<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Malaysia &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/malaysia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Mon, 08 Dec 2025 14:15:13 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Malaysia &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/ajith-kumar-appeals-to-fans-while-participating-in-malaysian-car-race/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 14:15:13 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[Ajith Kumar]]></category>
		<category><![CDATA[Car Race]]></category>
		<category><![CDATA[Fan Appeal]]></category>
		<category><![CDATA[Goodwill]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Racing Team]]></category>
		<category><![CDATA[Viral Video]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206674</guid>

					<description><![CDATA[நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள நிலையில், அங்குத் திரண்டிருந்த தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அஜித் பங்கேற்கும் 12 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸ் போட்டியில் அவரது டீம் கலந்துகொள்கிறது. அஜித்தைக் காண வேண்டும் என்கிற ஆசையினால் ரேஸ் நடக்கும் இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். அவர்கள் மற்ற ரேஸ் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனைக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள நிலையில், அங்குத் திரண்டிருந்த தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.</p>
<p>அஜித் பங்கேற்கும் 12 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸ் போட்டியில் அவரது டீம் கலந்துகொள்கிறது.</p>
<p>அஜித்தைக் காண வேண்டும் என்கிற ஆசையினால் ரேஸ் நடக்கும் இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். அவர்கள் மற்ற ரேஸ் குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனைக் கண்ட அஜித், அங்குள்ள ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் விடுத்த வேண்டுகோள் பின்வருமாறு:</p>
<p>&#8220;மற்ற டீம்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் பெயர் மட்டுமின்றி என் நற்பெயரும் இதில் இருக்கிறது. அதனால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எல்லோரிடமும் சொல்லுங்கள்.&#8221;</p>
<p>இந்த அறிவுறுத்தல் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டம்: தனுஷ் பங்கேற்க வாய்ப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/entertainment/thalapathy-vijays-jananaayagan-audio-launch-in-malaysia-on-december-27-dhanush-rumoured-to-attend/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 14:13:05 +0000</pubDate>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[Atlee]]></category>
		<category><![CDATA[Audio Launch]]></category>
		<category><![CDATA[Dhanush]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jananaayagan]]></category>
		<category><![CDATA[Lokesh Kanagaraj]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[nelson]]></category>
		<category><![CDATA[thalapathy vijay]]></category>
		<category><![CDATA[Vijay Fans.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206370</guid>

					<description><![CDATA[நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் &#8216;ஜனநாயகன்&#8217; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் (Bukit Jalil Stadium) இந்த விழா நடைபெறுகிறது. இந்த அரங்கத்தில் சுமார் 85,500 பேர் அமர்ந்து பார்க்க முடியும். &#8216;தளபதி கச்சேரி&#8217; மற்றும் &#8216;இசைத் திருவிழா&#8217;வுடன் &#8216;ஜனநாயகன்&#8217; இசை வெளியீடும் நடப்பதால், இந்த நிகழ்ச்சியை நேரில் காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விஜய்யின் திரை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் &#8216;ஜனநாயகன்&#8217; திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.</p>
<p>மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் (Bukit Jalil Stadium) இந்த விழா நடைபெறுகிறது. இந்த அரங்கத்தில் சுமார் 85,500 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.</p>
<p>&#8216;தளபதி கச்சேரி&#8217; மற்றும் &#8216;இசைத் திருவிழா&#8217;வுடன் &#8216;ஜனநாயகன்&#8217; இசை வெளியீடும் நடப்பதால், இந்த நிகழ்ச்சியை நேரில் காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.</p>
<p>விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி அசத்திய பின்னணிப் பாடகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.</p>
<p>இந்த நிலையில், &#8216;ஜனநாயகன்&#8217; இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான தனுஷ் கலந்துகொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் இதில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தனுஷின் வருகை உறுதியானால், அது ரசிகர்களுக்குச் செம ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே, &#8216;மெர்சல்&#8217; படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜேர்மனி பயண ஆலோசனை புதுப்பிப்பு: இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://tamilnaadi.com/news/world/germany-updates-travel-advisories-for-six-countries/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Oct 2025 03:11:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[canada]]></category>
		<category><![CDATA[denmark]]></category>
		<category><![CDATA[france]]></category>
		<category><![CDATA[Germany Travel Advisory]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Morocco]]></category>
		<category><![CDATA[Political Unrest.]]></category>
		<category><![CDATA[Security Warning]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=203694</guid>

