<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Railways &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/railways/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 09 Jun 2025 16:34:12 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Railways &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாரிய விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/v/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 16:34:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199578</guid>

					<description><![CDATA[பாணந்துறை &#8211; மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் இன்று(9) கௌரவிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பாணந்துறை &#8211; மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாணந்துறை &#8211; மொரட்டுவ பகுதியில் ஏற்பட்ட இருந்த பாரிய தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன் சமந்த பெர்னாண்டோ கௌரவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அத்துடன் தொடருந்தை மோதாமல் நிறுத்திய ஓட்டுநர் விதுர விதர்ஷனும் இன்று(9) கௌரவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் தொடருந்து பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
<p>பாணந்துறை &#8211; மொரட்டுவ தொடருந்து நிலையங்களுக்கு இடையில் உடைந்த தண்டவாளத்தைக் கண்டு, சாகரிகா என்ற தொடருந்து குறித்த இடத்திற்கு வருவதற்கு முன்பே தொடருந்தை நிறுத்தி ஏற்படவிருந்த விபத்தை தடுத்த சமந்த பெர்னாண்டோ என்ற நபர் தடுத்திருந்தார்.</p>
<p>தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட சமந்த பெர்னாண்டோ, தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி தொடருந்து ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>இதன் காரணமாக பாதுகாப்பாக தொடருந்து நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒரே நாளில் இரத்து செய்யப்பட்ட 15 தொடருந்து சேவைகள்! வெளியான முக்கிய காரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/some-train-services-are-cancelled/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Mon, 26 May 2025 15:31:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=198446</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்று(26) இயக்கப்படவிருந்த சுமார் 15 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,&#8221;தொடருந்து சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் இன்று காலை பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த தொடருந்து சேவை, தொடருந்து சாரதிகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பராமரிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், தொடருந்து துறையால் அந்த விடுப்பை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் இன்று(26) இயக்கப்படவிருந்த சுமார் 15 தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,&#8221;தொடருந்து சாரதிகள் சுகயீன விடுப்பு அறிவித்ததால் தொடருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன் இன்று காலை பல பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.</p>
<p>இந்த தொடருந்து சேவை, தொடருந்து சாரதிகளின் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு பராமரிக்கப்படுகிறது.</p>
<p>வார இறுதி நாட்களில் அவர்கள் தங்கள் தேவைகளுக்காக விடுப்பு கோரினாலும், தொடருந்து துறையால் அந்த விடுப்பை வழங்க முடியாது.</p>
<p>எனவே, அவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சுகயீன விடுப்பைப் முறைப்பாடு அளித்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.”என கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி &#8211; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/colombo-batticaloa-train-services-cancelled/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Feb 2025 08:04:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=192950</guid>

					<description><![CDATA[தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி &#8211; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து\ கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் மட்டக்களப்பு (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடருந்து மோதி யானைக் கூட்டம் பலி &#8211; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து\</h4>
<p>கடுகதி தொடருந்தில் யானைக் கூட்டம் மோதியதால் <a href="https://tamilnaadi.com/uncategorized/2024/12/09/police-officer-arrested-connection-an-accident/">மட்டக்களப்பு</a> (Batticaloa) மார்க்கத்தின் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விபத்து கல்ஓயா பகுதியில் இன்று (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Department of Railways) தெரிவித்துள்ளது</p>
<p>இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பிலிருந்து <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" target="_blank" rel="noopener">கொழும்பு</a> நோக்கி பயணித்த தொடருந்தில் அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் தொடருந்து தடம் புரண்டுள்ளது.</p>
<p>இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி தொடருந்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.</p>
<p>தடம் புரண்ட தொடருந்தின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/third-class-seat-reservation-in-train-services/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 07:51:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[Third Class Seat Reservation In Train Services]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=191089</guid>

					<description><![CDATA[பல தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல், 6 தொடருந்து சேவைகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் தொடருந்துகளில் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நானு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு ஆசன முன்பதிவு வசதியை நீக்க தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நடவடிக்கை அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல், 6 தொடருந்து சேவைகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>இதற்கமைய, கொழும்பு கோட்டை – பதுளை, பதுளை – கொழும்பு கோட்டை, கொழும்பு கோட்டை – தலைமன்னார் மற்றும் தலைமன்னார் – கொழும்பு கோட்டை இடையே இயங்கும் தொடருந்துகளில் குறித்த மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் இந்த புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கபடவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-to-colombo-train-hits-traffic-police/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jan 2025 15:07:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189945</guid>

