<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>lohan rathwatte &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/lohan-rathwatte/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Fri, 04 Aug 2023 17:33:44 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>lohan rathwatte &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பனம்கள் தேடியும் கிடைக்கவில்லை &#8211; யாழில் புலம்பிய லொஹான்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/lohan-lamented-in-yahi-even-after-looking-for-favors/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/lohan-lamented-in-yahi-even-after-looking-for-favors/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Oct 2022 09:50:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=63687</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார். பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவித்தபோதே லொகான் ரத்வத்த நகைச்சுவையாக இதனை தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடியபோது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார். மேலும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணத்தில் பனைமரங்கள் இருக்கின்றபோதும் பனம்கள்ளை பெறுவதற்கான வழிவகைகள் தனக்கு கிடைக்கவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நகைச்சுவையாக தெரிவித்தார்.</p>
<p>பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவித்தபோதே லொகான் ரத்வத்த நகைச்சுவையாக இதனை தெரிவித்தார்.</p>
<p>பல்லாயிரக்கணக்கான பனைமரங்கள் உள்ள இடமாக யாழ்ப்பாணமும் காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனம் கள்ளை தேடியபோது யாழ்ப்பாணத்தில் பனம் கள்ளு எனக்கு கிடைக்கவில்லை என்றார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகளில் அதிக கேள்வி காணப்படுகின்றது, பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும்.</p>
<p>45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டுவந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் சொந்தமானதொரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது &#8211; என்றார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/lohan-lamented-in-yahi-even-after-looking-for-favors/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறைக்கைதிகள் விரும்பிய சிறைக்கு மாற்றம்! &#8211; உயர் நீதிமன்றம் தீர்ப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/transfer-to-the-prison-desired-by-tamil-prisoners-high-court-judgment/</link>
					<comments>https://tamilnaadi.com/news/transfer-to-the-prison-desired-by-tamil-prisoners-high-court-judgment/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Oct 2021 13:03:31 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[highcourt]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[M.A. Sumanthiran]]></category>
		<category><![CDATA[prisoners]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=17450</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைகளை உரிய முறையில் எடுத்து, சட்டமா அதிபரின் உரிய கலந்தாலோசனையுடன், அவ்விடயங்களின் விவரங்களை உயர்நீதிமன்றத்துக்கும் தெரியப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது.</p>
<p>அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள் தொடர்பில் குற்றவியல் நடவடிக்கைகளை உரிய முறையில் எடுத்து, சட்டமா அதிபரின் உரிய கலந்தாலோசனையுடன், அவ்விடயங்களின் விவரங்களை உயர்நீதிமன்றத்துக்கும் தெரியப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.</p>
<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுள்ளமையுடன் மேற்படி இடைக்காலக் கட்டளைகளையும் பிறப்பித்தது.</p>
<p>அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற அப்போதைய சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் மண்டியிடச் செய்து, தலையில் கைத் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.</p>
<p>இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோரின் அனுசரணையுடன் சட்டத்தரணி மோகன் பாலேந்திரா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள் காமினி அமரசேகர, யஸந்த கோட்டாகொட, ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.</p>
<p>இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் மனுதாரர்களின் திருத்தப்பட்ட சத்தியப் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு எதிராகச் சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் அரசமைப்பின் 11 ஆவது பிரிவின் கீழ் முன் வைக்கப்படுகின்றமையால் அவர்கள் இருவர் சார்பிலும் சட்டமா அதிபரின் பிரதிநிதிகள் எவரும் மன்றில் முன்னிலையாக மாட்டார்கள் என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>மனுவைப் பரிசீலித்த நீதியரசர்கள், அரசமைப்பின் 11 ஆம் பிரிவின் கீழான சித்திரவதைக்கு எதிரான சுதந்திரம், 12(1) ஆம் பிரிவின் கீழான சமத்துவமாக நடத்தப்படுவதற்கான உரிமை மற்றும் 12(2) ஆம் பிரிவின் கீழான இன, மத, மொழி, சாதி, பாலினம், அரசியல் நிலைப்பாடு, பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படாமல் இருப்பதற்கான் உரிமை ஆகிய பிரிவுகளின் கீழ் மனுவை விசாரணைக்கு ஏற்கின்றனர் என அறிவித்தனர்.</p>
