<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>NPP &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/npp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 13 Dec 2025 11:25:29 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>NPP &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்; வறுமை ஒழிப்புக்குத் &#8216;தன்னிறைவுப் பிரஜா சக்தி&#8217; திட்டம்&#8221; &#8211; க. பிரபு எம்.பி.!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/one-in-six-sri-lankans-is-impoverished-praja-shakthi-programme-launched-to-eradicate-poverty-mp-k-prabhu/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Dec 2025 11:25:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batticaloa]]></category>
		<category><![CDATA[K. Prabhu]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[Poverty Eradication]]></category>
		<category><![CDATA[Praja Shakthi Program]]></category>
		<category><![CDATA[President Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Rural Development]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207079</guid>

					<description><![CDATA[இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற &#8216;பிரஜா சக்தி&#8217; தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.</p>
<p>மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற &#8216;பிரஜா சக்தி&#8217; தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதால் தோல்வியடைந்த திட்டங்களாகவே அமைந்தன.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மட்ட அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில் &#8216;பிரஜா சக்தி&#8217; வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து, சுபீட்சமான நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.</p>
<p>மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக:</p>
<p>மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.</p>
<p>மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், &#8220;கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைத் தன்னிறைவாகக் காண முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது.&#8221; என்றும், &#8220;தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாகப் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்&#8221; எனவும் கேட்டுக்கொண்டார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செம்மணி நினைவுத்தூபி மீண்டும் சேதம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முறைப்பாடு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/semmani-memorial-pillar-vandalized-again-npp-member-files-police-complaint-demanding-arrest-of-perpetrators/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 13:46:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Anamika Vilakku Protest]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Human Rights Memorial.]]></category>
		<category><![CDATA[jaffna police]]></category>
		<category><![CDATA[NPP]]></category>
		<category><![CDATA[S. Pratheepan]]></category>
		<category><![CDATA[Semmani Memorial]]></category>
		<category><![CDATA[Vandalism]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206636</guid>

					<description><![CDATA[செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார். செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி மீண்டும் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு கோரி யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இந்த முறைப்பாட்டை ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாநகர சபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் செய்துள்ளார்.</p>
<p>செம்மணிப் படுகொலைக்கு நீதி கோரி கடந்த ஜூன் மாதம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நினைவாகச் செம்மணியில் புதிதாக இந்த நினைவுத்தூபி அமைக்கப்பட்டிருந்தது.</p>
<p>கடந்த ஒக்டோபர் மாதம் இனந்தெரியாதோரால் இந்த நினைவுத்தூபி முதன்முதலில் இடித்தழிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உடனடியாக புதிய நினைவுத்தூபி மீளவும் நிர்மாணிக்கப்பட்டது.</p>
<p>தற்போது, மீண்டும் இனந்தெரியாதோரால் இத் தூபி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) அன்று இடித்தழிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தூபியைச் சேதமாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என அரச கட்சியினரே (NPP) யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
