<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Penalty &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/penalty/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 16:01:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Penalty &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>2022ல் முதல் மரண தண்டனை யாருக்கு நிறைவேற்றப்பட்டது தெரியுமா?</title>
		<link>https://tamilnaadi.com/news/do-you-know-who-executed-the-first-death-sentence-in-2022/</link>
					<comments>https://tamilnaadi.com/news/do-you-know-who-executed-the-first-death-sentence-in-2022/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 29 Jan 2022 05:12:49 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[confirmed]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Donald]]></category>
		<category><![CDATA[employee]]></category>
		<category><![CDATA[employees]]></category>
		<category><![CDATA[execution]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Grant]]></category>
		<category><![CDATA[Oklahoma]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[postponed]]></category>
		<category><![CDATA[robbing]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[United States]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37289</guid>

					<description><![CDATA[2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார் .விசாரணையின்போது ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>2022ஆம் ஆண்டு முதலாவது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவருக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 2006 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் ஹோட்டல் ஒன்றில் புகுந்து இரண்டு ஊழியர்களைக் கொலை செய்து கொள்ளையடித்த குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.</p>
<p>ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததுடன் மற்றொருவரை கத்தியால் குத்திக் கொலை செய்திருந்தார் .விசாரணையின்போது ஜெயிலில் இருந்து அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றம் கடந்த 2005ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.</p>
<p>மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது.</p>
<p>அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததால் இரண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது.</p>
<p>பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம்செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஓக்லஹோமா மாகாணமும் ஒன்று கடந்த 2015ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்கப்பட்டது.</p>
<p>அந்தத் தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு 3 விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்காவில் இருபத்தி மூன்று மாநிலங்களில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/do-you-know-who-executed-the-first-death-sentence-in-2022/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மருத்துவக் கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/70-thousand-fine-for-manager-of-burning-medical-waste/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/70-thousand-fine-for-manager-of-burning-medical-waste/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[jeya]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Jan 2022 10:57:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Burning]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[imprisonment]]></category>
		<category><![CDATA[investigation]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[MedicalWaste]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Waste]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=33021</guid>

					<description><![CDATA[யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது. தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை என மன்று தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை , யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி , எரியூட்டிய நிலையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p style="text-align: justify;">யாழ்.பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள காணிகளில் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை கொட்டி எரியூட்டிய வைத்திய சாலை உரிமையாளருக்கு 7 குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக யாழ். நீதிமன்று 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனை என மன்று தீர்ப்பளித்துள்ளது.</p>
<p style="text-align: justify;">திருநெல்வேலி, பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று, மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை , யாழ்.பல்கலை கழகத்திற்கு அருகில் அமைந்துள்ள தமக்கு சொந்தமான காணியில் கொட்டி , எரியூட்டிய நிலையில் அயலவர்களால் , மாநகர சபை உறுப்பினர்களுக்கு, அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு மாநகர சபை உறுப்பினர்கள் , சுகாதார பிரிவினர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.</p>
<p style="text-align: justify;">குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை உரிமையாளருக்கு எதிராக, யாழ்.மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p style="text-align: justify;">அந்நிலையில், இன்றையதினம் திங்கட்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ,</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-33022" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/Waste01-1-300x135.jpg" alt="Waste01 1" width="1113" height="501" title="மருத்துவக் கழிவுகளை எரியூட்டி நிர்வாகிக்கு 70ஆயிரம் தண்டம்! 2" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/Waste01-1-300x135.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/Waste01-1-768x346.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2022/01/Waste01-1.jpg 850w" sizes="(max-width: 1113px) 100vw, 1113px" /></p>
<p style="text-align: justify;">1.பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிக்கு பாவித்த மருந்து போத்தல்களை வீசியமை</p>
<p style="text-align: justify;">2.தொற்றுநோயை பரப்பும் வகையில் நோயாளிகளினது Toilet pampers வீசியமை</p>
<p style="text-align: justify;">3.தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த ஊசிகளை வீசியமை</p>
<p style="text-align: justify;">4. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த சேலைன் போத்தல்களை வீசியமை</p>
<p style="text-align: justify;">5. தொற்று நோயை உருவாக்கும் வகையில் நோயாளிக்கு பாவித்த இரத்த பரிசோதனை குப்பிகளை வீசியமை</p>
<p style="text-align: justify;">6.சந்திர சிகிச்சைக் கையுறை மற்றும் அங்கிகளை வீசியமை</p>
<p style="text-align: justify;">7. தொற்று நோயை பரப்பும் வகையில் றெஜிபோம் மற்றும் படுக்கை மெத்தைகளை வீசியமை</p>
<p style="text-align: justify;">ஆகிய 7 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.</p>
<p style="text-align: justify;">அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வைத்தியசாலை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதனை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , ஒவ்வொரு குற்றத்திற்கு தலா 10ஆயிரம் ரூபாய் வீதம் 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தை விதித்தது.</p>
<p style="text-align: justify;">தண்டப்பணத்தை கட்டத்தவறின் ஒரு மாதகால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/70-thousand-fine-for-manager-of-burning-medical-waste/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாட்டுக்குள் நுழைந்தால் அபராதம் &#8211; விதித்தது அரசு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/penalty-for-entering-the-country-imposed-by-the-government/</link>
					<comments>https://tamilnaadi.com/news/penalty-for-entering-the-country-imposed-by-the-government/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Dec 2021 11:18:59 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[country]]></category>
		<category><![CDATA[entering]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ghana Airport]]></category>
		<category><![CDATA[Ghanaian government]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[imposed]]></category>
		<category><![CDATA[Kotoka International Airport]]></category>
		<category><![CDATA[measures]]></category>
		<category><![CDATA[Passengers]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[vaccinated]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=29178</guid>

