<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>plastic &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/plastic/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 23 Mar 2023 15:20:18 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>plastic &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ban-on-plastic-products/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/ban-on-plastic-products/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Mar 2023 15:20:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[banned]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=71261</guid>

					<description><![CDATA[பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிளாஸ்டிக் பயன்பாடு சர்வதேசத்திலும் இலங்கையிலும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றாடல் அமைச்சு ஐந்து ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் உற்பத்திகளையும் தடை செய்யவிருப்பதாக சுற்றாடல் அமைச்சு செயலாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, சுற்றாடலுக்குப் பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதக விளைவுகளைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றாடலில் கடுமையான தாக்கத்தை உருவாக்குகின்றன.</p>
<p>எனவே எதிர்வரும் ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கோப்பைகள், கரண்டிகள், பீங்கான்கள், மாலைகள், முட்கரண்டிகள், இடியப்பத் தட்டுகள் போன்றவை தடை செய்யப்படவுள்ளன.</p>
<p>அத்துடன் நாட்டில்  தேவைக்கதிகமான கையிருப்பு உள்ளதால் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிறு பிளாஸ்டிக் உருண்டைகளின் (Plastic Pellets) இறக்குமதியையும் கட்டுப்படுத்தவுள்ளதாகவும் இதன்மூலம் டொலரை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்</p>
<p>மேற்குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கொண்டு  தொழில் ஆரம்பிக்க இருப்போருக்கு இது உந்து சக்தியாக இருக்கும். மக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் பீங்கான், கரண்டிகள் போன்றவற்றை வீடுகளில் உபயோகிப்பதில்லை. இருந்தாலும் அவர்கள் வெளிப்புறங்களில் உதாரணமாக சுற்றுப் பயணங்கள்  மேற்கொள்ளும் போது குறித்த வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதோடு அவற்றை சூழலில் வீசுவது போன்ற செயற்பாடுபளை செய்வதன் மூலம் சுற்றுப்புறத்திற்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.</p>
<p>சந்தைக் கேள்விக்கேற்ப பிற பிளாஸ்டிக் பொருட்களையும் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிளாஸ்டிக் அற்ற மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற சுற்றாடலை உருவாக்க முயற்சிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/ban-on-plastic-products/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பெருங்கடலில் மிதக்கும் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள்- 3 மடங்காக உயர வாய்ப்பு என எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/170-lakh-crores-of-plastic-particles-floating-in-the-ocean-warning-that-there-is-a-possibility-of-3-times-increase/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/170-lakh-crores-of-plastic-particles-floating-in-the-ocean-warning-that-there-is-a-possibility-of-3-times-increase/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 19:15:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[Research]]></category>
		<category><![CDATA[sea]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=70619</guid>

					<description><![CDATA[பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள 12 ஆயிரம் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது. இதில், 2005ம் ஆண்டு முதல் உலக பெருங்கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டில் விரைவாக முன்னேறி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது. சர்வதேச விஞ்ஞானிகள் குழு 1979 மற்றும் 2019க்கு இடையில் அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள் மற்றும் மத்தியதரைக் கடலில் உள்ள 12 ஆயிரம் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்தது.</p>
<p>இதில், 2005ம் ஆண்டு முதல் உலக பெருங்கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டில் விரைவாக முன்னேறி வருவதை கண்டறிந்தனர். 1990ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை பெருங்கடலில் மிதக்கும் பிளாஸ்டிக்கின் அளவு ஏற்ற இறக்கமான அளவிலும், ஆனால் தேக்கமான நிலையிலும் இருந்துள்ளது. இது தற்போது விரைவாக அதிகரித்துள்ளது.</p>
<p>இதனால், இது தொடர்பாக விஞ்ஞானிகள் அவசர கொள்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் 2040ம் ஆண்டில் பெருங்கடலில் பிளாஸ்டிக் துகள்கள் மிதக்கும் விகிதம் சுமார் 2.6 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.</p>
