<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>President Anura Jaffna Visit &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/president-anura-jaffna-visit/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 18:14:58 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>President Anura Jaffna Visit &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கடற்கோட்டைக்குச் செல்ல அனுமதி தாருங்கள்: யாழ். வரும் ஜனாதிபதியிடம் ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/kayts-ps-chairman-requests-president-anura-to-grant-public-access-to-fort-hammenhiel-via-kayts-harbor/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 18:14:58 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Fort Hammenhiel Kayts]]></category>
		<category><![CDATA[Jaffna Tourism Development 2026]]></category>
		<category><![CDATA[Kayts Pradeshiya Sabha Chairman]]></category>
		<category><![CDATA[President Anura Jaffna Visit]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy Fort Control.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=209932</guid>

					<description><![CDATA[பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஊர்காவற்துறையின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கடற்கோட்டை (Fort Hammenhiel) விவகாரத்திற்கு முறையான தீர்வு பெற்றுத் தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ. அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார். ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பாரம்பரியச் சின்னமாகும். தற்போது இது கடற்படை மற்றும் தொல்லியல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொங்கல் பண்டிகைக்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஊர்காவற்துறையின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கடற்கோட்டை (Fort Hammenhiel) விவகாரத்திற்கு முறையான தீர்வு பெற்றுத் தர வேண்டும் என ஊர்காவற்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ. அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர், ஊர்காவற்துறை கடற்கோட்டை என்பது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு பாரம்பரியச் சின்னமாகும். தற்போது இது கடற்படை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து தமக்கு ஆட்சேபனை இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.</p>
<p>ஊர்காவற்துறை துறைமுகத்திலிருந்து கடற்கோட்டைக்கு வெறும் 4 நிமிடங்களில் செல்ல முடியும். ஆனால், தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து நேரடியாகச் சென்று பார்வையிட அனுமதி இல்லை.</p>
<p>பயணிகள் ஊர்காவற்துறை துறைமுகத்திலிருந்து கடற்கோட்டைக்குச் சென்று வர அனுமதிப்பதன் மூலம்:</p>
<p>பிரதேசத்தின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.</p>
<p>உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மேம்படும்.</p>
<p>வருமானம் குறைந்த நிலையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபையின் வருவாய் கணிசமாக உயரும்.</p>
<p>&#8220;எமது ஆளுகைக்குள் உள்ள துறைமுகத்திலிருந்து, எமது ஆளுகைக்குள் உள்ள கடற்கோட்டையை மக்கள் சென்று பார்வையிட ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் பிரதேசம் வலுப்பெற வாய்ப்புள்ளது&#8221; என தவிசாளர் அ. அன்னராசா தனது ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>யாழ்ப்பாணத்தின் வடக்குத் தீவுப்பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தப் புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இக்கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எங்கள் பூர்வீக நிலத்தைப் பறிக்காதீர்கள்: எழுவைதீவில் கடற்படைக்காகக் காணி சுவீகரிப்பு – ஜனாதிபதிக்குத் தாய் கண்ணீர் மடல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/protests-emerge-as-sri-lanka-navy-moves-to-acquire-private-land-in-eluvaitivu-mother-appeals-to-president/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 17:58:40 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Eluvaitivu Land Acquisition 2026]]></category>
		<category><![CDATA[Jaffna Land Rights]]></category>
		<category><![CDATA[Kayts Land Issue.]]></category>
		<category><![CDATA[President Anura Jaffna Visit]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy Land Seizure]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=209903</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது. ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குதுறைக்கு அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி. சுமார் நான்கரை பரப்புத் தனியார் காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்காகக் காணி உரிமையாளர்களுக்கு நில அளவைத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளது. குறித்த காணியின் உரிமையாளரான தாய் ஒருவர் தனது குடும்ப அவலநிலை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காகப் பொதுமக்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது.</p>
<p>ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குதுறைக்கு அருகாமையில் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி.</p>
<p>சுமார் நான்கரை பரப்புத் தனியார் காணியை நிரந்தரமாகச் சுவீகரிப்பதற்காகக் காணி உரிமையாளர்களுக்கு நில அளவைத் திணைக்களம் எழுத்து மூலம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.</p>
<p>குறித்த காணியின் உரிமையாளரான தாய் ஒருவர் தனது குடும்ப அவலநிலை குறித்துக் கண்ணீர் மல்கக் கருத்துத் தெரிவித்துள்ளார்.</p>
<p>1990-ஆம் ஆண்டிலிருந்து குறித்த காணியைக் கடற்படையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 30 வருடங்களாகத் தனது சொந்த வீட்டிற்குள் நுழைய முடியாமல் அக்குடும்பம் தவித்து வருகிறது.</p>
<p>கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், அவர்களைப் பராமரிக்கத் தனது சொந்த நிலம் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&#8220;எனது பூர்வீக நிலத்தைக் கடற்படையினருக்குக் கொடுக்கத் தயாரில்லை. பல அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி எனது குடும்ப நிலையை உணர்ந்து எமது நிலத்தை எமக்கே பெற்றுத்தர வேண்டும்&#8221; என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களையும், மீளக்குடியமர்வு குறித்த பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவுள்ள சூழலில், இவ்வாறான காணிச் சுவீகரிப்பு அறிவித்தல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
