<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shehan Semasinghe &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/shehan-semasinghe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 26 Dec 2024 17:47:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Shehan Semasinghe &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/former-govt-s-hard-work-now-yielding/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Dec 2024 13:38:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Former Govt S Hard Work Now Yielding]]></category>
		<category><![CDATA[imf Sri lanka]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=183699</guid>

					<description><![CDATA[முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர் நாட்டை நெருக்கடியிலிருந்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முன்னாள் அரசாங்கத்தின் கூட்டு கடின உழைப்பும், உறுதியும் தற்போது வலுவான, உறுதியான முடிவுகளை தருவதாக முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கூறியுள்ளார். ஃபிட்ச் மதிப்பீடுகள் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘கட்டுப்படுத்தப்பட்ட இயல்பு நிலையிலிருந்து CCC+ ஆக மேம்படுத்தியுள்ளமை குறித்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>முன்னாள் அரசாங்கத்தின் கடின உழைப்பே தற்போதைய உறுதியான முடிவுகள் : முன்னாள் அமைச்சர்</h4>
<p>நாட்டை நெருக்கடியிலிருந்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதில் முன்னாள் அரசாங்கத்தின் கூட்டு கடின உழைப்பும், உறுதியும் தற்போது வலுவான, உறுதியான முடிவுகளை தருவதாக முன்னாள் நிதி ராஜாங்க <a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/journalists-in-jaffna-barred-from-covering-meeting/">அமைச்சர்</a> செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) கூறியுள்ளார்.</p>
<p>ஃபிட்ச் மதிப்பீடுகள் நீண்டகால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை ‘கட்டுப்படுத்தப்பட்ட இயல்பு நிலையிலிருந்து CCC+ ஆக மேம்படுத்தியுள்ளமை குறித்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.</p>
<p>இந்த மைல்கல் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் வெற்றியை எடுத்துக் காட்டுகிறது.</p>
<p>அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சியில் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D" target="_blank" rel="noopener">உள்ளூர்</a> மற்றும் உலகளாவிய நம்பிக்கையை அதிகரிக்கிறது என்றும் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/former-state-minister-pleased-with-imf-agreements/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 13:53:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[imf Sri lanka]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178530</guid>

					<description><![CDATA[அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சர்வதேச நாணய நிதியம்(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. “இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>அநுர அரசின் செயற்பாடு : மகிழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/09/24/imf-is-ready-to-work-with-anura-kumara/">சர்வதேச நாணய நிதியம்</a>(imf) மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையில் ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதில் மகிழ்ச்சி அடைவதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க(sehan semasinghe), தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>இது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) 3 வது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கிறது. “இந்த வெற்றியானது பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தை வலுப்படுத்தும் வகையில் நான்காவது தவணை நிதி உதவியை திறப்பதற்கு வழி வகுக்கிறது.</p>
<p>2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த இக்கட்டான காலப்பகுதியானது, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை சந்திப்பது மட்டுமன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை தாண்டியதுடன், பல துறைகளில் எட்டப்பட்ட முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு முழு நம்பிக்கையை வழங்கியது.</p>
<p>பொருளாதாரத்தை புத்துயிர் அடையச் செய்வதற்காக நாங்கள் அறிமுகப்படுத்திய EFF திட்டமானது, தற்போதைய அரசால் முதலில் எதிர்க்கப்பட்டது, ஆனால் தற்போது நாட்டின் சவால்களை சந்திப்பதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.</p>
<p>இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு ஒழுக்கமான கட்டமைப்பை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது&#8221; என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-general-election-2024-7/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 06:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[General Election 2024]]></category>
		<category><![CDATA[Parliament Election 2024]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka General Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka Parliament Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=169890</guid>

