<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kurunthurmalai &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/kurunthurmalai/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 06 Aug 2023 14:07:07 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>kurunthurmalai &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டவிரோத கட்டுமானம்! &#8211; குறுந்தூர் மலைக்கு கள விஜயம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/illegal-construction-field-visit-to-kurundur-hill/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/illegal-construction-field-visit-to-kurundur-hill/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 15:21:03 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=74827</guid>

					<description><![CDATA[சட்டவிரோத கட்டுமானம்! &#8211; குறுந்தூர் மலைக்கு கள விஜயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது இதன்போது அவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறி கட்டுமானப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>சட்டவிரோத கட்டுமானம்! &#8211; குறுந்தூர் மலைக்கு கள விஜயம்</h4>
<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாணைகள் இன்று(27) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது</p>
<p>இதன்போது அவ்வாறு நீதிமன்ற கட்டளைகளை மீறி கட்டுமானப்பணிகள் எதுவும் நடக்கவில்லை என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரச சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர் இதனை ஆலய தரப்பு சட்டத்தரணிகள் எதிர்த்திருந்த நிலையில் பல மணி நேர வாத விவாதங்களின் பின்னர் நீதிபதி ரி.சரவணராஜா 04.07-2023 அன்று குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று நிலமைகளை பார்வையிட்ட பின்னர் கட்டளை வழங்க வழக்கு விசாரணைகளை ஆடி மாதம் நான்காம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சால்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ். தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,</p>
<p>இன்றைய தினம் AR/673/18 எனும் குருந்தூர் மலை தொடர்பான வழக்கானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே, விளக்கத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>நீதிமன்றால் வழங்கப்பட்ட இரண்டு கட்டளைகளுக்கு எதிராக மேம்படுத்தல் வேலைகள் எவையும் கட்டுமான வேலைகள் எவையும் செய்யக்கூடாது என்ற கட்டளை நீதவான் நீதிமன்றிலே ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது .</p>
<p>இந்த நீதிமன்றக்கட்டளைகளை மீறி தொல்பொருள் திணைக்களத்தினால் விஹாரைக் கட்டுமானங்கள் நினைவு செய்யப்பட்டிருந்தது இது தொடர்பாக நாங்கள் நகர்த்தல் பத்திரம் சமர்ப்பணம் செய்திருந்தோம். அந்த சமர்ப்பணத்திலே மேம்படுத்தல் வேலைத்திட்டங்கள் தொடர்பான சான்றுகளை புகைப்படங்கள் ஊடாகவும் நாங்கள் வெளிக்காட்டியிருந்தோம்</p>
<p>அது தொடர்பாக பதிலை வழங்குவதற்காக ஏப்ரல் 27ஆம் திகதி குறித்த வழக்கானது திகதி குறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் (27) தொல்பொருள் திணைக்களத்தின் சார்பில் சிரேஷ்ட அரச வாதிகள் நீதிமன்றிலே தோன்றி சமர்ப்பணங்களை செய்திருந்தனர்</p>
<p>அதிலே குறிப்பிட்ட கட்டுமானம் சட்டவிரோதமாக மேற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தனர். ஆனால் இதனை எதிர்த்து நாங்கள் குறித்த கட்டுமானம் சட்டவிரோதமானது என எமது கவனத்தை தெரிவித்தோம்</p>
<p>இது தொடர்பாக கட்டளை வழங்கிய நீதிமன்றமானது குறித்த இடத்துக்கு மீள கள விஜயம் மேற்கொண்டு அந்த கள விஜயத்தின் அடிப்படையில் குறித்த மேம்படுத்தல் வேலைகள் இடம்பெற்றனவா சட்டவிரோத செயற்பாடுகள் நீதிமன்ற கட்டளையை அவமதித்து இடம்பெற்றனவா என்பது தொடர்பாக தீர்ப்பளிப்பதற்காக ஏழாம் மாதம் நான்காம் திகதிக்கு தவணையிடப்பட்டது என்றார்</p>
<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் மன்றில் முறையீடு ஒன்று செய்யப்பட்டது.</p>
<p>இந் நிலையில் குருந்தூர்மலை விவகாரத்தில் அவ்வாறு நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் 30.03.2023ஆம் திகதியன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரணராஜா உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>அதற்கமைய குறித்த வழக்கானது முல்லைத்தீவு 30.03.2023 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது தொல்லியல் திணைக்களம் சார்பில், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அனுரமானதுங்க உள்ளிட்ட குழுவினரும், பொலிஸாரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.</p>
<p>இதன்போது தமது சிரேஸ்ர சட்டத்தரணிகளும், சிரேஸ்ர அலுவலர்களும் நீதிமன்றிற்கு வரமுடியாத காரணத்தினால், தமது விளக்கங்களைச் சமர்ப்பிப்பதற்கு மற்றுமொரு தவணையினை வழங்குமாறு பொலிஸாரும், தொல்பொருள் திணைக்களம் சார்ந்தவர்களும் நீதிமன்றிடம் விண்ணப்பம் செய்திருந்தனர்.</p>
