<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>roshan ranasinghe &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/roshan-ranasinghe/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 26 Nov 2024 17:25:28 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>roshan ranasinghe &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/military-camps-dismantled-in-the-north-and-east-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 13:55:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178550</guid>

					<description><![CDATA[வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வடக்கு மற்றும் கிழக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/11/25/military-camps-dismantled-in-the-north-and-east/">வடக்கு</a> மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.</p>
<p>பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம்.</p>
<p>தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், நாடாளுமன்றத்துக்கு எளிமையான முறையில் வருகை தந்தார் என்று தற்போது ஜனாதிபதியின் புகழ்பாடுகிறார்கள்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) தனது வீட்டில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார், எளிமையான முறையில் நாடாளுமன்றத்துக்கு சென்றார். இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள்.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கவும், இராணுவ முகாம்களையும், பாதுகாப்பு தடுப்புக்களை அகற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.</p>
<p>உலகில் 38 நாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடை இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சங்களை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>பாரிய இழப்புகளுக்கு மத்தியில் தான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/military-camps-dismantled-in-the-north-and-east/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 25 Nov 2024 13:03:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=178524</guid>

					<description><![CDATA[வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வடக்கு மற்றும் கிழக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்றும் அநுர அரசு : எச்சரிக்கும் முன்னாள் எம்.பி</h4>
<p>வடக்கு மற்றும் கிழக்கில் பிரபல்யமடைவதற்காக <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/19/govindan-karunakaram-comment-anura-gvmt/">அரசாங்கம்</a> தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க (Roshan Ranasinghe) தெரிவித்துள்ளார்.</p>
<p>பொலன்னறுவையில் (Polonnaruwa) நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதை முழுமையாக வரவேற்கிறோம்.</p>
<p>தெற்கு அரசியல் கட்சிக்கு வடக்கு மக்கள் ஆதரவளித்துள்ளமை சிறந்த அரசியல் மாற்றமாகும். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க எளிமையானவர், நாடாளுமன்றத்துக்கு எளிமையான முறையில் வருகை தந்தார் என்று தற்போது ஜனாதிபதியின் புகழ்பாடுகிறார்கள்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவும் (Gotabaya Rajapaksa) தனது வீட்டில் இருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார், எளிமையான முறையில் நாடாளுமன்றத்துக்கு சென்றார். இறுதியில் நேர்ந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள்.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கவும், இராணுவ முகாம்களையும், பாதுகாப்பு தடுப்புக்களை அகற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.</p>
<p>உலகில் 38 நாடுகளில் விடுதலைப்புலிகள் மீதான தடை இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரபல்யமடைவதற்காக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய அம்சங்களை பலவீனப்படுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.</p>
<p>பாரிய இழப்புகளுக்கு மத்தியில் தான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க</title>
		<link>https://tamilnaadi.com/news/local/roshan-ranasinghe-join-to-dilith-jayaweera-party/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Oct 2024 09:08:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Roshan Ranasinghe Join To Dilith Jayaweera Party]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=168334</guid>

					<description><![CDATA[திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe), தொழிலதிபர் திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மௌபிம ஜனதா கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன சன்ன ஜயசுமன இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவும் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அத்துடன், இவர் கம்பஹா மாவட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>திலித் ஜயவீரவுடன் இணைந்த ரொஷான் ரணசிங்க</h4>
<p>முன்னாள் விளையாட்டுத்துறை <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/02/ktr-samantha-naga-chaitanya-divorce-konda-surekha/">அமைச்சர்</a> ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe), தொழிலதிபர் திலித் ஜயவீர(Dilith Jayaweera) தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும், மௌபிம ஜனதா கட்சியின் உப தலைவராக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் சன்ன சன்ன ஜயசுமன இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, கம்பஹா மாவட்ட ஸ்<a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF" target="_blank" rel="noopener">ரீலங்கா பொதுஜன பெரமுன</a>, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்கவும் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.</p>
<p>அத்துடன், இவர் கம்பஹா மாவட்ட மௌபிம ஜனதா கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க</title>
		<link>https://tamilnaadi.com/news/local/roshan-ranasinghe-to-accuses-poisend/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 02 May 2024 05:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[may day]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Roshan Ranasinghe To Accuses Poisend]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=136855</guid>

