<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shanakiyan Rajaputhiran Rasamanickam &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/shanakiyan-rajaputhiran-rasamanickam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 28 Mar 2023 08:25:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Shanakiyan Rajaputhiran Rasamanickam &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிந்தித்து செயற்படுங்கள்! &#8211; ஜனாதிபதி எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/think-and-act-presidential-warning/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/think-and-act-presidential-warning/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Mar 2023 08:25:15 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=71523</guid>

					<description><![CDATA[தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நேற்று (27) பிற்பகல் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.</p>
<p>நேற்று (27) பிற்பகல் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.</p>
<p>மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்தாது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் முன்னெடுத்து வருகின்றார்.</p>
<p>பொதுமக்களின் நன்மை கருதியில்லாமல் அவர் காணி ஏதாவது விற்பனை செய்வதற்கே அவசரமாக மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினை கூட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/think-and-act-presidential-warning/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ராஜபக்சக்களின் நண்பனே சீனா!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/china-is-a-friend-of-rajapaksa/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/china-is-a-friend-of-rajapaksa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Nov 2022 18:53:28 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[Rajapaksa family]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=67064</guid>

					<description><![CDATA[மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (30) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனா எமது மக்களின் நண்பன் அல்ல ராஜபக்சக்களின் நண்பன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாராளுமன்றத்தில் இன்று (30) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, கைத்தொழில் மற்றும் உணவு பாதுகாப்பு அமைக்கு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சுக்கு 10.7 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிதியை கொண்டு பெருந்தோட்ட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காலம் காலமாக இருக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏதாவது நலன்புரி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.</p>
<p>நாட்டுக்கு அந்நிய செலாவணியை காலம் காலமாக ஈட்டித் தரும் பெருந்தோட்ட மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்.</p>
<p>வர்த்தகத்துறை அமைச்சுக்கு கடந்த ஆண்டு 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வருடம் 5.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏதேனும் புதிய அபிவித்தி திட்டங்களை ஆரம்பிக்க அவதானம் செலுத்துங்கள். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி நிலையம், பரந்தன் கனியமணல் அகழ்வு தொழிற்துறை காணப்படுகின்றன.</p>
<p>பொறுப்பு வாய்ந்த தரப்பினர் இருக்கும் வளங்களை எவ்வாறு சூறையாடலாம் என அவதானம் செலுத்துகிறார்களே தவிர வளங்களை கொண்டு எவ்வாறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது என்பது குறித்து அவதானம் செலுத்துவதில்லை.</p>
<p>மட்டக்களப்பு மற்றும் திருக்கோவில் பகுதியில் உள்ள இல்மனைட் வளம் சூறையாடப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம்.</p>
<p>ஆகவே, இந்த பகுதியில் புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தினால் அதனை முழுமையாக வரவேற்போம்.</p>
<p>இந்த அமைச்சுக்கு சுமார் 15 பில்லியன் அளவு நிதி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் இடம்பெற்ற சீனி, தேங்காய் எண்ணெய் மற்றும் வெள்ளைப்பூண்டு மோசடியால் அரச வருமானம் பெருமளவில் இழக்கப்பட்டது.</p>
<p>இவ்வாறான மோசடிகளைகுறிப்பிட்டுக் கொண்டு செல்லலாம். ஆனால் நாட்டுக்கு வருமானத்தை தேடிக் கொடுக்கும் பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் துறை அமைச்சுக்கு 15 பில்லியன் ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அரச நிதியை மோசடி செய்து நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளவர்களுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை என்ன? மோசடி செய்யப்பட்ட அரசுடமையாக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?</p>
<p>ஆனால் நாட்டை அபிவிருத்தி செய்யும் அமைச்சுகளுக்கு சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது பிரச்சினைக்குரியதாக உள்ளது. முட்டையின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாடசாலை மாணவர்களுக்கு முட்டை ஒன்றை வாங்கி கொடுக்க முடியாத நிலைக்கு இந்த நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளார்கள்.</p>
<p>கைத்தொழில் அமைச்சு ஊடாக நாட்டின் கைத்தொழில்துறையை விரிவுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>சீனா அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு துறைமுக நகரத்தையும் தனதாக்கியுள்ளது.</p>
<p>இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சீனா எந்த அபிவிருத்தி முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. சீனாவின் முதலீடுகளில் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடைக்கப் பெறவில்லை.</p>
<p>சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று குறிப்பிடுகிறார்கள். அவ்வாறாயின் கடன்மறுசீரமைப்பு விவகாரத்தில் இலங்கைக்கு சீனா ஆதரவாக செயற்பட வேண்டும்.</p>
<p>இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் மனித உரிமை பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் போது சீனா இலங்கைக்கு ஆதரவாக செயற்படுகிறது. இதனை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சீனா இலங்கைக்கு சார்பாக செயற்படுகிறது என குறிப்பிடுகிறார்கள். இதனை பைத்தியகாரத்தனமாக பேச்சு என்று குறிப்பிட வேண்டும்.</p>
<p>சீனாவில் ஜனநாயகம், மனித உரிமைகள் இல்லை. மத சுதந்திரம் இல்லை. இவ்வாறான சூழலையா இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள். சீனா இலங்கையின் உண்மையான நட்பு நாடு இல்லை. மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரது குடும்பத்தினரது நண்பராகவே சீனா உள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/china-is-a-friend-of-rajapaksa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கூட்டமைப்பினர் எனக்கு வாக்களித்தனர்! &#8211; போட்டுடைத்தார் ரணில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-confederates-voted-for-me-ranil-said/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-confederates-voted-for-me-ranil-said/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Aug 2022 19:13:39 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sampanthan]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Sumanthiran]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=58365</guid>