<p>இந் நிலையில் குருந்தூர்மலைப் பிரதேசத்திலே நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்த விஹாரைக்குரிய கட்டுமானப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதானது, நீதிமன்றத்தை அவமதித்து இடம்பெறுகின்ற செயற்பாடு என, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>அத்தோடு பொதுமக்கள் நீதிமன்றின் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கக்கூடியதொரு செயற்பாடு எனவும் இதன்போது ஆலய நிர்வாகம் சார்பான சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p>இதேவேளை குறித்த குருந்தூர் மலைப் பிரதேசத்திற்கு நீதவான் நேரடியாக வருகைதந்து அங்கு இடம்பெறும் விடயங்களை பார்வையிட்டு, ஏற்கெனவே இருந்த நிலையை விட புதிதாக கட்டடங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அல்லது மேம்படுத்தல் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதனைப் பார்வையிட்டு, அதனடிப்படையில் வலிதான கட்டளை ஒன்றினை வழங்கவேண்டுமெனவும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது.</p>
<p>அதனடிப்படையில் இருதரப்பு சமர்ப்பணங்களைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் மற்றும், பொலிஸார் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்காக இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/illegal-construction-field-visit-to-kurundur-hill/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலை வழக்கு இன்று நீதிமன்றில்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-case/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-case/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Apr 2023 05:31:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=74775</guid>

					<description><![CDATA[குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்ததாவது, 1.பிடுங்ககப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு, ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீள பெற வழிவகை கோரல் 2.அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<div class="card-body">
<div>
<div>
<div>
<div class="sun-editor-editable body-font">
<div>
<p>குருந்தூர் மலை ஆதி சிவன் கோவில் வழக்கு இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வரும் சமயம் கடந்த காலத்தில் காட்டிய அர்ப்பணிப்பு போன்று சட்டதரணிகள் சிறப்பான சமர்ப்பணங்களை மேற்கொள்ள வேண்டுகின்றோம் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார் தெரிவித்துள்ளார்.</p>
<p>அவர் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>அதில் மேலும் தெரிவித்ததாவது,</p>
<p>1.பிடுங்ககப்பட்ட திரிசூலம் மீள நிறுவப்பட்டு, ஆதி சிவன் கோவில் வழிபாட்டுரிமையை மீள பெற வழிவகை கோரல்</p>
<p>2.அகழ்ந்தெடுக்கப்பட்ட எட்டுப்பட்டை தாரா வகை சிவலிங்கம் ஏன் மேலதிக ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை என கேள்வி எழுப்புதல்</p>
<p>3.அதனை சேதப்படுத்தி 3 துண்டாக உடைத்து சட்டவிரோதமாக அமைத்த தாதுகோப உச்சியில் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக தொல்லியல் திணைக்களத்திடம் விளக்கம் கோரல் போன்ற முக்கிய சமர்ப்பணங்களை செய்தால் நன்று என தோன்றுகின்றது.</p>
<p>அதே நேரம் மேற்படி விடயங்களை பாராளுமன்றில் முல்லைத்தீவு தொகுதி வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆழமாக வலியுறுத்தி அரசிடம் உடனடி தீர்வை கோர வேண்டும்.</p>
<p>இன்று நீதிமன்றிற்கும் பின்னர் களத்தரிசிப்பிற்கும்பும் மேற்கொண்டு அந்த பிரதேச முன்னாள் இன்னாள் பாராளுமன்ற மாகாண பிரதேச சபை உறுப்பினர்கள் வலுச்சேர்க்குமாறும் கேட்டு நிற்கின்றோம்.அனைவருக்கும் இறையாசி வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.</p>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
<div class="card-footer">
<div>#srilankaNews</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-case/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர்மலை விவகாரம் &#8211; வழக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kurundurmalai-matter-adjournment-of-case/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/kurundurmalai-matter-adjournment-of-case/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 16:37:52 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[mullaitheevu]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=70247</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார். குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் இன்று (02)    நீதிமன்றில் மன்றில் முறையீடு  செய்யப்பட்டது. குறிப்பாக குருந்தூர்மலை ஆதிசிவன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023 அன்று நீதிமன்றில் ஆஜராகி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>குருந்தூர் மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் இன்று (02)    நீதிமன்றில் மன்றில் முறையீடு  செய்யப்பட்டது.</p>
