<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Kanyakumari &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/kanyakumari/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Sat, 10 Feb 2024 03:01:35 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Kanyakumari &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை</title>
		<link>https://tamilnaadi.com/news/world/independents-backed-by-imran-khan-party-lead-former-prime-minister-imran-khan/</link>
					<comments>https://tamilnaadi.com/news/world/independents-backed-by-imran-khan-party-lead-former-prime-minister-imran-khan/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Feb 2024 10:52:43 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[canada]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[daily news]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[imran khan]]></category>
		<category><![CDATA[Kanyakumari]]></category>
		<category><![CDATA[latest news]]></category>
		<category><![CDATA[live news]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[Nawaz Sharif]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[Russo-Ukrainian War]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[us news]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=118459</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை பாகிஸ்தான் தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். சுயேட்சைகள் ஆச்சர்யப்படும் வகையில் எழுச்சி பெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) சில இடங்களில் போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர். பாகிஸ்தான் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பாகிஸ்தான் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள்., இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் முன்னிலை</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/world/2024/01/19/indian-workers-queue-up-to-get-job-in-israel/">பாகிஸ்தான்</a> தேசிய சட்டசபை தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன.</p>
<p>சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.</p>
<p>சுயேட்சைகள் ஆச்சர்யப்படும் வகையில் எழுச்சி பெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.</p>
<p>இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சி (Pakistan Tehreek-e-Insaf) சில இடங்களில் போட்டியிடவில்லை. ஆனால் அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சைகள் முன்னிலை வகிக்கின்றனர்.</p>
<p>பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 13 முடிவுகளை அறிவித்துள்ளது. அதில், ஐந்து இடங்களில் இம்ரான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர்.</p>
<p>நவாஸ் ஷெரீப்பின் Pakistan Muslim League (N) கட்சி நான்கு இடங்களிலும், <a href="https://en.wikipedia.org/wiki/Pakistan_People%27s_Party" target="_blank" rel="noopener">Pakistan Peoples Party (PPP)</a> நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன.</p>
<p>நாடு முழுவதும் மொத்தம் 266 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 134 இடங்களில் வெற்றி பெற்ற கட்சி பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கும்.</p>
<p>60 இடங்கள் பெண்களுக்கும், பத்து இடங்கள் சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.</p>
<p>பஞ்சாப் சட்டசபையில் 296 இடங்களும், சிந்து சட்டசபையில் 130 இடங்களும், கைபர் பக்துன்க்வாவில் 113 இடங்களும், பலுசிஸ்தானில் 51 இடங்களும் அறிவிக்கப்பட உள்ளன.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/world/independents-backed-by-imran-khan-party-lead-former-prime-minister-imran-khan/feed/</wfw:commentRss>
			<slash:comments>2</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?</title>
		<link>https://tamilnaadi.com/news/world/war-putin-claims-boris-kanyakumari-candidate-ntk-mariya-jenifer-scuppered-deal-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Feb 2024 10:49:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Boris Johnson]]></category>
		<category><![CDATA[breaking news]]></category>
		<category><![CDATA[canada]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[daily news]]></category>
		<category><![CDATA[Kanyakumari]]></category>
		<category><![CDATA[latest news]]></category>
		<category><![CDATA[live news]]></category>
		<category><![CDATA[london]]></category>
		<category><![CDATA[Naam tamilar kachchi]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[Russo-Ukrainian War]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[United Kingdom]]></category>
		<category><![CDATA[us news]]></category>
		<category><![CDATA[Vladimir Putin]]></category>
		<category><![CDATA[World]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=118450</guid>

