<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Spanish citizenship &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/spanish-citizenship/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 17:04:18 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Spanish citizenship &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் &#8211; 43 பேர் பலி.</title>
		<link>https://tamilnaadi.com/videos/world-videos/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%95%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 17:04:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[4 Migrants Death In Spain]]></category>
		<category><![CDATA[Spanish citizenship]]></category>
		<category><![CDATA[world featured]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=218549</guid>

					<description><![CDATA[ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஸ்பெயினின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது. மேலும், அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான செவுட்டாவிற்குள் கடந்த 24 மணி நேரத்தில் மொராக்கோவிலிருந்து சுமார் 60,000 புலம்பெயர்ந்தோர் நுழைந்துள்ளதாகவும் அவர்களில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஸ்பெயினின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்பெயினின் மற்றொரு தனித்தீவான மெலிலாவை அடைய முயற்சிக்கும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் புலம்பெயர்ந்தோரை உடனடியாக மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த வருகை அதிகரித்துள்ளது.</p>
<p>மேலும், அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த நிலைமையை ஒரு &#8220;தாக்குதல்&#8221; என்று விவரித்துள்ளதுடன் அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சட்டவிரோதமாக நுழைந்தவர்களைத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கு மொராக்கோ அதிகாரிகள் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அத்துடன், கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமாக இப்பகுதிக்குள் நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/spanish-citizenship-for-iranian-chess-player-who-gave-up-hijab-announcement/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/spanish-citizenship-for-iranian-chess-player-who-gave-up-hijab-announcement/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Jul 2023 14:02:18 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[announcement]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[sarakhadem]]></category>
		<category><![CDATA[spanish]]></category>
		<category><![CDATA[Spanish citizenship]]></category>
		<category><![CDATA[Tamil news]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=83323</guid>

					<description><![CDATA[ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!! ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!! வெளியான அறிவிப்பு!!</h4>
<p>ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.</p>
<p>இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (<a href="https://en.wikipedia.org/wiki/Guidance_Patrol" target="_blank" rel="noopener">Guidance Patrol</a>) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த அமைப்புக்கும் மத கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கும் அதிகாரம் உள்ளது. பெரும்பாலும் பெண்களின் உடை விஷயங்களில் ஷரியா சட்டத்தின்படி கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளையே இந்த அமைப்பு எடுத்து வருகிறது.</p>
<p>கடந்த செப்டம்பரில் 22 வயதான ஈரானிய-குர்திஷ் பெண்ணான மஹ்ஸா அமினி (Mahsa Amini) என்பவர் ஹிஜாப் அணியாமல் இருந்ததற்காக இந்த அமைப்பு அவரை கைது செய்தது. காவலில் இருந்தபோது காவல்துறையினரின் தாக்குதலால் அவர் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.</p>
<p>இந்த கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக உலகின் பல்வேறு பகுதிகளில் பல ஈரானிய பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஃபைட் வேர்ல்ட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க போட்டியில் (FIDE World Rapid and Blitz Chess Championship) ஈரான் நாட்டை சேர்ந்த 26 வயதான சரசதத் கதேமல்ஷரி (Sarasadat Khademalsharieh) பங்கேற்றார்.</p>
<p>அப்போது அவர், ஈரான் நாட்டின் பெண்களுக்கான ஆடை குறியீடுகளின் கீழ் கட்டாயமான ஹிஜாப் இல்லாமலேயே விளையாடினார். இதனையடுத்து அந்த ஈரானிய செஸ் வீராங்கனைக்கு ஈரானில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>ஆனால் சரசதத் இதற்கு அஞ்சவில்லை. தன் நாட்டின் மத அடிப்படைவாத தலைமைக்கு கீழ்படியாமல் வாழ்வதையும் அவர் மாற்றி கொள்ள விரும்பவில்லை. 2023 ஜனவரியில் ஸ்பெயின் நாட்டிற்கு அவர் குடிபெயர்ந்தார்.</p>
<p>தற்போது அவருக்கு ஸ்பெயின் அரசாங்கம் குடியுரிமை வழங்கியிருக்கிறது. சரசதத்தின் வழக்கில் சிறப்பு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு அவருக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது என்று <a href="https://tamilnaadi.com/entertainment/2022/08/14/the-star-couple-flew-to-spain-to-celebrate-the-holiday/">ஸ்பெயின்</a> அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்திருக்கிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/spanish-citizenship-for-iranian-chess-player-who-gave-up-hijab-announcement/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