<p>குறிப்பாக குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தினர் சார்பில், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூகஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் வழக்கிலக்கம் AR/673/18 இன் ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல்செய்து, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி தொடர்ந்தும் சட்டவிரோமாக பௌத்த விஹாரை கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக முறையீடு செய்யப்பட்டது. இதன்போதே நீதிபதியால் மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டது.</p>
<p>இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p>
<p>குருந்தூர்மலை தொடர்பாக  வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.</p>
<p>எனினும், நீதிமன்றம் இவ்வாறு வழங்கிய கட்டளையையும் மீறி குருந்தூர்மலையில் பௌத்த விஹாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.</p>
<p>குறிப்பாக கடந்த 23.02.2023 அன்று குருந்தூர் மலைக்கு, தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரும் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>குறித்த விஜயத்தின்போதே இவ்வாறு நீதிமன்றத்தின் கட்டளைகள் மீறப்பட்டு  தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது.</p>
<p>இந்நிலையில் இவ்வாறு நீதிமன்றக்கட்டளைகள் மீறப்பட்டு தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுவது தொடர்பில் களவிஜயத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் கடந்த 23.02.2023அன்றையதினமே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் மேற்கொள்ளப்பட்டது.</p>
<p>அதேவேளை அதனைத் தொடர்ந்து   இன்று (02) முல்லைத்தீவு நீதிமன்றில்  AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றிலும் நீதமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறி பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மற்றும், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகிய தரப்பினர் இம்மாதம் 30ஆம் திகதி மன்றில் தோன்றி விளக்கமளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/kurundurmalai-matter-adjournment-of-case/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு &#8211; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/construction-of-vicarage-on-kurundur-hill-completed-tamil-national-peoples-front-made-a-surprise-visit/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/construction-of-vicarage-on-kurundur-hill-completed-tamil-national-peoples-front-made-a-surprise-visit/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 05:14:15 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Gajendrakumar Ponnambalam]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[Selvaraja Gajendran]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=70089</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.</p>
<p>கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது.</p>
<p>இருந்த போதிலும், இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,  பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.</p>
<p>கட்டுமானப் பணியை இராணுவத்தினர் முன்னெடுப்பதாகவும் இரவு வேளைகளில் குறித்த கட்டுமான பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவ்விடயங்கள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்க்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், நேற்றிரவு (26) 07 மணியளவில் குறித்த பகுதிக்கு விஜயம் செய்தனர்.</p>
<p>வழமையாக பகல் வேளையில் மக்கள் செல்லும் போது ஒழிந்துகொள்ளும் இராணுவத்தினர், அங்கு சிக்கியுள்ளனர். இதன்போது, குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டதுடன், இராணுவ சீருடையில் அவர்கள் காணப்பட்டனர்.</p>
<p>குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு பக்கற்றுக்களும் கட்டுமான பொருட்களும் காணப்பட்டதோடு, சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் தங்குவதற்கான வசதிகளுடன் கட்டில்கள் போடப்பட்டு, மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்  செய்து கொடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்றபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் காட்டுக்குள் ஓடியுள்ளார்.</p>
<p>எதிர்பாராத நேரத்தில் அங்கு சென்றமையினால் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி இடம்பெறும் வேலைத்திட்டங்களின் சூத்திரதாரிகள் மாட்டிக் கொண்டுள்ளனர்.</p>
