பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ அல்லது அவற்றை கொள்ளையடித்தாலோ, அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் அதிகாரம் முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சாலேயே படையினருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொரட்டுவை மேயர் சமன்லால்...
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர். ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...
” பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.” இவ்வாறு ஐக்கிய மக்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசுவாசியென கருதப்படும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, பேர வாவிக்கு அருகில் வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் சிரேஷ்ட...
திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது. சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவ சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு திருகோணமலை கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர்...
கொழும்பில் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை உடனடியாகக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு...
திருகோணமலையில் உள்ள கிழக்கு கடற்படைத் தலைமையகம் முன்னால் இன்று ஒன்றுகூடிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்தே மக்கள்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளனர் என்று வெளியான தகவல்களையடுத்து விமான நிலையங்களுக்கு அருகில் மக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்....
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்திலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதுடன் கடைகள், பொதுச் சந்தைகள், அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகின்றது. இதேவேளை விசேடமாக யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு...
திருகோணமலையில் கடற்படை முகாம் பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை அலரி மாளிகை பகுதியிலிருந்து பாதுகாப்பு தரப்பினரால் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்ட நிலையில், மஹிந்த அலரிமாளிகையில் இருந்து தனது விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (10) கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வமத தலைவர்களுடன் நேற்றிரவு (09) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார் என ஓமல்பே சோபித தேரர்...
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையில் இருந்து இன்று வெளியேறியுள்ளார். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதகாலமாக போராட்டம் இடம்பெற்றுவந்த நிலையில், ஆளுங்கட்சியினரால் நேற்று வன்முறையைக் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில் அவர் பதவி...
அணையப்போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமகால நிலை தொடர்பாக கருத்து...
பணிப் புறக்கணிப்பினை தொடர்ந்து மேற்கொள்வது தொடர்பில் நாளை(10) காலை 10 மணியளவில் கூடும் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
அம்பாந்தோட்டை மெதமுலனவிலுள்ள ராஜபக்சக்களின் பூர்வீக இல்லமும் போராட்டக்காரர்களால் கொளுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குருணாகலை பகுதியில் உள்ள மஹிந்தவின் தற்காலிக இருப்பிடமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. #SriLankaNews
அரசுக்கு ஆதரவு வழங்கிய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான் வீதியில் உள்ள அவரின் வீடுமீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது , நாடாளுமன்ற உறுப்பினரின்...
அமைச்சர்கள் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. ஒரு சிலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் வீடுகள், மக்களால் தாக்கப்பட்டுள்ளன. ரமேஷ் பத்திரவின்...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. அமரகீர்த்தி அதுகோரள எம்.பியும், அவரின் பாதுகாவலர்களும் நகரில் ஓடுவதுபோல காணொளி வெளியாகியுள்ளது எனினும்,...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த கௌரவமாக வெளியேறாமல், வன்முறையை தூண்டிவிட்டு, வன்முறைக்கு மத்தியில் விடைபெற்றுள்ளமை...