<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>kerala news today &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/kerala-news-today/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sun, 04 Jan 2026 16:47:04 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>kerala news today &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கேரளா திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை!</title>
		<link>https://tamilnaadi.com/news/massive-fire-at-thrissur-railway-station-in-kerala-hundreds-of-motorcycles-destroyed-as-ticket-counter-gutted/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 04 Jan 2026 16:47:04 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Firefighting Operations Kerala.]]></category>
		<category><![CDATA[Indian Railways Accident]]></category>
		<category><![CDATA[kerala news today]]></category>
		<category><![CDATA[Thrissur Railway Station Fire]]></category>
		<category><![CDATA[Vehicle Parking Fire]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208930</guid>

					<description><![CDATA[இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (04) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலேயே (Parking) இந்தத் தீப்பரவல் ஆரம்பமானது. முதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பற்றிய தீ, பின்னர் வேகமாக ஏனைய வாகனங்களுக்கும் பரவியது. குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மோட்டார் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (04) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் ரயில் நிலையத்தின் ஒரு பகுதி பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.</p>
<p>ரயில் நிலையத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திலேயே (Parking) இந்தத் தீப்பரவல் ஆரம்பமானது. முதலில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பற்றிய தீ, பின்னர் வேகமாக ஏனைய வாகனங்களுக்கும் பரவியது.</p>
<p>குறித்த தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பெரும் பகுதியின தீக்கிரையாகியுள்ளன.</p>
<p>தீ வேகமாகப் பரவி அருகிலிருந்த மரங்களைப் பற்றிக்கொண்டதுடன், இரண்டாவது நுழைவாயிலில் அமைந்திருந்த பயணச்சீட்டு விநியோகக் கவுண்டர் (Ticket Counter) முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.</p>
<p>அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் (Engine) ஒன்றிலும் தீப்பற்றிய போதிலும், ஊழியர்களின் துரித நடவடிக்கையால் அது பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றப்பட்டது.</p>
<p>தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் பல மணிநேரமாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தீப்பரவல் இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இந்த விபத்தினால் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து கேரளா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தங்க வளையலை கழற்றி அலட்சியமாக வைத்த சிறுமி.., தூக்கிச்சென்று கூடு கட்டிய காகம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/the-little-girl-who-took-off-the-gold-bangle-and-kept-it-indifferently-the-crow-built-the-nest/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Jan 2024 13:34:20 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[kerala]]></category>
		<category><![CDATA[kerala breaking news]]></category>
		<category><![CDATA[kerala news live]]></category>
		<category><![CDATA[kerala news today]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=113095</guid>

					<description><![CDATA[சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம் நடைபெற்ற நாளில் உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். அங்கு, இவர்களது ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளான சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார். அப்போது, திருமணத்திற்கு வந்ததும் சிறுமி தான் அணிந்திருந்த தங்க வளையலை கழற்றினார். ஒரு பேப்பரில் 6 கிராம் எடையுள்ள தங்க [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று கூட்டில் வைத்திருந்த காகத்தின் செயல் வினோதமாகவும், வியப்பாகவும் உள்ளது.</p>
<p>கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீபா. இவர்கள் சம்பவம் நடைபெற்ற நாளில் உறவினரின் திருமணத்திற்கு சென்றனர். அங்கு, இவர்களது ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகளான சிறுமி பாத்திமா ஹைபா தங்க நகைகள் அணிந்திருந்தார்.</p>
<p>அப்போது, திருமணத்திற்கு வந்ததும் சிறுமி தான் அணிந்திருந்த தங்க வளையலை கழற்றினார். ஒரு பேப்பரில் 6 கிராம் எடையுள்ள தங்க வளையலை சுற்றி பையின் மேல் வைத்துள்ளார்.</p>
<p>அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் வளையலை பத்திரமாக வைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், சிறுமி அதனை கவனிக்கவில்லை.</p>
<p>இதன் பின்னர், 10 நாட்கள் கழித்து உறவினர் வீட்டில் இருந்து நசீரின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அப்போது, சிறுமியிடம் தங்க வளையல் இல்லாததை பார்த்து அதிர்ச்சியாகினர். அப்போது அவர்கள் சிறுமியிடம் கேட்டனர்.</p>
<p>அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார். ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், ஷரீபாவின் உறவினரான சுலைகா மற்றும் பக்கத்து வீட்டு பெண் சாந்தா ஆகியோர் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையலை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.</p>
<p>அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர்.</p>
<p>அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது. அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்தார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