					<description><![CDATA[என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க தம்மை கொலை செய்வதற்கு நஞ்சூட்டப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு நஞ்சு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தாம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது நஞ்சு வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து அண்மையில் அரசியல்வாதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க</h4>
<p>தம்மை <a href="https://tamilnaadi.com/news/local/2024/04/26/easter-sunday-attack-incident/">கொலை</a> செய்வதற்கு நஞ்சூட்டப்பட்டது என முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக இவ்வாறு நஞ்சு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அம்பாறையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.</p>
<p>தாம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது நஞ்சு வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்த சூழ்ச்சி திட்டம் குறித்து அண்மையில் அரசியல்வாதி ஒருவர் கருத்து வெளியிட்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனினும் தமக்கு யார் நஞ்சூட்டினார்கள் என்பது குறித்தோ யார் இந்த சதித் திட்டத்தின் சூத்திரதாரி என்பது பற்றியோ ரொசான் ரணசிங்க வெளிப்பைடையாக கருத்து வெளியிடவில்லை.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் ரொஷான்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/roshan-ranasinghe-s-new-political-party/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2024 08:27:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Roshan Ranasinghe S New Political Party]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=114460</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, புதிய அரசியல் கட்சியொன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது. &#8220;நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி&#8221; என அவர் தனது புதிய அரசியல் கட்சிக்குப் பெயரிட்டுள்ளார். இதன் அறிமுக விழா இன்று(18.01.2023) பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப விகாரைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் பயணம் குறித்து விளக்கமளிக்கும் போதே கட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, புதிய அரசியல் கட்சியொன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளதாக தெரிய வந்துள்ளது.</p>
<p>&#8220;நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஊழல் எதிர்ப்பு முன்னணி&#8221; என அவர் தனது புதிய அரசியல் கட்சிக்குப் பெயரிட்டுள்ளார்.</p>
<p>இதன் அறிமுக விழா இன்று(18.01.2023) பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>வரலாற்று சிறப்புமிக்க திம்புலாகல ஆரண்ய சேனாசனாதிப விகாரைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அரசியல் பயணம் குறித்து விளக்கமளிக்கும் போதே கட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.</p>
<p>அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பொது மக்கள் என்னைத் தொடர்பு கொள்கின்றனர்.</p>
<p>நாட்டுக்காக அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.</p>
<p>ஆம், இந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம், ஆனால் 2048ம் வருடத்திற்குள், நீங்கள் அனைவரும் இறந்துவிடுவீர்கள், இந்த மக்களை அவர்கள் படும் துன்பங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும், அது விரைவில் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.</p>
<p>முக்கியமாக நம் நாட்டிற்கு இந்த நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான அக்கறை கொண்ட தலைவர் தேவை .</p>
<p>தலைவன் நேர்மையானவராக இருந்தால் யாரும் ஊழலில் ஈடுபட மாட்டார்கள். நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது ஊழலில் ஈடுபட்ட இரண்டு மூன்று பேர் நீக்கப்பட்டனர்.</p>
<p>ஊழல் முறைகேடுகள் இல்லாமல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் நான் பணியாற்றினேன்.</p>
<p>நான் அதைச் செய்தபோது, ​​தலைவர்கள் என்னை அகற்றினர். இந்த நாட்டு மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை.</p>
<p>உலக முதலீட்டாளர்களுக்கும் நம் நாட்டின் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை. உலகில் உள்ள தொண்ணூறு முதலீட்டாளர்கள் ஒரு பில்லியன் டொலர் கொடுத்தால் நம் நாட்டின் கடன் தீர்ந்துவிடும். எனவே நாம் ஒரு திட்டத்துடன் செல்ல வேண்டும், இந்த நாட்டின் ஜனாதிபதி முதலீட்டாளர்களைத் தேடி அவர்களிடம் செல்ல வேண்டும்.</p>
<p>இன்று இந்த நாட்டின் தலைவர்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அச்சம் கொண்டுள்ளார்கள். நாம் அனைவரும் கூட ஏதோ வகையான அச்சத்தைக் கொண்டுள்ளோம். அந்த நிலை மாற வேண்டும்.” என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sanath-jayasooriya-srilanka-cricket/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sanath-jayasooriya-srilanka-cricket/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jan 2024 10:09:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Sanath Jayasooriya Srilanka Cricket]]></category>
		<category><![CDATA[Sanath Jayasuriya]]></category>
		<category><![CDATA[sri lanka cricket]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113782</guid>

					<description><![CDATA[இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா கிரிக்கெட் சுமத்தியுள்ளதாக முன்னாள் அமம்சசர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “சனத் ஜயசூரியவிற்கு எதிரான ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகம் தம்மிடம் தெரிவித்துள்ளது. தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டை ஶ்ரீலங்கா கிரிக்கெட் சுமத்தியுள்ளதாக முன்னாள் அமம்சசர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த விடயத்தை தம்மிடம் கூறியதாக செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் கூறியுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், “சனத் ஜயசூரியவிற்கு எதிரான ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகம் தம்மிடம் தெரிவித்துள்ளது.</p>
<p>தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை இடைநிறுத்தி, இடைக்கால நிர்வாகக் குழு ஒன்றை நியமித்த போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டது.</p>
<p>ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக விவகாரங்களில் சனத் ஜயசூரியவை எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவுறுத்தியது.</p>
<p>எனினும் அன்று அவ்வாறு நிபந்தனை விதித்த சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று சனத் ஜயசூரியவிற்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அமைதி காப்பதனை புரிந்து கொள்ள முடியவில்லை”என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sanath-jayasooriya-srilanka-cricket/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஊழலுக்கு எதிராக மக்கள் படை திரட்டுகின்றார் ரொஷான் எம்.பி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/roshan-mp-gathers-people-s-forces/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Dec 2023 07:13:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Roshan Mp Gathers People S Forces]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[sri lanka cricket]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=112414</guid>

