<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>parliamentarian &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/parliamentarian/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 22 Feb 2022 06:14:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>parliamentarian &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சி!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 06:12:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cent]]></category>
		<category><![CDATA[crimes]]></category>
		<category><![CDATA[former]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[leader]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[media]]></category>
		<category><![CDATA[ministers]]></category>
		<category><![CDATA[National]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[party]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[sivajilingam]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[statement]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[war]]></category>
		<category><![CDATA[witnesses]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=39740</guid>

					<description><![CDATA[இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது என்பதற்கு அரசாங்க அமைச்சர்களே சாட்சியென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.</p>
<p>யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள்.</p>
<p>இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.</p>
<p>அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.</p>
<p>2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரணதண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.</p>
<p>பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல.</p>
<p>அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும்.</p>
<p>இறுதியுத்தத்தின்போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள்.</p>
<p>ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள்.</p>
<p>சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா,பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.</p>
<p>படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக்கூறியுள்ளார்.</p>
<p>அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது.</p>
<p>அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள்.எங்கு புதைத்தோம் யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை.</p>
<p>இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள்.ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்பது மரபு.</p>
<p>பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது.</p>
<p>பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள்.</p>
<p>ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.</p>
<p>உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை.</p>
<p>இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை.</p>
<p>அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.</p>
<p>பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும்.</p>
<p>அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை.</p>
<p>பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும்.</p>
<p>பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் &#8211; என்றார்.</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/government-ministers-are-witnesses-to-war-crimes/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கூட்டமைப்பு கோருவது ஒருநாட்டையே!! &#8211; சாணக்கியன்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/politics-local/the-federation-is-demanding-only-one-country-chanakyan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/politics-local/the-federation-is-demanding-only-one-country-chanakyan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Feb 2022 09:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[. Batticaloa District]]></category>
		<category><![CDATA[Anti-Terrorism]]></category>
		<category><![CDATA[Chanakyan]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[legitimacy]]></category>
		<category><![CDATA[Minister of Justice]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[Tamil people]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[united country]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38616</guid>

					<description><![CDATA[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகளையே கோருகின்றது &#8211; என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு, &#8221; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான விடயங்களையே கோரிவருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனி நாடு கோரவில்லை. ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கான உரிமைகளையே கோருகின்றது &#8211; என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயமான விடயங்களையே கோரிவருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.</p>
<p>தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட மேலும் பல விடயங்களே எமக்கு தேவை. மாறாக நாட்டை பிளவுபடுத்தி தருமாறு கேட்கவில்லை.</p>
<p>நீதி அமைச்சர் வடக்கு மாகாணம் வருவதால் பிரச்சினை தீரப்போவதில்லை. சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமானால் காத்திரமான நடவடிக்கைகள் அவசியம்.</p>
<p>அதனை எவ்வாறு செய்வது என்பது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துங்கள். அதனை விடுத்து அழுத்தங்களை சமாளிப்பதற்கான நாடகங்கள் வேண்டாம்.&#8221; &#8211; என்றார்.<br />
#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/politics-local/the-federation-is-demanding-only-one-country-chanakyan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>ரஞ்சனிற்கும் விடுதலை &#8211; மகிழ்ச்சியில் ரஞ்சன் இட்ட பதிவு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ranjan-released-too-ranjans-post-on-happiness/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/ranjan-released-too-ranjans-post-on-happiness/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 16:03:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[former]]></category>
		<category><![CDATA[Government]]></category>
		<category><![CDATA[Independence Day]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[MP]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[President]]></category>
		<category><![CDATA[presidential pardon]]></category>
		<category><![CDATA[Ranjan Ramanayake]]></category>
		<category><![CDATA[social media]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[SriLankaNews]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[welikada]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=38092</guid>

