<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>R M Ranjith Madduma Bandara &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/r-m-ranjith-madduma-bandara/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 10 Oct 2025 05:54:48 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>R M Ranjith Madduma Bandara &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியாவில் இருக்கும் சாரா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranjith-madduma-bandara-easter-attack/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 05:54:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter Attack Sri Lanka]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Nalinda Jayatissa]]></category>
		<category><![CDATA[National People's Power - NPP]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Ranjith Madduma Bandara Easter Attack]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=202183</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஈஸ்டர் குண்டு தாக்குதலின் முக்கிய சாட்சியாளர் சாரா.அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்,தற்போது அரசாங்கம் இந்தியாவில் இருக்கும் சாராவை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார கூறியுள்ளார்.</p>
<p>அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இன்னும் நிறைவேற்றப்படாத விடயங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தில் (எதிர்க்கட்சி) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் தகவல் வழங்கியது இந்தியாவே. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் எந்தவித பாதுகாப்பும் அரசாங்கத்திடம் கேட்கவில்லை.ஏனென்றால் அவர்களுக்கு தாக்குதல் நடக்காது என்று தெரியும் என்பதால் ஆகும் என 2021 ஆம் ஆண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.</p>
<p>தாக்குதலின் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளர் இலங்கைக்கு வந்து சாரா இந்தியாவுக்கு தப்பிச் செல்கிறார் என்றார். அதனால் இந்தியாவிடம் சாராவை கேட்கலாம்.</p>
<p>இந்த நாடு கத்தோலிக்க மக்களை ஏமாற்றியுள்ளது.</p>
<p>நல்லாட்சி அரசில் 700 பேரை கைது செய்தோம். உங்களுக்கு இது தொடர்பில் ஒன்றும் சொல்வதற்கில்லை.</p>
<p>மேலும், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : அநுரவிடம் சஜித் அணி வலியுறுத்தியுள்ள விடயம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-chemmani-mass-grave-issue/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 11:08:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chemmani mass graves jaffna]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199856</guid>

					<description><![CDATA[வடக்கில் தொடர்ந்து தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அநுர அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு கடந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் இந்த விவகாரத்தை அநுர அரசும் கிடப்பில் போடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். யாழ். செம்மணி &#8211; சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், &#8220;மனிதப் புதைகுழி அகழ்வுக்கு நிதி வழங்குவோம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று வெறும் வார்த்தைகளைக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கில் தொடர்ந்து தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அநுர அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு கடந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் போல் இந்த விவகாரத்தை அநுர அரசும் கிடப்பில் போடக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>யாழ். செம்மணி &#8211; சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், &#8220;மனிதப் புதைகுழி அகழ்வுக்கு நிதி வழங்குவோம், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று வெறும் வார்த்தைகளைக் கூறிவிட்டு இந்த அரசாங்கம் இருக்கக்கூடாது.</p>
<p>வடக்கில் செம்மணி உள்ளிட்ட பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்படும் எலும்புக்கூடுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி உண்மைகளைக் கண்டறிய அரசு முழு வீச்சுடன் செயற்பட வேண்டும்.</p>
<p>குற்றங்கள் நடந்திருப்பின் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>இந்த விடயத்தில் நீதிமன்றமும் நடுநிலையுடன் முழு கரிசனை செலுத்தும் என்று நம்புகின்றோம்&#8221; என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranjith-madduma-bandara-parliament-speech/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Feb 2025 13:31:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Ranjith Madduma Bandara Parliament Speech]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=193868</guid>

					<description><![CDATA[ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம் அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ரணில் வழங்கிய சம்பள அதிகரிப்பை கழித்தால் மிகுதி 950 ரூபாவே: ரஞ்சித் மத்தும பண்டாரவின் விளக்கம்</h4>
<p>அரச ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950 ரூபாவிலும் 5000 ரூபா <a href="https://tamilnaadi.com/news/local/2024/11/03/sri-lanka-economic-crisis-22/">ரணில் விக்ரமசிங்க</a> மார்ச் மாதம் வரை வழங்கியது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.</p>
<p>அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்த வருட சம்பள அதிகரிப்பாகக் கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும் போது, அரசாங்கத்தின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரச ஊழியர்களுக்குத் தெரியவரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று (25.02.2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு &#8211; செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.</p>
<p>ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர். தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருந்தனர்.</p>
<p>இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.</p>
<p>நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐ.தே.கவுடன் மாத்திரமே பேச்சு! ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sajith-joins-ranil-s-party-3/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Feb 2025 08:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Sajith Joins Ranil S Party]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=191264</guid>