					<description><![CDATA[இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நாடுகளில் அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல்கள், அரசியல் அமைதியின்மை உள்ளிட்ட காரணிகளால் ஜேர்மனி பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. அத்துடன், குறித்த நாடுகளுக்குப் பயணிக்கு மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஜேர்மன் தமது மக்களைக் கோரியுள்ளது.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கான பயண ஆலோசனைகளை ஜேர்மன் புதுப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, கனடா, பிரான்ஸ், மொராக்கோ, டென்மார்க் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கே பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த நாடுகளில் அதிகரித்து வரும் போர் அச்சுறுத்தல்கள், அரசியல் அமைதியின்மை உள்ளிட்ட காரணிகளால் ஜேர்மனி பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.</p>
<p>அத்துடன், குறித்த நாடுகளுக்குப் பயணிக்கு மக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஜேர்மன் தமது மக்களைக் கோரியுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/mazu-goddess/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 15:42:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Artificial Intelligence]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[mazu goddess]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=195660</guid>

					<description><![CDATA[AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது. AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும். மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.</p>
<p>AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும்.</p>
<p>மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI MAZU-வை உருவாக்கியுள்ளது.</p>
<p>டிஜிட்டல் திரையில் காட்டப்படும் இந்த AI கடவுள், பக்தர்களுடன் உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வழிகாட்டுதலை வழங்கவும் செய்கிறது.</p>
<p>அந்த நிறுவனத்தின் நிறுவனரான Shin Kong, எதிர்பாராத செல்வத்தைப் பெறுவது எப்படி என AI மசுவிடம் கேட்டதற்கு, வீட்டிலேயே இருப்பது அத்தகைய செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என பதிலளித்தது.</p>
<p>இதனையடுத்து, தூக்கமின்மைக்கு தீர்வு வழங்குமாறு பெண் ஒருவர் கேட்டதற்கு, அவரது தனது குழந்தை என அழைத்த AI மசு, இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு அறிவுறுத்தியது.</p>
<p>ஏப்ரல் 20, 2025 அன்று மசு என்ற கடல் தெய்வத்தின் 1,065 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு AI மசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>சீனாவின் மெய்சோ தீவில், 960 ஆண்டில், லின் மோவாகப் பிறந்த பெண், கப்பல் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றி, சொர்க்கத்திற்கு சென்றதாக நம்பும் மக்கள், மசு என்ற பெயரில் கடல் தெய்வமாக வணங்குகின்றனர்.</p>
<p>மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த மசு கடவுளை வணங்குகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடொன்றிலும் உச்சம் தொட்ட தேங்காய் விலை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/coconut-shortage-fuels-price-surge-in-malaysia/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 09:14:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Coconut price]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=190808</guid>

