<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Jaffna International Airport &#8211; tamilnaadi.com</title>
	<atom:link href="https://tamilnaadi.com/tag/jaffna-international-airport/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://tamilnaadi.com</link>
	<description>வையகத்தின் உயிர் துடிப்பு</description>
	<lastBuildDate>Tue, 17 Jun 2025 16:13:05 +0000</lastBuildDate>
	<language>ta-LK</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://tamilnaadi.com/wp-content/uploads/2023/06/cropped-tamilnaadi_new_icon@3x-32x32.png</url>
	<title>Jaffna International Airport &#8211; tamilnaadi.com</title>
	<link>https://tamilnaadi.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யாழ் &#8211; கொழும்பு விமான சேவை குறித்து வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/approval-for-colombo-to-jaffna-flight-service/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 16:13:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[colombo]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=200181</guid>

					<description><![CDATA[கொழும்பு (Colombo) &#8211; யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் (David Peiris Airlines) நிறுவனத்திற்கு நேற்று (16) வழங்கியுள்ளது. அதற்கமைய கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையத்திற்கும் (Ratmalana Airport) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் (Jaffna International Airport) இடையில் நேரடி உள்நாட்டு விமான [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொழும்பு (Colombo) &#8211; யாழ்ப்பாணம் (Jaffna) இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கு அங்கீகாரம் அளிக்கும் விமான செயற்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p>
<p>குறித்த சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் (David Peiris Airlines) நிறுவனத்திற்கு நேற்று (16) வழங்கியுள்ளது.</p>
<p>அதற்கமைய கொழும்பில் உள்ள இரத்மலானை விமான நிலையத்திற்கும் (Ratmalana Airport) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் (Jaffna International Airport) இடையில் நேரடி உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.</p>
<p>இதற்காக செஸ்னா-280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விமானப் பயணத்திற்கு 01 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>விமானப்பயணத்திற்கு இருவழி கட்டணமாக 68,000 ரூபா அறவிடப்படுவதுடன் ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் அதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.</p>
<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இது வடக்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்துவதுடன் வட பிராந்தியத்தில் சுற்றுலாவை அதிகரிப்பதுடன் பொருளாதார மற்றும் பிராந்திய வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பலாலி விமான நிலையத்தில் கைதான இலங்கை அகதி : பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/refugee-arrested-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jun 2025 15:20:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ananda Wijepala]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[Ministry Of Public Security]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=199077</guid>

					<description><![CDATA[பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<p>பலாலி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.</p>
<p>ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும் தெரிவிக்கையில், நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டத்தில் விரைவில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.</p>
<p>அத்துடன், அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை.</p>
<p>மேலும், பலாலி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட நபரை விடுவிப்பதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு உரிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளோம்.</p>
<p>இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைதானவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.</p>
<p>இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன்.</p>
<p>அதேநேரம், இலங்கையின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களில் காணப்படுகின்ற ஏற்பாடுகளால் தான் இவ்வாறு கைது செய்யப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன.</p>
<p>ஆனால் அகதிகளாக சென்றவர்களோ, புலம்பெயர்ந்தவர்களோ மீண்டும் நாடு திரும்பும் போது அவர்களைக் கைது செய்வது எமது அரசாங்கத்தின் கொள்கை அல்ல.</p>
<p>அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது.</p>
<p>அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும்.</p>
<p>அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.</p>
<p>ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் &#8211; பெங்களூர் விமான சேவை &#8211; வெளியான தகவல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/passenger-transport-between-sri-lanka-and-india-2/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 16:33:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[sri lanka airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=188801</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; பெங்களூர் விமான சேவை &#8211; வெளியான தகவல் யாழ்ப்பாணம் (Jaffna) &#8211; பெங்களூர் சேவையை முன்னெடுப்பது மற்றும் உள்ளூர் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று (21.01.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம், மட்டக்களப்பு – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ்ப்பாணம் &#8211; பெங்களூர் விமான சேவை &#8211; வெளியான தகவல்</h4>
<p>யாழ்ப்பாணம் (Jaffna) &#8211; பெங்களூர் சேவையை முன்னெடுப்பது மற்றும் உள்ளூர் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.</p>
<p>குறித்த கலந்துரையாடல் நேற்று (21.01.2025) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.</p>
<p>கொழும்பு (Colombo) – யாழ்ப்பாணம், <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" target="_blank" rel="noopener">மட்டக்களப்பு</a> – யாழ்ப்பாணம் சேவைகளை முன்னெடுப்பதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.</p>
<p>பயணிகளின் தேவைப்பாடு தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்குமாறு நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்தனர்.</p>
<p>அத்துடன், தற்போது சேவையை முன்னெடுக்கும் இண்டிகோ விமான சேவை நிறுவனம் சென்னை – யாழ்ப்பாணம் சேவைக்கு மேலதிகமாக பெங்களூர் &#8211; யாழ்ப்பாணம் சேவையை முன்னெடுப்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இந்த மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதாகவும் இதன்போது அபிவிருத்திக்கான நிதி மூலம் தொடர்பில் இறுதி செய்யலாம் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு</title>
		<link>https://tamilnaadi.com/news/local/two-major-airport-expansion-projects/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 15:20:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandaranaike International Airport]]></category>
		<category><![CDATA[Government of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[sri lanka government]]></category>
		<category><![CDATA[Two Major Airport Expansion Projects]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=184622</guid>

