<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Maldives Drug Seizure &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/maldives-drug-seizure/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Thu, 13 Nov 2025 13:28:04 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Maldives Drug Seizure &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/maldives-drug-arrest-355kg-sri-lankans/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Nov 2025 08:42:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ice and Heroin]]></category>
		<category><![CDATA[Maldives Drug Seizure]]></category>
		<category><![CDATA[Repatriation Issue]]></category>
		<category><![CDATA[Sri Lankan Fishermen Arrest]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=204716</guid>

					<description><![CDATA[355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர். இதன் காரணமாக, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 7ஆம் திகதி &#8216;அவிஷ்க புத்தா&#8217; என்ற பலநாள் மீன்பிடிப் படகு, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் 355 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அந்நாட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தீர்மானித்துள்ளனர். இதன் காரணமாக, அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடந்த நவம்பர் 7ஆம் திகதி &#8216;அவிஷ்க புத்தா&#8217; என்ற பலநாள் மீன்பிடிப் படகு, மாலைத்தீவு கடல் எல்லைக்குள் 355 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.</p>
<p>அந்தப் படகில் இருந்த ஐந்து இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>இலங்கை கடற்படை, காவல்துறை மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை மற்றும் அந்நாட்டு காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையை அடுத்தே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காகக் கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் அண்மையில் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.</p>
<p>எனினும், அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதால், அவர்களை உடனடியாக இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை.</p>
<p>இதன் காரணமாக, மாலைத்தீவுக்குச் சென்ற இலங்கை பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் நாடு திரும்ப உள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