					<description><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சி செயற்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தமது அணிக்குச் சவால் கிடையாது எனவும், கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே தற்போது பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.</p>
<p>சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>அனைவருக்கும் அரசியல் செய்யும் உரிமை இருக்கின்றது. அந்தவகையில் மொட்டுக் கட்சி செயற்படுகின்றது. அவர்களின் நடவடிக்கை எமக்குச் சவால் கிடையாது.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதையே கட்சி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். சிலர் எதிர்த்த போதிலும், பெரும்பாலானவர்கள் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் எவ்வித மாற்றமும் வராது. சஜித் பிரேமதாஸவே தலைவர். அவருக்கே மக்கள் ஆதரவு உள்ளது.</p>
<p>அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம்! பெரும் சிக்கலில் சஜித்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-500-%e0%ae%ae%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jan 2025 15:30:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=188625</guid>

					<description><![CDATA[தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம்! பெரும் சிக்கலில் சஜித் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது சுமத்தப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா இலஞ்சம் தொடர்பிலான குற்றச்சாட்டே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கட்சியின் அநேகமான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 11 ஆம் திகதி நடத்தப்பட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம்! பெரும் சிக்கலில் சஜித்</h4>
<p>நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான <a href="https://tamilnaadi.com/news/local/2025/01/05/government-s-new-approach-thissa-athanayake-vision/">ஐக்கிய மக்கள் சக்தி</a>, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.</p>
<p>அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது சுமத்தப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா இலஞ்சம் தொடர்பிலான குற்றச்சாட்டே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.</p>
<p>இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கட்சியின் அநேகமான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கடந்த 11 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச, 500 மில்லியன் ரூபா இலஞ்சம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதன் காரணமாக, கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான அவதூறிலிருந்து விடுபட பல்வேறு முறையில் எதிர்ப்பை நடத்த எம்.பி.க்கள் குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, வெகுஜன ஊடகங்களில் கட்சி சார்பாகப் பேசுவதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின் தேர்தல் நிதிக்கு எந்த நபரிடமிருந்தும் 500 மில்லியன் ரூபா பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.</p>
<p>பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பிரபல அரிசி தொழிலதிபர் ஒருவர் தேசியப் பட்டியல் பதவிக்கு 500 மில்லியன் கொடுத்ததாக குறித்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>அவரது பெயர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பதவி கிடைக்காததால் இந்தத் தகவலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதா சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இது தவிர, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரும் பதவிக்காக அதிக பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த இந்த தொழிலதிபர், மருத்துவத் துறையில் ஒரு அமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஞ்சித் மத்தும பண்டார, “தேசியப் பட்டியலில் உள்ள 29 நபர்களிடம் இருந்து கட்சித் தலைவரோ அல்லது கட்சியோ அத்தகைய நிதியைப் பெறவில்லை.</p>
<p>இருப்பினும், அந்தப் பணத்தை கட்சியின் ஆலோசகர் ஒருவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி கட்சியின் ஒரு வலுவான பிரிவு தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பத் தயாராகி வருகிறது’’ என்றார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் &#8211; சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranil-and-sajith-form-alliance-sjb-approve/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 13:14:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[UNP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187774</guid>

					<description><![CDATA[ரணில் &#8211; சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (16) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்காக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ரணில் &#8211; சஜித் இணையும் கூட்டணி : கிடைத்தது அனுமதி</h4>
<p>இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் <a href="https://tamilnaadi.com/news/local/2024/08/29/ranil-instructs-for-grassroots-level-campaign/">ஐக்கிய தேசியக் கட்சி</a>யுடன் (<a href="https://finance.yahoo.com/quote/UNP/" target="_blank" rel="noopener">UNP</a>) கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>நேற்று (16) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன் இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>மேலும் இந்த குழு எதிர்வரும் வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) அண்மையில் தெரிவித்திருந்தார்.</p>
<p>அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு (Local Government Election) முன்னதாக சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமக்குள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-s-national-list-issue-final-decision/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Dec 2024 05:15:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Parliament Election 2024]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<category><![CDATA[Tissa Attanayake]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=180772</guid>

