<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>racism &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/racism/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 21 Nov 2025 07:44:06 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>racism &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து&#8217; – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/dismissed-politician-criticizing-ministers-is-a-farce-mp-elangumaran-slams-political-opponent-during-budget-debate/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Nov 2025 15:59:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[budget debate]]></category>
		<category><![CDATA[energy ministry]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[MP Elangumaran]]></category>
		<category><![CDATA[Political Farce]]></category>
		<category><![CDATA[racism]]></category>
		<category><![CDATA[Tamil Arasu Katchi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205398</guid>

					<description><![CDATA[தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்வது கேலிக்கூத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். &#8220;அமைச்சர்களைப் பதவி விலகக் கூறும் குறித்த நபருக்கு முதுகெலும்பு இருந்தால், உங்கள் பிள்ளைகளின் இருப்பிடம் பற்றித் தெரிவிக்க முடியுமா? அது தொடர்பிலான துணிச்சல் அவருக்கு இருக்கின்றதா?&#8221; என [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப் பதவி விலகச் சொல்வது கேலிக்கூத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று வலுசக்தி அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட உரையில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>&#8220;அமைச்சர்களைப் பதவி விலகக் கூறும் குறித்த நபருக்கு முதுகெலும்பு இருந்தால், உங்கள் பிள்ளைகளின் இருப்பிடம் பற்றித் தெரிவிக்க முடியுமா? அது தொடர்பிலான துணிச்சல் அவருக்கு இருக்கின்றதா?&#8221; என இளங்குமரன் கேள்வியெழுப்பினார்.</p>
<p>மேலும் &#8220;நாடாளுமன்றில் கமராக்களுக்கு முன்னால் வீரவசனம் பேசுபவரும் இருக்கின்றார். &#8216;மம நம&#8217; என கூறியதற்காக விமர்சிக்கின்றார். ஆனால் அவரால் தமிழில் ஒரு முகநூல் பதிவைச் சரியாக வெளியிட முடியவில்லை.&#8221;</p>
<p>ஆனால் தமிழர்களைக் கொன்று அழித்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்பகின்றார்கள். இவை ஒன்றும் மக்களுக்கானதில்லை. அவரது கதையால் ஒருபோதும் யாழ். மாவட்டம் முன்னேறாது.</p>
<p>&#8220;இனவாத வலையேற்பட்டபோது, எதிர் தரப்பில் இருந்த தமிழ் மற்றம் சிங்கள எம்.பிக்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைந்திருந்தனர். இவர்களால் இனவாத அரசியலையே முன்னெடுக்க முடியும்,&#8221; என்று இளங்குமரன் குற்றம் சாட்டினார்.</p>
<p>&#8220;இனவாதத்தால் பாதிக்கப்படப்போவது இங்குள்ள எம்.பிக்களின் பிள்ளைகள் அல்ல. அவர்கள் தென்பகுதியில் கல்வி கற்று வேறு வேறு நாடுகளில் உள்ளனர். ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழர் பகுதியில் வாழும் எதிர்காலச் சந்ததியினரே,” என்றார்.</p>
<p>இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி., சபாநாயகரை நோக்கி இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்:</p>
<p>&#8220;சபாநாயகரே, இவர் இன்று வலுசக்தி அமைச்சு தொடர்பில் கதைத்த விடயங்கள் என்ன? எதுவும் இல்லை. நிலையியல் கட்டளையின் படி நேற்றுப் பிரேரணைக்கு முரணாகக் கதைத்ததற்காக எனது நேரத்தை இல்லாது செய்தீர்கள். ஆனால் இன்று அவ்வாறு நடக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாவீரன் “கர்ணன்” : முல்லை பொலிசாருக்கு இனத்துவேசத்தை தூண்டுகிறதாம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/</link>
					<comments>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 08:52:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Anandapuram]]></category>
		<category><![CDATA[Dharmarasa Bindusan (]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Hero "Karnan"]]></category>
		<category><![CDATA[Human Rights Commission Jaffna]]></category>
		<category><![CDATA[language]]></category>
		<category><![CDATA[Mullai police]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Mullaitivu Police]]></category>
		<category><![CDATA[nterrogated]]></category>
		<category><![CDATA[photographs]]></category>
		<category><![CDATA[Pudukudiyiruppu]]></category>
		<category><![CDATA[racism]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Three Wheeler]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28438</guid>

