<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>LTTE &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/ltte/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 15 Mar 2026 17:22:53 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>LTTE &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கே.பி.யின் கைது மற்றும் மகிந்த-கோட்டாபயவின் டீல்: சரத் பொன்சேகாவின் பகிரங்க விமர்சனம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Mar 2026 17:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gotabaya Rajapaksa]]></category>
		<category><![CDATA[Kumaran Pathmanathan (KP)]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[mahinda rajapaksa]]></category>
		<category><![CDATA[Sarath Fonseka]]></category>
		<category><![CDATA[Sri lanka politics]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=214599</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான தற்போதைய அரசியல் வாதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கே.பி.யைச் சுரேஷ் சலே தான் கைது செய்தார் என்று தற்போது சிலர் வீணான பெருமை பேசி வருவதாகச் சாடிய பொன்சேகா, உண்மையான பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார். தாம் முப்படைகளின் பிரதானியாக இருந்த [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="1">விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது விவகாரம் மற்றும் அது தொடர்பான தற்போதைய அரசியல் வாதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கே.பி.யைச் சுரேஷ் சலே தான் கைது செய்தார் என்று தற்போது சிலர் வீணான பெருமை பேசி வருவதாகச் சாடிய பொன்சேகா, உண்மையான பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.</p>
<p data-path-to-node="2">தாம் முப்படைகளின் பிரதானியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து விபரித்த பொன்சேகா, &#8220;மலேசியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராஜதந்திர ரீதியாகத் தகவல் வந்ததையடுத்து, புலனாய்வுக் குழு ஒன்று அங்கு சென்று அவரை அழைத்து வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும், அவரைப் பொறுப்பேற்ற புலனாய்வாளர்கள், &#8216;இவர் கே.பி, இவரை உங்களிடம் பாரப்படுத்துகிறோம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்&#8217; என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர். அதன் பின்னரே சி.ஐ.டியினர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அறிவித்தனர்&#8221; என்று தெரிவித்தார்.</p>
<p data-path-to-node="3">கே.பி. இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட விதம் குறித்துப் பேசிய அவர், &#8220;விமான நிலையத்திலிருந்து கே.பி. நேரடியாகக் கோட்டாபயவின் வீட்டிற்கே அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குற்றப்புலனாய்வுத் துறையில் சிறிது காலம் இருந்தபோதிலும், முறையாகச் சிறையில் அடைக்கப்படவில்லை. பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை&#8221; என்று சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p data-path-to-node="4">முக்கியமாக, கே.பி. வசம் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் நிதி குறித்துப் பேசிய பொன்சேகா, &#8220;கே.பி. வசம் இருந்த கப்பல்கள் மற்றும் புலிகளின் பணம் ஆகியவற்றிற்கு என்ன ஆனது என்பது கோட்டாபயவிற்கு மட்டுமே தெரியும். அதன் பின்னர் கே.பியுடன் டீல் (Deal) பேசியது மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தான். அவர்கள் அவருடன் என்ன டீல் பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது&#8221; என்று பகிரங்கமாகத் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.</p>
<p data-path-to-node="6">
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/ltte-leader-velupillai-prabhakarans-71st-birthday-extravagantly-celebrated-in-valvettithurai/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 10:35:38 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Birthday celebration]]></category>
		<category><![CDATA[fearured]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[M. K. Shivajilingam]]></category>
		<category><![CDATA[Political Celebration.]]></category>
		<category><![CDATA[Valvettithurai]]></category>