					<description><![CDATA[அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில், தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையை அனைவர் முன்னிலையிலும் ரணில் பகிரங்கப்படுத்தினார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பி மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எமக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது. சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவில், தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர் வாக்களித்திருந்தமையை அனைவர் முன்னிலையிலும் ரணில் பகிரங்கப்படுத்தினார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பி மேலும் தெரிவித்துள்ள அவர்,</p>
<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எமக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது.</p>
<p>சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.<br />
இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.</p>
<p>குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு நாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தார்.</p>
<p>இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் அவர்கள் மொழி பெயர்த்திருந்தார். இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க; கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார். இதன்போது; குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்திருந்தனர்.</p>
<p>அத்துடன் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.</p>
<p>கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு;<br />
நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்ய வேண்டும்.</p>
<p>அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல் வேண்டும்.</p>
<p>வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அத்துமீறி முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.</p>
<p>தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.</p>
<p>பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.</p>
<p>வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.<br />
கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல் உள்ளிட்டவற்றினையே முன்வைத்தோம். &#8211; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-confederates-voted-for-me-ranil-said/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வீடுகளை நிர்மாணிப்பதில் பாரபட்சம்! &#8211; சாணக்கியன் குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/shanakiyan-rasamanickam-mp-news/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/shanakiyan-rasamanickam-mp-news/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Jun 2022 07:35:22 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=52736</guid>

					<description><![CDATA[வடக்கு, கிழக்கில், நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், &#8220;நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்&#8221; என்று குறிப்பிட்டார். எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, &#8220;நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு, கிழக்கில், நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் தரவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்தார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், &#8220;நல்லாட்சி அரசில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகளை, தாம் பூர்த்தி செய்யமுடியாது என்று அரசின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்&#8221; என்று குறிப்பிட்டார்.</p>
<p>எனினும், இதற்குப் பதிலளித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, &#8220;நல்லாட்சி அரசின் காலத்தைக் காட்டிலும் தற்போதைய அரசு கடன் அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளது&#8221; என்று தெரிவித்தார்.</p>
<p>இதன்போது குறுக்கிட்ட சாணக்கியன் எம்.பி., &#8220;இந்த வீடுகளுக்கு ஒரு இலட்சம் ரூபா மாத்திரமே கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு வீடுகளை அமைக்கமுடியுமா?&#8221; என்றும் கேள்வி எழுப்பினார்.</p>
<p>இதற்குப் பதிலளித்த வீடமைப்புத்துறையின் முன்னாள் பிரதி அமைச்சர், &#8220;குறித்த வீடுகளுக்கு 6 இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டுள்ளது&#8221; என்று சுட்டிக்காட்டினார்.</p>
<p>எனினும், வழங்கப்பட்ட தகவல்கள் யாவும் பொய்யானவை என்று சாணக்கியன் எம்.பி. தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/shanakiyan-rasamanickam-mp-news/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே! &#8211; சாணக்கியன் சுட்டிக்காட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/only-65-people-in-parliament-for-the-people/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/only-65-people-in-parliament-for-the-people/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Anarkali]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 09:55:37 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[gotaphaya rajapaksa]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=48974</guid>

