<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Medical Negligence Allegation &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/medical-negligence-allegation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 29 Dec 2025 13:36:15 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Medical Negligence Allegation &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>முல்லைத்தீவு மருத்துவமனை முன்பாக பாரிய போராட்டம்: சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி மக்கள் முற்றுகை!</title>
		<link>https://tamilnaadi.com/news/mass-protest-at-mullaitivu-district-hospital-seeking-justice-for-suspicious-death-of-young-girl-dinoja/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 13:36:15 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Dinoja Death Case]]></category>
		<category><![CDATA[Justice for Dinoja.]]></category>
		<category><![CDATA[Medical Negligence Allegation]]></category>
		<category><![CDATA[MP Thurairasa Ravikaran]]></category>
		<category><![CDATA[Mullaitivu Hospital Protest]]></category>
		<category><![CDATA[Selvam Adaikalanathan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208361</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு மக்கள் பெருந்திரளான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். மருத்துவமனை பணிப்பாளரை நேரில் வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்தும் மரணத்திற்கான காரணம் குறித்தும் சரமாரியாகக் கேள்விகளை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு மக்கள் பெருந்திரளான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த சிறுமி டினோஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர். மருத்துவமனை பணிப்பாளரை நேரில் வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா என்பது குறித்தும் மரணத்திற்கான காரணம் குறித்தும் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.</p>
<p>சிறுமியின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.</p>
<p>ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் &#8220;சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்&#8221;, &#8220;வைத்தியசாலை நிர்வாகமே உண்மையை மறைக்காதே&#8221; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். மருத்துவமனையின் கவனக்குறைவாலேயே இந்த உயிரிழப்பு நேர்ந்ததா என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முல்லைத்தீவில் சிறுமி மரணம்: 6 பேர் கொண்ட நிபுணர் குழு இன்று விசாரணையை ஆரம்பிக்கிறது!</title>
		<link>https://tamilnaadi.com/news/expert-committee-begins-probe-into-12-year-old-girls-death-at-mullaitivu-hospital-6-member-team-to-submit-report/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 06:34:09 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Dr. M. Umashankar]]></category>
		<category><![CDATA[Girl Death Probe Sri Lanka]]></category>
		<category><![CDATA[Healthcare Investigation Mullaitivu.]]></category>
		<category><![CDATA[Medical Negligence Allegation]]></category>
		<category><![CDATA[Mullaitivu Hospital News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208167</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினர், தமது விசாரணைகளை இன்று (26) ஆரம்பிக்கவுள்ளனர்.</p>
<p>முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எம். உமாசங்கரின் பரிந்துரைக்கமைய, விசேட மருத்துவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 06 பேர் கொண்ட குழு இதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இக்குழுவினர் இன்று முற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை நடைமுறைகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் குறித்த முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.</p>
<p>இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த 21ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும், மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படாமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதியான விசாரணை கோரி அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தைத் தொடர்ந்தே இந்த விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
