<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rameshwaram &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/rameshwaram/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 21 Jan 2022 10:39:51 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Rameshwaram &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கிய செய்தி உண்மைக்குப் புறம்பானது!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/news-of-rameshwaram-fishermen-attacked-is-untrue/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/news-of-rameshwaram-fishermen-attacked-is-untrue/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jan 2022 08:21:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[IndianFisherman]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Rameshwaram]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=36201</guid>

					<description><![CDATA[இலங்கை கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் (21) காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; இந்த செய்தியை யாழ்ப்பாணத்திலுள்ள சில பத்திரிகைகளும் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளமை வேதனையளிக்கின்றது. எமது நாட்டு கடற்படை தாக்கியதாக இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வந்தவுடன், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">இலங்கை கடற்படை சில தினங்களுக்கு முன்னர் இராமேஸ்வர மீனவர்களை தாக்கியதாக வெளியான செய்தியானது முற்றிலும் பொய்யானது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சங்கங்களின் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">இன்றையதினம் (21) காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p style="text-align: justify;"><strong>அவர் மேலும் கூறுகையில்;</strong></p>
<p style="text-align: justify;">இந்த செய்தியை யாழ்ப்பாணத்திலுள்ள சில பத்திரிகைகளும் முன்பக்கத்தில் பிரசுரித்துள்ளமை வேதனையளிக்கின்றது.</p>
<p style="text-align: justify;">எமது நாட்டு கடற்படை தாக்கியதாக இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வந்தவுடன், அதை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகைகள் உடனடியாக வெளியிடுகின்றன.</p>
<p style="text-align: justify;">ஆனால் எமது போராட்டத்தின் உண்மைகளை வெளியிடுவதில் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">அந்தவகையில் எமது ஊடகவியலாளர்களிடம் நாம் கோருவது உண்மையான செய்திகளை அறிந்து அதை உண்மைத் தன்மையுடன் வெளியிட வேண்டும் என்பதே.</p>
<p style="text-align: justify;">இதேவேளை நாம் கடந்த 10 வருடங்களாக சட்டவிரோத இந்திய மீன்பிடியாளர்களால் பலகோடி சொத்துக்களையும் பொருளாதார வளங்களையும், இழந்து தவிக்கின்றோம்.</p>
<p style="text-align: justify;">எமது அரசாங்கத்திடமும் கடற்படையினரிடமும் இதை நிறுத்துமாறு கோரி நாம் நாளாந்தம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.</p>
<p style="text-align: justify;">ஆனால் எமது போராட்டத்தின் உண்மை நிலையை இந்திய ஊடகவியலாளர்களுக்கு இங்குள்ள ஊடகவியலானர்கள் எவ்வாறு கொண்டு சேர்கின்றீர்கள் என்பதே கேள்வியாக உள்ளது.</p>
<p style="text-align: justify;">ஆனால் இந்தியாவில் ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியடப்பட்டால் அதை உடனடியாக முன்னுரிமை கொடுத்து இங்கு வெளியிடுகின்றீர்கள்.</p>
<p style="text-align: justify;">இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும், சட்டவிரோத இந்திய மீனவர்களை கைது செய்வதற்கும், கைது செய்யப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி விடுதலை செய்யவேண்டும் என்றும் பறிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/news-of-rameshwaram-fishermen-attacked-is-untrue/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lankan-navy-attacks-rameshwaram-fishermen/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sri-lankan-navy-attacks-rameshwaram-fishermen/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 10:28:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[attack]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fisherman]]></category>
		<category><![CDATA[Kachchativu]]></category>
		<category><![CDATA[Marines]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Rameshwaram]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34304</guid>

					<description><![CDATA[கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர். இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர். கற்கள், போத்தல்களை வீசியெறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவசர அவசரமாக கரை திரும்பினர்.</p>
<p style="text-align: justify;">இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.</p>
<p style="text-align: justify;">கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்குவந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.</p>
<p style="text-align: justify;">கற்கள், போத்தல்களை வீசியெறிந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p style="text-align: justify;">ஒவ்வொரு படகிலும் 50 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.</p>
<p style="text-align: justify;">இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரகள் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sri-lankan-navy-attacks-rameshwaram-fishermen/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம்!- ராமேஸ்வர மீனவர்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/india/we-will-not-go-fishing-across-the-border-rameswaram-fishermen/</link>
					<comments>https://tamilnaadi.com/news/india/we-will-not-go-fishing-across-the-border-rameswaram-fishermen/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Nov 2021 06:10:35 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[fishermen]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Rameshwaram]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=22834</guid>

					<description><![CDATA[எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர். இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இலங்கை இந்திய மீனவர்கள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>எல்லைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.</p>
<p>இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.</p>
<p>அக்கூட்டத்தின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.</p>
<p>இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கையொன்றினையும் முன்வைத்துள்ளனர்.</p>
<p>#India</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/india/we-will-not-go-fishing-across-the-border-rameswaram-fishermen/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு தொகை  கடல் அட்டைகள் மீட்பு!-</title>
		<link>https://tamilnaadi.com/news/a-large-amount-of-sea-cards-smuggled-to-sri-lanka-recovered/</link>
					<comments>https://tamilnaadi.com/news/a-large-amount-of-sea-cards-smuggled-to-sri-lanka-recovered/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 07:45:10 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Rameshwaram]]></category>
		<category><![CDATA[Smuggled]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17401</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 தொன் கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று மாலை சுந்தரம் உடையான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகில் கடல் அட்டைகள் இருப்பதாக இந்தியக் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக நடுக்கடலில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 தொன் கடல் அட்டைகள் அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: justify;">அதனை தொடர்ந்து நேற்று மாலை சுந்தரம் உடையான் கடற்கரைப் பகுதியில் நாட்டுப்படகில் கடல் அட்டைகள் இருப்பதாக இந்தியக் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக நடுக்கடலில் சோதனை செய்ததில் சுமார் 500 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.</p>
<p style="text-align: justify;">உடனடியாக கடல் அட்டை மற்றும் நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடலோர காவல்படை வருவதை அறிந்த நாட்டுப் படகில் இருந்த மூவர் கடலில் குதித்து மாயமாகினர்.</p>
<p style="text-align: justify;">இதைத்தொடர்ந்து நேற்று இராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்து, காட்டு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக இராமேஸ்வரம் மெரைன் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.</p>
<p style="text-align: justify;">இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில், உயிருடன் இதனையடுத்து கடல் அட்டையையும், அதனை வைத்திருந்த அப்பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரை கைது செய்துள்ளனர்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/a-large-amount-of-sea-cards-smuggled-to-sri-lanka-recovered/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