<p>மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் கோரிக்கைகளை விரிவாக ஆராய்ந்த நீதியரசர்கள், அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தடுப்புக் காவல் கைதிகளை அவர்கள் விரும்பினால், விரும்பிக் கோரும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அல்லது அநுராதபுரத்தில் இருக்க சம்மதம் தெரிவித்தால் அங்கே இருக்க முடியும் எனவும் பணித்தனர்.</p>
<p>இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் குற்றவியல் நடவடிக்கைகளை ஆரம்பித்து, விரிவான அறிக்கை பெற்று மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ்மா அதிபருக்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.</p>
<p>மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், த.ஜெயசிங்கம் ஆகியோர் முன்னிலையாகினர்.</p>
<p>சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ரஜீவ குணதிலக முன்னிலையானார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/transfer-to-the-prison-desired-by-tamil-prisoners-high-court-judgment/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொஹான் விவகாரம்! &#8211; நீதிபதி நியமனம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 17:39:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ali Sabri]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Dalus azhakaperuma]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அநுராதபுரம் சிறை]]></category>
		<category><![CDATA[அலி சப்ரி]]></category>
		<category><![CDATA[சி.ஐ.டி]]></category>
		<category><![CDATA[டலஸ் அழகப் பெரும]]></category>
		<category><![CDATA[நீதிபதி நியமனம்]]></category>
		<category><![CDATA[மனித உரிமை ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11289</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன. இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதி சென்ற லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பவுள்ளன.</p>
<p>இவ்வாறு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி,</p>
<p>அநுராபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றது எனக் கூறப்படும் சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கவை. அவை நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயலாகும்.</p>
<p>மேற்படி சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க உயிர்நீதிமன்றில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.</p>
<p>இவை தொடர்பில் சி.ஐ.டியினர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபை ஆகியவை விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.</p>
<p>சிறைக்கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது &#8211; என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/the-lohan-affair-appointment-of-judge/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Sep 2021 07:31:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[justice]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[missing people]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[parliment]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Sreedharan]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[இழப்பீடு தொகை]]></category>
		<category><![CDATA[ஐ நா மனித உரிமைகள் பேரவை]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கோத்தாபாய ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[சிறீதரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதி]]></category>
		<category><![CDATA[நீதி]]></category>
		<category><![CDATA[மரண சான்றிதழ்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=11281</guid>

					<description><![CDATA[கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? &#8211; சிறீதரன் சபையில் சீற்றம்</h4>
<p><a href="https://www.mfa.gov.lk/wp-content/uploads/2018/09/OMP-Report-and-Recommendation-Tamil-Version.pdf" target="_blank" rel="noopener">இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர்</a> தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்?</p>
<p>இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.</p>
<p>காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்கி இழப்பீட்டை வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலாளரிடம் கூறியுள்ளார்.</p>
<p>இறுதிப்போரின் போது ஓமந்தையில் வைத்து தமது உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதா?</p>
<p>அவ்வாறெனின் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனரா? ஒப்படைக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்படுவர் என உறுதியளித்தவர்கள் தற்போது இழப்பீட்டு தொகையை பரிந்துரை செய்கின்றனர்.</p>
<p>ஒப்படைக்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள் என அவர்களது உறவுகள் காத்திருக்கிறார்கள்.</p>
<p>உள்ளகப் பிரச்சினை தொடர்பில் ஆராய உள்ளக விசாரணைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் எனவும் அரசு கூறுகிறது. கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா?</p>
