<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sanath Nishantha And Another Reported Dead &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sanath-nishantha-and-another-reported-dead/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 25 Feb 2024 09:27:30 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sanath Nishantha And Another Reported Dead &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead-7/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Feb 2024 05:46:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha Accident]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=121025</guid>

					<description><![CDATA[சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பில் உத்தரவு</h4>
<p>முன்னாள் <a href="https://tamilnaadi.com/news/local/2024/01/25/state-minister-sanath-nishant-died-in-the-accident/">இராஜாங்க அமைச்சர்</a> சனத் நிஷாந்தவின் மரணத்திற்கான காரணத்தை தற்போதைக்கு வெளியிட முடியாது என வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடுவவிதான தெரிவித்துள்ளார்.</p>
<p>சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதையும் நீதவான் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, சனத் நிஷாந்தவின் மனைவி மரணத்திற்கான காரணத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.</p>
<p>இதற்கமைய, சனத் நிஷாந்தவின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை சட்ட வைத்திய அதிகாரியினால் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படாததால் அதனை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், வாகன விபத்து இடம்பெற்ற இடத்தை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், விபத்து இடம்பெற்ற தினத்தன்று (ஜனவரி 24 ஆம் திகதி) அந்த இடத்தை நேரில் பார்வையிட்டதாகவும் நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதற்கமைய, உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரியிடம் கோருமாறு கந்தானை பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார்.</p>
<p>மேலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead-6/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Feb 2024 08:35:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court of Appeal of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha Accident]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=120467</guid>

					<description><![CDATA[சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் தகவல் சனத் நிஷாந்த உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்காது. நானும் வேலையை இழந்து நான் வாழ வழியின்றி இருக்கின்றேன் என முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிரபாத் எரங்க துல்நேஷா தெரிவித்துள்ளார். கொழும்பு &#8211; கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனத் நிஷாந்தவின் சாரதி நீதிமன்றில் தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/02/23/sanath-nishantha-whife-political/">சனத் நிஷாந்த</a> உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இப்படி நடந்திருக்காது. நானும் வேலையை இழந்து நான் வாழ வழியின்றி இருக்கின்றேன் என முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி பிரபாத் எரங்க துல்நேஷா தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு &#8211; கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் கெரவளபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சனத் நிஷாந்த உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.</p>
<p>இந்த வழக்கு விசாரணையின் போது வெலிசறை நீதவான் துசித தம்மிக்க உடுவாவிதான முன்னிலையில் நேற்று (19) அவர் சாட்சியமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>சனத் நிஷாந்தவின் மனைவி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தனராஜ் சமரகோன், சந்தேகநபர் பிரபாத் எரங்க துல்நேஷாவை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.</p>
<p>இந்த வழக்கு விசாரணையின் போது சனத் நிஷாந்தவின் கார் மீது மோதிய கொள்கலன் பார ஊர்தியின் சாரதியும், சனத் நிஷாந்தவின் காரை ஓட்டிச்சென்ற சாரதியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.</p>
<p>இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்த கந்தானை பொலிஸ் உத்தியோகத்தர்கள், இந்த வாகன விபத்து தொடர்பான விசாரணைகளின் கோப்புகள் பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதற்கமைய, பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல் கிடைத்த பின்னர் இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக கந்தானை பொலிஸ் அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.</p>
<p>சனத் நிஷாந்தவின் மனைவியின் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி தனராஜ் சமரகோன், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேகநபரை இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும், அவர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில் அவரது வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறும் சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இதன்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கந்தானை பொலிஸார் சந்தேகநபரின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோரவில்லை எனவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, தடை விதிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>இதனடிப்படையில் குறித்த கோரிக்கைக்கு அனுமதி மறுத்த நீதவான் சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கந்தானை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead-4/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 28 Jan 2024 06:44:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[puttalam]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha Accident]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=116114</guid>