<p>இவ்வாறான திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் தொடர்பில் மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா அமர்வுகளில் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone wp-image-70091" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_430aa41e43-300x169.jpg" alt="image 430aa41e43" width="994" height="560" title="குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்! 5" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_430aa41e43-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_430aa41e43-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_430aa41e43.jpg 900w" sizes="(max-width: 994px) 100vw, 994px" /> <img decoding="async" class="alignnone wp-image-70093" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_fe83e01258-300x169.jpg" alt="image fe83e01258" width="1147" height="646" title="குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்! 6" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_fe83e01258-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_fe83e01258-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_fe83e01258.jpg 900w" sizes="(max-width: 1147px) 100vw, 1147px" /> <img decoding="async" class="alignnone wp-image-70094" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_ff6813fbb1-300x169.jpg" alt="image ff6813fbb1" width="1111" height="626" title="குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்! 7" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_ff6813fbb1-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_ff6813fbb1-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_ff6813fbb1.jpg 900w" sizes="(max-width: 1111px) 100vw, 1111px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone wp-image-70090" src="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_272c401ef0-300x169.jpg" alt="image 272c401ef0" width="1014" height="571" title="குருந்தூர் மலையில் விகாரை கட்டுமானம் நிறைவு - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் விஜயம்! 8" srcset="https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_272c401ef0-300x169.jpg 300w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_272c401ef0-768x432.jpg 768w, https://tamilnaadi.com/wp-content/uploads/2023/02/image_272c401ef0.jpg 900w" sizes="(max-width: 1014px) 100vw, 1014px" /></p>
<p>#SriLankaNews</p>
<p>நன்றி &#8211; தவசீலன்</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/construction-of-vicarage-on-kurundur-hill-completed-tamil-national-peoples-front-made-a-surprise-visit/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலை விவகாரம்: ரவிகரன் உள்ளிட்டோருக்கு பிணை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-issue-bail-for-ravikaran-and-others/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-issue-bail-for-ravikaran-and-others/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Nov 2022 09:47:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[mullaideevu]]></category>
		<category><![CDATA[ravikaran]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=65749</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு &#8211; குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலையாகியுள்ளனர். அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு &#8211; குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறாகச் செயற்பட்டதாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலையாகியுள்ளனர்.</p>
<p>அதேவேளை குறித்த வழக்கானது எதிர்வரும் 02.03.2023 ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காக திகதியிடப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p>
<p>தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, &#8216;கபோக்&#8217; கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான முயற்சிக்கப்பட்டன.</p>
<p>பௌத்தபிக்குகள் மற்றும், பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து இதனை முன்னெடுத்திருந்தனர்.</p>
<p>இந் நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி மேற்கொள்ள இந்த முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஜனநாயகரீதியிலான போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,கந்தையா சிவநேசன் மற்றும், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.</p>
<p>அந்தவகையில் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி அன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த நிகழ்வுகள் அனைந்தும் ஏற்பாட்டாளர்களால் கைவிடப்பட்டிருந்தன.</p>
<p>இந்நிலையில் குருந்துர்மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளை தடுக்கமுற்பட்டதாகத் தெரிவித்து, ஆலய நிர்வாகத்தினரோடும், பொதுமக்களோடும் மக்கள் பிரதிநிதிகளாக இணைந்து ஜனநாயகவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
