<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>pm narendra modi &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/pm-narendra-modi/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 22 Dec 2025 06:48:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>pm narendra modi &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் &#8216;பேருதவித் திட்டம்&#8217;: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!</title>
		<link>https://tamilnaadi.com/news/indian-foreign-minister-jaishankar-to-arrive-in-colombo-tomorrow-expected-to-announce-major-disaster-recovery-aid-for-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Dec 2025 16:49:27 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Colombo Meeting]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Indian Disaster Relief]]></category>
		<category><![CDATA[ITAK]]></category>
		<category><![CDATA[pm narendra modi]]></category>
		<category><![CDATA[Post-Disaster Recovery]]></category>
		<category><![CDATA[S. Jaishankar Sri Lanka Visit]]></category>
		<category><![CDATA[Tamil National Alliance]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207886</guid>

					<description><![CDATA[புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித் திட்டம் ஒன்றை இந்தியா அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விஜயமாக கொழும்பு வரவுள்ளார். அனர்த்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் வழங்கப்படவுள்ள பிரம்மாண்ட உதவித் திட்டத்தை அவர் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித் திட்டம் ஒன்றை இந்தியா அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை (திங்கட்கிழமை) ஒருநாள் விஜயமாக கொழும்பு வரவுள்ளார்.</p>
<p>அனர்த்தத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக இந்தியா சார்பில் வழங்கப்படவுள்ள பிரம்மாண்ட உதவித் திட்டத்தை அவர் கொழும்பில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>தனது விஜயத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளை அவர் கூட்டாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.</p>
<p>இலங்கை அனர்த்தத்தில் சிக்கிய உடனேயே இந்தியா தனது நிவாரண உதவிகளையும் மீட்புக் குழுக்களையும் அனுப்பி வைத்திருந்தது. தற்போது வரை இந்தியாவின் மீட்பு நடவடிக்கைகள் இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய பேருதவித் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் எனக் கருதப்படுகிறது.</p>
<p>அமைச்சர் ஜெய்சங்கர் வேறு எந்தெந்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பார் என்பது குறித்த விபரங்கள் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை இந்தியத் தூதரகம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!</title>
		<link>https://tamilnaadi.com/news/pm-modi-expresses-deep-condolences-to-sri-lanka-over-ditwa-cyclone-tragedy-announces-immediate-aid/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Nov 2025 04:26:48 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Cyclone DITWA]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Humanitarian Aid]]></category>
		<category><![CDATA[India Support.]]></category>
		<category><![CDATA[Neighbourhood First]]></category>
		<category><![CDATA[pm narendra modi]]></category>
		<category><![CDATA[Sagar Bandhu Operation]]></category>
		<category><![CDATA[Sri Lanka Disaster]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206023</guid>

					<description><![CDATA[தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் &#8220;திட்வா&#8221; (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது &#8216;எக்ஸ்&#8217; (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக &#8220;சாகர் பந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் &#8220;திட்வா&#8221; (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கையர்களுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து தனது &#8216;எக்ஸ்&#8217; (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான இயல்பு நிலைக்காகப் பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்தியாவின் மிக நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியா உடனடியாக &#8220;சாகர் பந்து (Sagar Bandhu)&#8221; நடவடிக்கையின் கீழ் அவசர நிவாரணப் பொருட்களையும், அத்தியாவசிய மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண ஆதரவையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>நிலைமைக்கு ஏற்ப மேலும் உதவிகளையும், ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.</p>
<p>இந்தியாவின் &#8220;அண்டை நாடுகளுக்கே முதலிடம்&#8221; (Neighbourhood First) என்ற கொள்கை மற்றும் &#8220;விஷன் மகாசாகர்&#8221; (Vision Sagar) வழிகாட்டுதலின்படி, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் இந்தியா உறுதியுடன் துணை நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் – உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிலைமை குறித்து ஆலோசனை!</title>
		<link>https://tamilnaadi.com/news/pm-modi-expresses-deep-condolences-over-deadly-car-explosion-near-red-fort-in-delhi-consults-with-home-minister-amit-shah/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 06:48:47 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Amit Shah]]></category>
		<category><![CDATA[Condolences]]></category>
		<category><![CDATA[Delhi Car Blast]]></category>
		<category><![CDATA[pm narendra modi]]></category>
		<category><![CDATA[Red Fort]]></category>
		<category><![CDATA[Security Situation.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204488</guid>

					<description><![CDATA[புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது &#8216;எக்ஸ்&#8217; (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். &#8220;டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து 8 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து தனது &#8216;எக்ஸ்&#8217; (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். &#8220;டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்.</p>
<p>பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமை குறித்து ஆலோசித்தேன்&#8221; என்று அவர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்&#8230;</title>
		<link>https://tamilnaadi.com/news/world/indians-visiting-frances-eiffel-tower-can-now-pay-in-rupees/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/indians-visiting-frances-eiffel-tower-can-now-pay-in-rupees/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Feb 2024 10:13:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Emmanuel Macron]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[pm narendra modi]]></category>
		<category><![CDATA[pm narendra modi speech]]></category>
		<category><![CDATA[Prime Minister Narendra Modi]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=118063</guid>

					<description><![CDATA[பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்&#8230; பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி குறித்து அவரிடம் விளக்கினார். இந்நிலையில், பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பிரான்ஸ் ஈபிள் கோபுரத்துக்குச் செல்லும் இந்தியர்கள் இனி ரூபாயில் பணம் செலுத்தலாம்&#8230;</h4>
<p>பிரான்சிலுள்ள <a href="https://tamilnaadi.com/news/world/2022/09/15/eiffel-tower-lights-that-turn-off-early/">ஈபிள்</a> கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், இனி UPI மூலம் இந்திய பணமான ரூபாயிலேயே கட்டணம் செலுத்தலாம்.</p>
<p>பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி குறித்து அவரிடம் விளக்கினார்.</p>
<p>இந்நிலையில், பிரான்சிலுள்ள ஈபிள் கோபுரத்தைக் காணச் செல்லும் இந்திய சுற்றுலாப்பயணிகள், UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஈபிள் கோபுரத்தைக் காண்பதற்கான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>ஈபிள் கோபுரத்தைக் காண அதிக அளவில் செல்லும் வெளிநாட்டவர்களில், இந்திய சுற்றுலாப்பயணிகள் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/indians-visiting-frances-eiffel-tower-can-now-pay-in-rupees/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