					<description><![CDATA[உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து வவுனியா &#8211; அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>உத்தியோகத்தரை மோதி தள்ளிய யாழ். கொழும்பு தொடருந்து</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/12/26/2024-tsunami-commemoration-in-vavuniya/">வவுனியாவில்</a> (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>குறித்த விபத்து வவுனியா &#8211; <a href="https://www.bing.com/search?q=அவுசதப்பிட்டிய&amp;cvid=60d8fd4b805946baa1b083bfc82f7a33&amp;gs_lcrp=EgRlZGdlKgYIABBFGDkyBggAEEUYOdIBBzY3MGowajSoAgCwAgA&amp;FORM=ANAB01&amp;PC=U531" target="_blank" rel="noopener">அவுசதப்பிட்டிய</a> பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.</p>
<p>யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.</p>
<p>இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/new-train-services-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jan 2025 07:33:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[New Train Services In Sri Lanka]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<category><![CDATA[Train Crowd]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189410</guid>

					<description><![CDATA[தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். குறிப்பாக மலையக மார்க்கம், தொடருந்து சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் தொடருந்து சேவைக்கான அதிக கேள்வி இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடருந்து சேவைகளில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றங்கள்</h4>
<p>பல புதிய தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த <a href="https://tamilnaadi.com/news/local/2024/09/28/railway-line-to-be-closed-from-29th/">தொடருந்து திணைக்களம்</a> தீர்மானித்துள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த தீர்மானம் சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.</p>
<p>குறிப்பாக மலையக மார்க்கம், தொடருந்து சுற்றுலாப் பயணிகளிடையே, பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் தொடருந்து சேவைக்கான அதிக <a href="https://www.thirukkural.net/ta/kural/adhigaram-042.html" target="_blank" rel="noopener">கேள்வி</a> இருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை ஜனவரி 31ஆம் திகதி முதல் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவையும் தினசரி சேவையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>புதிய தீர்மானத்தின்படி, எல்ல- ஒடிஸி &#8211; கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக பயணத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்புக்கும் பதுளைக்கும் இடையிலான எல்லா- ஒடிஸி &#8211; கொழும்பு தொடருந்து சேவையில் மேலதிக தொடருந்து பயணத்தை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொழும்பிலிருந்தும், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பதுளையிலிருந்தும் புறப்படும்.</p>
<p>இதேவேளை பெப்ரவரி மாதம் முதல் எல்ல &#8211; ஒடிஸி &#8211; கண்டி மற்றும் எல்ல- ஒடிஸி &#8211; நானு ஓயா ஆகிய இரண்டு புதிய தொடருந்து சேவைகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், எல்ல &#8211; ஒடிஸி &#8211; கண்டி தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வார இறுதியிலும் கண்டிக்கும் தெமோதரவுக்கும் இடையில் இயக்கப்படும் என்று தொடருந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எல்ல ஒடிஸி &#8211; நானுஓயா தொடருந்து சேவை, பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இயக்கப்படவுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தலாம்! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா?</title>
		<link>https://tamilnaadi.com/news/world/which-is-the-largest-railway-station-in-the-world/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 14:43:15 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Which Is The Largest Railway Station In The World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=189247</guid>

					<description><![CDATA[ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தலாம்! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா? உலகிலேயே ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) ரயில் நிலையம் மிகவும் பிரமாண்டமானது மற்றும் அரண்மனை போன்றது. இதன் அற்புதமான அழகை ரசிக்க நீங்கள் அங்கு செல்லலாம். கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் உலகின் மிகப்பெரிய ரயில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தலாம்! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா?</h4>
<p>உலகிலேயே ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.</p>
<p>நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) ரயில் நிலையம் மிகவும் பிரமாண்டமானது மற்றும் <a href="https://tamilnaadi.com/entertainment/cinema/2024/10/27/aranmanai-news-was-fake-2/">அரண்மனை</a> போன்றது. இதன் அற்புதமான அழகை ரசிக்க நீங்கள் அங்கு செல்லலாம்.</p>
<p>கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. 1903 மற்றும் 1913 க்கு இடையில் கட்டப்பட்ட இந்த நிலையம் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 2, 1913 அன்று 12:01 AM இல் திறக்கப்பட்டது.</p>
<p>அதன் தொடக்க நாளில், 150,000 க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர். இது அதன் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும்.</p>
<p>இந்த ரயில் நிலையத்தில் 44 பிளாட்பாரங்கள் மற்றும் 67 தண்டவாளங்கள் உள்ளன. அதில் இரண்டு சுரங்க வழி தண்டவாளங்கள் ஆகும். இந்த ரயில் நிலையம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.</p>
<p>இந்த ரயில் நிலையத்தை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆனது. 48 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலையம் பிரமாண்டமான அரண்மனை போல் உள்ளது.</p>
<p>இது பயணிகளை மட்டுமல்ல, அதன் அற்புதமான வடிவமைப்பை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.</p>
<p>கிராண்ட் சென்ட்ரல் வழியாக நடப்பது ஒரு அரண்மனைக்குள் நுழைவதைப் போல இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும், 125,000 க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக செல்கின்றனர்.</p>
<p>மேலும் தினமும் சுமார் 660 மெட்ரோ வடக்கு ரயில்கள் இதன் வழியாக செல்கின்றன. இங்கு பல ஹாலிவுட் திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன.</p>
<p>உண்மையில், ரயிலில் ஏறுவதை விட, நிலையத்தின் அழகை அனுபவிப்பதற்காகவே அதிகமான மக்கள் வருகை தருகின்றனர்.</p>
<p>கிராண்ட் சென்ட்ரல் டெர்மினலின் மிகச் சிறந்த அம்சங்களில் ஒன்று மெயின் கான்கோர்ஸில் உள்ள நான்கு முகம் கொண்ட ஓப்பல் கடிகாரம் (opal clock) ஆகும்.</p>
<p>கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் ரகசிய பிளாட்பார்ம் ஒன்றும் இருக்கிறது. அது வால்டோர்ப் ஆஸ்டோரியா ஹொட்டலுக்கு அடியில் சுரங்க வழிப் பாதையாக உள்ளது.</p>
<p>இந்த மறைக்கப்பட்ட தளமான ட்ராக் 61, ஜனாதிபதி ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்டால் புறப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது, வழக்கமான பயணிகள் சேவைகளுக்கு திறக்கப்படவில்லை.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/special-transport-service-of-the-festival/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/special-transport-service-of-the-festival/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 06:58:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Department of Railways]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[Special Transport Service Of The Festival]]></category>
		<category><![CDATA[Sri Lanka Railways]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187100</guid>