<p>இதுகுறித்து 5 கையர்ஸ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநரும், அறிக்கையின் ஆசிரியருமான லிசா எர்டில் கூறுகையில், &#8221; ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய பிளாஸ்டிக்கில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்கள் கடலில் சேர்ந்ததும் அது சிதைவடையாமல், மாறாக சிறிய துண்டுகளாக உடைந்துவிடும்.</p>
<p>இந்த துகள்கள் உண்மையில் எளிதில் சுத்தம் செய்யக்கூடியதில்லை. தங்கள் ஆய்வில், கடல்களை சுத்தப்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கும் பதிலாக உற்பத்தி மற்றும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அளவைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், மறுசுழற்சி போன்றவை மாசுபாட்டின் ஓட்டத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவு &#8211; என கூறினார்.</p>
<p>#world</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/170-lakh-crores-of-plastic-particles-floating-in-the-ocean-warning-that-there-is-a-possibility-of-3-times-increase/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வடையில் இருந்த பிளாஸ்டிக் தொண்டையில் சிக்கி அவதிப்பட்ட நடிகை!</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/the-actress-who-suffered-from-getting-stuck-in-the-plastic-throat-that-was-in-the-womb/</link>
					<comments>https://tamilnaadi.com/entertainment/the-actress-who-suffered-from-getting-stuck-in-the-plastic-throat-that-was-in-the-womb/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jan 2022 13:47:43 +0000</pubDate>
				<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[Actress]]></category>
		<category><![CDATA[cinema]]></category>
		<category><![CDATA[CinemaNews]]></category>
		<category><![CDATA[Complains]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[Stuck]]></category>
		<category><![CDATA[Suffered]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=34331</guid>

					<description><![CDATA[ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகியிருந்தார். தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.</p>
<p style="text-align: justify;">சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகியிருந்தார்.</p>
<p style="text-align: justify;">தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.</p>
<p style="text-align: justify;">இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">அவரது பதிவில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி சாப்பிட்டதாகவும், வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.</p>
<p style="text-align: justify;">அத்துடன், அந்த உணவில் பிளாஸ்டிக் இருப்பதை அவதானிக்காமல் சாப்பிட்டமையால், தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும் மிகவும் சிரமப்பட்டு அதனை வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: justify;">மேலும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள் என்றும் எச்சரிக்கை தரக்கூடிய வகையிலும் பதிவிட்டுள்ளார்.</p>
<blockquote class="instagram-media" style="background: #FFF; border: 0; border-radius: 3px; box-shadow: 0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width: 540px; min-width: 326px; padding: 0; width: calc(100% - 2px);" data-instgrm-captioned="" data-instgrm-permalink="https://www.instagram.com/p/CYlYVrnrziV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" data-instgrm-version="14">
<div style="padding: 16px;">
<p>&nbsp;</p>
<div style="display: flex; flex-direction: row; align-items: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"></div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"></div>
</div>
</div>
<div style="padding: 19% 0;"></div>
<div style="display: block; height: 50px; margin: 0 auto 12px; width: 50px;"></div>
<div style="padding-top: 8px;">
<div style="color: #3897f0; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: 550; line-height: 18px;">View this post on Instagram</div>
</div>
<div style="padding: 12.5% 0;"></div>
<div style="display: flex; flex-direction: row; margin-bottom: 14px; align-items: center;">
<div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"></div>
<div style="background-color: #f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);"></div>
</div>
<div style="margin-left: 8px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"></div>