					<description><![CDATA[சீரற்ற வானிலை காரணமாக மலேசியாவில்(Malaysia) தேங்காய் விலைகள் உயர்ந்துள்ளன, இதனால் இந்த மாதம் தைப்பூசத்தில் கலந்துகொள்பவர்கள் வண்ணமயமான இந்து பண்டிகையின் போது தேங்காய்களை குறைவாக உடைக்குமாறு அரச மற்றும் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பத்து குகைகள் இந்து கோயில் குழுத் தலைவர் ஆர். நடராஜா, பக்தர்கள் ஒரு தேங்காயை மட்டுமே உடைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 2) மலாய் மெயில் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. &#8220;நீங்கள் அதை உண்மையான பக்தியுடன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற வானிலை காரணமாக மலேசியாவில்(Malaysia) தேங்காய் விலைகள் உயர்ந்துள்ளன, இதனால் இந்த மாதம் தைப்பூசத்தில் கலந்துகொள்பவர்கள் வண்ணமயமான இந்து பண்டிகையின் போது தேங்காய்களை குறைவாக உடைக்குமாறு அரச மற்றும் சமூகத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>பத்து குகைகள் இந்து கோயில் குழுத் தலைவர் ஆர். நடராஜா, பக்தர்கள் ஒரு தேங்காயை மட்டுமே உடைக்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 2) மலாய் மெயில் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>&#8220;நீங்கள் அதை உண்மையான பக்தியுடன் செய்யும் வரை, தேங்காய்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல&#8221; என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தைப்பூசம் மலேசியாவில் ஒரு பொது விடுமுறை மற்றும் இந்த ஆண்டு பெப்ரவரி 11 அன்று வருகிறது. இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது, தேங்காய் உடைப்பது ஒரு சுத்திகரிப்பு சடங்காகும், மேலும் ஒருவரின் ஆணவத்தை சரணடைவதைக் குறிக்கிறது.</p>
<p>பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் மற்றும் பினாங்கு நுகர்வோர் சங்கமும் இதே போன்ற அழைப்புகளை விடுத்துள்ளனர். &#8220;தைப்பூசத்தில் தேங்காய்களைப் பயன்படுத்துவது பொதுமக்களின் உணவுப் பாதுகாப்பைப் பாதிக்காதவாறு பக்தர்கள் மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும்,&#8221; என்று வெள்ளிக்கிழமை ஒரு நலன்புரி குழுவின் சீனப் புத்தாண்டு நிகழ்வில் சோவ் கூறினார்.</p>
<p>சீனப் புத்தாண்டு மற்றும் தைப்பூச கொண்டாட்டங்களின் போது அதிக தேவை இருப்பதாலும், பெப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் திகதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் ரமழான் நோன்பு மாதத்தாலும், ஹரி ராயா பூசா பண்டிகையாலும் மலேசியாவில் தேங்காய் பற்றாக்குறை தலைப்புச் செய்திகளாக மாறி வருகிறது.</p>
<p>இலங்கையிலும் தற்போது தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவில் பரவும் HMPV வைரஸ்: அண்டை நாடுகளில் அதிகரித்துள்ள பாதிப்பு எண்ணிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/china-hmpv-virus-speads-update-news/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Jan 2025 06:30:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[china]]></category>
		<category><![CDATA[China Hmpv Virus Speads Update News]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[HMPV Virus]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[virus]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=187036</guid>

					<description><![CDATA[சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும்(India) மலேசியாவும்(Malaysia) இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான கர்நாடகா, இதற்கு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. &#8216;HMPV&#8217; அறிகுறிகள் தென்பட்டால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக் கவசங்களை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது கோவிட் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீனாவிலிருந்து தற்போது பரவி வரும் HMPV வைரஸால் பல நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>தற்போது சீனாவின் அண்டை நாடுகளான இந்தியாவும்(India) மலேசியாவும்(Malaysia) இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்திய மாநிலமான கர்நாடகா, இதற்கு துரித நடவடிக்கை எடுத்துள்ளது. &#8216;HMPV&#8217; அறிகுறிகள் தென்பட்டால், பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>மேலும், மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலான பகுதிகளில் முகக் கவசங்களை அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இது கோவிட் வைரஸ் போன்று அபாயகரமானது அல்ல என்று நிபுணர்கள் கூறினாலும், பிரித்தானியாவில் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்த வைரஸ் முதன்முதலில் 2001ஆம் ஆண்டு நெதர்லாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.</p>
<p>இது உலகளவில் ஒரு பொதுவான நோயாகும். சளி, இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அடிப்படை அறிகுறிகளுடன் காணப்படலாம்.</p>
<p>ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு நிலையைப் பொறுத்து, தீவிரமடையலாம் என்றும், மரணம் ஏற்படவும் காரணமாகலாம் என்றும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
<p>பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களை ஒப்பிடுகையில், பாதிப்பு எண்ணிக்கை 4.15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகின்றது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலேசியா &#8211; தாய்லாந்து எல்லையில் இலங்கையர் ஒருவர் கைது</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lankan-arrested-at-malaysia-thailand-border/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Sep 2024 08:13:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Sri Lankan Peoples]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=164614</guid>

					<description><![CDATA[மலேசியா &#8211; தாய்லாந்து எல்லையில் இலங்கையர் ஒருவர் கைது மலேசியா &#8211; தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயதான இவர், ‘ராஜா டெனி டெனிஸ்’ (Raja Danny Denis) என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, ​​மலேசியாவின் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மலேசியா &#8211; தாய்லாந்து எல்லையில் இலங்கையர் ஒருவர் கைது</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2024/02/12/contanier-ship-malasiya/">மலேசியா</a> &#8211; தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>21 வயதான இவர், ‘ராஜா டெனி டெனிஸ்’ (Raja Danny Denis) என்ற பெயர் கொண்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது, ​​மலேசியாவின் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிட்சுவான் முகமட் ஜைன் (Mohd Ridzzuan Mohd Zain) தெரிவித்துள்ளார்.</p>
<p>மலேசிய குடிமகனாக தம்மை ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த நிலையில், செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ரிட்சுவான் கூறியுள்ளார்.</p>
<p>தாய்லாந்து அதிகாரிகளுக்கும் தமக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் விளைவாகவே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/malaysia-tamil-history-population-details/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Jul 2024 11:30:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[malaysia tamil history population details]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=154541</guid>

