் தாக்குதல் படகையும், வட மத்திய கடற்படை கட்டளை அதன் கரையோர ரோந்து படகையும் அனுப்பி தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்த இந்திய மீன்பிடி படகுகளை விரட்டியது.</p>
<p>இந்த நடவடிக்கைகளின் விளைவாக 03 இந்திய மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து தங்கியிருந்த 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) இந்திய மீனவர்களுடன் (34) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்த சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறீதரன் எம்.பிக்கு வடக்கில் இருந்து விடுக்கப்பட்ட சவால்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/s-shritharan-mp-fishermen-issue-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 13:14:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Indian fishermen]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[m.k stalin]]></category>
		<category><![CDATA[S. Sritharan]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187771</guid>

					<description><![CDATA[சிறீதரன் எம்.பிக்கு வடக்கில் இருந்து விடுக்கப்பட்ட சவால் சிறீதரன் எம்.பி (S. Shritharan) முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார். சம்மேளனத்தின் யாழ்ப்பாண (Jaffna) அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சிறீதரன் எம்.பிக்கு வடக்கில் இருந்து விடுக்கப்பட்ட சவால்</h4>
<p>சிறீதரன் எம்.பி (S. Shritharan) முடிந்தால் ஸ்டாலினுடன் பேசி கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்த்து வைக்கட்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் சவால் விடுத்துள்ளார்.</p>
<p>சம்மேளனத்தின் யாழ்ப்பாண (<a href="https://en.wikipedia.org/wiki/Jaffna" target="_blank" rel="noopener">Jaffna</a>) அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது கடற்தொழில் அமைச்சராக உள்ள சந்திரசேகரன் அவர்களுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் கதைப்பதற்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தவில்லை.</p>
<p>அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு இருந்த போதே இலங்கை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறாமல் இங்கு வந்தபின்னர், முதலமைச்சருடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு தான் கேட்டுள்ளதாகவும், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைக்கப்போவதாகவும் கூறுகின்றார்.</p>
<p>இதெல்லாம் பகட்டுக்கும், எதிர்காலத்தில் கடற்றொழிலாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காகவும் கூறுகின்றார். இந்தியாவில் தேர்தல் நெருங்குகின்றது.</p>
<p>தேர்தல் காலத்தில் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தர மாட்டார்கள். இயலும் என்றால் நீங்கள் நேரத்தினை பெற்று நமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பேசித் தீருங்கள், அதற்கு பின்னர் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்.</p>
<p>தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கதைப்பதற்கு, கடந்த காலத்தில் கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவிடமும் (Douglas Devananda) கோரிக்கை முன்வைத்தோம் இதன்போது அவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோரிடம் இது குறித்து தெரிவித்தார்.</p>
<p>இருப்பினும் எமக்கான நேரம் வழங்கப்படவில்லை. அப்படி எமக்கு நேரம் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் எமது பிரச்சினைகளை நேரடியாகவே எடுத்துக்கூறி இருப்போம் என உபதலைவர் பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mysterious-object-washed-ashore-in-batticalo-sea/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 13:00:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[Sri Lanka Fisherman]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187768</guid>

					<description><![CDATA[களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்! மட்டக்களப்பு (Batticaloa) &#8211; களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றயதினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர். தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் பின்னர் அதனைக் கரை சேர்த்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மர்மப் பொருள் இரும்பு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடியில் 12LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2024/12/09/police-officer-arrested-connection-an-accident/">மட்டக்களப்பு</a> (Batticaloa) &#8211; களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இன்றயதினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் பின்னர் அதனைக் கரை சேர்த்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>குறித்த மர்மப் பொருள் இரும்பு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடியில் 12LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் இப்பொருளின் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு மற்றும் டயர்களும் காணப்படுகின்ற நிலையில் இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இந்த நிலையில் இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