		<category><![CDATA[Velupillai Prabhakaran]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205873</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில், அவரது இல்லத்திற்கு முன்பாக இந்தக் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்துகொண்டார். எம்.கே. சிவாஜிலிங்கம் கேக்கை வெட்டி வைத்தார். பிறந்தநாளில் கலந்துகொண்டவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.</p>
<p>விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை மண்ணில், அவரது இல்லத்திற்கு முன்பாக இந்தக் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.</p>
<p>இந்தக் கொண்டாட்டத்தில் தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் கலந்துகொண்டார்.</p>
<p>எம்.கே. சிவாஜிலிங்கம் கேக்கை வெட்டி வைத்தார். பிறந்தநாளில் கலந்துகொண்டவர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே</title>
		<link>https://tamilnaadi.com/news/local/maithiripala-sirisena-press-meet-in-colombo/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Sep 2023 14:06:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Maithripala Sirisena]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91783</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்கா &#8211; செல்வநாயகம் (பண்டா &#8211; செல்வா) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விடுதலைப் புலிகளின் தலைவரை உருவாக்கியது பிக்குகளே</h4>
<p>தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான <a href="https://tamilnaadi.com/news/local/2023/08/31/an-embassy-striving-to-make-a-difference-in-sri-lankan-politics/">மைத்திரிபால சிறிசேன</a> தெரிவித்துள்ளார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,_1957" target="_blank" rel="noopener">பண்டாரநாயக்கா &#8211; செல்வநாயகம்</a> (பண்டா &#8211; செல்வா) ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வியடத்தை கூறியுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், 1956இல் சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின.</p>
<p>அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது. செல்வா &#8211; பண்டா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.</p>
<p>பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அந்த ஒப்பந்தம் நடைமுறையாகி இருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டார்.</p>
<p>நாட்டில் போரும் ஏற்பட்டிருக்காது. எனவே பிக்குகளே பிரபாகரனை உருவாக்கினர். அதேபோல டட்லி &#8211; செல்வா ஒப்பந்தத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-prominent-man-who-ignored-the-ltte-leaders-call/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-prominent-man-who-ignored-the-ltte-leaders-call/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Aug 2023 03:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lankan political crisis]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=87743</guid>

					<description><![CDATA[விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர் போர் நிறுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை கவிஞர் காசி ஆனந்தன் புறக்கணித்திருந்ததாக இந்தியாவினை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்துக்கொண்டு கவிஞர் காசி ஆனந்தன், பழநெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்த கருத்தின் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தி வருகின்றமை தெளிவாக தென்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை பொருத்தமட்டில் பழிபோடும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வரும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை புறக்கணித்த முக்கியஸ்தர்</h4>
<p>போர் நிறுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் அழைப்பை கவிஞர் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D#:~:text=%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D." target="_blank" rel="noopener">காசி ஆனந்தன்</a> புறக்கணித்திருந்ததாக இந்தியாவினை சேர்ந்த மூத்த <a href="https://tamilnaadi.com/news/world/2023/06/29/wuhan-researcher-china-corona-bio-weapon/">பத்திரிக்கையாளர்</a> உமாபதி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அதாவது தமிழகத்தில் இருந்துக்கொண்டு கவிஞர் காசி ஆனந்தன், பழநெடுமாறன் ஆகியோர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்த கருத்தின் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரை இழிவுபடுத்தி வருகின்றமை தெளிவாக தென்படுவதாகவும் கூறியுள்ளார்.</p>
