<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Ratmalana Airport &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ratmalana-airport/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 08 Jan 2025 19:20:45 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Ratmalana Airport &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/south-korean-accident-changes-made-sl-airport/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jan 2025 12:42:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ratmalana Airport]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=186002</guid>

					<description><![CDATA[தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் சில நிலையான நிர்மாணங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணங்களை அகற்றுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 179 உயிர்கள் பலியாகியமையை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக விமான நிலையத்தின் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தென் கொரியாவில் பலியான 179 உயிர்கள்: இலங்கை விமான நிலையத்தில் அதிரடி மாற்றங்கள்</h4>
<p>இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் சில நிலையான நிர்மாணங்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் வகையில் நிர்மாணங்களை அகற்றுமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.</p>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2024/12/29/23-dead-as-plane-crashes-after-driving-off-runway/">தென் கொரியா</a>வின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 179 உயிர்கள் பலியாகியமையை கருத்தில் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக விமான நிலையத்தின் நிலையான நிர்மாணத்துடன் தொடர்புடைய இடர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும் சிவில் விமான சேவை அதிகார சபையையும் வலியுறுத்தி இலங்கை விமான உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்கள் சங்கம் முன்னதாக எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.</p>
<p>அதன்போது, சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் காலி வீதியின் எல்லையில் உள்ள 9 கன அடி சுவர் தொடர்பில் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>இந்த கட்டமைப்பினால் முவான் விமான நிலைய அனர்த்தம் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம் என எச்சரித்துள்ள சங்கம், சுவரை அகற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/aircraft-platform-that-has-suddenly-shut-down/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Aug 2024 06:25:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aircraft Platform That Has Suddenly Shut Down]]></category>
		<category><![CDATA[Bandaranaike International Airport]]></category>
		<category><![CDATA[Ratmalana Airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=158359</guid>

					<description><![CDATA[திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் இலங்கைக்கு மேல் பயணிக்கும் சர்வதேச விமானங்கள் மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களை கையாளும் இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் விமான நிலையம் மற்றும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்</h4>
<p>இலங்கைக்கு மேல் பயணிக்கும் சர்வதேச <a href="https://tamilnaadi.com/news/world/2024/08/07/sheikh-hasina-has-fled-to-india/">விமானங்கள்</a> மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களை கையாளும் இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.</p>
<p>வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இருப்பினும், அதிகாரிகளால் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக கையாள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>வி.எச்.எஃப். விமானத்துடன் தொடர்பு கொள்ள 124.9 அதிர்வெண் பயன்படுத்திய போது திடீரென்று அந்த அலைவரிசையின் செயற்பாடுகள் தடைப்பட்டன.</p>
<p>திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் | Aircraft Platform That Has Suddenly Shut Down</p>
<p>இதன் காரணமாக வானில் பறக்கும் விமானங்களுடனான தொடர்புகள் தடைப்பட்டன. கணினியை மீட்டெடுக்க மின்னணு பொறியாளர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.</p>
<p>இந்நிலையில் கட்டுநாயக்க விமான பிரிவில் உதவி பெற்று இரத்மலானை விமான நிலைய உத்தியோகத்தர்களை கட்டுநாயக்கவிற்கு அனுப்பி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனையடுத்து செயலிழந்த விமான அமைப்பை நேற்றைய தினம் (15 ஆம் திகதி) பொறியாளர்கள் மீட்டெடுத்துனர்.</p>
<p>இலங்கை வான்பரப்பிலிருந்து 15000 அடி உயரத்தில் பறக்கும் அனைத்து விமானங்களும் இரத்மலானையில் உள்ள பிரதான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/person-shot-at-near-the-ratmalana-railway-station/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/person-shot-at-near-the-ratmalana-railway-station/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Sep 2023 07:00:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Person Shot At Near The Ratmalana Railway Station]]></category>
		<category><![CDATA[Ratmalana Airport]]></category>
		<category><![CDATA[Sri Lanka police]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93386</guid>

					<description><![CDATA[கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொழும்பின் புறநகரிலுள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு</h4>
<p>கொழும்பின் <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/03/colombo-beach-tourist-places/">புறநகர் </a>பகுதியான இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.</p>
<p>காயமடைந்தவர் <a href="https://archives1.thinakaran.lk/tags/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88" target="_blank" rel="noopener">களுபோவில</a> வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/person-shot-at-near-the-ratmalana-railway-station/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் ரத்மலான விமான நிலையம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/ratmalana-airport-open/</link>
					<comments>https://tamilnaadi.com/news/ratmalana-airport-open/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Oct 2021 18:33:05 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[airline]]></category>
		<category><![CDATA[airport]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[goverment]]></category>
		<category><![CDATA[Katunayake Airport]]></category>
		<category><![CDATA[Maldives]]></category>
		<category><![CDATA[Ratmalana Airport]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=15041</guid>

					<description><![CDATA[கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாலைதீவு எயார்லைன்ஸூடன் பேச்சுக்களின் பின் அவர்கள் ரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதில் ஆரம்பத்தில் 50 பயணிகளை மாத்திரம் ஏற்றிச்செல்லக்கூடிய விமானம் மாலைதீவுக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் முதலில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான நிலையம் 1938 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச விமான பயங்களை ஆரம்பிக்கவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலைதீவுக்குப் புறப்படும் என இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.</p>
<p>மாலைதீவு எயார்லைன்ஸூடன் பேச்சுக்களின் பின் அவர்கள் ரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.</p>
<p>இதில் ஆரம்பத்தில் 50 பயணிகளை மாத்திரம் ஏற்றிச்செல்லக்கூடிய விமானம் மாலைதீவுக்கும் கொழும்புக்கும் இடையே சேவையில் முதலில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. பின் 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.</p>
<p>இதனால் ரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.</p>
<p>ரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையாகும்.</p>
<p>இந்த நிலையில் ரத்மலானை விமான நிலையத்தில் விமானங்களை ஊக்குவிக்க தரிப்பிடக் கட்டணத்தை ஒரு வருடத்துக்கு நீக்கவும், பயணிகளிடம் இருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை நிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/ratmalana-airport-open/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
