<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Palaly Airport Expansion &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/palaly-airport-expansion/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 30 Jan 2026 18:25:07 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Palaly Airport Expansion &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் விரைவில் முழுவீச்சில்: புதிய விமான சேவைகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தகவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 18:25:07 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport Upgrade 2026]]></category>
		<category><![CDATA[Minister Ramalingam Chandrasekar]]></category>
		<category><![CDATA[Northern Province Development]]></category>
		<category><![CDATA[Palaly Airport Expansion]]></category>
		<category><![CDATA[Sri Lanka Aviation News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=211578</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தைப் பூரணமான முறையில் செயற்படுத்துவதற்கும், புதிய விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து அமைச்சர் வழங்கிய தகவல்கள் பொதுமக்கள் காத்திருப்புப் பகுதியின் (Passenger Waiting Area) புனரமைப்பு வேலைகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன. கடந்த அரசாங்க காலத்தில் இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும், அது ஒரு முழுமையான சர்வதேச விமான நிலையமாகச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தைப் பூரணமான முறையில் செயற்படுத்துவதற்கும், புதிய விமான சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.</p>
<p>விமான நிலையத்தின் தற்போதைய நிலைவரம் குறித்து அமைச்சர் வழங்கிய தகவல்கள் பொதுமக்கள் காத்திருப்புப் பகுதியின் (Passenger Waiting Area) புனரமைப்பு வேலைகள் தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளன.</p>
<p>கடந்த அரசாங்க காலத்தில் இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும், அது ஒரு முழுமையான சர்வதேச விமான நிலையமாகச் செயற்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அதனை முழுவீச்சில் செயற்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.</p>
<p>விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாகப் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவை நிறுவனங்களுடன் புதிய வழித்தடங்கள் குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.</p>
<p>நாட்டின், குறிப்பாக வட மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த விமான நிலையம் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.</p>
<p>எந்தவிதத் தடைகளுமின்றி நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் திட்டமிட்டபடி முன்னெடுத்து வருவதாகவும், யாழ்ப்பாண விமான நிலையத்தின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகள் எதிர்காலத்தில் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/gajendrakumar-ponnambalam-urges-jaishankar-to-expand-palaly-airport-runway-for-larger-aircraft/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 06:45:13 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[India-Sri Lanka Aviation.]]></category>
		<category><![CDATA[Jaffna Development]]></category>
		<category><![CDATA[Palaly Airport Expansion]]></category>
		<category><![CDATA[S. Jaishankar Sri Lanka Visit]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208183</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் முன்வைக்கப்பட்டது. பலாலியில் தற்போது முதற்கட்ட அபிவிருத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஓடுதளத்தை முழுமையாக விரிவாக்கினால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் முன்வைக்கப்பட்டது.</p>
<p>பலாலியில் தற்போது முதற்கட்ட அபிவிருத்தி மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஓடுதளத்தை முழுமையாக விரிவாக்கினால் மட்டுமே Airbus A320 மற்றும் A321 போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் என கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.</p>
<p>இத்தகைய விரிவாக்கம் வட மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் விவரித்தார்.</p>
<p>இந்தக் கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பலாலி விமான நிலைய ஓடுதள விரிவாக்கம் குறித்து இந்தியா இன்னும் ஆழமாகப் பரிசீலித்து, உரிய தீர்மானங்களை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
