<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sabaragamuwa University Students Arrested Remanded &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/sabaragamuwa-university-students-arrested-remanded/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 06 May 2025 08:32:40 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Sabaragamuwa University Students Arrested Remanded &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sabaragamuwa-university-students-arrested-remanded-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 08:32:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa Province]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa University]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa University Students Arrested Remanded]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196287</guid>

					<description><![CDATA[சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேற்குறித்த நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.</p>
<p>இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தின் ஊடாக விளக்கமறியலுக்கு அனுப்பியுள்ளனர்.</p>
<p>இதற்கிடையே பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் மேற்குறித்த நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் மறு அறிவித்தல் வரை அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: கைதானவர்கள் விளக்கமறியலில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sabaragamuwa-university-students-arrested-remanded/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 05 May 2025 15:39:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa University]]></category>
		<category><![CDATA[Sabaragamuwa University Students Arrested Remanded]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=196263</guid>

					<description><![CDATA[சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த நான்கு மாணவர்களும் நேற்று (04) இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு இன்று (05) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மஹரகம, எம்பிலிப்பிட்டிய, வாரியபொல மற்றும் ஹபராதுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.</p>
<p>மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் பகிடிவதையை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