<div style="width: 0; height: 0; border-top: 2px solid transparent; border-left: 6px solid #f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg);"></div>
</div>
<div style="margin-left: auto;">
<div style="width: 0px; border-top: 8px solid #F4F4F4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"></div>
<div style="background-color: #f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"></div>
<div style="width: 0; height: 0; border-top: 8px solid #F4F4F4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"></div>
</div>
</div>
<div style="display: flex; flex-direction: column; flex-grow: 1; justify-content: center; margin-bottom: 24px;">
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"></div>
<div style="background-color: #f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;"></div>
</div>
<p>&nbsp;</p>
<p style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; line-height: 17px; margin-bottom: 0; margin-top: 8px; overflow: hidden; padding: 8px 0 7px; text-align: center; text-overflow: ellipsis; white-space: nowrap;"><a style="color: #c9c8cd; font-family: Arial,sans-serif; font-size: 14px; font-style: normal; font-weight: normal; line-height: 17px; text-decoration: none;" href="https://www.instagram.com/p/CYlYVrnrziV/?utm_source=ig_embed&amp;utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shambhavy Gurumoorthy (@shambhavy_gurumoorthy_official)</a></p>
</div>
</blockquote>
<p><script async src="//www.instagram.com/embed.js"></script></p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/entertainment/the-actress-who-suffered-from-getting-stuck-in-the-plastic-throat-that-was-in-the-womb/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பொலித்தீன் பொதிசெய்து பழங்கள், காய்கறிகள் விற்பனைசெய்யத் தடை!</title>
		<link>https://tamilnaadi.com/news/ban-on-selling-fruits-and-vegetables-wrapped-in-polythene/</link>
					<comments>https://tamilnaadi.com/news/ban-on-selling-fruits-and-vegetables-wrapped-in-polythene/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Dec 2021 17:23:38 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[banned]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[france]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=32546</guid>

					<description><![CDATA[கழிவுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (loi anti-gaspillage de 2020) சந்தைகள், கடைகளில் இனிமேல் பழங்கள்,மரக்கறிகள் என்பவற்றை பிளாஸ்ரிக் பொதிகளில் வைத்து விற்பது தடைசெய்யப்படுகிறது பிரான்ஸில் நாடு முழுவதும் இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. அப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், தோடம்பழம் ,கிளெமென்டைன், கிவி, மாண்டரின், எலுமிச்சை, திராட்சைப்பழம், புறூண் , முலாம்பழம், அன்னாசி, மாம்பழம், காக்கிப் பழம்,கொடித்தோடை போன்றவற்றையும், லீக்ஸ், சீமைச் சுரைக்காய், கத்தரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு, கரட், வட்டத்தக்காளி, வெங்காயம், கோவா, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கழிவுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (loi anti-gaspillage de 2020) சந்தைகள், கடைகளில் இனிமேல் பழங்கள்,மரக்கறிகள் என்பவற்றை பிளாஸ்ரிக் பொதிகளில் வைத்து விற்பது தடைசெய்யப்படுகிறது</p>
<p>பிரான்ஸில் நாடு முழுவதும் இச்சட்டம் ஜனவரி முதல் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.</p>
<p>அப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், தோடம்பழம் ,கிளெமென்டைன், கிவி, மாண்டரின், எலுமிச்சை, திராட்சைப்பழம், புறூண் , முலாம்பழம், அன்னாசி, மாம்பழம், காக்கிப் பழம்,கொடித்தோடை போன்றவற்றையும், லீக்ஸ், சீமைச் சுரைக்காய், கத்தரி, குடைமிளகாய், உருளைக்கிழங்கு, கரட், வட்டத்தக்காளி, வெங்காயம், கோவா, சூபிளவர், முள்ளங்கி, வேர்க் கிழங்குகள் உட்பட பலமரக்கறிகளையும் பிளாஸ்ரிக் பைகள், பெட்டிகளில் விற்பபனை செய்வது தடைசெய்யப்படுகிறது.</p>
<p>ஆயினும் இச் சட்டத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்குச் சில தளர்வுகள் இருக்கும். 1.5 கிலோக் கிராமுக்கு மேற்பட்ட நிறையுடைய பழங்களையும் மரக்கறிகளையும் தொடர்ந்தும் பிளாஸ்ரிக் பக்கெற்றுகள், பைகளில் பொதி செய்து விற்பதற்கு 2023 ஆம் ஆண்டு வரை அனுமதிக்கப்படும். அதேபோன்று பைகளில் இல்லாமல் மொத்தமாக விற்பதால் சேதமடையக்கூடிய சிவப்புப் பழங்கள் போன்றவற்றை 2026 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் பிளாஸ்ரிக்கில் பொதியிடலாம்.</p>
