<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>slpresidentialelection &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/slpresidentialelection/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 10 Sep 2024 16:13:55 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>slpresidentialelection &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-has-strengthened-international-relations-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Sep 2024 02:18:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[A. Aravind Kumar]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil Has Strengthened International Relations]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[sriLankaelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=164083</guid>

					<description><![CDATA[சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளை &#8211; ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து அவர், &#8220;இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது. மலையக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/09/10/presidential-election-2024-voting-peoples-update-2/">ஜனாதிபதி</a> தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.</p>
<p>பதுளை &#8211; ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து அவர்,</p>
<p>&#8220;இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.</p>
<p>மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.</p>
<p>அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.</p>
<p>கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர். இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.</p>
<p>அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது.</p>
<p>அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.</p>
<p>எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.</p>
<p>இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-has-strengthened-international-relations/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Sep 2024 11:21:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[A. Aravind Kumar]]></category>
		<category><![CDATA[Ranil Has Strengthened International Relations]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[sriLankaelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163966</guid>

					<description><![CDATA[சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். பதுளை &#8211; ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து அவர், &#8220;இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது. மலையக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ள ரணில்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/09/09/srilanka-election-2024/">ஜனாதிபதி</a> தேர்தலில் களமிறங்கியுள்ள 38 வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.</p>
<p>பதுளை &#8211; ஹப்புத்தளையில் நேற்று (08.09.2024) நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் கருத்து அவர்,</p>
<p>&#8220;இதுவரையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு பக்கமாக திரும்பி நின்றோம். இன்று அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்திருக்கிறது.</p>
<p>மலையக மக்கள் காணியின்றி தவித்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான சட்டதிட்டங்களை ஜனாதிபதி தயாரித்திருக்கிறார்.</p>
<p>அதனால் மலையக மக்களுக்கு வீட்டுரிமையும் காணியுரிமையும் கிடைக்கப்போகும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.</p>
<p>கடந்த பொருளாதார நெருக்கடியால் சகல மக்களும் கஷ்டப்பட்டனர். இன்று 38 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.</p>
<p>அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே கல்விப் புலமையும், வலுவான சர்வதேச தொடர்புகளும் உள்ளது.</p>
<p>அதேபோல் நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக இருப்பதால் அவருக்கு அசுர பலம் கிடைத்திருக்கிறது.</p>
<p>எனவே, மலையக மக்கள் செய் நன்றி மறவாத சமூகம் என்ற வகையில் கஷ்டத்திலிருந்து எம்மை மீட்டெடுத்த தலைவருக்கு பிரதி உபகாரம் செய்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.</p>
<p>இன்று 38 பேருக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை வந்திருக்கிறது. நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தபோது அவர்களுக்கு அந்த ஆசை ஏன் வரவில்லை&#8221; என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-has-become-the-npp-general-secretary-sajith/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Sep 2024 05:25:26 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Ranil Has Become The Npp General Secretary Sajith]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[srilankapresidentialelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163621</guid>

					<description><![CDATA[தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாறியுள்ளார் எனவும் இந்தக் கூட்டணி தன்னைப் பார்த்து அஞ்சுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். கொலன்னாவயில் (Kolonnawa) நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” ரணில் மற்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/2024/09/05/npp-will-not-give-false-promises-to-people/">தேசிய மக்கள் சக்தி</a>யின் பொதுச் செயலாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாறியுள்ளார் எனவும் இந்தக் கூட்டணி தன்னைப் பார்த்து அஞ்சுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.</p>
<p>கொலன்னாவயில் (Kolonnawa) நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” ரணில் மற்றும் அநுரவுக்கு (Anura Kumara Dissanayake ) இடையிலான புதிய ஒப்பந்த திரைப்படம் மக்கள் மத்தியில் இன்று திரையிடப்படுகிறது.</p>
<p>ரணிலுக்கு ஏதேனும் வழங்குவதாகத் <a href="https://si.wikipedia.org/wiki/%E0%B6%A2%E0%B7%8F%E0%B6%AD%E0%B7%92%E0%B6%9A_%E0%B6%A2%E0%B6%B1_%E0%B6%B6%E0%B6%BD%E0%B7%80%E0%B7%9A%E0%B6%9C%E0%B6%BA" target="_blank" rel="noopener">தேசிய மக்கள் சக்தி</a>யினர் (NPP) ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>நாட்டு மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சேவையாற்றும் என்ற அச்சம் ரணில் மற்றும் அநுர கூட்டணியில் காணப்படுகிறது. எனவே, இத்தகைய டீல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து, சிறந்த கொள்கையுடனான அரசியல் கலாச்சாரத்தை ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கும்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையினால் செல்வந்தர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.</p>
<p>தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். எனவே, எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர், மக்களின் சுமைகளைக் குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கை எட்டப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாமல் ராஜபக்சவினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sl-presitencial-election-condidate-namal/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Sep 2024 07:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Sl Presitencial Election Condidate Namal]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[sriLankaelection2024]]></category>
		<category><![CDATA[sriLankaelectionupdates]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163444</guid>

					<description><![CDATA[நாமல் ராஜபக்சவினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 160 ஆசனங்களையும் 13,268 வாக்களிப்பு நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதி தேர்தலில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாமல் ராஜபக்சவினால் நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ள விழிப்புணர்வு!</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2022/08/22/ranil-who-protected-the-country-from-terrorists-famous-peramuna-mp/">ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a>வின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.</p>
<p>நாடளாவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 160 ஆசனங்களையும் 13,268 வாக்களிப்பு நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>2024 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேடர்பாளராக களமிறங்கியுள்ள நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசார வேலைகளின் ஒரு பகுதியாகவே இந்த தேசிய வேலைத்திட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.</p>
<p>மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர</title>
		<link>https://tamilnaadi.com/news/local/don-t-label-yourself-anti-change-anura/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 09:48:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[srilankapresidentialelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163349</guid>