<p>மேலும், இந்தியாவை பொருத்தமட்டில் பழிபோடும் அரசியலே முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் இங்கு தீர்வு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-prominent-man-who-ignored-the-ltte-leaders-call/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் வந்த தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/action-taken-after-the-end-of-the-war/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/action-taken-after-the-end-of-the-war/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Aug 2023 07:22:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[sl]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka Final War]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=85779</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் வந்த தகவல் 12,200 விடுதலைப் புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து தற்போது 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்கள் மீண்டும் பயங்கரவாத அமைப்பாக தலைதூக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஒரு சிலர் தொடர்பாக தகவல்கள் வந்த போதும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதி அமைச்சில் நேற்று (03.08.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் வந்த தகவல்</h4>
<p>12,200 விடுதலைப் புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து தற்போது 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர்கள் மீண்டும் பயங்கரவாத அமைப்பாக தலைதூக்கவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.</p>
<p>ஒரு சிலர் தொடர்பாக தகவல்கள் வந்த போதும் அதற்கான <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/18/sri-lanka-economic-crisis-dollars-balance-today/">வாய்ப்புக்கள்</a> இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88" target="_blank" rel="noopener">நீதி அமைச்சில்</a> நேற்று (03.08.2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்ததன் பின் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்த 12200 பேரை தாம் புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/action-taken-after-the-end-of-the-war/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைக்கு வெளியில் தமிழீழம்! ஆபத்து குறித்து எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/tamil-eealam-in-out-of-sri-lanka/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/tamil-eealam-in-out-of-sri-lanka/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Jul 2023 11:08:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<category><![CDATA[Tamil National Alliance]]></category>
		<category><![CDATA[Uthaya Gammanpila]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=84129</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு வெளியில் தமிழீழம்! ஆபத்து குறித்து எச்சரிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேசத்தில் தமிழீழ அரசாங்கத்தை அமைத்து முடித்து விட்டதாகவும், அதன் பிரதமராக சட்டத்தரணி உருத்திர குமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் அரசியல் தேவைக்கு அமைய தற்போது தனியான நாட்டை கோரி அதனை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் ஆயுதங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏந்தவில்லை எனவும் அவர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கைக்கு வெளியில் தமிழீழம்! ஆபத்து குறித்து எச்சரிக்கை</h4>
<p>புலம்பெயர் <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81" target="_blank" rel="noopener">நாடுகளில்</a> உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சர்வதேசத்தில் தமிழீழ அரசாங்கத்தை அமைத்து முடித்து விட்டதாகவும், அதன் பிரதமராக சட்டத்தரணி உருத்திர குமாரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.</p>