					<description><![CDATA[மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை ஆசிய நாடான மலேசியாவில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3.39 கோடி (2022) ஆகும். இதில் தமிழர்கள் 6.7 சதவீதம் பேர் ஆவர். அதாவது 23, 27,000 தமிழர்கள் மலேசியாவில் வசித்து வருகின்றனர். 1800களில் மலேசியாவிற்கு தொழிலாளர்களின் பாரிய இயக்கத்திற்கு முன், அங்கு இந்திய குடியேற்றங்கள் பெரும்பாலும் வணிகத்தை கொண்டிருந்தன. குறிப்பாக, காலனித்துவ [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>மலேசியாவில் தமிழர்களின் வரலாறு மற்றும் எண்ணிக்கை</h4>
<p>ஆசிய நாடான <a href="https://tamilnaadi.com/news/world/2023/12/04/foreigners-mustfillup-electronicentrycard-malaysia/">மலேசியா</a>வில் தமிழர்கள் வரலாறு குறித்து இங்கே காண்போம். தமிழர்கள் அதிக வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.</p>
<p>மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3.39 கோடி (2022) ஆகும். இதில் தமிழர்கள் 6.7 சதவீதம் பேர் ஆவர். அதாவது 23, 27,000 தமிழர்கள் மலேசியாவில் வசித்து வருகின்றனர்.</p>
<p>1800களில் மலேசியாவிற்கு தொழிலாளர்களின் பாரிய இயக்கத்திற்கு முன், அங்கு இந்திய குடியேற்றங்கள் பெரும்பாலும் வணிகத்தை கொண்டிருந்தன.</p>
<p>குறிப்பாக, காலனித்துவ ஆட்சியின்போது தமிழ்த் தொழிலாளர்கள் பாரிய அளவில் இடம்பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தமிழர்கள் சாலைகள், ரயில் பாதைகள் அல்லது தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்க வரவழைக்கப்பட்டனர். பின்னாளில் படிப்படியாக அவர்கள் நிரந்தர குடியேறிகளாக மாறினர்.</p>
<p>அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களின் கொள்கையால் தமிழ்நாட்டு கிராமம் மலாயாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மலாயாவிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 90 சதவீதம் பேர் தமிழ் பேசும் மக்களே ஆவர்.</p>
<p>எனினும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பல்கலைக்கழக கல்வியறிவு பெற்றவர்களாக இந்தியர்கள் வந்தனர்.</p>
<p>இன்று மலேசிய தமிழர்கள் சமூகங்களும் பெருமையுடன் தங்கள் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், மொழி மற்றும் மதங்களைப் பின்பற்றுகின்றனர்.</p>
<p>தமிழர்கள் மலேசியாவின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் உடல் உழைப்பு தொழிலாளர்களாகவே உள்ளனர்.</p>
<p>இந்து மதத்தை தழுவியவர்களாக பெரும்பாலும் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள், இந்தியாவில் நடைமுறையில் உள்ள அசல் தைப்பூசத் திருவிழாவை விட வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்கள்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : உயிரிழந்த இரு பெண்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tiktok-viral-girl-ayesha-dead-history/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Jul 2024 07:36:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[social media]]></category>
		<category><![CDATA[Tiktok Viral Girl Ayesha Dead History]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=150643</guid>

