<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Level 2 Amber Alert &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/level-2-amber-alert/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 16 Dec 2025 16:02:13 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Level 2 Amber Alert &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை நீக்கம்; பல மாவட்டங்களில் நிலை மஞ்சள் எச்சரிக்கைகள் நீடிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/landslide-warning-withdrawn-amber-and-yellow-alerts-extended-in-multiple-districts/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 16:02:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Landslide warning]]></category>
		<category><![CDATA[Level 2 Amber Alert]]></category>
		<category><![CDATA[Level 3 Withdrawn]]></category>
		<category><![CDATA[NBRO]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207401</guid>

					<description><![CDATA[நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் வழங்கப்பட்டிருந்த நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organisation &#8211; NBRO) தற்போதைய நிலவரம் மற்றும் சமீபத்திய மழையை மதிப்பாய்வு செய்த பின்னர், பல மாவட்டங்களில் நிலை 2 (ஆம்பர்) மற்றும் நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோறளை, பூஜாபிட்டிய, உடபளாத்த, குண்டசாலை, கங்காவட கோரளை, தெல்தோட்டை, மெததும்பர, மினிபே, பன்வில, [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையால் வழங்கப்பட்டிருந்த நிலை 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (National Building Research Organisation &#8211; NBRO) தற்போதைய நிலவரம் மற்றும் சமீபத்திய மழையை மதிப்பாய்வு செய்த பின்னர், பல மாவட்டங்களில் நிலை 2 (ஆம்பர்) மற்றும் நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கைகளை நீட்டித்துள்ளது.</p>
<p>கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோறளை, பூஜாபிட்டிய, உடபளாத்த, குண்டசாலை, கங்காவட கோரளை, தெல்தோட்டை, மெததும்பர, மினிபே, பன்வில, டோலுவ, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, அக்குரணை, பத்ததும்பர, தும்பனை, பஸ்பாகே , ஆகிய பிரதேசங்களே பாதிக்கப்பட்டுள்ளன.</p>
<p>பாத்தஹேவஹெட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள். குருநாகல் மாவட்டத்தில், ரிதீகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் 2 ஆம் நிலை எச்சரிக்கையின் கீழ் நீடிக்கின்றன.</p>
<p>நுவரெலியா மாவட்டத்தில், ஹங்குரகெத்த, வலப்பனை, மதுரட்ட மற்றும் நில்தண்டஹின்ன ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் நிலை 2 (ஆம்பர்) எச்சரிக்கையின் கீழ் தொடர்கின்றன. இதற்கிடையில், நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கை, குடியிருப்பாளர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல், பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம, பதுளை, ஹாலி எல, மீகஹகிவுல, ஹல்துமுல்ல, கந்தகெட்டிய, பசறை, சொரணதொட்ட, எல்ல, வெலிமடை, லுணுகல, ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு 1 ஆம் நிலை எச்சரிக்கைகள் பொருந்தும். குருநாகல் மாவட்டத்தில், மல்லவப்பிட்டிய, பொல்கஹவெல, மாவத்தகம மற்றும் அலவ்வ பிரதேச செயலகப் பிரிவுகளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் கண்காணிப்பில் உள்ளன.</p>
<p>மாத்தளை மாவட்டத்தில் நாவுல, பல்லேபொல, அம்பங்கங்க கோரளை, யடவத்த, வில்கமுவ, லக்கல பல்லேகம, உக்குவெல, ரத்தோட்ட மற்றும் மாத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் முதலாம் நிலை எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>நுவரெலியா மாவட்டத்தில், கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு, அம்பகமுவ கோரளை, நோர்வூட், தலவாக்கலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களும் மட்டம் 1 (மஞ்சள்) எச்சரிக்கையின் கீழ் உள்ளன</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