					<description><![CDATA[நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்? கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தொகுதி வாரியாக அறிவித்து வருகிறார். அந்தவகையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மரிய ஜெனிஃபர் (42) என்பவர் போட்டியிடவுள்ளார். இவர், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் BEComputer Science, சென்னையில் உள்ள ICFAI கல்லூரியில் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறும் வெளிநாட்டு வேலையை தூக்கியெறிந்த பெண்: யார் இவர்?</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/2024/01/06/heavy-rain-in-13-districts-tomorrow-in-tamil-nadupti/">கன்னியாகுமரி</a> நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம்.</p>
<p>நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தொகுதி வாரியாக அறிவித்து வருகிறார். அந்தவகையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மரிய ஜெனிஃபர் (42) என்பவர் போட்டியிடவுள்ளார்.</p>
<p>இவர், கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் <a href="https://collegedunia.com/courses/bachelor-of-engineering-be-computer-science" target="_blank" rel="noopener">BEComputer Science</a>, சென்னையில் உள்ள <a href="https://www.icfaiuniversity.in/" target="_blank" rel="noopener">ICFAI</a> கல்லூரியில் MBA மார்கெட்டிங் படித்துள்ளார்.</p>
<p>பின்னர், தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்தி அதிகாரியாக 17 வருடம் பணிபுரிந்துள்ளார். அதோடு ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்துள்ளார்.</p>
<p>தற்போது, இவர் நாம் தமிழர் கட்சிக்காக லட்சங்களில் சம்பளம் பெறக்கூடிய வெளிநாடு வேலைகளை விட்டு விட்டு வந்துள்ளார். இவரின் கணவர் சாலமன் தீபக். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சமயத்தில் தான் மரிய ஜெனிஃபர் அரசியலுக்கு நுழைந்துள்ளார்.</p>
<p>கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் வலிமையுடன் இருக்கும். ஆனால், தற்போது நாம் தமிழர் கட்சியும் அங்கு வலிமையாகி வருகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்</title>
		<link>https://tamilnaadi.com/news/world/accident-caused-by-electric-wire-of-neighboring-house-3-dead/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Oct 2023 10:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Current news]]></category>
		<category><![CDATA[Kanyakumari]]></category>
		<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=97360</guid>

					<description><![CDATA[பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம் தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று கனமழை பெய்து [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>பக்கத்து வீட்டின் மின்சார ஒயரால் ஏற்பட்ட விபரீதம்: 3 பேர் மரணம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2022/10/17/6-people-from-yaffa-took-refuge-in-tamil-nadu%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4/">தமிழக மாவட்டம்</a>, கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" target="_blank" rel="noopener">கன்னியாகுமரி</a> மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா. இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.</p>
<p>இந்நிலையில், நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது அஸ்வின் வெளியே கடைக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் இருந்து எதிர்ப்பாராதவிதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.</p>
<p>அப்போது, அவரைக் காப்பாற்ற சென்ற தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், அவர்களை இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது.</p>
<p>இதில், மின்சாரம் தாக்கிய மூவரும் நிகழ்விடத்திலேயே கிடந்துள்ளனர். பின்பு, மழை நின்ற பிறகு அக்கம், பக்கத்தினர் பார்த்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.</p>
<p>ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பொலிசார், மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p>
<p>மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு</title>
		<link>https://tamilnaadi.com/news/world/%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%9f/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Sep 2023 15:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[current news Due to the notice from the bank]]></category>
		<category><![CDATA[Kanyakumari]]></category>
		<category><![CDATA[the engineer]]></category>
		<category><![CDATA[world news]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=93106</guid>

					<description><![CDATA[வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து சென்னையில் உள்ள [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2022/11/23/10-more-sri-lankans-take-refuge-in-tamil-nadu/">தமிழக மாவட்டம்</a>, கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.</p>
<p>மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88" target="_blank" rel="noopener">சென்னையில்</a> உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.</p>
<p>இவர், இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கல்விக்கடனாக 2.5 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்த கடனை கட்டி முடிக்காததால் இலவச சட்ட மையத்தில் இருந்து கணேஷ் ராஜா இன்று (செப்.08) ஆஜராகுமாறு அழைப்பாணை வந்துள்ளது.</p>
<p>இதன் பிறகு, இந்த தகவலை கணேஷ் ராஜாவின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தனது தாயிடம், நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் கூறி கணேஷ் ராஜா கதறி அழுதுள்ளார்.</p>
<p>இந்நிலையில், கணேஷ் ராஜா சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்தேன் என விரக்தியில் பெற்றோரிடம் மன வேதனையுடன் கூறியுள்ளார்.</p>
<p>அப்போது, அவர்கள் கடனை கட்டி விடலாம் என்றும், இலவச சட்ட மையத்திற்கு ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர்.</p>
<p>பின்னர், மாடி அறைக்கு சென்ற கணேஷ் ராஜா கதவை பூட்டியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு மயங்கிய நிலையில் கணேஷ் ராஜா கிடந்துள்ளார்.</p>
<p>இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.</p>
<p>இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