					<description><![CDATA[தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தொடருந்து திணைக்களம் 4 விசேட தொடருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் தொடருந்துகள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தைப்பொங்கல் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு போதுமான பேருந்து சேவைகள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தொடருந்து திணைக்களம் 4 விசேட தொடருந்துகளை சேவையில் இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, கடந்த 10 ஆம் திகதி முதல் தொடருந்துகள் சேவையில் இயக்கப்பட்டு வருவதாக தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு தொடருந்து புறப்படும் என்றும் மற்றைய தொடருந்து பதுளையில் இருந்து மாலை 5.40 மணிக்கு கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/special-transport-service-of-the-festival/feed/</wfw:commentRss>
			<slash:comments>1</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் &#8211; கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/colombo-jaffna-new-railway-service/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 15:34:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=186159</guid>

					<description><![CDATA[யாழ் &#8211; கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு கொழும்பு (Colombo) &#8211; யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக யாழ் &#8211; கொழும்பிற்கு ஒரேயொரு தொடருந்து சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர். இந்தநிலையில், இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ் &#8211; கொழும்பு புதிய தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2025/01/02/colombo-stock-exchange-today-trade-summary/">கொழும்பு</a> (Colombo) &#8211; யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) மேலதிகமாக இரு தொடருந்து சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த விடயத்தை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (Jagatheeswaran) தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக யாழ் &#8211; கொழும்பிற்கு ஒரேயொரு தொடருந்து சேவை மட்டும் இடம்பெற்று வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.</p>
<p>இந்தநிலையில், இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொதுமக்களினால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>இது தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.</p>
<p>எனது வேண்டுகோளிற்கு அமைவாக 15 ஆம் திகதியில் இருந்து ஒரு தொடருந்து சேவையும், 31 ஆம் திகதியில் இருந்து பிறிதொரு தொடருந்து சேவையும் ஆரம்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/important-announcement-for-train-travellers/</link>
		
		<dc:creator><![CDATA[varman]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Dec 2024 08:16:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Railways]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tourism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=180702</guid>

					<description><![CDATA[தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்! நாட்டில் தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தொடருந்து திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி, தொடருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தொடருந்து சேவையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது, “மலையக பிரதான தொடருந்துகளில் பாதுகாப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக விழிப்புணர்வு கோரப்படுகின்றது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!</h4>
<p>நாட்டில் தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை தொடருந்து திணைக்களம் விடுத்துள்ளது.</p>
<p>அதன்படி, தொடருந்தில் பாதுகாப்பற்ற முறையில் பயணிப்பதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் தொடருந்து சேவையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாவது, “மலையக பிரதான தொடருந்துகளில் பாதுகாப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை உள்ளடக்கிய விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அதிக விழிப்புணர்வு கோரப்படுகின்றது.</p>
<p>வெளிநாட்டு <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/25/tourists-visiting-to-sri-lanka-increase/">சுற்றுலாப்</a> பயணிகள் பெரும்பாலும் தொடருந்து கதவுகளுக்கு வெளியே சாய்ந்து, ஃபுட்போர்டு கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு, அபாயங்களைக் கவனிக்காமல் செல்பி எடுப்பார்கள்.</p>
<p>சமூக ஊடகப் போக்குகளால் பிரபலமடைந்த இவை இந்த ஆண்டு தொடர்ச்சியான சோகமான சம்பவங்களுக்கு வழிவகுத்தன.</p>
<p>சமீபத்திய வழக்கில், ஓஹியா மற்றும் இடல்கஷின்னாவுக்கு அருகில் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது ஒரு ஈரானிய பெண் ஒரு சுரங்கப்பாதையைத் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அவர் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளார்.</p>
<p>மற்ற சம்பவங்களில் சுற்றுலா பயணி ஒருவர் கால் பலகையில் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளார், மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்தார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
