<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Post-Mortem &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/post-mortem/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 06 Dec 2025 13:49:28 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Post-Mortem &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஜெனரேட்டர் நச்சுவாயு தாக்கிப் பெண் பலி! உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின் சடலம் ஒப்படைப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/woman-dies-in-kalmunai-due-to-suspected-carbon-monoxide-poisoning-from-generator-body-handed-over-after-post-mortem/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Dec 2025 13:49:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ampara District]]></category>
		<category><![CDATA[Carbon Monoxide Poisoning]]></category>
		<category><![CDATA[Fatal Accident]]></category>
		<category><![CDATA[Generator Incident]]></category>
		<category><![CDATA[kalmunai]]></category>
		<category><![CDATA[Police Investigation]]></category>
		<category><![CDATA[Post-Mortem]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206430</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில், மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (டிசம்பர் 6) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வீட்டினுள் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) வாயுவைச் சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தன்று [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 5ஆம் பிரிவு, புதிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில், மின்பிறப்பாக்கியிலிருந்து (ஜெனரேட்டர்) வெளியான நச்சுவாயுவைச் சுவாசித்ததால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய குடும்பப் பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று (டிசம்பர் 6) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
<p>வீட்டினுள் இயங்கிக்கொண்டிருந்த ஜெனரேட்டரிலிருந்து கசிந்த காபன் மொனொக்சைட் (Carbon monoxide) வாயுவைச் சுவாசித்தமையாலேயே குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சம்பவத்தன்று குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர். அனர்த்தம் ஏற்பட்டதை உணர்ந்த உறவினர்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.</p>
<p>உயிரிழந்தவரின் தந்தை மற்றும் மகள் ஆகியோர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p>சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிகாட்டலிலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.ஏ.எல். லசந்த களுஆராச்சியின் வேண்டுகோளிற்கிணங்கவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.</p>
<p>சட்ட வைத்திய அதிகாரி கசுன் பெரேரா பங்கேற்புடன், மரண விசாரணை அதிகாரி முகமட் இப்றாகீம் நஸ்றுல் இஸ்லாம் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றது.</p>
<p>சட்ட நடைமுறைகள் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை முத்து நகரில் 42 நாட்களான சிசு உயிரிழப்பு: பிரேதப் பரிசோதனைக்காக ஒப்படைப்பு – காவல்துறையினர் விசாரணை!</title>
		<link>https://tamilnaadi.com/news/police-investigate-death-of-42-day-old-infant-in-mutthur-nagar-trincomalee-body-handed-over-for-post-mortem/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 14:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[China Bay Police]]></category>
		<category><![CDATA[Mutthur Nagar]]></category>
		<category><![CDATA[Post-Mortem]]></category>
		<category><![CDATA[Sudden Death Investigation.]]></category>
		<category><![CDATA[Trincomalee Infant Death]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204522</guid>

					<description><![CDATA[திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இரவு குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாயார் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிசுவைப் பார்த்தபோது அது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதுவே ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இறந்த சிசுவைப் பரிசோதித்தபோது, அதன் பெற்றோர், சிசுவை &#8216;எக்கோ&#8217; பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.</p>
<p>இரவு குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாயார் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிசுவைப் பார்த்தபோது அது உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இதுவே ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.</p>
<p>இறந்த சிசுவைப் பரிசோதித்தபோது, அதன் பெற்றோர், சிசுவை &#8216;எக்கோ&#8217; பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் முன்னர் தமக்குக் கூறியிருந்தாகக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய முற்பட்டபோது அதனை மீட்ட சீனக்குடா காவல்துறையினர், சிசுவின் உடலைத் திருகோணமலைப் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர். சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகச் சீனக்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