					<description><![CDATA[மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மாற்றுத் தெரிவை நாடும் மக்கள்! முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள முடிவு</h4>
<p>எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நிதி இராஜாங்க <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/11/former-minister-w-b-ekanayake-passed-away/">அமைச்சர்</a> செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>பொதுமக்கள் புதிய மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கின்ற நிலையில் அதனை தான் மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், கடந்த அரசாங்கத்துடன் இணைந்து தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம் தேவை என்பது புலனாகிறது என்றும் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும், அரசாங்கத்திலும் நாடாளுமன்றத்திலும் மாற்றத்திற்கான மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கின்றோம். இதன்படி பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை.</p>
<p>அதற்கு பதிலாக, தன்னை முன்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்த <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">அநுராதபுர</a> மக்களுக்கு சேவை செய்வதில் பணியாற்றுவேன்.</p>
<p>எவ்வாறெனினும், எதிர்காலத்தில் தேசத்திற்கு தேவைப்படும் போதெல்லாம் தனது நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-presidential-election-2024-44/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Sep 2024 11:31:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[imf Sri lanka]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economic Crisis]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<category><![CDATA[vehicle imports sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=165118</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் வாகனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பொருட்களுக்குமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 06 மாதங்களுக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகன இறக்குமதிக்கான அனுமதி! காலம் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு</h4>
<p>2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்களை <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/11/sri-lanka-presidential-election-2024-35/">இறக்குமதி</a> செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என நம்புகின்றோம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>நாட்டில் வாகனங்களின் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF" target="_blank" rel="noopener">இறக்குமதி</a>க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து பொருட்களுக்குமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 06 மாதங்களுக்கு முன்னர் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.</p>
<p>ஒக்டோபர் மாதத்துக்குள் பொது போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நாம் எதிர்பார்த்தோம். 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என நம்புகின்றோம்.</p>
<p>இது தேர்தலை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல . ஆறு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட ஒரு தளர்வு முறையாகும்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொள்ளாதவகையில் நாணய கையிருப்பு அளவு வீழ்ச்சியடையாத வகையில், இருப்புக்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படாத வகையிலேயே இந்த தளர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>நாட்டின் அரசாங்கம் நிதி ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வரி நிர்வாகம் வலுவாக இருக்கவேண்டும். அதற்கான சட்ட கட்டமைப்பை தயாரிக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தோம்.</p>
<p>மோசமான பொருளாதார நெருக்கடியின்போது வரி சீர்திருத்தங்களைக்கொண்டு வந்தோம். தொடர்ந்து அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டோம். 8.2 சதவீதமாக இருந்த வருமானம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் 14 சதவீதத்தை எட்டும் என நம்புகிறோம்.</p>
<p>இலங்கைக்கு கடனுதவி வழங்கியவர்களுடனும் சர்வதேச நிதி நிறுவனங்களுடனும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி, அரசாங்கத்தின் வருமானத்தை 15 சதவீதம் வரை அதிகரிப்பதே எமது நோக்கமாகும்.</p>
<p>வரி மூலமான வருமானத்தில் கவனம் செலுத்தி, குறிப்பாக வருமான வரி திருத்தத்துக்கு சில நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானது என கருதி செப்டம்பர் 2023 இல் சர்வதேச நாணய நிதியத்துடன் தேவையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தோம்.</p>
<p>மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், வருமானம் 15 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் நிவாரணம் வழங்கப்படவேண்டியவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன.</p>
<p>ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சமகால அரசாங்கமே வறிய மக்கள் பற்றி சிந்தித்து உரிய நடவடிக்களை மேற்கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, ஜக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் பொருளாதாரம் குறித்து அறிவுள்ள ஹர்ஷா, கபீர், எரான் ஆகியோர், பொருளாதாரத்தில் திறமையற்ற அக் கட்சியின் தலைவரை ஏன் பின் தொடர்கின்றார்கள்.</p>
<p>பொருளாதார ரீதியில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ, கபீர் மற்றும் எரான் ஏன் துணை போகின்றார்கள்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிரான அநுரகுமார மற்றும் நாணய நிதியத்துடன் இணைந்து முறையாக செயற்பட முடியாத சஜித்தின் கொள்கைக்காக இவர்கள் முன்நிற்கின்றார்கள் என்பதையும் நம்ப முடியாதுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/vehicle-import-in-srilanka-6/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Sep 2024 06:24:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Vehicle Import In Srilanka]]></category>
		<category><![CDATA[vehicle imports sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=164728</guid>

					<description><![CDATA[வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு</h4>
<p>இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/17/vehicle-price-in-srilanka/">இறக்குமதி</a> செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.</p>
<p>வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.</p>
<p>இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கார்களை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.</p>
<p>அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, தடை/கட்டுப்பாட்டை தொடர இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர் மேலும், 2,000க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டு, அவ்வப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்சிக்குள் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! தீர்மானம் எடுக்கவும் அனுமதியில்லை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/mahinda-is-not-allowed-to-take-decisions/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Aug 2024 14:43:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Is Not Allowed To Take Decisions]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Podujana Peramuna]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=155556</guid>

					<description><![CDATA[எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். தற்போது பொதுஜன பெரமுனவுக்குள் மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) தீர்மானம் எடுப்பதற்கும் ஒரு சிலர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாங்கள் ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எமது வீடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தது சரிதான் என்று நாமல் ராஜபக்ச குறிப்பிடுகின்றார். இவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.</p>
<p>தற்போது பொதுஜன பெரமுனவுக்குள் மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) தீர்மானம் எடுப்பதற்கும் ஒரு சிலர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அநுராதபுரத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>நாங்கள் ஒரே அணியாக நாடாளுமன்றத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தோம். ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான தீர்மானத்தை கட்சி எடுக்க வேண்டாம் என்று நாங்கள் கோரினோம்.</p>
<p>கட்சியில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவர் பேசினார். கட்சியின் சித்தாந்தங்கள் தொர்பில் அவருக்கு நல்ல புரிதல் இருப்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.</p>
<p>ஆனால், கட்சியில் இருக்கும் சில உறுப்பினர்கள், மகிந்த ராஜபக்சவை சரியான தீர்மானத்தை எடுக்க அனுமதிக்கவில்லை. எமது வீடுகளை அழித்தது சரியான விடயம் தான் என்று நண்பர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) தெரிவித்துள்ளார். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன்.</p>
<p>எமது வீடுகளை அழித்தது மிகச் சரியானது என்று கூறுவதற்கு அவருக்கு என்ன உரிமை உண்டு என கேள்வி எழுப்பியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Jul 2024 05:52:26 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<category><![CDATA[vehicle imports sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=154731</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) வலியுறுத்தியுள்ளார். பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக வாகனங்கள் ஒக்டோபர் மாதத்திற்குள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பான அறிக்கையை நிதியமைச்சு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடும் எனவும் எதிர்கால வீதி திட்டம் வெளிப்படுத்தப்படும் எனவும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்</h4>
<p>2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனியார் வாகனங்களை <a href="https://tamilnaadi.com/news/local/2024/07/26/sri-lanka-tourism-vehicle-import-applications/">இறக்குமதி</a> செய்வது குறித்து பரிசீலிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>பொது போக்குவரத்து மற்றும் வர்த்தக வாகனங்கள் ஒக்டோபர் மாதத்திற்குள் ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பான அறிக்கையை நிதியமைச்சு ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடும் எனவும் எதிர்கால வீதி திட்டம் வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின் படி, இது தொடர்பான இறக்குமதி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீண்டுமொரு வரிசை யுகம்! செப்டெம்பர் 21இல் தெரியும் இறுதி முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/sri-lanka-economic-crisis-and-president-election/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 11:08:39 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Economic Crisis]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=154531</guid>