<p>இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/30/secretly-filming-women-taking-a-bath/">அரசியல்</a> தேவைக்கு அமைய தற்போது தனியான நாட்டை கோரி அதனை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் ஆயுதங்களை மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏந்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>இவை அனைத்தையும் ஆராயும் போது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/tamil-eealam-in-out-of-sri-lanka/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனிவாவிற்கு பொய்யான விடயங்கள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ltte-sri-lanka-final-war-sarath-weerasekara/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/ltte-sri-lanka-final-war-sarath-weerasekara/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 23 Jul 2023 05:56:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[M. K. Shivajilingam]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[sarath weerasekara]]></category>
		<category><![CDATA[Sri Lanka Final War]]></category>
		<category><![CDATA[suren raghavan]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=82470</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனிவாவிற்கு பொய்யான விடயங்கள்! முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத் வீரசேகர ஈடுபட்டு வருகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், சரத் வீரசேகர கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர். இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விடுதலைப் புலிகள் தொடர்பில் ஜெனிவாவிற்கு பொய்யான விடயங்கள்!</h4>
<p>முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத் வீரசேகர ஈடுபட்டு வருகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>தொடர்ந்தும் தெரிவிக்கையில்,</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/07/20/police-power-to-north-province/">சரத் வீரசேகர</a> கடற்படை அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர். இன்று நேற்று அல்ல தொடர்சியாக ஜெனிவா கூட்டத் தொடர்வரை வந்து இனவாதத்தை கக்குவது மட்டுமன்றி தமிழ்மக்களின் போராட்டத்தைப் பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்.</p>
<p>அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக பல சோடிக்கப்பட்ட பொய்களை ஜெனிவாகூட்டத் தொடரில் முன்வைக்கின்ற வேலைகளை செய்தது மாத்திரமல்ல, ஜெனிவா கூட்டத்தொடரில் எங்களுடன் மோதுகின்ற வேலைகள் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்.</p>
<p>அதுமட்டிமன்றி தமிழ் நாட்டில் இருந்து வந்த வைக்கோ போன்ற தலைவர்களுடனும் வாக்குவாத்தத்தில் ஈடுபட்ட நபராவார். தற்போது இவர் அமைச்சரில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு கடந்த காலங்களில் குறிப்பாக காலகாலமாக இனவாத கருத்துக்களை கூறிவருபவர்கள் போல் முன்பிருந்தவர்களை விட மிக மோசமாக இனவாத கருத்துக்களை கக்கிவருகிற செயற்பாட்டில் சரத்வீரசேகர ஈடுபட்டு வருகிறார்.</p>
<p>இவர் சிங்கள பெளத்த இனவாத மக்களின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார். ஏனையவர்கள் மெழுகு புசியவர்கள் போல் எங்களை ஏமாற்றப்பார்கிறார்கள். இவ்வாறானவர்களை வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு நாட்டுக்குள் வாழவேண்டும் என்று எங்களுடைய கட்சிகள் அல்லது தலைவர்கள் நினைப்பது எவ்வாறு?</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88#:~:text=%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20(Genocide)%20%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8B,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81." target="_blank" rel="noopener">இனப்படுகொலைகள்</a> படுமோசமாக இடம் பெற்ற பின்னரும் கூட அதற்கான நீதி கிடைக்குமாயின் அதற்காக பொதுசன வாக்கேடுப்பு நடாத்தி அதற்காக செல்லமுடியும் என்பது அவர்களுக்கு தெரியும். இதனை விடுத்து அவர்களிடமிருந்து மயிலே மயிலே இறகுபோடு என்று கேட்டுக் கொண்டிருந்தால் பிரயோசனம் எதுவும் இல்லை.</p>
<p>இதனைபோல்தான் தற்போது சுரேன் இராகவன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர். மலையகத்தைச் சேர்ந்தவர். அவரும் வெளிநாடுகளில் வாழ்ந்து இன்று ஒன்றுமில்லாமல் தேசியப்பட்டியல் எம்.பியாக வந்துவிட்டு அவர் பேசும் பேச்சுக்கள், வீராப்புகளை ஏற்கமுடியாதுள்ளது. அதிலும் சமஷ்டி பெறலாம் என கனவுகாண வேண்டாம் என்றால் நீங்கள் சமஷ்டிதரவில்லை என்று கனவு காண்பீர்கள் என்றால் நாங்கள் சுதந்திர தமிழீழத்தை எடுக்கப்போகின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.</p>