<p>சட்டத்தை மீறி பிளாஸ்ரிக் பக்கெற்றுகளில் பழங்கள், மரக்கறிகளை விற்பது அபராதத்துக்குரிய குற்றமாகும். நாள் ஒன்றுக்கு 1,500 ஈரோக்கள் முதல் 15, 000 ஈரோக்கள் வரை அபராதத் தொகையாகச்செலுத்த நேரிடலாம்.</p>
<p>வெளியே தெரியக் கூடியவாறு கண்ணாடி பிளாஸ்ரிக் உறைகளில் பழங்கள், காய்கறிகளை வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்தப்புதிய சட்டம் பல சிரமங்களை ஏற்படுத்துகின்ற போதிலும் பிளாஸ்ரிக் கழிவுகளை குறைப்பதில் பெரும் முன்னேற்றத்தை<br />
ஏற்படுத்தும்.</p>
<p>பிளாஸ்ரிக் பைகளுக்குப் பதிலாக கடதாசிப் பைகள், கடதாசி மட்டைப் பெட்டிகள் பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதால் அவற்றுக்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளது.</p>
<p>#World</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/ban-on-selling-fruits-and-vegetables-wrapped-in-polythene/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தடை செய்யப்பட்டது பிளாஸ்டிக் உற்பத்தி.</title>
		<link>https://tamilnaadi.com/news/prohibited-plastic-production/</link>
					<comments>https://tamilnaadi.com/news/prohibited-plastic-production/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 16:27:40 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Environment]]></category>
		<category><![CDATA[factories]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[information]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[Pollution]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=23737</guid>

					<description><![CDATA[சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக &#8220;ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது&#8221;. நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு குறித்த தடை உத்தரவை அரசு அமுலாக்கியுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான முதல் படி என அரச நிபுணர்கள் கூறியுள்ளதோடு: பிளாஸ்டிக் மாற்றுப் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், மறுசுழற்சியை மேம்படுத்தல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் முயற்சிகளில் ஒரு பகுதியாக &#8220;ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்துள்ளது&#8221;.</p>
<p>நாட்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இந்த ஆண்டு குறித்த தடை உத்தரவை அரசு அமுலாக்கியுள்ளது.</p>
<p>மேலும், இந்த நடவடிக்கை சுற்றுச்சூழல் பாதிப்பை குறைப்பதற்கான முதல் படி என அரச நிபுணர்கள் கூறியுள்ளதோடு: பிளாஸ்டிக் மாற்றுப் பயன்பாட்டை கட்டுப்படுத்தல், மறுசுழற்சியை மேம்படுத்தல் மற்றும், சிறந்த கழிவுப் பிரிப்பு மேலாண்மை ஆகியவற்றைக் கொண்ட கொள்கைகள் போன்ற முக்கியமான கட்டமைப்பு சிக்கல்களும் கருத்திற்கொள்ளப்படும் என சுட்டிக்காடியுள்ளனர்.</p>
<p>அத்தோடு, இவ் அமுலாக்கம் இருப்பதை அனைத்து தொழிற்துறை பங்குதாரர்களும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டதோடு, தங்கள் அமைப்புக்களையும் வலுப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.</p>
<p>விசேடமாக, குறித்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நபர்கள் மற்றும், தொழிற்சாலைகள் பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு தகுந்த சன்மானம்மும் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் வலியுருத்தியுள்ளது.</p>
<p>#IndianNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/prohibited-plastic-production/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ஏழு வகை பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை- மஹிந்த அமரவீர!!</title>
		<link>https://tamilnaadi.com/news/ban-on-plastic-materials/</link>
					<comments>https://tamilnaadi.com/news/ban-on-plastic-materials/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Sep 2021 12:57:19 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[mahinda amaraveera]]></category>
		<category><![CDATA[plastic]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[தடை]]></category>
		<category><![CDATA[பிளாஸ்டிக்]]></category>
		<category><![CDATA[மகிந்த அமரவீர]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=7918</guid>

					<description><![CDATA[நாட்டில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தும் மேலும் ஏழு பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.</p>
<p>சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஒரு தடவை மட்டும் பயன்படுத்திய பின்னர் அப்புறப்படுத்தும் மேலும் ஏழு பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கு கடந்த வாரம் கூடிய அமைச்சரவை, அனுமதி வழங்கியுள்ளது.</p>
<p>இந்த நிலையில் பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/ban-on-plastic-materials/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