					<description><![CDATA[தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது. புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின் கீழ், அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் ஏறும் முன் சுகாதார அறிவிப்பு படிவத்தை நிரப்பாத பயணிகளுக்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு சொந்தமான கானா விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் அபராதத்தை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது.</p>
<p>புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின் கீழ்,</p>
<p>அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் ஏறும் முன் சுகாதார அறிவிப்பு படிவத்தை நிரப்பாத பயணிகளுக்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு சொந்தமான கானா விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் அபராதத்தை செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் கானா நாட்டினர், மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.</p>
<p>எனினும் வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்படலாம் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/penalty-for-entering-the-country-imposed-by-the-government/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழில் விதிகளை மீறியவர்களுக்கு  தண்டப்பணம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/penalties-for-violating-road-rules-in-jaffna/</link>
					<comments>https://tamilnaadi.com/news/penalties-for-violating-road-rules-in-jaffna/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Sep 2021 09:12:52 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[court]]></category>
		<category><![CDATA[drinking drive]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[mallakam]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[vehicle license]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=13529</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் கைதாகிய மூவரும் நேற்று (30) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் கைதாகியவருக்கு 50,000 ரூபா தண்டப்பணமும் ,சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணமும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.</p>
<p>இந்நிலையில் கைதாகிய மூவரும் நேற்று (30) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.</p>
<p>இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் கைதாகியவருக்கு 50,000 ரூபா தண்டப்பணமும் ,சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் செலுத்திய இருவருக்கு தலா 25,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/penalties-for-violating-road-rules-in-jaffna/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்! </title>
		<link>https://tamilnaadi.com/news/local/a-fine-of-150000-rupees-was-imposed-on-the-person-arrested-with-the-coda/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/a-fine-of-150000-rupees-was-imposed-on-the-person-arrested-with-the-coda/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Sep 2021 18:40:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[courtorder]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[illegal]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[mallaakam]]></category>
		<category><![CDATA[mannaar]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[suzhipuram]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=9297</guid>

					<description><![CDATA[கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்! கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் 196 லீட்டர் கோடாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 10 ஆம் திகதி தொல்புரம் &#8211; [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கோடாவுடன் கைதானவருக்கு 150,000 ரூபா அபராதம்!</h4>
<p>கசிப்பு வடிக்கும் கோடாவுடன் கைதான இருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">மல்லாகம்</a> நீதிமன்றத்தால் இவ் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்த இருவர் 196 லீட்டர் கோடாவுடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.</p>
<p>இந்நிலையில் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது அவர்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்தோடு கடந்த 10 ஆம் திகதி தொல்புரம் &#8211; வீராவத்தை பகுதியில் 10 லீட்டர் கோடா மற்றும் ஒரு லீட்டர் கசிப்புடன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபரொருவர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/a-fine-of-150000-rupees-was-imposed-on-the-person-arrested-with-the-coda/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/coroner-jailed-for-8-years/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/coroner-jailed-for-8-years/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Sep 2021 18:07:41 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[covid]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Penalty]]></category>
		<category><![CDATA[Spreading]]></category>
		<category><![CDATA[Vietnam]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=8123</guid>

					<description><![CDATA[கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை! உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வியட்நாமில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, சிறந்த முறையில் செயற்பட்டு கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தது, ஆனால் தற்போது வியட்நாமில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரங்களாக இருந்த கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொரோனாத் தொற்றை பரப்பியவருக்கு 5 ஆண்டுகள் சிறை!</h4>
<p>உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்று பரவலடைந்து வருகிறது, இந்த நிலையில் தென் கிழக்காசிய நாடான வியட்நாம் கொவிட் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த வருடம் வியட்நாமில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது, சிறந்த முறையில் செயற்பட்டு கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தியிருந்தது, ஆனால் தற்போது வியட்நாமில் மீண்டும் கொரோனாத் தொற்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.</p>
<p>கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் ஆயிரங்களாக இருந்த கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து காமவ் நகருக்கு திரும்பிய லீ வான் ட்ரி என்பவர் தன்னை 21 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தாது சுற்றித் திரிந்துள்ளார். குறித்த நபர் மூலமாக 8 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியது எனவும், தொடர்ந்து தொற்றாளர்கள் தொகை சடுதியாக அதிகரித்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது,</p>
<p>இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்துக்காக இவருக்கு 5 ஆண்டுகள்<br />
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/coroner-jailed-for-8-years/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