					<description><![CDATA[முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலிக்கடையிலிருந்து வெளியில் வந்ததும், தனது அன்புக்குரியவர்களை பார்க்க விரும்புவதாக அவரது சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டுள்ளார். எதிர்வரும் 4ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு அவர் வரவேற்கப்படுவார் எனவும் அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். #SrilankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>வெலிக்கடையிலிருந்து வெளியில் வந்ததும், தனது அன்புக்குரியவர்களை பார்க்க விரும்புவதாக அவரது சமூக வலைதள கணக்கில் பதிவிடப்பட்டுள்ளார்.</p>
<p>எதிர்வரும் 4ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு அவர் வரவேற்கப்படுவார் எனவும் அக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு பல தரப்பினரும் ஜனாதிபதியிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/ranjan-released-too-ranjans-post-on-happiness/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் வரை நான் ஓயமாட்டேன்!! &#8211; மனோ!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/i-will-not-rest-until-the-ban-on-terrorism-is-lifted-mano/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/i-will-not-rest-until-the-ban-on-terrorism-is-lifted-mano/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jan 2022 05:49:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anti-Terrorism]]></category>
		<category><![CDATA[Colombo district]]></category>
		<category><![CDATA[External Affairs Minister]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[G.L. Peiris]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[law]]></category>
		<category><![CDATA[leader of the Tamil Progressive Alliance]]></category>
		<category><![CDATA[Mano Ganesan]]></category>
		<category><![CDATA[Minister of Foreign Affairs]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[Prevention of Terrorism]]></category>
		<category><![CDATA[Prevention of Terrorism Act]]></category>
		<category><![CDATA[Sri Lankan foreign ambassadors]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[United Nations]]></category>
		<category><![CDATA[United States]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=37137</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.&#8221; &#8211; என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு, &#8221; என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதுவரை எமது குரலை நாம் நிறுத்திவிடக்கூடாது.&#8221; &#8211; என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.</p>
<p>வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இலங்கை வெளிநாட்டு தூதர்களை அழைத்து, பயங்கரவாத தடை சட்ட திருத்தங்கள் பற்றி அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,</p>
<p>&#8221; என்னை பொறுத்தவரையில், திருத்தம் அல்ல, இச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். அதற்கான காலம் இன்று கணிந்து விட்டது என நினைக்கிறேன். அவசர நிலைமைகளுக்கு சாதாரண சட்டங்களே போதும்.</p>
<p>அதி அவசரம் ஏற்படுமானால், சடுதியாக இந்த சட்டத்தை மீள உடன் கொண்டும் வரலாம். ஒரே நாளில் அரசியலமைப்பு திருத்தங்களையே கொண்டு வந்தவர்களுக்கு இது பெரிதல்ல.</p>
<p>ஆனால், இன்று சட்ட புத்தகங்களில் இருந்து இச்சட்டம் முழுமையாக அகற்றப்படுவது அவசியம். ஏனெனில் போர் முடிந்த பத்து ஆண்டுகள் ஆன பிறகும் அமுலில் இருக்கும் இச்சட்டம் ஏற்கனவே கணிசமான துன்புறுத்தல்களை தந்து கொண்டுதான் இருக்கிறது.</p>
<p>குறிப்பாக தமிழ் பேசும் மக்களை நோக்கி இது பாய்கிறது.ஆனால், இதில் நடப்பு ராஜபக்ச அரசை மட்டும் குறை கூற முடியாது. இந்த அரசு மட்டுமல்ல, எந்த இலங்கை அரசும் முழுமையாக இச்சட்டத்தை நீக்க முன்வரவில்லை.</p>
<p>இந்த சட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படும் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் சிலரே இச்சட்டம் முழுமையாக நீக்க கூடாது என கொடி பிடிக்கிறார்கள்.</p>
<p>எனினும், அரசுக்கு அரசு இச்சட்டம் அமுல் செய்வதில் வேறுபாடு உண்டு. எமது நல்லாட்சியில் அது அப்பட்டமாக தெரிந்தது.</p>
<p>எமது ஆட்சியின் போது இந்த சட்டம் கவனமாகத்தான் பயன்படுத்தபட்டது. எமது அரசு காலத்தில், இது தொடர்பான பல்வேறு கலந்துரையாடல்களில் நான், தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக கலந்துக்கொண்டுள்ளேன்.</p>
<p>1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மீள திருத்தப்படுகிறது என்ற வெளிவிவகார அமைச்சரால், ஜனவரி 21ம் திகதி வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி பிரகடனம், எமக்கு ஒரு அடிப்படை உண்மையை மீளவும் எடுத்து உரைக்கிறது.</p>
<p>ஐநாவோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ, இந்தியாவோ, ஏதாவது வெளி சக்திகள் சொன்னால்தான் இந்த அரசு கொஞ்சமாவது நகருகிறது.</p>
<p>இதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம்.</p>
<p>“உள்நாட்டில் எம்முடன் பேசுங்கள். இந்தியா, அமெரிக்கா, ஐநா என சக்திகளுடன் பேசாதீர்கள்&#8221; என எமக்கு வகுப்பு எடுத்து அறிவுரை கூறுபவர்களுக்கும், இலங்கை அரசியலை இன்னமும் சரியாக புரிந்துகொள்ளாத அரசியல் குழந்தைகளுக்கும் இது சமர்பணம்.என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>#SrilankaNews</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/i-will-not-rest-until-the-ban-on-terrorism-is-lifted-mano/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>எதிர்கட்சியின் போலி பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் &#8211; ரஞ்சித் பண்டார</title>
		<link>https://tamilnaadi.com/news/do-not-believe-the-fake-propaganda-of-the-opposition-ranjith-bandara/</link>
					<comments>https://tamilnaadi.com/news/do-not-believe-the-fake-propaganda-of-the-opposition-ranjith-bandara/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Dec 2021 05:41:44 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Corona]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[fake propaganda]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Opposition party]]></category>
		<category><![CDATA[parliamentarian]]></category>
		<category><![CDATA[Production]]></category>
		<category><![CDATA[Ranjith Bandara]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=29506</guid>

					<description><![CDATA[ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கட்சியினர் 2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனை ஒரு சவாலாகக் கொண்டு நாட்டில் உற்பத்திகளை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடாத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். &#160; #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆட்சியை பிடிப்பதற்காக எதிர்கட்சியினர் 2022 இல் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் என போலி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.</p>
<p>உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றால் உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>அதனை ஒரு சவாலாகக் கொண்டு நாட்டில் உற்பத்திகளை மேற்கொண்டு வருவதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.</p>
<p>எதிர்கட்சிகள் மக்களை தவறாக வழிநடாத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.</p>
<p>&nbsp;</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/do-not-believe-the-fake-propaganda-of-the-opposition-ranjith-bandara/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
