<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Landslide Risk &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/landslide-risk/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 13 Dec 2025 16:16:26 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Landslide Risk &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மீண்டும் வீட்டுக்குச் செல்லுமாறு அழுத்தம் இல்லை &#8211; மக்களை தெளிவுபடுத்தினோம்! யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்ட முகாமையாளர் மறுப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/no-pressure-to-return-to-unsafe-homes-yorksford-estate-manager-denies-allegations-amidst-landslide-risk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Dec 2025 16:16:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Estate Management]]></category>
		<category><![CDATA[Forced Eviction]]></category>
		<category><![CDATA[Landslide Risk]]></category>
		<category><![CDATA[NBRO Report]]></category>
		<category><![CDATA[Temporary Shelters]]></category>
		<category><![CDATA[Thalawakele]]></category>
		<category><![CDATA[Yorksford Estate]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207151</guid>

					<description><![CDATA[தலைவாக்கலை, வட்டகொடை, யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, உடனடியாக மீண்டும் அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டை தோட்ட முகாமையாளர் நளின்குமார் மறுத்துள்ளார். கடந்த மாதம் 27ஆம் திகதி நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக இந்தத் தோட்டத்தில் நிலம் தாழிறங்கியதுடன், அங்குள்ள தொடர் லயன் வீடுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டன. இதனால், 45 குடும்பங்களைச் சேர்ந்த 108 [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தலைவாக்கலை, வட்டகொடை, யோர்க்ஸ்ஃபோர்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, உடனடியாக மீண்டும் அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டை தோட்ட முகாமையாளர் நளின்குமார் மறுத்துள்ளார்.</p>
<p>கடந்த மாதம் 27ஆம் திகதி நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக இந்தத் தோட்டத்தில் நிலம் தாழிறங்கியதுடன், அங்குள்ள தொடர் லயன் வீடுகளில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டன.</p>
<p>இதனால், 45 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, தோட்டத்திலுள்ள சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>குறிப்பாக 16 லயன் வீடுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதியில் பாரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வீடுகள் நாளுக்கு நாள் மேலும் தாழிறங்கி வருகின்றன.</p>
<p>இவ்வாறான ஆபத்தான சூழ்நிலையில், சிறுவர் பகல் பராமரிப்பு நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியேறி, மீண்டும் அதே வீடுகளுக்குத் திரும்புமாறு தோட்ட நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.</p>
<p>தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள 31 வீடுகளைப் பரிசோதித்த போதிலும், மிக மோசமான அபாயத்தில் உள்ள இந்த 16 லயன் வீடுகளைக் கொண்ட தொகுதி இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>
<p>மக்களின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக பெருந்தோட்டத்தின் முகாமையாளர் நளின்குமாரிடம் எமது செய்தி சேவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:</p>
<p>தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, பிரதேச செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வியும் குறித்த தோட்டத்துக்குச் சென்று மக்களைத் தெளிவுபடுத்தினர்.</p>
<p>அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பான இடங்களில் உள்ளவர்களை மீண்டும் அந்த இடங்களில் குடியமர்த்துமாறு தனக்குப் பணிக்கப்பட்டது.</p>
<p>அதன்படி, பாதுகாப்பான இடம் என NBRO ஆல் உறுதி செய்யப்பட்டு, பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை மாத்திரம் மீளச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் குற்றஞ்சாட்டுவது போல, அனர்த்தம் ஏற்படக்கூடிய அபாயகரமான இடங்களில் உள்ளவர்களையும் தாம் செல்லுமாறு கூறவில்லை எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணம் தவிர்க்குமாறு சாரதிகளுக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/nuwara-eliya-district-secretary-urges-drivers-to-avoid-night-time-travel-on-all-entry-roads-due-to-landslide-risk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 14:20:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[District Secretary Thushari Tennakoon]]></category>
		<category><![CDATA[DITWA Cyclone.]]></category>
		<category><![CDATA[Kandy-Nuwara Eliya Road]]></category>
		<category><![CDATA[Landslide Risk]]></category>
		<category><![CDATA[Night Travel Ban]]></category>
		<category><![CDATA[Nuwara Eliya]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=207005</guid>