					<description><![CDATA[சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : உயிரிழந்த இரு பெண்கள் கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. டிக்டாக் மற்றும் இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான முடிவெடுக்க தூண்டுவதாக சமூக ஊடகங்களின் டவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதனடிப்படையில், அண்மையில் கேரளாவை (Kerala) சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் தற்போது மலேசியாவை (Malaysia) சேர்ந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இணைய மிரட்டல் : உயிரிழந்த இரு <a href="https://tamilnaadi.com/news/local/2024/06/15/five-women-arrested-in-horana-today/">பெண்கள்</a></h4>
<p>கடந்த சில நாட்களாக இணைய மிரட்டல் காரணமாக உயிரிழப்பவர்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D" target="_blank" rel="noopener">டிக்டாக்</a> மற்றும் இஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் ஊடாக ஒருவரை மனதளவில் பாதிப்புக்குளாக்கி அவர்களை தவறான முடிவெடுக்க தூண்டுவதாக சமூக ஊடகங்களின் டவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.</p>
<p>இதனடிப்படையில், அண்மையில் கேரளாவை (Kerala) சேர்ந்த பெண்ணொருவரும் மற்றும் தற்போது மலேசியாவை (Malaysia) சேர்ந்த பெண்ணொருவரும் இணைய மிரட்டல் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்தநிலையில், கேரளாவை சேர்ந்த 18 வயதுடைய ஆதித்யா நாயர் (Aditya Nair) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலாமாக இருந்து வந்த நிலையில் அங்கு ஒருவருடன் குறித்த பெண்ணுக்கு நட்பு ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>இதையடுத்து, குறித்த பெண்ணும் மற்றும் அந்த இளைஞரும் ஒன்றாக இணைந்து சமூக வலைத்தளங்களில் தமது காணொளிகளை பதிவிட்டு வந்துள்ளனர்.</p>
<p>சிறிது காலத்தில் குறித்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையில் விரிசல் ஏற்பட அந்த இளைஞரின் நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் குறித்த பெண்ணை இணைய மிரட்டல் ஊடாக மனவுளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.</p>
<p>இவ்வாறு ஜூன் பத்தாம் திகதி குறித்த பெண் தவறான முடிவெடுத்து காப்பாற்றப்பட்ட நிலையில் சிகிசிச்சை பலனின்றி ஜூன் 16 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இதையடுத்து, தற்போது மலேசியாவை சேர்ந்த 29 வயதுடைய ராஜேஸ்வரி அப்பாஹு (Rajeshwari Appahu) என்ற பெண்ணும் சமூக வலைத்தளங்களில் இணைய மிரட்டல் காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.</p>
<p>குறித்த பெண் சமூக அக்கறை சார்ந்த விடயங்களில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்த நிலையில் இதற்கு புறம்பான சிலர் டிக்டாக்கில் போலி கணக்குகள் ஊடாக அவரை தாக்கியுள்ளனர்.</p>
<p>மேற்படி, பெண்ணின் புகைப்படங்களை போலி கணக்குகளில் தவறான முறையில் சித்தரித்து வெளியிட்டு வந்த நிலையில் அந்த பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.</p>
<p>இந்த நிலையில், இவ்வாறு சமூக ஊடகங்கள் ஊடாக போலி கணக்குகளினால் இணைய மிரட்டல் மற்றும் தகாத நடவடிக்கைகளை பேர்கொள்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைதள பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/ghost-marriage-love-couple-after-life-malaysia/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jun 2024 04:03:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Ghost Marriage Love Couple After Life Malaysia]]></category>
		<category><![CDATA[Malaysia]]></category>
		<category><![CDATA[Viral photos]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=147045</guid>

					<description><![CDATA[வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம் மலேசியாவில்(Malaysia) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர். மலேசியாவில் வசித்து வந்த ஜிங்ஷன் என்ற இளைஞன் லீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் ஜூன் 2 ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அந்த காதல் ஜோடி ஒரு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/10/01/killing-of-three-lankans-malaysia-two-suspects/">மலேசியாவில்</a>(<a href="https://en.wikipedia.org/wiki/Malaysia" target="_blank" rel="noopener">Malaysia</a>) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.</p>
<p>மலேசியாவில் வசித்து வந்த ஜிங்ஷன் என்ற இளைஞன் லீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இருவருக்கும் ஜூன் 2 ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அந்த காதல் ஜோடி ஒரு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இதனால், இரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையடைந்த நிலையில், அவர்களது உயிர் மண்ணை விட்டு போனாலும் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.</p>
<p>அந்தவகையில், அவர்கள் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.</p>
<p>அதன்படி, ஒரு மண்டபத்தில் இறந்த காதல் ஜோடியின் புகைப்படம் மற்றும் அவர்கள் போன்ற உருவ பொம்மையை வைத்து பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.</p>
<p>இந்த பேய் திருமணத்தால் உயிரிழந்த காதல் ஜோடி ஒன்றிணைவர் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.</p>
<p>மேலும்,இந்த விநோத திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