<p>இதனை தவிர இதற்குவேறு வார்த்தைகள் எம்மிடம் இல்லை. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொண்டு அவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு உதவி செய்யவில்லை. தமிழனாக இருந்து கொண்டு பெளத்தத்தில் ஆராட்சி கெளரவ பட்டத்தை பெற்றுவிட்டு அதில் பிழையில்லை. ஆனால் எமது மக்களின் அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் வீழ்ச்சியைப் பற்றி கதைக்காது சிங்கள பெளத்த பேரினவாத்தத்திற்கு ஒத்தூதுகின்றவராக சுரேன் இராகவனும் இணைந்துள்ளார்.</p>
<p>அதுமட்டுமன்றி சரத்வீரசேகரவின் அணியில் இணைந்து கொள்ளட்டும். இவற்றையெல்லாம் கண்டு ஈழத்தமிழர்கள் அச்சப்பட போவதில்லை. பயப்படபோவதில்லை இவர்களுடைய இனவாத கருத்துகள் எங்களுடயை இறுதி இலட்சியத்தை அடைவதற்கு உரமூட்டும் என்பதை நம்புகின்றோம் என குறிப்பிட்டார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/ltte-sri-lanka-final-war-sarath-weerasekara/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/promise-to-ltte-leader/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/promise-to-ltte-leader/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jul 2023 07:23:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[lk]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[sri lanka news]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=82092</guid>

					<description><![CDATA[விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, “பிரபாகரனிடம் உங்களுக்கு நாங்கள் ஒரு சுயாட்சியை உருவாக்கித் தருவோம்” என்று உத்தரவாதம் வழங்கினார். எனினும் அந்த உத்தரவாதம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.07.2023) கருத்து தெரிவிக்கும் போதே [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதி! சிங்களவர்களுக்கு சொல்லப்படும் பொய்கள்</h4>
<p>தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை புதுடில்லிக்கு அழைத்து பேசிய அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, “பிரபாகரனிடம் உங்களுக்கு நாங்கள் ஒரு சுயாட்சியை உருவாக்கித் தருவோம்” என்று உத்தரவாதம் வழங்கினார்.</p>
<p>எனினும் அந்த உத்தரவாதம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.07.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.</p>
<p>அத்துடன் நாட்டின் வீழ்ச்சிக்கு சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையிலான முரண்பாடே காரணம்.</p>
<p>தமிழர்கள் உரிமை கேட்கின்ற போது சிங்கள மக்களின் இருப்பு இல்லாமல் போய்விடும் என்று சிங்கள மக்களுக்கு அப்பட்டமான பொய்களை இந்த சிங்கள அரசியல் தலைவர்கள் சொல்லி சொல்லியே முறைகேடான ஆட்சியை கொண்டு நடத்துவதில் பழக்கப்பட்டு விட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/promise-to-ltte-leader/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழீழ கோரிக்கையின் தோற்றம் வளர்ச்சி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-origin-and-development-of-tamil-eelam-demand/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-origin-and-development-of-tamil-eelam-demand/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jul 2023 02:11:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Eelam]]></category>
		<category><![CDATA[eelam history]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Tamil Eelam]]></category>
		<category><![CDATA[Tamil Eelam Demand]]></category>
		<category><![CDATA[tamil eelam history]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=82047</guid>

					<description><![CDATA[தமிழீழ கோரிக்கையின் தோற்றம் வளர்ச்சி! Courtesy: திபாகரன் தியாகராஜா ஈழத்தமிழர்கள் நமக்கென விடுதலை பெற்ற ஒரு தனி அரசை அமைக்க வேண்டும் என்று சிந்தித்திருக்காத காலத்தில் டாக்டர்.எஸ். ஏ. விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் மாநாடு &#8220;&#8221;இலங்கை தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வரையறுத்து அவர்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு &#8220;&#8221; என்று 1944 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவே ஈழத்தமிழரின் வரலாற்றில் அவர்களுக்கான பிரிந்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>தமிழீழ கோரிக்கையின் தோற்றம் வளர்ச்சி!</h4>
<p>Courtesy: திபாகரன் தியாகராஜா</p>