					<description><![CDATA[சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார். கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சஜித் அணியின் சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் : வெளியான அறிவிப்பு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/07/sujeewa-senasinghe-going-to-contest-in-kandy/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் தேசியப் பட்டியல் குறித்து உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளதுடன் இதுவரை இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் (Ranjith Madduma Bandara) பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்டது. மிகுதி தேசியப் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.</p>
<p>கிடைக்கப் பெற்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு இதுவரையில் பெயர் குறிப்பிடாமல் இருப்பது குறித்து பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணி என்ற அடிப்படையில் பல இணக்கப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கியமான நபர்களும் உள்ளனர். அத்துடன் மேலும் சிலர் தேசிய பட்டியலுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே இவ்விடயங்கள் அனைத்தையும் ஆராய வேண்டும்.</p>
<p>இவ்வாறான பின்னணியில் தேசிய பட்டியல் விவகாரத்தில் உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளது. எனவே தேசிய பட்டியல் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளோம்.</p>
<p>ஆகவே வெகுவிரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். இல்லையேல் மக்கள் விமர்சிப்பார்கள்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் கடைப்பிடித்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் பின்னடைவை எதிர்க்கொள்ள நேரிட்டது என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.<br />
&#8211;<br />
மக்களின் மனங்களை வெல்லக் கூடிய வகையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இணக்கமாக செயற்பட வேண்டும், மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டும்.</p>
<p>ஐக்கிய மக்கள் சக்தி புதிய மாற்றத்தை நாட்டு மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். சிறந்த மாற்றத்தை செயற்படுத்த கூடிய திறமையானவர்கள் கட்சியில் இருக்க வேண்டும். மறுசீரமைப்புடன் புதிய முகத்துடன் செயற்படாவிடின் அரசாங்கத்துடன் போட்டியிடவும் முடியாது, மக்களின் மனங்களை வெல்லவும் முடியாது” என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் &#8211; வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-s-national-list-member-of-parliament-selection/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 12:38:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Parliament Election 2024]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<category><![CDATA[sjb]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179496</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் &#8211; வெளியான தகவல் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் &#8211; வெளியான தகவல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/24/the-starting-point-of-the-arugambay-issue/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் (SJB) அனைத்து தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் விரைவில் வெளியிடப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கமைய ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.</p>
<p>இதன்படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 4 தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகவில்லை.</p>
<p>குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்காக இரான் விக்ரமரட்ன, <a href="https://parliament.lk/ta/members-of-parliament/directory-of-members/viewMember/145/" target="_blank" rel="noopener">இம்தியாஸ்</a> பாக்கீர் மாக்கார், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல், பீரிஸ், மனோ கணேசன் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதேவேளை, தேசிய பட்டியல் ஊடாக தாம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மனோவுக்குத் தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி&#8230;! தொடர் இழுபறிநிலை</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/national-list-to-mano-ganesan/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Nov 2024 06:11:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[mano ganeshan]]></category>
		<category><![CDATA[Parliament of Sri Lanka]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[sajith premadasa]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=177198</guid>

					<description><![CDATA[மனோவுக்குத் தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி&#8230;! தொடர் இழுபறிநிலை மனோ கணேசன் உட்பட பலரும் தேசிய பட்டியல் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார் கொழும்பில் (Colombo) நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மனோவுக்குத் தேசியப் பட்டியல் வழங்குமா சஜித் அணி&#8230;! தொடர் இழுபறிநிலை</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2024/08/15/mano-ganesan-on-the-tamil-public-candidate/">மனோ கணேசன்</a> உட்பட பலரும் தேசிய பட்டியல் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்</p>
<p>கொழும்பில் (Colombo) நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்குத் தேசியப் பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்</p>
<p>தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பதில் இழுபறி நிலை நீடிப்பதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளின்படி புதிய ஜனநாயக முன்னணிக்கு இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் கிடைத்துள்ளன.</p>
<p>புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena) மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகமாக இருந்த ஷர்மிளா பெரேரா(Sharmila Perera) ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.</p>
<p>எனினும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் தொடர்பில் இதுவரையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்த கட்சித் தலைமை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sjb-rejected-hirunika-s-resigning-letter/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Oct 2024 07:57:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[hirunika-premachandra]]></category>
		<category><![CDATA[R M Ranjith Madduma Bandara]]></category>
		<category><![CDATA[Samagi Jana Balawegaya]]></category>
		<category><![CDATA[Sjb Rejected Hirunika S Resigning Letter]]></category>
		<category><![CDATA[Sri Lanka Politician]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=171297</guid>

					<description><![CDATA[ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்த கட்சித் தலைமை ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது. கொழும்பில் தனது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறி, இந்த பதவி விலகலை பிரேமச்சந்திர சமர்ப்பித்த போதும், அதனை கட்சி ஏற்க மறுத்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன்படி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்க மறுத்த கட்சித் தலைமை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/10/07/sujeewa-senasinghe-going-to-contest-in-kandy/">ஐக்கிய மக்கள் சக்தி</a>யின் மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை ஏற்க மறுத்துள்ளது.</p>
<p>கொழும்பில் தனது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறி, இந்த பதவி விலகலை பிரேமச்சந்திர சமர்ப்பித்த போதும், அதனை கட்சி ஏற்க மறுத்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி கட்சி மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக பிரேமச்சந்திரவைத் தொடருமாறு கட்சி கோரியுள்ளதுடன் அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதேவேளை, தேர்தல் பிரசாரத்தின் போது ஹிருணிகா பிரேமச்சந்திரவால் அதனைச் செய்ய முடியாவிட்டால், கட்சியின் மகளிர் பிரிவின் மற்ற பெண் உறுப்பினர்கள் அவரின் பணிகளை மேற்பார்வையிட உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