					<description><![CDATA[அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார். அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.</p>
<p>இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன எனவும், ஜனவரியில் அமைப்பு உதயமாகவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.</p>
<p>ஶ்ரீலங்கா கிரிக்கெட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது எனச் சுட்டிக்காட்டி, அதிரடியான சில நடவடிக்கைகளை விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க முன்னெடுத்தார்.</p>
<p>அவரின் நடவடிக்கைகளால் ஆளுந்தரப்புக்கும், அவருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சுப் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டார்.</p>
<p>இந்நிலையிலேயே புதியதொரு அரசியல் பயணத்தை அவர் ஆரம்பிக்கவுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-presidential-election-2024-candidates/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Nov 2023 09:49:35 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Sri Lanka Presidential Election 2024 Candidates]]></category>
		<category><![CDATA[Wimal Weerawansa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=107037</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன் பின்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “பல்லி சொல்வதை போன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டார் என நானும் கூறுவேன். யாராவது அவர் வருவார் என்று நினைத்தால் பாவம் என்றே கூற வேண்டும். அவர் வேறு ஏதேனும் சர்வதேச அமைப்பில் பதவி பெற்று தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பார்” என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறும் ரணில்</h4>
<p>ஜனாதிபதி <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/07/sri-lankan-presidential-election-4/">ரணில் விக்ரமசிங்க</a> இதன் பின்னர் ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p>
<p>“பல்லி சொல்வதை போன்று ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டார் என நானும் கூறுவேன்.</p>
<p>யாராவது அவர் வருவார் என்று நினைத்தால் பாவம் என்றே கூற வேண்டும். அவர் வேறு ஏதேனும் சர்வதேச அமைப்பில் பதவி பெற்று தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பார்” என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, தாம் மற்றும் உதய கம்மன்பிலவத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.</p>
<p>சமகால அரசாங்கத்தின் வீழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p>
<p><a href="https://www.presidentsoffice.gov.lk/index.php/2023/03/25/president-advises-to-appoint-an-expert-committee-to-plan-progress-of-the-sports-field-and-its-future/?lang=ti" target="_blank" rel="noopener">விளையாட்டுத்துறை</a> அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நேற்று முன்தினம் நீக்கியுள்ளார்.</p>
<p>அது இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியை ஆரம்பிக்கும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/prime-ministerial-candidate-of-sjb/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/prime-ministerial-candidate-of-sjb/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Nov 2023 09:43:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Prime Ministerial Candidate Of Sjb]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=107031</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தகவல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரொஷான் ரணசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அந்த அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் தகவல்</h4>
<p>எதிர்க்கட்சித் தலைவர் <a href="https://tamilnaadi.com/news/2022/01/04/opposition-leader-sajith-premadasa-in-trincomalee/">சஜித் பிரேமதாச</a> மற்றும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் எதிர்வரும் தேர்தலுக்கான உடன்படிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>ரொஷான் ரணசிங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அந்த அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>இந்த கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக ரொஷான் ரணசிங்கவை நியமிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/prime-ministerial-candidate-of-sjb/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sajith-parliment-speech/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Nov 2023 12:01:20 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[President of Sri lanka]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[roshan ranasinghe]]></category>
		<category><![CDATA[Sajith Parliment Speech]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=106873</guid>

					<description><![CDATA[பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு சிகப்பு எச்சரிக்கை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/11/26/greg-barclay-to-meet-president-immediately/">ஜனாதிபதி</a> ரணில் விக்ரமசிங்கவை மறைகரமொன்று வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.</p>
<p>அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டமை பாரதூரமான ஜனநாயக மீறல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஜனாதிபதி விடுத்துள்ள சிகப்பு எச்சரிக்கையே இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,</p>
<p>ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு Yes Sir Yes Sir என ஆமோதிக்கத் தவறினால் இவ்வாறு பதவி இழக்க நேரிடும் என்பதே இதன் பொருளாகும்.</p>
<p>இந்த நாட்டில் யார் அமைச்சராக இருக்க வேண்டும் யார் அமைச்சராக இருக்கக் கூடாது என்பதனை சீனி மாபியா, கிரிக்கெட் மாபியா, கேஸ் மாபியா போன்றனவே தீர்மானிக்கின்றன.</p>
<p>இந்த ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்தனர் என்ற போதிலும் அவர் நாடாளுமன்றை உதாசீனம் செய்து வருகின்றார்.</p>
<p>ரொஷான் ரணசிங்கவை அழைத்து இந்திய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு நடத்தியது உண்மை எனவும் இது அரசியல் சூழ்ச்சி கிடையாது. கிரிக்கெட் தடையை நீக்கிக் கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம்.</p>
<p>அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திட்டமில்லை எனவும் மக்களின் ஆணையின் ஊடாகவே ஆட்சி பீடம் ஏறுவோம் என தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