<p>உள்ளக விசாரணையை நாம் ஏற்கமாட்டோம். நாங்கள் சுயாதீனமான தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய நேர்த்தியான சர்வதேச விசாரணையையே கேட்கிறோம்.</p>
<p>கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலை சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட வைத்து அவர்களை சுட்டுக் கொள்வேன் என தனது சப்பாத்துக்களை நக்க சொல்லியுள்ளார். அத்துடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார்.</p>
<p>சாதாரண ஒருவரிடத்தில், துப்பாக்கி அல்லது வெடிபொருள்கள் இருந்து கைப்பற்றப்பட்டால் அவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். ஆனால், லொஹானின் விவகாரத்தில் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை.</p>
<p>அவரிடமிருக்கும் சகல அதிகாரங்களை பறித்து, அவரை கைது செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால் அவ்வாறு நீதி வழங்கப்படவில்லை. இந்த கொலை அச்சுறுத்தல் சம்பவமானது தற்போதைய அரசின் ஏதேச்சதிகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>இலங்கை வரலாற்றில் சிறைகளில் சிறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் அனுசரணையில் ஏராளமான படுகொலைகள் இடம்பெறுகின்றன. தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொடூரமான சித்திரவதைகளும் இடம்பெறுகின்றன.</p>
<p>எனவே உள்ளக விசாரணையால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. இது தொடர்பில் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் &#8211; என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/is-it-fair-for-the-killers-to-investigate-the-murder/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி மறுப்பு???</title>
		<link>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 21:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[Kavinda Jayawardena]]></category>
		<category><![CDATA[lohan]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[mano ganeshan]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[Rohana Bandara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம் சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிமுனை]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[மனோகணேசன்]]></category>
		<category><![CDATA[மிரட்டல்]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10221</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தகவல் வழங்கியுள்ளார்.</p>
<p>இதனையடுத்து அவர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் சிறைச்சாலை சென்று கைதிகளை பார்வையிட்ட மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p>அநுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர், லோஹான் ரத்வத்த தன் முன்னால் துப்பாக்கி நீட்டி மிரட்டினார் என தெரிவித்துள்ளார். சற்று பிசகினாலும் அது வெடித்திருக்கும். அது வெடித்திருந்தால் நாங்கள் அனைவரும் புலிச் சந்தேகநபர்கள் என்பதால் அவரை கொலை செய்ய முயன்றோம் என தெரிவித்திருப்பார்கள்.</p>
<p>பதிலுக்கு அவர் சுட்டதால் கலவரம் ஏற்பட்டது என கதை கட்டி திரிபுபடுத்தி கூறியிருப்பார்கள் என கைதிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்,</p>
<p>இராஜாங்க அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்கு சென்று சிறைக் கைதிகளை அச்சுறுத்தியுள்ளமைஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது &#8211; என்றார்.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி மண்டியிட வைத்த சம்பவம் நாட்டில் அனைத்து தரப்பினர்களிடையேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இந்த நிலையில் குறித்த கைதிகளை பார்வையிடுவதற்காக மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/denial-of-permission-to-go-to-jail/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அநுராதபுரம் சிறையில் சிசிடிவி கமெராக்கள் இல்லை!!!</title>
		<link>https://tamilnaadi.com/news/there-are-no-cctv-cameras-in-the-anuradhapura-jail/</link>
					<comments>https://tamilnaadi.com/news/there-are-no-cctv-cameras-in-the-anuradhapura-jail/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 19:17:22 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[CCTV]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அனுராதபுரம்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலை]]></category>
		<category><![CDATA[தமிழ் அரசியல் கைதிகள்]]></category>
		<category><![CDATA[தென்னிலங்கை]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10184</guid>

					<description><![CDATA[அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது. லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. குறித்த செய்தியில், அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த சிசிரிவி வசதிகள் காணப்படுகின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில், லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>அநுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமெராக்கள் பொருத்தப்பட்டு இல்லை என்று சிங்கள பத்திரிகை ஒன்றில் தெரிவித்துள்ளது.</p>