					<description><![CDATA[சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் தகவல் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து புத்தளம் ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2023/12/31/man-arrested-with-gold-in-bia-terminals/">கட்டுநாயக்க</a> – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இறுதிக்கிரியைகள் இன்று (28) இடம்பெறவுள்ளது.</p>
<p>புத்தளம் ஆராச்சிக்கட்டில் உள்ள இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் தற்போது வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>பொதுமக்களின் இறுதி அஞ்சலியைத் தொடர்ந்து <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">புத்தளம்</a> ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது.</p>
<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jan 2024 14:30:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha Accident]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<category><![CDATA[Sri Lanka Police Investigation]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=115919</guid>

					<description><![CDATA[சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர். குறித்த விபத்தை அடுத்து சந்தேகநபரான சாரதியின் கையடக்க தொலைபேசி கந்தானை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனத் நிஷாந்தவின் சாரதியின் தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு</h4>
<p>வாகன விபத்தில் உயிரிழந்த<a href="https://tamilnaadi.com/news/local/2023/10/19/debt-restructuring-shehan-semasinghe/"> இராஜாங்க அமைச்சர்</a> சனத் நிஷாந்தவின் சாரதியின் கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>குறித்த விபத்தை அடுத்து சந்தேகநபரான சாரதியின் கையடக்க தொலைபேசி கந்தானை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>இந்த நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் <a href="https://en.wikipedia.org/wiki/Sanath_Nishantha" target="_blank" rel="noopener">சனத் நிஷாந்தவின்</a> சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத் நிஷாந்த உடன் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Jan 2024 07:22:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha Accident]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=115891</guid>

					<description><![CDATA[சனத் நிஷாந்த உடன் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வழங்கியுள்ளார். இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சனத் நிஷாந்த உடன் உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இழப்பீடு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/10/26/child-abuse-case-in-sri-lanka/">இராஜாங்க அமைச்சர்</a> சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இதனை வழங்கியுள்ளார்.</p>
<p>இதேவேளை, உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்டாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87-01_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)" target="_blank" rel="noopener">தெற்கு அதிவேக நெடுஞ்சாலை</a>யில் நேற்று முன்தினம் (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராதா ஜயக்கொடி ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.</p>
<p>மேலும், விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதியான 28 வயதான பிரபாத் எரங்க பொலிஸ் காவலில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Jan 2024 05:08:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sanath nishantha]]></category>
		<category><![CDATA[Sanath Nishantha And Another Reported Dead]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=115552</guid>

					<description><![CDATA[பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல் கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர். சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற SUV வாகனம் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியுள்ளது. இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு &#8211; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2023/12/31/man-arrested-with-gold-in-bia-terminals/">கட்டுநாயக்க</a> அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>சனத் நிஷாந்தவை ஏற்றிச் சென்ற SUV வாகனம் கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியுள்ளது.</p>
<p>இந்த மரணம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>அந்த அறிக்கையில் இன்று அதிகாலை கந்தான பொலிஸ் பிரிவின் கொழும்பு &#8211; கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று முன்னால் பயணித்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.</p>
<p>இந்த விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>சாரதி மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார். கந்தான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்நிலை சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொண்டதுடன் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சனத் நிஷாந்த, கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியாகும்.</p>
<p>கடந்த கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்டி வெடித்த நிலையில், ஆட்சியில் இருந்து ராஜபக்சர்கள் விரட்டப்பட்டனர்.</p>
<p>இதன்போது காலி முகத்திலிடலில் பெரும் வன்முறை சம்பவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதனை உயிரிழந்த சனத் நிஷாங்கவே முன்னெடுத்திருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.</p>
<p>ராஜபக்ஷர்களின் தீவிர விசுவாசியான அவர், மின்சார கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்த நாமல் ராஜபக்சவையும் காப்பாற்றியிருந்தார். பல மாதங்களாக செலுத்தாத மின்சார கட்டணத்தை பல மில்லியன்களில் செலுத்தியிருந்தார்.</p>
<p><img decoding="async" src="https://cdn.ibcstack.com/article/9d83a77c-4d22-4974-b485-40e25c802da1/24-65b1bf75bc5dd.webp" alt="Gallery" title="பலியான மகிந்தவின் தீவிர விசுவாசி: பொலிஸார் வெளியிட்ட தகவல் 2"></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sanath-nishantha-and-another-reported-dead/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
