அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், தொற்று உறுதியாகியுள்ளது. 8 ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,...
வடக்கு முகாமையாளர் பதவிக்கு பெரும்பான்மை இனத்தவர்! இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய முகாமையாளர் பதவிக்கு அநுராதபுரத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் (பொறியியல்)...
மருத்துவபீட பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக வைத்திய கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மருத்துவபீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ்.ரவிராஜின் பதவிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை காலை...
கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் மருத்துவமனையில்...
பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது . யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி...
தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு, அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.குருநகர் பகுதியிலுள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சிறைகளில் நீண்டகாலமாக...
வடமராட்சி கடலில் மீனவர் மாயம்!! வடமராட்சி கிழக்கு குடாரப்பு கடற்பகுதியில் கடலட்டை பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர் படகில் சென்று கடலட்டை பிடிப்பதற்காக...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சுன்னாகத்தைச் சேர்ந்த சாருகா என்பவரே இவ்வாறு வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த இந்த மாணவி உடுவில்...
வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும்...
அண்மையில் காரைநகர் பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை சுகாதாரப் பரிசோதகர்கள் தனிமைப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த...
யாழில் கொரோனாவால் ஒரு வயதுக் குழந்தை சாவு!! யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றால் ஒரு வயதுக் குழந்தை ஒன்று இன்று உயிரிழந்துள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது....
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார். இணுவிலை சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற கர்ப்பிணிப் பெண்ணே யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கடந்த...
யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது. வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுப்...
அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல் தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக...
வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று யாழ். மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாமல் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களேயான சிசு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் சிசுவுக்கே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்...
உடுப்பிட்டி கிராமத்தில் இராணுவம் குவிப்பு! யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறிய நிலையில், பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப்...
யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா...