<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>nterrogated &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/nterrogated/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 17 Dec 2021 12:32:21 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>nterrogated &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாவீரன் “கர்ணன்” : முல்லை பொலிசாருக்கு இனத்துவேசத்தை தூண்டுகிறதாம்!!</title>
		<link>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/</link>
					<comments>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[அனந்தன்]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 08:52:08 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Anandapuram]]></category>
		<category><![CDATA[Dharmarasa Bindusan (]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Hero "Karnan"]]></category>
		<category><![CDATA[Human Rights Commission Jaffna]]></category>
		<category><![CDATA[language]]></category>
		<category><![CDATA[Mullai police]]></category>
		<category><![CDATA[mullaitivu]]></category>
		<category><![CDATA[Mullaitivu Police]]></category>
		<category><![CDATA[nterrogated]]></category>
		<category><![CDATA[photographs]]></category>
		<category><![CDATA[Pudukudiyiruppu]]></category>
		<category><![CDATA[racism]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Three Wheeler]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=28438</guid>

					<description><![CDATA[மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த  இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் , எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்திருந்தார். இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார்  வீதியில் இடைமறித்து அதற்கு பின்பக்கத்தில் இருந்த &#8216;மாவீரன் கர்ணன்&#8217; என்ற ஸ்டிக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்தனர். பின்பு அந்த ஸ்டிக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாவீரன் கர்ணன் என்ற வாசகம் காட்சிப்படுத்தியதற்காக முல்லைத்தீவை சேர்ந்த  இரண்டு சகோதரர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளரான இளைஞர் கருத்து தெரிவிக்கையில் ,</p>
<p>எனது முச்சக்கரவண்டியை என்னுடைய தம்பி நேற்று முல்லைத்தீவு நகரத்துக்கு கொண்டுவந்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் முல்லைத்தீவு பொலிஸார்  வீதியில் இடைமறித்து அதற்கு பின்பக்கத்தில் இருந்த &#8216;மாவீரன் கர்ணன்&#8217; என்ற ஸ்டிக்கர் தொடர்பில் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>பின்பு அந்த ஸ்டிக்கரை சித்தரித்து அவரை கைது செய்யும் முயற்சியோடு அவரது சாரதி அனுமதி பத்திரத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறும் கூறி சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கி எடுத்துவிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறும் கூறி விட்டு சென்றுள்ளனர்.</p>
<p>மகாபாரதத்தில் வரும் பாத்திரமான கர்ணன் எமது சமயத்தின் வரலாற்று கதையை கூறும் வகையிலேயே அந்த பாத்திரத்தின்மீது நான்கொண்டுள்ள பற்றின் காரணமாக நான் அந்த பெயரை வடிவமைத்து எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியிருந்தேன்.</p>
<p>ஆனால் அந்த மாவீரன் என்ற வாசகத்துக்காகவே என்னை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு என்னை அழைத்திருந்தனர்.</p>
<p>இதனையடுத்து எனது தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு ஏற்படுத்திய பொலிஸார் ,உங்களது முச்சக்கரவண்டியை ஓட்டிவந்தவரது சாரதி அனுமதி பத்திரம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உள்ளது.</p>
<p>எனவே விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வாகன உரிமையாளரான நீங்கள் வரவேண்டும் என பொலிஸார் அழைத்தனர்.</p>
<p>நான் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில் &#8221;மாவீரன் கர்ணன்&#8221; என எழுதிய வாசகம் இன துவேசத்தை ஏற்படுத்தும் விடயம் என இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் கண்காணித்தே உங்களது முச்சக்கரவண்டியை பிடித்துள்ளோம் என கூறி வாக்குமூலம் பெற முயற்சித்தனர்.</p>
<p>இதேவேளையில் எனது தம்பியையும் பொலிஸ் நிலையத்துக்கு வர கூறுமாறு அழைத்து அவரிடமும் இவ்வாறு நடந்து கொண்டிருந்தனர்.</p>
<p>இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருக்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் உடனடியாக எமது குடும்பத்தினரால் தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து திடீரென வாக்குமூலம் பெறுவதை நிறுத்தினர்.</p>
<p>இதனையடுத்து  பொலிஸார் எனது தம்பியை போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , சந்தேகத்துக்கிடமாக நடந்து கொண்டமை ஆகிய குற்றசாட்டுகளை சுமத்தி நேற்று நண்பகல் கைது செய்து பொலிஸ் நிலைய சிறையில் அடைத்தனர்.</p>
<p>ஆனால் எனது சகோதரன் பொலிஸார் சாரதி அனுமதி பத்திரத்தை கேட்கும்போது  கொடுத்துவிட்டு ஏற்றிவந்தவர்களை உரிய இடத்தில இறக்கிவிட்டு மீண்டும் பொலிஸார் கூறியபடி பொலிஸ் நிலையத்துக்கு செல்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார் .</p>
<p>அவரை கைது செய்தமைக்கான காரணத்துக்கான பற்றுசீட்டை கேட்டபோது கைதுக்கான பற்றுசீட்டை வழங்கமுடியாது என பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>நான் தொடர்சியாக கைதுக்கான பற்றுசீட்டு எமக்கு வழங்கவேண்டும் என கேட்டு பொலிஸாரோடு வாதிட்ட பின்னரே சிங்கள மொழியில் எழுதிய பற்றுசீட்டை வழங்கினர்.</p>
<p>நான் எனது சொந்த மொழியில் வழங்குமாறு கோரியபோதும் அவர்கள் அவ்வாறு தரமுடியாது என கூறியிருந்தனர்.</p>
<p>இந்த நிலையில் எனது சகோதரனை இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்துவதாக கூறியிருந்தனர்.</p>
<p>பின்னர் இன்றையதினம் காலை 11 மணிக்கு சிங்களமொழியில் எழுதிய தற்காலிக பொலிஸ் துண்டை வழங்கி பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.</p>
<p>அத்துடன் எனது முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் ஒட்டபட்டிருந்த மாவீரன் கர்ணன் என்ற வாசகத்தையும் அகற்றுமாறு கூறினர். அவ்வாறு அகற்ற முடியாது என நான் கூறினேன்.</p>
<p>அவ்வாறு நான் அகற்றவேண்டுமாக இருந்தால் என்ன காரணத்துக்காக என குறிப்பிட்டு நீதிமன்றில் முற்படுத்துங்கள் என கூறி அகற்ற மறுத்த நிலையில் எனது முச்சக்கரவண்டியையும் விடுவித்தனர்.</p>
<p>மாவீரன் என்ற வாசகம் எனது மொழியில் உள்ள ஒரு சொல் அந்த சொல்லை எழுவதற்கு கூட எமக்கு சுதந்திரம் இல்லையா என்ற கேள்வியை பொலிஸாரின் இந்த செயற்பாடு கேட்க வைக்கின்றது.</p>
<p>கடந்த ஒருவருடங்களுக்கும் மேலாக நான் இந்த வாசகத்தை எனது முச்சக்கரவண்டியில் ஒட்டியுள்ளேன்.</p>
<p>ஆனால் இந்த மாதத்தில் இவ்வாறு நடந்துகொண்டமை எனக்கும் எனது சகோதரனுக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.</p>
<p>#SrilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/hero-karnan-mullai-police-incite-racism/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