					<description><![CDATA[யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது. இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை (JIA) விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது. எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ். மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்கள் விஸ்தரிப்பு</h4>
<p>இலங்கையின் <a href="https://tamilnaadi.com/news/local/2024/10/28/train-between-jaffna-to-colombo-time-schedule/">யாழ்ப்பாணம்</a> மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதற்கான முன்மொழிவுகளை அரசாங்கம், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளது.</p>
<p>இலங்கையின் அரசால் நடத்தப்படும் விமான நிலைய முகாமைத்துவ நிறுவனம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை (JIA) விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளை கோரியுள்ளது.</p>
<p>எனினும், கொழும்பு விமான தகவல் பிராந்தியத்திற்கு அருகாமையில் விமான நிலையங்கள் காணப்படும் இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்படவில்லை.</p>
<p>போட்டித்தன்மை காரணமாக இவ்வாறு முன்மொழிவுகள் கோரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>மேலும், இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனமானது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து விலை மனுக்களை கோரியுள்ளது.</p>
<p>எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரையில் விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>கட்டுநாயக்க விமான நிலையக் கட்டிடத்தை கட்டி முடிக்கும் இந்த திட்டமானது, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியத்தின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.</p>
<p>பிரதான முனைய கட்டிடம், உயரமான சாலை போன்ற உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் காலக்கெடு ஜனவரி 29ம் திகதியன்று முடிவடைகிறது.</p>
<p>சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பத்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு சாத்தியக்கூறு ஆய்வையாவது மேற்கொண்ட விமான நிலைய ஆலோசனை நிறுவனங்கள் அல்லது கூட்டு முயற்சிகளில் இருந்து விலை மனுக் கோரப்பட்டது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் &#8211; சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/announcement-of-jaffna-to-chennai-flight-service/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Dec 2024 12:41:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[Northern Province of Sri Lanka]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=179487</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் யாழ்ப்பாணம் &#8211; பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ்ப்பாணம் &#8211; சென்னை விமான சேவை : பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்</h4>
<p><a href="https://tamilnaadi.com/uncategorized/2024/11/14/woman-dies-in-accident-while-traveling-to-jaffna/">யாழ்ப்பாணம்</a> &#8211; பலாலியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தின் (Jaffna International Airport) ஊடாக பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிவித்தல் வடக்கு மாகாண (Northern Province) ஆளுநர் நா.வேதநாயகனால் (N. Vedanayagan) பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகள் அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் தகவல் வழங்குவதற்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>
<p>இதற்கமைய விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்கவின் 0774653915 என்ற இலக்கத்துக்கோ அல்லது வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9373 என்ற இலக்கத்துக்கோ தொடர்புகொள்ள முடியும் என ஆளுநர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
<p>இதேவேளை யாழ்ப்பாணம் &#8211; <a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88" target="_blank" rel="noopener">சென்னை</a> (Chennai) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் (Alliance Air) விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.</p>
<p>தற்போது யாழ்ப்பாணம் &#8211; சென்னைக்கான விமான சேவையை இன்டிக்கோ எயார் நிறுவனம் மட்டுமே நடத்தி வருவதனால் தினமும் இடம்பெற்று வந்த இரு விமான சேவைகள் ஒரு சேவையாக மட்டுமே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் நடவடிக்கை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-international-airport-lease-nimal-siripala/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Apr 2024 09:10:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[jaffna international airport lease nimal siripala]]></category>
		<category><![CDATA[nimal siripala de silva]]></category>
		<category><![CDATA[sri lanka airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=130285</guid>

					<description><![CDATA[யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் நடவடிக்கை யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் நடவடிக்கை</h4>
<p>யாழ். சர்வதேச விமான நிலையத்தை <a href="https://airport.lk/jaf/index" target="_blank" rel="noopener">(jaffna international airport</a>) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.</p>
<p>குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/08/15/3-died-in-a-van-accident/">யாழ்ப்பாணம்</a> சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.</p>
<p>அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம்</title>
		<link>https://tamilnaadi.com/news/local/jaffna-to-chennai-flight-bad-weather-today/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Nov 2023 07:58:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[Jaffna To Chennai Flight Bad Weather Today]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=104281</guid>

					<description><![CDATA[யாழ் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம் யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது. சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றுக் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம்</h4>
<p><a href="https://tamilnaadi.com/news/local/2023/04/20/pigeon-has-taken-shelter-in-dhanushkodi-sea/">யாழ்பாணம்</a> விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது.</p>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88" target="_blank" rel="noopener">சென்னையில்</a> இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,</p>
<p>நேற்றுக் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.</p>
<p>குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் வரும் தடை</title>
		<link>https://tamilnaadi.com/news/local/sri-lanka-international-airports/</link>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Aug 2023 11:35:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bandaranaike International Airport]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[Sri Lanka International Airports Jaffna Airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=91036</guid>