<p>ஈழத்தமிழர்கள் நமக்கென விடுதலை பெற்ற ஒரு தனி அரசை அமைக்க வேண்டும் என்று சிந்தித்திருக்காத காலத்தில் டாக்டர்.எஸ். ஏ. விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் மாநாடு &#8220;&#8221;இலங்கை தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று வரையறுத்து அவர்களுக்கு பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை உண்டு &#8220;&#8221; என்று 1944 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.</p>
<p>இதுவே ஈழத்தமிழரின் வரலாற்றில் அவர்களுக்கான பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய<a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88#:~:text=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20(Self,%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81." target="_blank" rel="noopener"> சுயநிர்ணய உரிமை</a> பற்றிய முதலாவது திறவுகோலாய் அமைந்தது.</p>
<p>இதன்பின்பு சோல்பரி அரசியல் யாப்பை நிராகரித்து 1947ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேற்ற நாட்டு அமைச்சருக்கு ஜி.ஜி.பொன்னம்பலம் அனுப்பிய தந்தியில்&#8221;&#8221; தகுந்த மாற்றுமுறை இல்லாததால் நாங்கள் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை கோருகிறோம்&#8221;&#8221; என்ற வாசகம் காணப்பட்டது. ஆயினும் அதற்கான போராட்டங்கள் பின்பு முன்னெடுக்கப்படவில்லை.</p>
<p>இதற்கு பின்பு 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் பற்றிய நிலைப்பாடு முன்னெடுக்கப்பட்ட போது திருவாளர்கள் எஸ். நடேசன், சி .சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து &#8220;&#8221;தமிழுக்கு சம அந்தஸ்து கிடைக்காவிட்டால் தமிழ் நாட்டு பிரிவினைப் போராட்டம் ஆரம்பமாகும்&#8221; என்று அறிக்கையிட்டனர்.</p>
<p>இதனை அடுத்து ஆ. தியாகராஜாவை அமைப்பாளராகவும், மேற்படி மூவரையும் இணைத்தலைவர்களாகவும் கொண்ட அகில இலங்கை தமிழர் மகாசபை &#8220;&#8221; தமிழரின் எதிர்காலம். தமிழ் இராட்சியம் ஒன்றே வழி&#8221;&#8221; என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டது. ஆனால் இது பின்பு செயலற்றுப்போனது.</p>
<p>தமிழ் பேசும் மக்களுக்கு தனி இராஜ்யம்<br />
அதேவேளை &#8220;&#8221; 24 இலட்சம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தனி இராஜ்யம் வேண்டும்&#8221;&#8221; என்ற தலைப்பில் 1957ஆம் ஆண்டு ஒரு சிறு நூலை ஆ. தியாகராசா வெளியிட்டார்.</p>
<p>இந்நூலின் அட்டைப்படத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் பதுளையை உள்ளடக்கிய தமிழ் இராச்சிய வரைபடம் வரையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இந்த நூல் வழியான கொள்கையும் முன்னெடுக்கப்பட்டது தொடர்ச்சியற்றுப் போனது. &#8220;&#8221; Eylom : Begining of Freedom Struggle&#8221;&#8221; என்ற தலைப்பிலான ஓர் ஆங்கில நூலை 1964ஆம் ஆண்டு சி.சுந்தரலிங்கம் எழுதியுள்ளார்.</p>
<p>ஆங்கிலத்தில் இன்றைய உச்சரிப்பான ‘&#8221;Eelam ’&#8221; என்ற சொல்லுக்குப் பதிலாக அப்போது சுந்தரலிங்கம் ‘Eylom’ என்ற பழைய உச்சரிப்பையே அந்நூலில் பயன்படுத்தியிருந்தார்.</p>
<p>அத்துடன் பொதுவாக இதுவரை (1964) ‘தனிநாடு’ என்று பயன்படுத்தப்பட்டு வந்த பதத்திற்குப் பதிலாக ‘ஈழம்’ என்ற குறிப்பான பதம் இந்நூலில் பயன்படுத்தப்பட்டது.</p>
<p>இதன்பின்பு தமிழரசுக்கட்சியில் இருந்து வெளியேறிய காவலூர் நாடாளுமன்ற உறுப்பினரான வி.நவரத்தினம் 1968 ஆம் ஆண்டு தனிநாட்டு கோரிக்கையை இறுதித்தீர்வாக முன்வைத்தார்.</p>
<p>இதனடிப்படையில் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் 12-11-1968 ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய&#8221;&#8221; தமிழர் சுயாட்சிக்கழகம் &#8220;&#8221;என்ற பெயரில் பிரிந்து சென்று விடுதலை அடையும் போராட்டத்திற்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.</p>
<p>அதாவது பிரிந்து செல்வதற்கான எண்ணங்கள் அல்லது கோரிக்கைகள் இதற்கு முன் எழுந்திருந்த போதிலும் அதற்கான ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பாக அதற்குரிய கட்டமைப்புடன் தோன்றிய முதலாவது அமைப்பு இதுவேயாகும். அப்போது தமிழீழம் என்ற சொல் பிரயோகிக்கப்படாமல் ‘தமிழர் சுயாட்சி’ என்ற சொற் தொடரின் கீழ் இவ்விடுதலை அமைப்பு தொடங்கப்பட்டது.</p>
<p>ஆனால் இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு “ஈழம்” என்ற சொல் மேற்படி சுதந்தரலிங்கத்தின் நூலில் பிரயோகிக்கப்பட்டிருந்தமை கவனத்திற்குரியது.</p>
<p>இவ்வமைப்பு தோன்றும் முன்பே இதே ஆண்டில் ‘விடுதலை’ என்ற பெயரில் நவரத்தினத்தால் ஒரு மாதாந்த அரசியல் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.</p>
<p>தனிநாடு கோரும் நவரத்தினத்திற்கு மூளைக்கோளாறு<br />