<p>மணலாறு சப்புமல்தென்ன ஆராண்ய விகாராதிபதி கல்கமுவ சந்தரபோதி தேரர் உள்ளிட்ட ஏழு தேரர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.</p>
<p>இந் நிலையில் தேரர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை விசாரணைக்கு வருமாறு முல்லைத்தீவு பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.</p>
<p>​பொலிஸாரால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைவாக கடந்த 02.09.2022 அன்று முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், சமூக ஆர்வலர் ஜூட் நிக்சன் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று தமது வாக்குமூலங்களையும் வழங்கியிருந்தனர்.</p>
<p>இவ்வாறு வாக்குமூலங்களைப் பெற்றதைத் தொடர்ந்து, பொலிஸார் இந்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்தனர்.</p>
<p>அந்தவகையில் பௌத்த துறவிகளுக்கும், அவர்களுடன் வழிபாடுகளுக்காக வந்த குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தமை, அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து B/688/22 என்னும் வழக்கிலக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள், 10.11.2022இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இந் நிலையில் விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளதும், பொலிஸாரினதும் வாதங்களைச் செவிமடுத்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், ஜூட் நிக்சன் ஆகியோரை தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், குறித்த வழக்கினை எதிர்வரும் 02.03.2023ஆம் திகதிக்கு மேலதிக விசாரணைகளுக்காகத் திகதியிட்டுள்ளார்.</p>
<p>மேலும் இந்த விவகாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனும் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-issue-bail-for-ravikaran-and-others/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலையை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்க முயற்சி!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/attempt-to-give-kurundur-hill-to-bhikkhu-and-vicar/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/attempt-to-give-kurundur-hill-to-bhikkhu-and-vicar/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Sep 2022 18:55:01 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[Sritharan]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=62204</guid>

					<description><![CDATA[&#8221; குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா?&#8221; இவ்வாறு அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவை அமைப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் துறைசார் இராஜாங்க அமைச்சர் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8221; குருந்தூர் மலையில் உள்ள காணியை அடாத்தாக அளந்து, அதனை பிக்குவுக்கும், விகாரைக்கும் வழங்குவதற்கு தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முயற்சிக்கின்றார். இதனை தடுப்பதற்கு உங்கள் பேரவை நடவடிக்கை எடுக்குமா?&#8221;</p>
<p>இவ்வாறு அரசாங்கத்திடம் இன்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேசிய பேரவை அமைப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.</p>
<p>குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் துறைசார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் நானும், சார்ள்ஸ் எம்.பியும் இன்று பேச்சு நடத்தினோம். காணி அளவீடு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார். தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு அழைப்பை ஏற்படுத்திக்கொடுத்தோம். அளவீட்டு பணியை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார். அந்த பணிப்புரை எடுபடுமா என்பதை நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம். &#8221; &#8211; என்றார்.</p>
<p>அத்துடன், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு திராணியற்ற இந்த அரசாங்கம், பேரவை கொண்டு வந்து என்ன செய்ய போகின்றது, இதனால் எதுவும் நடக்காது &#8211; எனவும் சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/attempt-to-give-kurundur-hill-to-bhikkhu-and-vicar/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலை புத்தர் சிலை விவகாரம்! &#8211; தடுக்க போராடியவருக்குதுப்பாக்கிமுனையில் அச்சுறுத்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-buddha-statue-affair-threat-at-gunpoint-to-someone-who-fought-to-prevent-it/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-buddha-statue-affair-threat-at-gunpoint-to-someone-who-fought-to-prevent-it/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jun 2022 12:59:56 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Kajenthirakumar Ponnampalam]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[puththar silai]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=54294</guid>