					<description><![CDATA[வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெறும் என்பதால், மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) வடக்கு மக்களுக்கு சற்று காரசாரமாக பேசியுள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழ் அரசுக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர</h4>
<p>நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/03/ranil-sajith-in-merger-talks-to-break-success/">தேசிய மக்கள் சக்தி</a> இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெறும் என்பதால், மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) வடக்கு மக்களுக்கு சற்று காரசாரமாக பேசியுள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எடுத்த தீர்மானம் தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் தீர்மானத்திற்கு எதிரானது.</p>
<p>சுமந்திரன் யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவிடம் வாக்கு கேட்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மாற்றத்திற்கு எதிராக தெற்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரள்கின்றனர்.</p>
<p>சமூகமே ஒரு புதிய மாற்றத்தைக் கோருகிறது. முழு நாட்டிற்கும் ஒரு புதிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். தெற்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.</p>
<p>இந்த நாட்டிற்கு புதிய மாற்றம் தேவை. பழைய பாதையில் முன்னோக்கிச் செல்ல வடக்கு மக்களை ஆதரிக்க வேண்டுமா? பழைய வீதியை விட்டுவிட்டு புதிய வீதிக்கு ஒன்றுபடுமாறு வடக்கு மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.</p>
<p>எனவே, தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு, இந்தப் புதிய மாற்றத்துக்கு எதிரான முடிவாகும். 2010, 2015, 2019 ராஜபக்சேவுக்கு எதிரான முடிவு. ஆனால் 2024 முடிவு மாற்றத்திற்கு எதிரான முடிவு.</p>
<p>இந்த மாற்றத்தை எதிர்க்கும் முடிவை கல்வியாளர்களும், பேராசிரியர்களும் அங்கீகரிக்கிறார்களா? இந்த மாற்றத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p>மாற்றத்திற்கு எதிராக இருக்காதீர்கள். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாற்றத்தை கோரும் போது யாழ்ப்பாணத்தில் உங்களால் மட்டும் எப்படி அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட முடியும்?</p>
<p>ஆனால் இந்த யாழ்ப்பாணம் வெற்றியின் அங்கமாக மாறட்டும். அந்த மகத்தான மாற்றத்தின் எதிர்ப்பாளர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள் என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/all-non-supportive-ministers-should-quit-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 08:17:07 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[All Non Supportive Ministers Should Quit Ranil]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[sriLankaelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163310</guid>

					<description><![CDATA[உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு! இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உள்ளிருந்து எதிராக செயற்படும் அமைச்சர்கள் தொடர்பில் ரணில் கடுமையான நிலைப்பாடு!</h4>
<p>இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்காது கட்சியை பெயரளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறுமாறு ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையிலேயே நேற்று (05) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 4 இராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்து வெளியேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் <a href="https://tamilnaadi.com/news/local/2024/01/09/renewable-energy-opportunities-north-of-sri-lanka/">எரிசக்தி</a> இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவான அமைச்சர்கள் உள்ளிட்ட பல கட்சி அமைப்புக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத அமைச்சர்களை தற்போதைக்கு அரசாங்கம் என்ற பெயரில் வைத்துக்கொண்டு எந்த பயனும் இல்லை எனவும் தேர்தல் தொடர்பில் எடுக்கும் தீர்மானங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>எனவே, முக்கியமான தருணத்தில் ஆதரவளிக்காதவர்களை நீக்கி, சுதந்திரமாக ஜனாதிபதித் தேர்தலைத் தொடர சந்தர்ப்பம் வழங்குமாறு, இந்தக் குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>மேலும் சில அரச அதிகாரிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எச்சரிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதித் தேர்தல் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் தயங்காமல் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி பல இராஜாங்க அமைச்சர்கள் தமது பதவிகளில் இருந்து நீக்கப்படாமல், அதற்குப் பதிலாக இந்த அறிவிப்பின் பிரகாரம் பதவி விலகுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/namal-election-rally-mahinda-missing/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 08:13:04 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Election Rally Mahinda Missing]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[slpresidentialelection]]></category>
		<category><![CDATA[sriLankaelection2024]]></category>
		<category><![CDATA[srilankapresidentialelection2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=163311</guid>

					<description><![CDATA[மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நாமல் ராஜபக்சவின் பல பிரசாரக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகிந்த செல்லும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷவின் பிரபலத்தன்மை குறைவடைவதாக தெரியவந்துள்ளது. இதனால் மகிந்தவின் பங்களிப்பை குறைத்து நாமலின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் மகிந்தவை பிரசார கூட்டங்களில் மட்டுப்படுத்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மகிந்தவினால் நாமலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/05/07/pothujana-peramuna-urgent-meeting-in-colombo/">ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன</a>வின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>எனினும் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A" target="_blank" rel="noopener">நாமல் ராஜபக்ச</a>வின் பல பிரசாரக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மகிந்த செல்லும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷவின் பிரபலத்தன்மை குறைவடைவதாக தெரியவந்துள்ளது.</p>
<p>இதனால் மகிந்தவின் பங்களிப்பை குறைத்து நாமலின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் மகிந்தவை பிரசார கூட்டங்களில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மகிந்தவின் பிரபலத்தன்மை மட்டுமே அதிகரிக்கும் என்பதனால் அது நாமலுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.</p>
<p>அதற்கமைய, நாமலின் பிரபலத்தன்மையும் அதிகரிக்க வேண்டும் மகிந்தவின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதனால் இடைக்கிடையே மகிந்தவை மேடைக்கு எற்றி உரையாற்ற வைப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