அதாவது விடுதலையின் பேரால் தொடங்கிய முதலாவது பத்திரிகை இதுவேயாகும். பின்நாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு மூத்த உறுப்பினராக இருந்த பேபி.சுப்ரமணியம் மேற்படி தமிழர் சுயாட்சிக்கழகத்தில் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p>1970 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத்தேர்தலின் போது புங்குடுதீவில் உள்ள புளியங்கூடல் என்னும் இடத்தில் தமிழரசுக்கட்சி செயலாளர் அ. அமிர்தலிங்கத்திற்கும் தமிழர் சுயாட்சிக்கழகத் தலைவர் வி.நவரத்தினத்துக்கும் இடையே பொது மேடை விவாதம் இடம்பெற்றது.</p>
<p>இந்த விவாதத்தின் போது “தனிநாடு கோரும் நவரத்தினத்திற்கு மூளைக்கோளாறு ஏற்பட்டுவிட்டது” என்று தனிநாட்டுக் கோரிக்கையை ஒரு பைத்தியக்காரத்தனமான கோரிக்கையென அமிர்தலிங்கம் வர்ணித்து நவரத்தினத்தையும் அவரது தனிநாட்டுக் கோரிக்கையையும் சாடியுள்ளார்.</p>
<p>ஆனால் 1970 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம் தோல்வியடைந்த பின்பு அமிர்தலிங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிச் செயலாளர் மு.சிவசிதம்பரமும் அவ்வாண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தார்.</p>
<p>தற்செயலாக அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பலாலி விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்த போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட உரையாடலானது தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>தமிழ்க்கட்சிகளின் பிரிவு<br />
இரு பெரும் தமிழ்க் கட்சிகளும் பிரிந்து ஒன்றையொன்று எதிர்த்த சூழலில் இரு கட்சிகளின் செயலாளர்களும் ஒரு கட்சியினால் மறுகட்சியென தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இரு கட்சிகளும் கூட்டுச்சேர்ந்தால் மேற்படி இரு செயலாளர்களினதும் வெற்றி உறுதிப்படுத்தப்பட வாய்ப்புண்டு என்பது வெளிப்படை.. இதனால் இரு செயலாளர்களின் தோல்வியும் கூட்டணி அமைப்பதற்கான துண்டுகோலை மேற்படி இரு தலைவர்களுக்கும் வழங்கியிருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.</p>
<p>தேர்தலில் தோல்வியடைந்த அமிர்தலிங்கம் தான் இழந்த பெருமையை மீண்டும் பெறுவதற்கு ஆக்ரோஷமாக அரசியற் பரப்புரையில் ஈடுபட்டார். இக்காலத்தில் தமிழரின் விடுதலை வீரனாக அவர் தன்னை காட்சிப்படுத்தினார்.</p>
<p>அதேவேளை, இன்னொரு புறம் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் மேற்கொண்ட தீவிர தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராக இளைஞர்கள் வீறுடன் செயற்படத்தொடங்கியுள்ளனர்.</p>
<p>குறிப்பாக உயர் கல்வி தொடர்பாக பல்கலைக்கழக அனுமதியில் மேற்கொள்ளப்பட்ட ‘இனவாரி தரப்படுத்தல்’ தமிழ் இளைஞர்களை பெரிதும் ஆத்திரப்படுத்தியுள்ளது.</p>
<p>மேலும் வேலைவாய்ப்பில் இன ஒடுக்குமுறை முற்றிலும் பின்பற்றப்படலாயிற்று. அத்துடன் பொலீஸ் அடக்குமுறைகள், அரசியல் பண்பாட்டு ரீதியில் அரசின் தமிழின விரோத செயற்பாடுகள் என்பன எல்லாம் இணைந்து இளைஞர்களை போராடத்தூண்டியுள்ளன.</p>
<p>தமிழின விரோத அரசியல் யாப்பு<br />
1972ஆம் ஆண்டு தமிழின விரோத அரசியல் யாப்பு பரந்துபட்ட அளவில் தமிழ் மக்கள் மத்தியில் அரச எதிர்ப்பை பூரணமாக ஏற்படுத்தியது. இதனால் தமிழ் இளைஞர்கள் சிங்கள அரசுக்கும் பொலிஸ்க்கு எதிராக முனைப்புடன் செயற்பட தலைப்பட்டனர்.</p>
<p>குறிப்பாக 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அரசு அனைத்து வகையிலும் தடையாக செயற்பட்டது. இவை எல்லாவற்றையும் மீறி முழு நகரத்தையுமே மக்கள் விழா கோலம் பூரணச்செய்தனர்.</p>
<p>அத்துடன் இல்லங்களில் எல்லாம் வளைவுகள் கட்டப்பட்டு வீட்டுக்குவீடு அலங்கரிக்கப்பட்டு தமிழ் மண்ணே முழு அளவிலான விழாக் கோலம் பூண்டிருந்தது. கம்ப இராமாயணத்தில் இராமரின் முடிசூட்டு விழாவுக்காக அயோத்தி மாநகரம் அலங்கரிக்கபட்டிருந்ததாக கம்பரால் வர்ணிக்கப்பட்டிருந்ததற்கு ஒத்தவகையில் யாழ்ப்பாண நகரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.</p>
<p>எந்ததொரு அமைப்புக்களாலும் ஏற்பாடு செய்யப்படாமல் எவ்வித நிதியுதவிகளும் யாராலும் செய்யப்படாமல் மக்கள் தம் இயல்பாக தத்தம் சொந்த பணங்களில் தத்தம் சூழல்களை அலங்கரித்தனர்.</p>
<p>வீட்டுக்கு வீடு ஒவ்வொரு வாசல்களிலும் நிறைகுடங்கள் வைத்தும் வீதியெங்கும் மக்களுக்கு இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டன. தமிழரின் பண்பாட்டு அம்சங்கள் அலங்கரிப்பிலும், உணவு வகைகளிலும், ஆடை அணிதல்களிலும், விருந்தோம்பல்களிலும் வெளிப்பட்டுள்ளன.</p>
<p>ஆயுதப்போராட்ட பின்னணி<br />
