<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Military Control &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/military-control/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 01 Dec 2025 15:09:41 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Military Control &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வவுனியா ஈச்சங்குளத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்துக்கு அருகில் மழையில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/emotional-maaveerar-naal-commemoration-held-near-military-controlled-eachankulam-thuyilum-illam-in-vavuniya-despite-heavy-rain/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 18:32:25 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Eachankulam]]></category>
		<category><![CDATA[Heavy Rain]]></category>
		<category><![CDATA[maaveerar naal]]></category>
		<category><![CDATA[Military Control]]></category>
		<category><![CDATA[Public Commemoration.]]></category>
		<category><![CDATA[Tamil Remembrance]]></category>
		<category><![CDATA[vavuniya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205968</guid>

					<description><![CDATA[கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர். [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடும் மழைக்கு மத்தியில் வவுனியா ஈச்சங்குளம் (Eachankulam) பகுதியில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (நவம்27) மாலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.</p>
<p>ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நிலையில் உள்ளது. எனவே, இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.</p>
<p>கடுமையான மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது உறவுகளுக்கு அஞ்சலியைச் செலுத்தியிருந்தனர்.</p>
<p>மழையையும் பொருட்படுத்தாமல் திரண்ட மக்கள், உணர்வுபூர்வமான முறையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு, கிழக்கில் இராணுவ வசமுள்ள துயிலும் இல்லங்களை விடுவிக்க வேண்டும்; நினைவுகூர அரசு வழிவகுக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன்!</title>
		<link>https://tamilnaadi.com/news/release-of-north-and-east-thuyilum-illams-under-military-control-demanded-by-tna-mp-k-kodeeswaran-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 05:44:56 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Commemoration Rights.]]></category>
		<category><![CDATA[K. Kodeeswaran]]></category>
		<category><![CDATA[maaveerar day]]></category>
		<category><![CDATA[Military Control]]></category>
		<category><![CDATA[North and East]]></category>
		<category><![CDATA[TNA MP]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204827</guid>

					<description><![CDATA[வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்களை உடனடியாக விடுவித்து, அவற்றை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) நேற்று (நவம்பர் 13) பாராளுமன்ற அமர்வில் வலியுறுத்தினார். திரு. கோடீஸ்வரன் தனது உரையில் மேலும் தெரிவித்தது &#8220;கார்த்திகை மாதத்தில் வடகிழக்கிலே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளன. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்களை உடனடியாக விடுவித்து, அவற்றை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) நேற்று (நவம்பர் 13) பாராளுமன்ற அமர்வில் வலியுறுத்தினார்.</p>
<p>திரு. கோடீஸ்வரன் தனது உரையில் மேலும் தெரிவித்தது &#8220;கார்த்திகை மாதத்தில் வடகிழக்கிலே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளன. எங்களது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், பொதுமக்கள் இறந்த அந்தத் தூய்மையான இடங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.&#8221;அந்தத் துயிலுமில்லங்களில் இருந்து இராணுவப் பிரசன்னத்தை நகர்த்தித் தமிழ் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.</p>
<p>&#8220;இதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள் அந்த இடங்களுக்கான நிதியை ஒதுக்கிப் புனிதமாகப் பாதுகாப்போம்,&#8221; என அவர் உறுதியளித்தார். மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