					<description><![CDATA[நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், &#8220;நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவைத் தெரிவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வாக்களித்து, அவரைப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்த 148 பேரும் தற்போதும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளனர் எனவும், 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,</p>
<p>&#8220;நாடாளுமன்றில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளன.</p>
<p>ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவைத் தெரிவு செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.</p>
<p>ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு வாக்களித்து, அவரைப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்த 148 பேரும் தற்போதும் ராஜபக்சக்களுடனேயே இருக்கின்றனர்.</p>
<p>எனவே, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர்.</p>
<p>நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் இங்குள்ள நாடககாரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்சக்களைப் காப்பாற்ற வேண்டும்&#8221; &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/only-65-people-in-parliament-for-the-people/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி??</title>
		<link>https://tamilnaadi.com/news/former-navy-commander-as-governor/</link>
					<comments>https://tamilnaadi.com/news/former-navy-commander-as-governor/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 05:23:30 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Former Navy Commander]]></category>
		<category><![CDATA[governor]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=27786</guid>

					<description><![CDATA[வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவர் கொழும்பில் உள்ள  இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடமத்திய மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இவர் கொழும்பில் உள்ள  இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/former-navy-commander-as-governor/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இன-மத பேதமில்லை : மக்களின் ஒற்றுமையே தேவை!!- இரா. சாணக்கியன்</title>
		<link>https://tamilnaadi.com/news/no-racial-discrimination-peoples-unity-is-needed-r-sanakkiyan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/no-racial-discrimination-peoples-unity-is-needed-r-sanakkiyan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Nov 2021 10:18:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[canada]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[muslim]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamil peoples]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=24178</guid>

					<description><![CDATA[கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்  அதிகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது எனவே, தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடி போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர், சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம்  அதிகரித்துவிடும் வாய்ப்பிருக்கிறது எனவே, தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடி போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்து அவர், சில இஸ்லாமிய அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து ஒன்று உள்ளது. இவர் என்ன எங்களுடைய பிரச்சனைகளை கதைக்கின்றார். எங்களுக்காக பேசுகின்றார் என எனினும் நான் அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுகின்றேன்.</p>
<p>இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலேயே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.</p>
<p>உண்மையிலேயே என்னை பொறுத்தவரையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அனைத்து சமூகங்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒருவராகவே நான் என்னை பார்க்கின்றேன்.</p>
<p>நான் யாருடைய வாக்குகளுக்காகவும் செயற்படவில்லை. மக்களின் ஒற்றுமையே அவசியம். அந்த வாக்குகளை எதிர்பார்த்து எதனையும் செய்யவில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-24181" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-25-at-15.18.49-300x231.jpeg" alt="WhatsApp Image 2021 11 25 at 15.18.49" width="969" height="747" title="இன-மத பேதமில்லை : மக்களின் ஒற்றுமையே தேவை!!- இரா. சாணக்கியன் 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-25-at-15.18.49-300x231.jpeg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/WhatsApp-Image-2021-11-25-at-15.18.49.jpeg 769w" sizes="(max-width: 969px) 100vw, 969px" /></p>
<p>#SriLankaNews</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/no-racial-discrimination-peoples-unity-is-needed-r-sanakkiyan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சாணக்கியன் உட்பட ஏழுபேருக்கு மாவீரர் நினைவேந்தலுக்கு தடை!</title>
		<link>https://tamilnaadi.com/news/seven-people-including-chanakyan-banned-from-commemorating-heroes/</link>
					<comments>https://tamilnaadi.com/news/seven-people-including-chanakyan-banned-from-commemorating-heroes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 22 Nov 2021 05:27:05 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Magistrates Court]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=23283</guid>