					<description><![CDATA[மீண்டுமொரு வரிசை யுகம்! செப்டெம்பர் 21இல் தெரியும் இறுதி முடிவு 2022ஆம் ஆண்டு அனுபவித்தது போல மீண்டுமொரு வரிசை யுகத்திற்கு செல்வதா, இல்லையென்றால் தேர்தலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) முழுமையான ஒத்துழைப்பை வழங்கி தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானித்து செப்டெம்பர் 21ஆம் திகதி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மீண்டுமொரு வரிசை யுகம்! செப்டெம்பர் 21இல் தெரியும் இறுதி முடிவு</h4>
<p>2022ஆம் ஆண்டு அனுபவித்தது போல மீண்டுமொரு வரிசை யுகத்திற்கு செல்வதா, இல்லையென்றால் தேர்தலின் போது ஜனாதிபதி <a href="https://tamilnaadi.com/news/local/2024/02/10/attempt-to-deprive-tamils-of-their-land-rights/">ரணில் விக்ரமசிங்க</a>வுக்கு(Ranil Wickremesinghe) முழுமையான ஒத்துழைப்பை வழங்கி தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானித்து செப்டெம்பர் 21ஆம் திகதி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.</p>
<p>அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p>பொருளாதார ரீதியில் 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த எமது அரசாங்கம் எடுத்த தவறான தீர்மானங்களினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.</p>
<p>பொருளாதார நெருக்கடியின் போது மாறுப்பட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களினால் நாடு இரண்டாண்டுக்குள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ளது.</p>
<p>பொருளாதார மறுசீரமைப்புக்களுக்காக எடுத்த தீர்மானங்களினால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். மறுசீரமைப்புக்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீட்சியடைந்துள்ளது.</p>
<p>எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று அரசியல்வாதிகள் மாத்திரமே குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். முன்னேற்றத்தை நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.</p>
<p>பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. நெருக்கடிகளை மாத்திரமே ஏற்படுத்தினார்கள்.</p>
<p>ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் இடம்பெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.</p>
<p>2022 ஆம் ஆண்டு வரிசை யுகத்துக்கு மீண்டும் செல்வதா அல்லது தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தை நிலையானதாக்குவதா என்பதை நாட்டு மக்கள் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/vehicle-import-in-sri-lanka-18/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Jul 2024 12:29:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024]]></category>
		<category><![CDATA[Vehicle Import In Sri Lanka]]></category>
		<category><![CDATA[vehicle imports sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=154403</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலை இலக்குவைத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல முடியாது. தற்போது வாகனங்களை தவிர ஏனைய அனைத்துக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு</h4>
<p>வாகன <a href="https://tamilnaadi.com/news/2024/07/31/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%87%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/">இறக்குமதி</a>க்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த தேர்தலை இலக்குவைத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல முடியாது. தற்போது வாகனங்களை தவிர ஏனைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.</p>
<p>வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/notification-of-vehicle-import-deregulation-scheme/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Jul 2024 11:05:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Economy of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Import]]></category>
		<category><![CDATA[Shehan Semasinghe]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=153178</guid>

					<description><![CDATA[வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வாகன இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்கும் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு</h4>
<p>வாகன <a href="https://tamilnaadi.com/news/local/2024/07/21/the-government-again-focuses-on-egg-imports/">இறக்குமதி</a> கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இந்த வருட இறுதிக்குள் அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.</p>
<p>இதனையடுத்து 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் தனிப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்தநிலையில்,<a href="https://www.cbsl.gov.lk/ta" target="_blank" rel="noopener">மத்திய வங்கி</a>யின் வெளிநாட்டு கையிருப்பை பாதிக்காத வகையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வெளிநாட்டு கையிருப்புகளை பாதிக்கும் வகையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், அது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்</p>
<p>அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் தடுக்கும் வகையில், வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் திட்டத்தின் படி நீக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