					<description><![CDATA[இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் வரும் தடை ரத்மலானை, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் விமானங்களுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விமான நிலையங்கள் அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்க விட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க விமான நிலையம் நடமாடும் வாகனத்தை அனுப்பியுள்ளது. THE CEYLON AIR NAVIGATION REGULATIONS, 1955ன் பிரிவு 248ன் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் வரும் தடை</h4>
<p><a href="https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88" target="_blank" rel="noopener">ரத்மலானை</a>, கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>
<p>பட்டங்கள் பறக்கவிடப்படுவதால் பயணிகள் <a href="https://tamilnaadi.com/news/world/2023/08/16/minister-s-itinerary-ruined-due-to-plane-repairs/">விமானங்களுக்கு</a> பாரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் விமான நிலையங்கள் அண்மித்த பகுதிகளில் பட்டங்களை பறக்க விட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இதுபற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்க விமான நிலையம் நடமாடும் வாகனத்தை அனுப்பியுள்ளது.</p>
<p>THE CEYLON AIR NAVIGATION REGULATIONS, 1955ன் பிரிவு 248ன் படி, ஒரு பட்டம் அல்லது ஏதேனும் வானப் பொருள் பறக்கவிடப்பட்டால், சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்.</p>
<p>அதற்கமைய, 5 கிலோமீட்டர் சுற்றளவில் காற்றில் 300 அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் பட்டங்களை பறக்கவிடுவதும், ட்ரோன்களை பறக்கவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>பறக்கும் போது பட்டங்களை பறக்க பயன்படுத்தப்படும் தடிமனான நூள் வான்வெளிக்கு ஒரு அச்சுறுத்தலாகும். இதனால் கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய நகரங்களைச் சுற்றியுள்ள வானில் பட்டம் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு நிர்வாகம் அறிவித்தல் விடுத்துள்ளது.</p>
<p>விமான நிலைய அதிகாரசபையானது பல பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பொருத்தி இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அறிவிப்பு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பொழுதுபோக்காக இருக்கும் பட்டம் பறக்கவிடுவதற்கு எதிரானது அல்ல. விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ் &#8211; சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/good-news-for-jaffna-chennai-flight-passengers/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/good-news-for-jaffna-chennai-flight-passengers/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[varman Tamilnaadi]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jul 2023 06:07:14 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[flight]]></category>
		<category><![CDATA[jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna Chennai Flight]]></category>
		<category><![CDATA[Jaffna Chennai Flight Passengers]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=81543</guid>

					<description><![CDATA[யாழ் &#8211; சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! யாழ்ப்பாணம் &#8211; சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சேவையானது யாழ்ப்பாணம் &#8211; தமிழ்நாட்டு இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் [&#8230;]]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ் &#8211; சென்னை விமான பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!</h4>
<p>யாழ்ப்பாணம் &#8211; சென்னை இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.</p>
<p>குறித்த சேவையானது யாழ்ப்பாணம் &#8211; தமிழ்நாட்டு இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவிலிருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொரோனா தொற்றின் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை இடைநிறுத்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் சேவைகளை தொடங்கியது.</p>
<p>இதனைத்தொடர்ந்து 4 வாரங்களுக்கு ஒருமுறை என யாழ்ப்பாணத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் சேவைகள் இடம்பெற்றன.</p>
<p>இதன்படி கடந்த ஜூன் மாதம் வரை, கொரியர் சேவை மூலம் சென்னை &#8211; யாழ்ப்பாணம் இடையே 12,000 க்கும் மேற்பட்ட பயணிகள் சென்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/good-news-for-jaffna-chennai-flight-passengers/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு!</title>
		<link>https://tamilnaadi.com/news/local/unsolved-shop-opening-at-jaffna-international-airport/</link>
					<comments>https://tamilnaadi.com/news/local/unsolved-shop-opening-at-jaffna-international-airport/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[trainee]]></dc:creator>
		<pubDate>Thu, 25 May 2023 05:33:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிராந்தியம்]]></category>
		<category><![CDATA[Jaffna International Airport]]></category>
		<category><![CDATA[srilanka]]></category>
		<category><![CDATA[tamilnaadi]]></category>
		<category><![CDATA[tamilnaadiNews]]></category>
		<category><![CDATA[Unsolved shop]]></category>
		<guid isPermaLink="false">https://tamilnaadi.com/?p=76710</guid>

					<description><![CDATA[யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த பெப்ரவரி மாதம் பலாலி விமானத்தில் முதன்முதலாக தீர்வையற்ற கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #srilankaNews]]></description>
										<content:encoded><![CDATA[<h4>யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு!</h4>
<p>யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p>கடந்த பெப்ரவரி மாதம் பலாலி விமானத்தில் முதன்முதலாக தீர்வையற்ற கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>#srilankaNews</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://tamilnaadi.com/news/local/unsolved-shop-opening-at-jaffna-international-airport/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