					<description><![CDATA[மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், த.சுரேஷ் முன்னாள் போராளிகளான நடராசா சுரேஸ், தம்பித்துரை கஜேந்திரன், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், த.சுரேஷ் முன்னாள் போராளிகளான நடராசா சுரேஸ், தம்பித்துரை கஜேந்திரன்,<br />
பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம் ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/seven-people-including-chanakyan-banned-from-commemorating-heroes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சுற்றுலா தளமாக மாற இருக்கும் கிழக்கு மாகாணம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/eastern-province-to-become-a-tourist-destination/</link>
					<comments>https://tamilnaadi.com/news/eastern-province-to-become-a-tourist-destination/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 05:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Eastern Province]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rajaputhiran Rasamanickam]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=22304</guid>

					<description><![CDATA[மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணத்தை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவோம்.  மக்கள் அமைப்பின் முகாமையாளரான மதிமேனன் தெரிவித்தார். மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் வழங்கி வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஓந்தாச்சிமடம் அழகிய கடற்கரை உள்ள பிரதேசம். இதனை அழகுபடுத்துவதற்கான இரண்டு, மூன்று திட்ட முன்மொழிவுகளை எங்களது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாகாண சபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணத்தை ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவோம்.  மக்கள் அமைப்பின் முகாமையாளரான மதிமேனன் தெரிவித்தார்.</p>
<p>மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் வழங்கி வைக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்து உரையாற்றிய அவர்,</p>
<p>ஓந்தாச்சிமடம் அழகிய கடற்கரை உள்ள பிரதேசம். இதனை அழகுபடுத்துவதற்கான இரண்டு, மூன்று திட்ட முன்மொழிவுகளை எங்களது நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மத்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.</p>
<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையினை கைப்பற்றியதும், இந்த விடயங்களை நாம் செய்து காட்டுவோம். குறித்த பகுதியினை சிறந்த சுற்றுத்தலமாக மாற்றுவோம்.</p>
<p><img decoding="async" class="alignnone wp-image-22306" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258386101_437816847712313_41698628465272860_n-300x225.jpg" alt="258386101 437816847712313 41698628465272860 n" width="400" height="300" title="சுற்றுலா தளமாக மாற இருக்கும் கிழக்கு மாகாணம்! 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258386101_437816847712313_41698628465272860_n-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258386101_437816847712313_41698628465272860_n.jpg 600w" sizes="(max-width: 400px) 100vw, 400px" /> <img decoding="async" class="alignnone wp-image-22307" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n-300x225.jpg" alt="258486152 437816841045647 2552740317313187093 n" width="399" height="299" title="சுற்றுலா தளமாக மாற இருக்கும் கிழக்கு மாகாணம்! 7" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n-1024x768.jpg 1024w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n-768x576.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n-1536x1152.jpg 1536w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258486152_437816841045647_2552740317313187093_n.jpg 1600w" sizes="(max-width: 399px) 100vw, 399px" /></p>
<p>மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் போது அதற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு அமைவாக இவை வழங்கி வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-22308" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258727161_437816811045650_9173795229102504126_n-300x225.jpg" alt="258727161 437816811045650 9173795229102504126 n" width="427" height="321" title="சுற்றுலா தளமாக மாற இருக்கும் கிழக்கு மாகாணம்! 8" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258727161_437816811045650_9173795229102504126_n-300x225.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2021/11/258727161_437816811045650_9173795229102504126_n.jpg 600w" sizes="(max-width: 427px) 100vw, 427px" /></p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/eastern-province-to-become-a-tourist-destination/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