					<description><![CDATA[குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த 13ம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அந்த செயற்பாடு போராட்டம் மூலம் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அதனை தடுக்கப் போராடிய ஒருவருக்கு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.</p>
<p>யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில்,</p>
<p>கடந்த 13ம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் புத்தரின் சிலையை நிறுவ முற்பட்ட நிலையில் அந்த செயற்பாடு போராட்டம் மூலம் தடுக்கப்பட்டது.</p>
<p>இந்த நிலையில் 15ம் திகதி அந்த போராட்டத்தில் ஈடுபட்டவரை அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் செயல்பட்டனர். குறித்த நபர் தனது வழமையான பணிகளை ஆற்றிவிட்டு வீட்டுக்குள் செல்லும் போது இரண்டு இனந்தெரியாத நபர்கள் மூலம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டார். அவர்கள் இரண்டு பேரும் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றனர். இந்தப் பிரச்சினைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவர் இடம்பெயர்ந்து வேறுபகுதியில் வசிக்கின்றார்.</p>
<p>இது பற்றி பொலிஸாருக்கு அவர் முறைப்பாட்டை செய்திருந்ததுடன் எங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு இந்த விடயங்களை பதிவு செய்திருந்தார். அத்துடன் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முற்பட்டபோது முல்லைத்தீவை சேர்ந்தவர் என்ற வகையில் வவுனியாவிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.</p>
<p>உள்பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சரத்வீரசேகர , எமது கட்சியின் பொதுச்செயலாளர் கஜேந்திரனின் பெயரை பதிவு செய்ததுடன் ஏனைய தமிழ் தரப்புகளை பொதுமக்களையும் தமிழ் அடையாளங்களை பாதுகாக்க இடங்களை பாதுகாக்க முற்படுகின்றவர்களையும் மிக மோசமான முறையில் நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தியிருந்தார். இது தொடர்பாக இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் அரசாங்கம் அடுத்ததாக தெரியவில்லை. ஜெனிவாவுக்கு ஜூலை மாதம் சென்ற பல கதைகளைக் கூற இருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய நாட்டின் சூழலிலும் தமிழ் தேசத்தை அழிக்கும் செயற்பாடுகளில் அரசாங்கம் முனைப்பாக செயற்படுகின்றது &#8211; என்றார்.</p>
<p>இந்த ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/kurundur-hill-buddha-statue-affair-threat-at-gunpoint-to-someone-who-fought-to-prevent-it/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>குருந்தூர் மலை புத்தர் சிலை விவகாரம்! &#8211; கூட்டமைப்புக்கு வீரசேகர எச்சரிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sarath-veerasekara-warned-to-tna/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/sarath-veerasekara-warned-to-tna/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Thaaraga]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Jun 2022 13:00:00 +0000</pubDate>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[kurunthurmalai]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[sarath weerasekara]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[TNA]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=53548</guid>

					<description><![CDATA[முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தமித் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர, பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில், முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை நிர்மாணிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில், அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே சரத் வீரசேகர மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். #SriLankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தமித் தேசிய கூட்டமைப்புக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்த்துள்ளார்.</p>
<p>பாராளுமன்றத்தில் உரையாற்றிய சரத் வீரசேகர,</p>
<p>பௌத்தர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாமென தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>அண்மையில், முல்லைத்தீவு &#8211; தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் புத்தர் சிலை நிர்மாணிக்க முயற்சி எடுக்கப்பட்ட நிலையில், அதனை தடுத்து நிறுத்தியமை தொடர்பில் விளக்கமளித்து உரையாற்றுகையிலேயே சரத் வீரசேகர மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>#SriLankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/sarath-veerasekara-warned-to-tna/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