					<description><![CDATA[நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனச் சாரதிகளுக்கு மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை &#8211; நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வீதி தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். &#8216;திட்வா&#8217; புயலினால் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் எனச் சாரதிகளுக்கு மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டிருந்த கம்பளை &#8211; நுவரெலியா பிரதான வீதியின் கட்டுகித்துல பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வீதி தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.</p>
<p>நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாகத் தொடர்ந்தும் வீதிகளில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், விபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.</p>
<p>&#8216;திட்வா&#8217; புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் மாவட்ட செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை மாவட்டத்தில் மீண்டும் கனமழை: மக்கள் தற்காலிக முகாம்களிலேயே தங்குமாறு மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/badulla-district-warned-as-heavy-rain-resumes-people-urged-to-remain-in-safety-centers-due-to-landslide-risk/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 18:12:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla District]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Heavy Rain Warning]]></category>
		<category><![CDATA[Landslide Risk]]></category>
		<category><![CDATA[Panduka Sri Prabath Abeywardena (District Secretary)]]></category>
		<category><![CDATA[Safety Centers.]]></category>
		<category><![CDATA[Temporary Shelters]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=206776</guid>

					<description><![CDATA[பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் அதிகமாக உள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது அவர்கள் தங்கியுள்ள பாதுகாப்பு மையங்கள் அல்லது தற்காலிகத் தங்குமிடங்களிலேயே தொடர்ந்து தங்குமாறு மாவட்டச் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 9) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழை காரணமாக மண் சரிவு, பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழும் அபாயம் அதிகமாக உள்ளது.</p>
<p>அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது அவர்கள் தங்கியுள்ள பாதுகாப்பு மையங்கள் அல்லது தற்காலிகத் தங்குமிடங்களிலேயே தொடர்ந்து தங்குமாறு மாவட்டச் செயலாளர் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.</p>
<p>மாவட்டத்தின் பல பகுதிகளில் பேரழிவுகளால் அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சொத்துகளின் இடிபாடுகளை மக்கள் இன்னும் தேடி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கனமழை காரணமாக ஏற்படும் புதிய அனர்த்தங்களைத் தவிர்க்க, பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாவட்டச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மண்சரிவு அபாயம் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் மூடப்படுகிறது!</title>
		<link>https://tamilnaadi.com/news/colombo-kandy-main-road-to-be-closed-again-from-10-pm-due-to-landslide-risk-near-ganetenna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 17:17:54 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Colombo-Kandy Road]]></category>
		<category><![CDATA[Disaster Management Centre (DMC)]]></category>
		<category><![CDATA[Ganetenna]]></category>
		<category><![CDATA[Landslide Risk]]></category>
		<category><![CDATA[Road Closure]]></category>
		<category><![CDATA[Traffic Alert.]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=205911</guid>

					<description><![CDATA[கொழும்பு &#8211; கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre &#8211; DMC) தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வீதி கனமழை மற்றும் மண்சரிவு காரணமாகக் கனேதென்ன (Ganetenna) பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி ஒரு வழிப் பாதையாகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்தது. தற்போது நிலவும் வானிலை மற்றும் பாதுகாப்புக் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு &#8211; கண்டி பிரதான வீதி இன்று (நவம்பர் 26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre &#8211; DMC) தெரிவித்துள்ளது.</p>
<p>முன்னதாக, இந்த வீதி கனமழை மற்றும் மண்சரிவு காரணமாகக் கனேதென்ன (Ganetenna) பகுதியில் மூடப்பட்டிருந்தது.</p>
<p>பின்னர், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு குறித்த வீதி ஒரு வழிப் பாதையாகத் தற்காலிகமாகத் திறக்கப்பட்டிருந்தது.</p>
<p>தற்போது நிலவும் வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணிகளைக் கருத்தில் கொண்டு, இன்று இரவு முதல் மீண்டும் அந்த வீதி முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், மறு அறிவிப்பு வரும் வரை வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