<p>லொஹான் ரத்வத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை மிரட்டினார் என தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது.</p>
<p>குறித்த செய்தியில், அங்குனகொலபெலஸ்ஸ, களுத்துறை மற்றும் பூஸா ஆகிய சிறைச்சாலைகளில் மட்டுமே இந்த சிசிரிவி வசதிகள் காணப்படுகின்றன எனதெரிவிக்கப்பட்டுள்ளது .</p>
<p>இந்நிலையில், லொஹான் ரத்வத்தவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு சிசிடிவி காட்சிகள் எதுவும் கிடைக்காது.</p>
<p>ஆனாலும் சிறைச்சாலை வருபவர்கள் கையொப்பமிடும் பதிவுப் புத்தகத்த்தின் மூலமாக தேவையேற்படின் விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று சிறைச்சாலை தலைமையகம் கூறியுள்ளது எனவும் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/there-are-no-cctv-cameras-in-the-anuradhapura-jail/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய</title>
		<link>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/</link>
					<comments>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Sep 2021 12:26:00 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[Prisoner]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[அக்மீமன தயாரத்தன தேரர்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இராஜாங்க அமைச்சர்]]></category>
		<category><![CDATA[கைதி கைத்துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[சிங்கள ராவய அமைப்பு]]></category>
		<category><![CDATA[சிறைச்சலை]]></category>
		<category><![CDATA[லொஹான் ரத்வத்த]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10112</guid>

					<description><![CDATA[நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார் மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! &#8211; சிங்கள ராவய</h4>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.</p>
<p>கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் மேற்படி தெரிவித்துள்ளார்</p>
<p>மேலும், இராஜாங்க அமைச்சர்ரொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை துப்பாக்கிமுனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரும் குற்றச்செயல் ஆகும்.</p>
<p>குற்றம் செய்தவர் பதவி விலகினால் மட்டும் போதாது. அவர் மிகப்பெரும் குற்றம் புரிந்துள்ளார். குறித்த இராஜாங்க அமைச்சர் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.</p>
<p>இது போன்ற செயற்பாடுகளில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருமாயின் எதிர்காலத்தில் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டி ஏற்படும். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியே அரசு அழிய வேண்டி ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/justice-must-be-upheld/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>லொஹானுடன் அழகு ராணி சிறைக்கு சென்றமை உண்மையே!!</title>
		<link>https://tamilnaadi.com/news/it-is-true-that-the-beauty-queen-went-to-jail-with-lohan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/it-is-true-that-the-beauty-queen-went-to-jail-with-lohan/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 22:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[anuradhapuram]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[Jail]]></category>
		<category><![CDATA[lohan rathwatte]]></category>
		<category><![CDATA[prisoners]]></category>
		<category><![CDATA[Pushpika de Silva]]></category>
		<category><![CDATA[Senaka Perera]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamils]]></category>
		<category><![CDATA[UN]]></category>
		<category><![CDATA[welikada]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=10074</guid>

					<description><![CDATA[இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான் ரத்வத்தையுடன் சென்றேன் என தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், குறித்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை உண்மையென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. லொஹான் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான் ரத்வத்தையுடன் சென்றேன் என தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், குறித்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த நிலையில், புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை உண்மையென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>லொஹான் ரத்வத்தையுடன் திருமதி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றார். இதில் சந்தேகமில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.</p>
<p>லொஹான் ரத்வத்தையுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற குழுவில் அழகு ராணி ஒருவரும் இருந்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, “நான் அங்கு செல்லவில்லை. அந்தக் கதைகள் பொய்யானவை&#8221; என புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை தான் பெண்ணுடன் வெலிக்கடை சிறைக்கு சென்றேன் என வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/it-is-true-that-the-beauty-queen-went-to-jail-with-lohan/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