இதன் பின்னணியில் ஆயுதப் போராட்ட வடிவிலும், சாத்வீகப் போராட்ட வடிவிலும் தமிழீழக்கோரிக்கை பரிணாமமடைந்தது. இதில் ஆயுதப்போராட்ட வடிவத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் தனித்து நோக்கப்பட வேண்டியது.</p>
<p>அதேவேளை, இளைஞர் மத்தியில் ஆயுதப்போராட்டத்துடன் கூடிய தமிழீழக்கோரிக்கை முதிர்ந்த பின்னணியில் தமிழர் கூட்டணி 1976 ஆம் ஆண்டு மே மாதம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வாயிலாக தமிழீழக் கோரிக்கையை சாத்வீக- ஜனநாயக வழியில் முன்வைத்தது. தமிழர் கூட்டணியையும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றம் செய்தது.</p>
<p>இதனைத்தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொதுத் தேர்தலை தமிழீழக் கோரிக்கைக்கான ஆணை பெறும் தேர்தலாக எதிர்கொண்டு அதிற்பெருவெற்றி ஈட்டியது. இதன் வாயிலாக தமிழ் மக்கள் தமிழீழக்கோரிக்கைக்கு தேர்தல் மூலம் ஆணை வழங்கியுள்ளனர்.</p>
<p>இத்தேர்தலில் தமிழீழக்கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தத்தொடங்கிய இளைஞர் தரப்பினர் வேறுபாடின்றி ஆதரவளித்தனர். இதற்குள் இருந்து ஆயுதப்போராட்டம் பரிணாமம் பெற்று எழுச்சி பெற்றமை அடுத்த கட்ட வளர்ச்சியாகும்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-origin-and-development-of-tamil-eelam-demand/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/ltte-leader-son-balachandran-murder-investigation/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/ltte-leader-son-balachandran-murder-investigation/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jul 2023 14:23:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[balachandran]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[LTTE]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Prabhakaran]]></category>
		<category><![CDATA[Sri Lanka Army]]></category>
		<category><![CDATA[Sri Lanka Final War]]></category>
		<category><![CDATA[Sri Lankan Tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=81432</guid>

					<description><![CDATA[முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டாரா என்பதினை உறுதிசெய்யும் நோக்கிலேயே பகுப்பாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “பாலகன் பாலச்சந்திரனின் மரண விசாரணை தொடர்பில் பகுப்பாய்வு செய்தவர்கள் சுடு கள நிபுணர்கள் ஆவர். பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான புகைப்படம் மற்றும் படுகொலை சம்பவத்தை உறுதி படுத்துவதற்காகவே இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>முக்கிய ஆதாரமாகும் பாலச்சந்திரன் மரணத்தின் அறிக்கை</h4>
<p>விடுதலை புலிகளின் தலைவர் <a href="https://tamilnaadi.com/news/local/2023/07/07/ltte-leader-prabaharan-death-karuna-witness/">வேலுப்பிள்ளை</a> பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டாரா என்பதினை உறுதிசெய்யும் நோக்கிலேயே பகுப்பாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,</p>
<p>“பாலகன் பாலச்சந்திரனின் மரண விசாரணை தொடர்பில் பகுப்பாய்வு செய்தவர்கள் சுடு கள நிபுணர்கள் ஆவர். பாலச்சந்திரனின் மரணம் தொடர்பிலான புகைப்படம் மற்றும் படுகொலை சம்பவத்தை உறுதி படுத்துவதற்காகவே இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>ஆனால் முல்லைதீவு மனிதப்புதைகுழி விவகார ஆய்வு நடவடிக்கைகளுக்கு இவ்வாறான பகுப்பாய்வுகள் தேவையில்லை. தொழிநுட்ப கருவிகளின் உதவியிலேயே இதனை மேற்கொள்ளலாம்.</p>
<p>முல்லைதீவு மனித புதைகுழி விவகாரதிற்கும் பாலச்சந்திரனின் மரண விசாரணனைக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.</p>
<p>மேலும், இந்தியா, 13 திருத்தச்சட்டம் என அனைவரும் அரசியலின் பின்னே செல்வதால், இவ்வாறான நமது உறவுகளின் மரணங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளை மறந்து விடுகிறார்கள்.</p>
<p>அத்தோடு, முல்லைதீவு மனிதப்புதைகுழி எச்சங்கள் காணாமலாக்கப்பட்டோரின் மாதிரிகளோடு பொருந்துமாக இருந்தால் அது நமக்கு கிடைத்த மிக பெரியதொரு ஆதாரம்.</p>
<p>இவ்வாறான ஆதாரங்களை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல முடியும். அல்லது சர்வதேச பரிந்துரைகளை பெற முடியும்.</p>
<p>அத்தோடு காணாமலாக்கப்பட்டோரின் போராட்டமே தமிழ் மக்களின் உயிர்ப்பு போராட்டமாக காணப்படுகிறது.&#8221; என தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/ltte-leader-son-balachandran-murder-investigation/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
