<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Rabies &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/rabies/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Wed, 26 Nov 2025 17:41:51 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Rabies &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>5 பேரைக் கடித்த பூனை திடீர் மரணம் – வெறிநாய்க்கடி அச்சத்தால் பரிசோதனைக்கு உடல்கள் அனுப்பப்பட்டுள்ளன!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/cat-dies-suddenly-in-kalmunai-after-biting-5-people-head-sent-for-testing-amid-rabies-fears/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 15:51:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Animal Death]]></category>
		<category><![CDATA[Anti-Rabies Vaccine]]></category>
		<category><![CDATA[Cat Bite]]></category>
		<category><![CDATA[kalmunai]]></category>
		<category><![CDATA[Public Health Alert]]></category>
		<category><![CDATA[Rabies]]></category>
		<category><![CDATA[Southern Kalmunai MOH Division]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205804</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில், வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரைக் கடித்த நிலையில் திடீரென இறந்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வெறிநாய்க்கடி (Rabies) அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பூனை 5 பேரைக் கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளது. நீண்ட தேடுதலுக்குப் பின்னர், அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக உடனடியாகச் சுகாதார வைத்திய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நகர மண்டப வீதியில், வீட்டில் வளர்க்கப்பட்ட பூனை ஒன்று அப்பகுதியில் உள்ள 5 பேரைக் கடித்த நிலையில் திடீரென இறந்த சம்பவம் அண்மையில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் வெறிநாய்க்கடி (Rabies) அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>குறித்த பூனை 5 பேரைக் கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளது. நீண்ட தேடுதலுக்குப் பின்னர், அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>சம்பவம் தொடர்பாக உடனடியாகச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் குறித்த பூனையை மீட்டுப் பரிசோதனை மேற்கொண்டனர்.</p>
<p>வெறிநாய்க்கடி நோய்த்தொற்று அபாயம் உள்ளதா என்பதைக் கண்டறிய, மேலதிகப் பரிசோதனைக்காக அப்பூனையின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் பல பேரைக் கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் பதிவாகியிருந்தது.</p>
<p>கடித்த நாயின் மாதிரி அறிக்கை, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) இனால் &#8216;Rabies positive&#8217; என அறிவிக்கப்பட்டது.</p>
<p>இதைத் தொடர்ந்து, அப் பிரதேசத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வளர்ப்பு நாய்கள், கட்டாக்காலி நாய்களுக்கு ARV (Anti-Rabies Vaccine) தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம், மீண்டும் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அவசியமாக்கியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொரோனா தடுப்பூசிக்கு  பதிலாக நாய் தடுப்பூசி!</title>
		<link>https://tamilnaadi.com/news/india/dog-vaccine-instead-of-corona-vaccine/</link>
					<comments>https://tamilnaadi.com/news/india/dog-vaccine-instead-of-corona-vaccine/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Sep 2021 18:08:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Maharashtra]]></category>
		<category><![CDATA[Rabies]]></category>
		<category><![CDATA[Vaccine]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13325</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார். இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்றுள்ளார். இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் குறித்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதன்பின்னர் மருந்து போத்தலை கவனித்தபோது அது கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து என தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த நபர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொரோனா தடுப்பூசி ஏற்றச் சென்றவருக்கு வெறிநாய் கடிக்கு ஏற்றப்படுகின்ற ஊசியை வைத்தியர் ஒருவர் ஏற்றியுள்ளார்.</p>
<p>இந்தச் சம்பவம் இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக சுகாதார நிலையம் ஒன்றுக்கு குறித்த நபர் சென்றுள்ளார்.</p>
<p>இதன்போது அங்கு பணியில் இருந்த வைத்தியர் குறித்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார்.</p>
<p>அதன்பின்னர் மருந்து போத்தலை கவனித்தபோது அது கொரோனாவுக்கான தடுப்பூசி அல்ல வெறிநாய் கடிக்கு செலுத்தப்படும் ஊசி மருந்து என தெரியவந்துள்ளது.</p>
<p>இதனையடுத்து குறித்த நபர் முறைப்பாடு செய்ததை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>அத்துடன் குறித்த வைத்தியரும் தாதியும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/india/dog-vaccine-instead-of-corona-vaccine/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
