<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Naitharu Lagoon &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/naitharu-lagoon/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 05 Dec 2025 14:50:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Naitharu Lagoon &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெள்ள நிவாரணப் பணிகள்: 40 குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்ததுடன், பல பகுதிகளில் கடற்படை துப்பரவு மற்றும் போக்குவரத்து உதவிகளை வழங்கியது!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-40-%e0%ae%95%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 05:32:11 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Disaster Response]]></category>
		<category><![CDATA[Flood Relief Operations]]></category>
		<category><![CDATA[Humanitarian Aid]]></category>
		<category><![CDATA[Naitharu Lagoon]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy (SLN)]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[Water Well Cleaning]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206310</guid>

					<description><![CDATA[அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, முழு நாட்டையும் உள்ளடக்கி கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ், வியாழக்கிழமை (டிச 4) பல மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, புத்தளம், அனுராதபுரம், மன்னார், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடற்படை தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது. வெள்ளம் காரணமாகப் பயன்படுத்த முடியாத 40 குடிநீர் கிணறுகளைக் கடற்படை சுத்தம் செய்துள்ளது. இதில் சிலாபம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, முழு நாட்டையும் உள்ளடக்கி கடற்படையால் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ், வியாழக்கிழமை (டிச 4) பல மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>கொழும்பு, கம்பஹா, புத்தளம், அனுராதபுரம், மன்னார், கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடற்படை தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளது.</p>
<p>வெள்ளம் காரணமாகப் பயன்படுத்த முடியாத 40 குடிநீர் கிணறுகளைக் கடற்படை சுத்தம் செய்துள்ளது. இதில் சிலாபம் மொரதொட 4 கிணறுகள், கம்பஹாஒருதொடாட்டா 10 கிணறுகள், அனுராதபுரம்,ஜெயந்திபுர , ஹொரொவ்பொத்தான, சங்கிலிகந்தராவ, காகம ஹயே எல , மஹாவிலச்சிய எகே எல, புனித அந்தோணியார் கல்லூரி .</p>
<p>கொலன்னாவ, ஒருகொடவத்தை, பூகொட, கடுவெல, பியகம, தொம்பே, சிலாபம், வென்னப்புவ, நாத்தண்டிய மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் பணியமர்த்தப்பட்ட குழுக்கள், முக்கிய வீதிகள், விகாரைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உட்படப் பல பொது இடங்களைத் துப்பரவு செய்தனர்.</p>
<p>அனுராதபுரம், மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பணியமர்த்தப்பட்ட கடற்படைக் குழுக்கள், அனுராதபுரம் வலிசிங்க கல்லூரி, ஸ்வர்ணபாலி பாலிகா வித்தியாலயம் மற்றும் மன்னார் புனித லோரன்ஸ் கல்லூரி, புனித லூசியா கல்லூரி, புனித அந்தோணியார் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளைச் சுத்தம் செய்தனர். மேலும், புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தையும் சுத்தம் செய்தனர்.</p>
<p>திருகோணமலை தெற்கில் உள்ள மூதூர் உதுருகிரி விஹாரையில் கடற்படை மருத்துவக் குழு ஒரு சுகாதார முகாமை நடத்தியது. முல்லைத்தீவு நாயாறு களபிற்கு குறுக்கே உள்ள பாலம் உடைந்ததால், கடற்படை களபிற்கு குறுக்கே பொதுமக்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளையும் (Safe ferry services) இன்று வழங்கியது.</p>
<p>இலங்கை கடற்படை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