					<description><![CDATA[மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த  இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் , எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார்  வீதியில் இடைமறித்து அதற்கு பின்பக்கத்தில் இருந்த &#8216;மாவீரன் கர்ணன்&#8217; என்ற ஸ்டிக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பின்பு அந்த ஸ்டிக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த  இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் ,</p>
<p>எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார்  வீதியில் இடைமறித்து அதற்கு பின்பக்கத்தில் இருந்த &#8216;மாவீரன் கர்ணன்&#8217; என்ற ஸ்டிக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>பின்பு அந்த ஸ்டிக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி அனுமதி பத்திரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கூறி சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கி எடுத்துவிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறும் கூறி விட்டு சென்றுள்ளனர்.</p>
<p>மகாபாரதத்தில் வரும் பாத்திரமான கர்ணன் எமது சமயத்தின் வரலாற்று கதையை கூறும் வகையிலேயே அந்த பாத்திரத்தின்மீது நான்கொண்டுள்ள பற்றின் காரணமாக நான் அந்த பெயரை வடிவமைத்து எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியிருந்தேன்.</p>
<p>ஆனால் அந்த மாவீரன் என்ற வாசகத்துக்காகவே என்னை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு என்னை அழைத்திருந்தனர்.</p>
<p>இதனையடுத்து எனது தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்திய பொலிஸார் ,உங்களது முச்சக்கரவண்டியை ஓட்டிவந்தவரது சாரதி அனுமதி பத்திரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உள்ளது.</p>
<p>எனவே விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வாகன உரிமையாளரான நீங்கள் வரவேண்டும் என பொலிஸார் அழைத்தனர்.</p>
<p>நான் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் &#8221;மாவீரன் கர்ணன்&#8221; என எழுதிய வாசகம் இன துவேசத்தை ஏற்படுத்தும் விடயம் என இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் கண்காணித்தே உங்களது முச்சக்கரவண்டியை பிடித்துள்ளோம் என கூறி வாக்குமூலம் பெற முயற்சித்தனர்.</p>
<p>இதேவேளையில் எனது தம்பியையும் பொலிஸ் நிலையத்துக்கு வர கூறுமாறு அழைத்து அவரிடமும் இவ்வாறு நடந்து கொண்டிருந்தனர்.</p>
<p>இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் உடனடியாக எமது குடும்பத்தினரால் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து திடீரென வாக்குமூலம் பெறுவதை நிறுத்தினர்.</p>
<p>இதனையடுத்து  பொலிஸார் எனது தம்பியை போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டமை ஆகிய குற்றசாட்டுகளை சுமத்தி நேற்று நண்பகல் கைது செய்து பொலிஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.</p>
<p>ஆனால் எனது சகோதரன் பொலிஸார் சாரதி அனுமதி பத்திரத்தை கேட்கும்போது  கொடுத்துவிட்டு ஏற்றிவந்தவர்களை உரிய இடத்தில இறக்கிவிட்டு மீண்டும் பொலிஸார் கூறியபடி பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார் .</p>
<p>அவரை கைது செய்தமைக்கான காரணத்துக்கான பற்றுசீட்டை கேட்டபோது கைதுக்கான பற்றுசீட்டை வழங்கமுடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>நான் தொடர்சியாக கைதுக்கான பற்றுசீட்டு எமக்கு வழங்கவேண்டும் என கேட்டு பொலிஸாரோடு வாதிட்ட பின்னரே சிங்கள மொழியில் எழுதிய பற்றுசீட்டை வழங்கினர்.</p>
<p>நான் எனது சொந்த மொழியில் வழங்குமாறு கோரியபோதும் அவர்கள் அவ்வாறு தரமுடியாது என கூறியிருந்தனர்.</p>
<p>இந்த நிலையில் எனது சகோதரனை இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்துவதாக கூறியிருந்தனர்.</p>
<p>பின்னர் இன்றையதினம் காலை 11 மணிக்கு சிங்களமொழியில் எழுதிய தற்காலிக பொலிஸ் துண்டை வழங்கி பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.</p>
<p>அத்துடன் எனது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் ஒட்டபட்டிருந்த மாவீரன் கர்ணன் என்ற வாசகத்தையும் அகற்றுமாறு கூறினர். அவ்வாறு அகற்ற முடியாது என நான் கூறினேன்.</p>
<p>அவ்வாறு நான் அகற்றவேண்டுமாக இருந்தால் என்ன காரணத்துக்காக என குறிப்பிட்டு நீதிமன்றில் முற்படுத்துங்கள் என கூறி அகற்ற மறுத்த நிலையில் எனது முச்சக்கரவண்டியையும் விடுவித்தனர்.</p>
<p>மாவீரன் என்ற வாசகம் எனது மொழியில் உள்ள ஒரு சொல் அந்த சொல்லை எழுவதற்கு கூட எமக்கு சுதந்திரம் இல்லையா என்ற கேள்வியை பொலிஸாரின் இந்த செயற்பாடு கேட்க வைக்கின்றது.</p>
<p>கடந்த ஒருவருடங்களுக்கும் மேலாக நான் இந்த வாசகத்தை எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியுள்ளேன்.</p>
<p>ஆனால் இந்த மாதத்தில் இவ்வாறு நடந்துகொண்டமை எனக்கும் எனது சகோதரனுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
