<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sampath Manamperi &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sampath-manamperi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 19 Dec 2025 16:23:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sampath Manamperi &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு விவகாரம்: சம்பத் மனம்பேரிக்கு டிசம்பர் 24 வரை மேலதிக தடுப்புக்காவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ice-drug-manufacturing-case-sampath-manamperi-to-remain-in-custody-until-dec-24-police-seek-90-day-extension/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 16:23:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chemical Contraband.]]></category>
		<category><![CDATA[Detention Order]]></category>
		<category><![CDATA[ICE Drug Case]]></category>
		<category><![CDATA[Middeniya Drug Raid]]></category>
		<category><![CDATA[Sampath Manamperi]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<category><![CDATA[Walasmulla Magistrate Court]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207648</guid>

					<description><![CDATA[ஐஸ் (ICE) போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி, இன்று (19) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள். சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால், மேலதிக விசாரணை அவசியமாகிறது. தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு டிசம்பர் 24-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே, அன்று முதல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐஸ் (ICE) போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி, இன்று (19) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.</p>
<p>மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள். சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால், மேலதிக விசாரணை அவசியமாகிறது.</p>
<p>தற்போதுள்ள தடுப்புக்காவல் உத்தரவு டிசம்பர் 24-ஆம் திகதியுடன் முடிவடைகிறது. எனவே, அன்று முதல் மேலும் 90 நாட்களுக்குத் தடுப்புக்காவல் உத்தரவை (Detention Order) வழங்குமாறு பொலிஸார் கோரினர்.</p>
<p>சம்பத் மனம்பேரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மேலதிக தடுப்புக்காவல் கோருவதற்குத் தேவையான முறையான ஆவணங்களை இன்றைய தினமே சமர்ப்பித்திருக்க வேண்டும் எனவும், பொலிஸார் நீதிமன்ற நடைமுறைகளைப் புறக்கணிப்பதாகவும் வாதிட்டனர்.</p>
<p>இருதரப்பு விடயங்களையும் ஆராய்ந்த வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடித்துவக்கு, சந்தேகநபரை வரும் டிசம்பர் 24-ஆம் திகதி வரை தொடர்ந்தும் மேல் மாகாண வடக்கு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.</p>
<p>இதேவேளை, இவ்வழக்கில் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பியல் மனம்பேரி என்பவரையும் எதிர்வரும் 24-ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/bus-car-and-cab-vehicle-confiscated-from-suspect-sampath-manamperi-held-in-drug-manufacturing-case/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Nov 2025 15:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Drug Manufacturing]]></category>
		<category><![CDATA[Police Custody]]></category>
		<category><![CDATA[Sampath Manamperi]]></category>
		<category><![CDATA[Vehicle Confiscation]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204325</guid>

					<description><![CDATA[தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் ஒரு கெப் ரக வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேல் மாகாண வடக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனியப் பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மித்தெனிய, தலாவப் பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு பேருந்து, ஒரு கார் மற்றும் ஒரு கெப் ரக வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>மேல் மாகாண வடக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், சம்பத் மனம்பேரியின் மித்தெனியப் பகுதியில் உள்ள வீடு சோதனை செய்யப்பட்ட போதே, குறிப்பிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மித்தெனிய, தலாவப் பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பான சம்பவத்தில் சம்பத் மனம்பேரி அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.</p>
<p>பின்னர், அவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்காக, கொழும்பு வடக்குக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
