<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>maithripala Sridena &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/maithripala-sridena/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 14 Mar 2023 19:13:22 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>maithripala Sridena &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மைத்திரியின் மனு விசாரணைக்கு!!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/maithris-petition-for-hearing/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/maithris-petition-for-hearing/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 19:13:22 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Easter attack]]></category>
		<category><![CDATA[maithripala Sridena]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=70861</guid>

					<description><![CDATA[ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14) தீர்மானித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<header class="inner-content">ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14) தீர்மானித்தது.</p>
<p>மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்தார்.</p>
<p>ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அழைக்க வேண்டாம் என்றும் நீதியரசர், கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.</p>
<p>கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு சமமான கவனமற்ற செயலை செய்து பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தியத்தியமைக்கு, தாக்குதல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதியே பொறுப்பு என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p>ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏற்கவியலாத சாட்சியங்கள் மற்றும் செவிவழிச் சாட்சியங்களை கருத்திற்கொண்டு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும் தனது விருப்புரிமை அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த கோட்டை நீதவான் தவறிவிட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
</header>
<div class="row">
<div class="col-xl-12">
<div class="row d-none d-lg-block"><center></p>
<div>
<div id="div-gpt-ad-1634092016239-0" data-google-query-id="CNKlmciP3P0CFRNDfAodU9APdA">
<div id="google_ads_iframe_/6231952/TM_SINGLE_COMMENT_TOP_S1_0__container__"></div>
</div>
</div>
<p></center></div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/maithris-petition-for-hearing/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முடிவில் மாற்றமில்லை! &#8211; சுதந்திரக்கட்சி விடாப்பிடி</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-end/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-end/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Apr 2022 03:17:46 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[maithripala Sridena]]></category>
		<category><![CDATA[SLFP]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=44746</guid>

					<description><![CDATA[அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று அமைச்சு பதவிகளை ஏற்காதிருக்கவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.</p>
<p>மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.</p>
<p>இச்சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. அந்த கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br />
தான் உள்ளிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் சபையில் அறிவித்தார்.</p>
<p>இந்நிலையில் ஜனாதிபதியை சந்திப்பதால் அக்கட்சியின் முடிவு மாறக்கூடும் என்ற தகவல் வெளியானது. எனினும், மேற்படி முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என சந்திப்பின் பின்னர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.</p>
<p>அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகிய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அவசரகால சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளன.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/no-change-in-the-end/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
