<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Jaffna University Students Protest &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/jaffna-university-students-protest/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 05:58:57 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Jaffna University Students Protest &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்: பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்குச் சிறிதரன் எம்.பி பகிரங்க ஆதரவு!</title>
		<link>https://tamilnaadi.com/news/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 05:58:57 +0000</pubDate>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Black Day Protest Sri Lanka]]></category>
		<category><![CDATA[Enforced Disappearances Protest.]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[Jaffna University Students Protest]]></category>
		<category><![CDATA[MP Sritharan Press Meet 2026]]></category>
		<category><![CDATA[Tamil Federal Solution]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=211873</guid>

					<description><![CDATA[இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் &#8216;கரிநாளாக&#8217; (Black Day) அனுஷ்டிக்க வேண்டும் எனவும், அதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களுக்கு இன்னும் உண்மையான அரசியல் சுதந்திரம் கிடைக்காத [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையைக் குறிக்கும் வகையில் &#8216;கரிநாளாக&#8217; (Black Day) அனுஷ்டிக்க வேண்டும் எனவும், அதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.</p>
<p>இன்று கிளிநொச்சியில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது. தமிழ் மக்களுக்கு இன்னும் உண்மையான அரசியல் சுதந்திரம் கிடைக்காத நிலையில், நாளை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.</p>
<p>பல்கலைக்கழக மாணவர்கள் நாளைய தினம் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இதற்கு வர்த்தக சங்கங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.</p>
<p>நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம். சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும். காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் 7 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்வு காணப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் &#8211; பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/uncategorized/thaiyitty-tension-monk-led-group-with-buddha-statue-sent-back-by-police-jaffna-university-students-join-landowners-protest/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sat, 03 Jan 2026 15:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஏனையவை]]></category>
		<category><![CDATA[Buddha Statue Denied Entry.]]></category>
		<category><![CDATA[Jaffna University Students Protest]]></category>
		<category><![CDATA[Kankesanthurai Police Action]]></category>
		<category><![CDATA[Thaiyitty Vihara Conflict]]></category>
		<category><![CDATA[Velan Swamigal Intercepted]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=208857</guid>

					<description><![CDATA[தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) மதியத்திற்குப் பிறகு தையிட்டியில் சீகிரியாவிலிருந்து புதிய புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரைக் காங்கேசன்துறை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், தையிட்டிக்குள் நுழைய அனுமதிக்காமல் அவர்களைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர். காணி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளது.</p>
<p>இன்று (சனிக்கிழமை) மதியத்திற்குப் பிறகு தையிட்டியில் சீகிரியாவிலிருந்து புதிய புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரைக் காங்கேசன்துறை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், தையிட்டிக்குள் நுழைய அனுமதிக்காமல் அவர்களைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.</p>
<p>காணி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பேருந்துகள் மூலம் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளை வழிமறித்த பொலிஸார், அவரது விபரங்களைப் பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.</p>
<p>போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கில், அங்கு வருகை தருவோரின் விபரங்களைப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருவதாகக் காணி உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.</p>
<p>தையிட்டியில் புதிய சிலைகளை நிறுவவோ அல்லது கட்டுமானங்களை முன்னெடுக்கவோ விடமாட்டோம் எனப் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
